Wednesday, 8 January 2014

தமிழ் இனத் தலைவர்,முத்தமிழ் அறிஞர், தி.மு.கழகத்தின் இனமான பாதுகாவலர்,கலைஞர் திரு மு.கருணாநிதி அவர்களின் கனிவான கவனத்திற்கு !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!   



உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 



என் உயிரினும் மேலான அன்புத் 



தமிழ் நெஞ்சங்களே !! உங்கள் 



அனைவருக்கும் எனது இதயம் 



கனிந்த வணக்கம்.                                          



       இன்னும் ஒரு மனுநீதி சோழன்     


                      உருவாகட்டும் !!                       




அன்பர்களே !!                                                 



நான் பிறந்தது 1954ம் ஆண்டு. நான் 



பிறந்த ஆண்டோடு 9 ஆண்டுகளைக் 



கூட்டிக்கொள்ளுங்கள்.1963ம்ஆண்டு 



முதல்கொண்டு இன்று வரை, 



ஏறத்தாழ 51 ஆண்டுகளாக திராவிட 



முன்னேற்றக் கழகத்தின் 



அதிதீவிரமான அனுதாபி நான் 



என்று முதலில் என்னை அறிமுகம் 



செய்து கொண்டு இந்தக் 



கட்டுரையை நான் எழுதிடத் 



துவங்குகின்றேன். 1965ம் ஆண்டு 



தமிழகம் முழுவதும் கொழுந்து 



விட்டு எரிந்த இந்தி எதிர்ப்புப் 



போராட்டத்தில் கலந்து 



கொண்டவன், 1979 அல்லது 1980ம் 



ஆண்டுகள் என்று நினைக்கிறேன் 



தலைவர் கலைஞர் அவர்கள் 



நீதி கேட்டு நெடும் பயணம் 



சென்னையில் இருந்து 



திருச்செந்தூர் வரை சென்ற நடை 



பயணத்தில் மதுரையில் அந்த 



புனிதப் பயணத்தில் 



ஆயிரக்கணக்கானதொண்டர்களுள் 



ஒருவனாக நானும் தலைவர் 



கலைஞர் அவர்களுடன் 



திருச்செந்தூர் வரை நடை பயணம் 



மேற்கொண்டவன் நான். எதற்காக 



இந்த வரலாற்றுச் சம்பவங்களை 



நான் இங்கே குறிப்பிடுகிறேன் 



என்றால் அந்த அளவிற்கு தலைவர் 



கலைஞர் அவர்களை உயிருக்கும் 



மேலாக நேசித்தவன், இதய 



சிம்மாசனத்தில் அமரவைத்து அழகு 



பார்த்தவன், அவரது தமிழ் சினிமா 



வசனங்களில் மெய் மறந்தவன், 



அவரது தமிழ் ஆற்றலில், பேசும் 



திறனில், கவிதை நடையில், குறள் 



ஒவியத்தில் என் எண்ணங்களில் 



அவரை பூஜித்தவன் நான். 



அப்படிப்பட்ட என்னை, தலைவர் 



கலைஞருக்கே அவர் 



கடந்தகாலங்களில் செய்த 



தவறுகளுக்கு இன்று அவரே 



பலியாகி, எங்களைப் போன்ற 



உண்மைத் தொண்டர்களின் 



பரிதாபத்துக்கு ஆளாகி விட்டாரே 



என்ற ஆற்றாமையினால், இன்று 



இதுபோல ஒரு கட்டுரையினை 



பகிரங்கமாக எழுதிட இந்தப் 



பாழாய்ப்போன காலம் என்னை 



ஆளாக்கி விட்டதே என்ற மனக் 



கொதிப்பில் இந்தக் கட்டுரையை 



நான் எழுதுகிறேன், கண்களில் 



கசிந்து வரும் கண்ணீரினால், என்று 



எழுதினால் அது ஒன்றும் 



மிகையான சொல் அல்ல அன்புத் 



தமிழ் நெஞ்சங்களே !!                             




யாரை எங்கே வைப்பது என்று 



யாருக்கும் தெரியலே!! அட !! 



அண்டங்காக்கைக்கும் 



குயில்களுக்கும் பேதம் புரியலே !! 



