Thursday, 9 January 2014

" தொடர்ச்சி " பாகம் எண்.3. தமிழ் இனத் தலைவர்,முத்தமிழ் அறிஞர், தி.மு.கழகத்தின் இனமான பாதுகாவலர்,கலைஞர் திரு மு.கருணாநிதி அவர்களின் கனிவான கவனத்திற்கு !!






உட2௦11 தேர்தல் 



முடிந்தவுடன், தி.மு.க. 



தோல்வியைத் தழுவியதற்கு என்ன 



காரணம் என்று 



பத்திரிக்கையாளர்கள் 



சந்திப்பின்போது தலைவர்கலைஞர் 



சொன்ன கருத்து, அவரது 



மனதுக்குள் முழுக்க முழுக்க திரு 



மு.க.அழகிரி அவர்களைப் பற்றியே 



சரியான எடைபோட்டு சொன்ன 



காலத்தினால் அழித்திட முடியாத 



ஒரு ஆய்வுக்குப் பின்னரே தலைவர் 



கலைஞர் அவர்கள் வெளியிட்ட 



ஒன்றாகும். இது காங்கிரஸ் 



கட்சிக்காகசொல்லப்பட்டகருத்தல்ல 


எல்லோராலும் கண்டிப்பாக 



அங்கீகாரம் செய்திட வேண்டிய ஒரு 



விஷயம். " கூடாநட்பு கேடாய் 



முடியும்" இதுதான் தலைவர் 



கலைஞர் அவர்கள் சொன்ன நல்ல 



கருத்து)  தான் பெற்ற பிள்ளை என்ற 



ஒரே காரணத்திற்காகவும், 



இவரைவிட வயதிலும், 



அனுபவத்திலும் மூத்த, , கட்சிக்கு 



தங்களது சொந்தக் கைக்காசினை 



போட்டு வளர்த்த மூத்த 



தலைமுறையினர் அனைவரையும் 



புறம் தள்ளி விட்டு,  



திரு.அழகிரி அவர்களுக்கு, அவரது 



தரத்திற்கும், தகுதிக்கும் சற்றும் 



பொருந்திடாத வகையில், அவர்ஒரு 



(நூதனமான பார்மூலாவின் மூலம் 



திருமங்கலத்தில் நடைபெற்ற அந்த 



இடைத்தேர்தலில் தி.மு.க.வை 



வெற்றி பெற வைத்தார்) புதிய பதவி 



ஒன்றினை  உருவாக்கி அந்தப் 



பதவிக்கு " தென்மண்டல அமைப்பு 



செயலாளர் " என்று பெயரிட்டுஅதை 



தலைவர் கலைஞர் அவர்களே, 



என்றைக்கு அந்தப் பட்டத்தை 



உங்கள் சீமந்திர புத்திரனுக்கு 



வழங்கி மகிழ்ந்தீர்களோ, 



அன்றைக்கே ஆரம்பம் ஆகிவிட்டது 



உங்களுக்குத் தொல்லைகள்/



தலைவலிகள்,மனஉளைச்சல்கள்  



என்கின்ற அடைமழையின் 



தூறல்கள். இதனைப் பற்றிய முழு 



விபரங்களும் நாளை உங்களுக்கு 



விரிவாகவும், விளக்கமாகவும் தர 



இருக்கின்றேன். அதுவரை சற்று 



அமைதியாகநீங்கள்இருக்க



வேண்டும். 



நன்றி !! வணக்கம்!!                                 



அன்புடன். மதுரை T.R. பாலு



தொடர்ச்சி பாகம் எண்.3.



உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!! 



உலகம் முழுதும் வாழ்ந்து வரும்என் 



அன்புத்தமிழ் உடன்பிறப்புகளே!! 



உங்கள் அனைவருக்கும் எனது 



உளங்கனிந்த நல்வாழ்த்துக்களுடன் 



இணைந்திட்ட அன்பு வணக்கங்கள். 



இன்றையதினம் தமிழர்களை 



பாதுகாக்கும் கேடயம் தான்  தி.மு.க. 



இப்போது தலை இருக்கும்போதே 



வால்ஒன்றுஆடஆரம்பித்துள்ளது. 



இதுநாள் வரை உள்ளேயே 



புகைந்துகொண்டிருந்த எரிமலை 



இப்போது வெடித்துச் சிதற 



ஆரம்பித்துள்ளது. சென்ற ஞாயிறு 



௦5-௦1-2௦14 புதியதலைமுறை 



தொலைக்காட்சியில் மதுரையில் 



ஏறத்தாழ 3௦ ஆண்டுகளுக்கும் 



மேலாக இருந்து கட்சிப் பணி 



" ஆத்துறேன் "என்றுசொல்லி இங்கு 



மதுரைக்குவந்த அஞ்சாநெஞ்சன் 



திரு மு.க.அழகிரி இங்கே கட்சிக்கு 



என்று இதுநாள்வரையிலும் இருந்த 



நல்ல பெயர்கள் அனைத்தையும் 



கெடுத்துக் குட்டிச்சுவராக்கியதொடு, 



2௦11 சட்டமன்றத் தேர்தலில், கட்சி 



படுதோல்வி அடைவதற்கு முக்கிய 



காரணகர்த்தரும், தென்மண்டல 



அமைப்புச் செயலாளரும் ஆன 



இவரால் மட்டுமே இப்படி ஒரு நல்ல 



காரியத்தைச் செய்திட முடியும் 



என்று இப்போதுதான் கட்சித் 



தலைமை உணர்ந்துவிட்ட 



காரணத்தால் இப்போது அதிரடி 



நடவடிக்கைகள் ஆரம்பம் 



ஆகிவிட்டன. முதலில் இன்று 



மாலை எடுக்கப்பட்ட நீக்கம் 



நடவடிக்கைகள், முதலில் குறிப்பாக 



திரு மு.க.அழகிரியை சுற்றியுள்ள 



சின்ன சின்ன களைகள் ஐந்து 



பேர்களை கட்சியின் அடிப்படை 



உறுப்பினர் பதவி உட்பட 



அனைத்தையும் பறித்து சரியான 



நடவடிக்கை, ஆனால் மகன் என்ற 



பாச உணர்வு மட்டும் தலைவர் 



அவர்களை தாக்காமல் 



அர்ஜுனனைப் போல அவர் செயல் 



பட்டு இருந்தாரேயானால் இந்நேரம் 



கழகத்திற்கு இப்படியொரு 



அவப்பெயர் வந்திடாமல், களங்கம் 



ஏற்படாமல்,காப்பாற்றப்பட்டிருக்கும். 



ஆனால் என்ன செய்வது ? தலைவர் 



கர்ணனைப்போல பாசத்திற்கு 



கட்டுப்பட்டு நடந்ததினால் வந்த 



விளைவு !! இன்று அவரது மூத்த 



புத்திர பாக்கியம் அழகிரி இன்று 



அவரது கட்டுப்பாட்டினையும் மீறி 



எங்கோ ( ? )விலைக்குப் போய் 



விட்டாரோ ? என்ற சந்தேகம் 



வலுக்கிறது. அப்படி அவர் விலை 



போகவில்லை என்றால், தே.மு.தி.க. 



வுடன் உடன்பாடு காண வேண்டிய 



இந்த நேரத்தில் அதற்கு குந்தகம் 



விளைவிக்கும் நோக்கத்துடன், 



தொலைகாட்சி ஒன்றிற்கு அவர் 



பேட்டி அளிப்பாரா ? சிந்தித்துப் 



பார்க்கவேண்டும் அன்பர்களே !! 



அழகிரி, அவரது பெரியண்ணன் 



மு.க.முத்து சென்ற பாதையில் 



செல்கிறாரோ என்னும் சந்தேகம் 



வலுக்கிறது எங்களைப் போன்ற 



அந்தக்காலக்கழகக்கண் 



மணிகளுக்கு!!தலைவர் அவர்களே!!



நீங்கள் சோழமண்டலத்தில் 



பிறந்தவர். வரலாறு என்பதேநீங்கள் 



சொல்லித்தானேஎங்களுக்குத்



தெரியும்.  

 


           "மனுநீதிச் சோழன் கதை"            



தஞ்சைமாநகரத்தைத் 



தலைநகராகக் கொண்டு சோழப் 



பேரரசு ஆண்டு கொண்டு 



இருந்தகாலம் அது. பேரரசன் 



மனுநீதி என்பவரது ஆளுகையின் 



கீழ் நாடு அமைதி தவழும் 



பூங்காவாக இருந்துவந்த நேரம்அது. 