என்று கவிஞர் எழுதிய பாடல் 



பின்வரும் நாளில் அவரது நண்பர் 



ஒரு தவறான காரியத்தில் ஈடுபட்டு, 



இதுபோல மன உளைச்சலுக்கு 



ஆளாகிவிடுவார் என்பதை 



முன்கூட்டியே அறிந்து அந்தப் 



பாடலை எழுதிய கவிஞருக்கு எனது 



நெஞ்சார்ந்த நன்றிகளை நான் 



இந்தநேரம் அவரது பாதங்களுக்கு 



அர்ப்பணம் செய்கிறேன்.  அப்படி 



அவர் என்ன தவறு செய்துவிட்டார் 



ஐயா மதுரை T.R.பாலு அவர்களே !! 



என்று நீங்கள் அனைவரும் 



உங்களது மனதுக்குள் எழுப்பும் 



கேள்விகணைகள் எனது 



செவியிலும் பாயாமல் இல்லை. 



நான் இப்போது எதைப் பற்றிக் 



குறிப்பிட்டு எழுதப் போகிறேன் 



என்பதனை நீங்கள் ஓரளவிற்கு 



அனுமானித்து இருப்பீர்கள் என்று 



கருதுகிறேன். நீங்கள் நினைத்தது 



நூற்றுக்கு நூறு சரிதான். எல்லாம் 



அவர் பெற்ற மூத்த சீமந்த புத்திரன்/



புண்ணியயகுமாரன், முன்னாள் 



மத்திய அரசின் கேபினட் அமைச்சர், 



தென்மண்டல தி.மு.க. அமைப்புச் 



செயலாளரும் " அஞ்சா நெஞ்சர் " (?) 



திரு மு.க.அழகிரி அவர்களைப் 



பற்றித்தான் அன்பர்களே !!                     



(அன்பர்களே இப்போது நேரம் 



நள்ளிரவு மணி 12-15 ஐ தண்டி 



விட்டது. தூக்கம் கண்களைத் 



தழுவிடத் துடிப்பதினால் மீதிக் 



கட்டுரைதனை நான் காலை 



பொழுது விடிந்தவுடன் உங்கள் 



அனைவரின் விழிகளுக்கும் 



விருந்தாகப் படைக்கிறேன். 



எல்லோருக்கும் எனது இனிய இரவு 



வணக்கங்கள் உரித்தாகட்டும் !!)     



நன்றி !! வணக்கம் !!                                   



அன்புடன். மதுரை T.R.பாலு.       



மீண்டும் நாளை ௦9-௦1-2௦14 அன்று 



காலை உங்கள் அனைவரையும் 



நான் சந்திக்கிறேன். அதன்பிறகு 



நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து 



சிந்திப்போம்.                                                   



தொடர்ச்சி !!........பாகம் எண்.2.               


அன்பர்களே !!                                                 



இளம் காலைப்பொழுது, இப்போது 



மிக,மிக லேசாக விழித்துக்கொண்டு 



தனது இரவுநேரத் தூக்கத்தில் 



இருந்து தன்னை விடுவித்து, கிழக்கு 



திசையிலே, அந்த செங்கதிரோனின் 



ஒளிக்கற்றைகள் வான் நெடுகிலும் 



தனது  பொன்னுக்கு நிகரான 



ஒளிக்கற்றைகளை சிறகடித்து 



அங்கிங்கெனாதபடி எங்கும் 



பிரகாசமாக வீசிடத் துவங்கிவிட்ட 



நேரமிது. இப்போதுதான் நானும் 



எனது இரவு நேரக்கண் அயர்ச்சியில் 



இருந்து என்னை விடுவித்துக் 



கொண்டு, நேற்று இரவு, 



விட்டுப்போன கட்டுரையை, இன்று 



எப்பாடுபட்டாகிலும் முடித்துவிட 



வேண்டும் என்ற ஒரு வெறி 



உணர்வோடு நான் எழுதிடத் 



துவங்குகின்றேன் அன்பர்களே !!    



பொதுவாகவே அன்பர்களே !!   