(தற்போதைய நமது தமிழ்நாடு 



போல அல்ல) 



மனுநீதி சோழன் நீதி தவறாத 



மன்னவன். அவனது கோட்டையின் 



வாயிலில் அங்கே முகப்பில் ஒரு 



ஆராய்ச்சி மணி ஒன்று கட்டப்பட்டு 



இருக்கும். அதனை இழுத்து ஒலி 



எழுப்பிடப் பயன்படும் கயிறுடன். 



மன்னன் மனுநீதியின் மகன் 



இளவரசன் சுகுமாரன், தனது 



தேரினை வெகுவேகமாக ஒட்டி 



வந்த வேளையில் அவனது தேர்க் 



காலில் அடிபட்டு அதனால் ஒரு 



அப்பாவி வெள்ளைப் பசு ஒன்று 



தனது இளங்கன்று ஒன்றினை 



அங்கே சாலையில்பலிதந்தது.தனது 



செல்லமான கன்றினை 



இளவரசனது தறிகெட்ட, 



தான்தோன்றித்தனமான, தேர் 



ஓட்டும் திறனால், இழந்த அந்த பசு 



ஆராய்ச்சி மணியில் தொங்கிய 



கயிறினை தனது வாயில் கவ்விக் 



கொண்டு நீதி கேட்டு போராடியது. 



நீதி மணியின் ஓசைகேட்டு பதறி 



ஓடிவந்த அரசன், விஷயத்தினை 



அறிந்து மிகுந்த மனவேதனை 



அடைந்தான். நாட்டுக்கு 



அரசனன்றோ? நீதிதான் 



அவன்விடும் மூச்சு. நேர்மை என்ற 



ஒன்று மட்டுமே அரசர் பேசும் பேச்சு. 



சிறிது யோசனை செய்த அரசர் மனு 



நீதியார் கண்ணீருடன் கதறி அழுத 



பசுவின் கண்ணீரைத் துடைத்த 



கையுடன், தனதுமகனை 



அழைத்தார். அந்தப் பசுவின் கண் 



முன்பாகவே தான் பெற்ற 



மைந்தனை தேர்க்காலில் வைத்து 



ஏற்றினார். இளவரசனின் உயிர் 



என்னவோ பிரிந்தது. ஆனால் மனு 



நீதி சோழனின் நீதி நிலை பெற்றது. 



இது வரலாறு கூறிடும் சரித்திரம். 



இப்போது நடப்பு விஷயத்திற்கு நாம் 



வருவோம். தலைவர் அவர்களே 



அன்று பலியானது பசுவின் 



இளங்கன்று. இன்று 



பலியாகிப்போனது கழகத்தின் 



கட்டுப்பாடு. பலிகொடுத்தது அங்கே 



பசு. இங்கே பலி கொடுக்கப்பட்டது 



எங்களைப் போன்ற உண்மையான 



தொண்டர்களின் உழைப்பு. 



கட்டுப்பாட்டை பலியாக்கியது  



உங்களது மைந்தன். நீங்கள் என்ன 



செய்யப்போகிறீர்கள் தலைவர் 



அவர்களே ? உங்களது 



ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை 



இந்த நாடே எதிர் பார்க்கிறது.நீங்கள் 



சோழ பரம்பரையில் வந்தவர் 



என்பது உண்மையானால், 



உடனடியாக உங்கள்மைந்தனையும் 



கட்சியில் இருந்து நீக்கிவிடுங்கள். 



பாசத்திற்கு இடங்கொடாமல் 



கழகத்தின் கடமை,கண்ணியம், 



கட்டுப்பாட்டினை நீங்கள் செயல் 



படுத்திடப் போகிறீர்களா? அல்லவா 



என்பது. காத்திருக்கிறோம். 



கழகத்தின் தலைமை என்ன 



நடவடிக்கை எடுத்திடப் போகிறது 



என்பதனை எதிர்பார்த்து !!               



நன்றி !! வணக்கம் !!                               



இப்படிக்கு,                                                       



கழகத்தின் உண்மைத்தொண்டர்கள் 


மற்றும் 


மதுரை T.R.பாலு.   

No comments:

Post a Comment