தமிழில் ஒரு சொல் வழக்கு என்று 



ஒன்று உண்டு. அது என்னவென்றால்



பத்து வயதுவரை மட்டுமே 



அண்ணன், தம்பி எனும் 



உறவுஉண்டு.அதன்பின் முழுவதுமே 



பங்காளிகள், என்ற பகை மட்டுமே 



உண்டு என்று எனது அன்பிற்கும் 



பாசத்திற்கும் உரிய என்னை 



பெற்றுவளர்த்து ஆளாக்கிய அன்புத் 



தந்தை அடிக்கடி சொல்வார்கள்.அது 



மட்டும் அல்ல அன்பர்களே !!அந்த 



பங்காளி என்ற வார்த்தைக்கு 



நல்லதொரு புது விளக்கத்தை நான் 



இங்கே உங்கள் அனைவருக்கும் 



தெரிவித்திடக் கடமைப்பட்டு 



உள்ளேன்.ஒருவர் பங்கை ஒருவர் 



காலி செய்திட முனைவர். 



எனவேதான் இந்த அண்ணன் தம்பி 



உறவிற்கு பங்காளி என்று பெயர் 



வந்ததோ என்று நான் எனக்குள் 



எண்ணிக்கொள்வதும் உண்டு. 



அதைப்போலவே தான், தலைவர் 



பெற்றெடுத்த சிங்கக் குட்டிகள், 



தளபதி திருமிகு. மு.க.ஸ்டாலின், 



திருமிகு மு.க.தமிழரசு மற்றும் 



எங்கள் தலைவர் அவரது வாழ்நாள் 



முழுவதும் செய்திட்ட பாவங்களின் 



மொத்த அவதாரம்தான் அவரது 



மூத்த சீமந்திர புத்திரன் திரு 



மு.க.அழகிரி என்று நான் எந்தக் 



கோவிலிலும் அடித்து சத்தியம் 



செய்திடத் தயாராக உள்ளேன். 



என்னைப்பற்றி என் தந்தை 



என்னிடமே நேரிடையாகவே 



சொன்ன வாசகம் இது :-                     



அடேய் நான் தவமாய்த் தவமிருந்த 



பெத்த அருந்தவ புதல்வனே/மகனே 



பாலு!! நான் என்னுடைய 



வாழ்க்கையிலே எவ்வளவோ 



பாவங்கள் செய்திருக்கிறேன். அந்த 



அத்தனை பாவங்களின் ஒட்டு 



மொத்த வடிவம்தான் நீ(TRB) என்று 



எனது அன்புத் தந்தை என்னைப் 



பற்றி சொன்ன அந்த வாசகம் 



இப்போது எனது நினைவிற்கு 



வருகிறது அன்பர்களே)அது 



அனேகமாக1975க்கும் 1979ம் 



ஆண்டிற்கும் இடைப்பட்ட ஒரு 



ஆண்டாக இருக்கும் என்று 



கருதுகிறேன். (வருடம் துல்லியமாக 



நினைவினில் இல்லை) தலைவரின் 



அன்புத் துணைவியார் திருமதி 



தயாளு அம்மையார் அவர்களால், 



அப்பா மகனே !! அழகிரி !!, நீ இந்த 



சென்னை மாநகரினிலே குப்பை 



கொட்டியது போதுமடா !!நீ இப்போது 



உடனடியாக உனது மூட்டை 



முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு 



மதுரைக்கு சென்று குடியமர்ந்து 



உனது பிழைப்பைப் பார்த்துக்கொள் 



என்று அனுப்பப்பட்டவரே நமது 



இன்றையக் கட்டுரையின் நாயகன், 



அஞ்சா நெஞ்சன், முன்னாள் மத்திய 



கேபினட் அந்தஸ்து அமைச்சர் 



என்னும் பட்டம் வழங்கப்பட்டவர் 



(எல்லாம் தலைவர் செய்த மறக்க 



முடியாத, மன்னித்திட முடியாத 



மாபெரும் தவறுகள் என்னும் 



விதைதனை இங்கே அவர் 



விதைக்கிறார்--ஒருவேளை இவர் 



(அழகிரி) மன்மதபுரிக்கு 



வேண்டுமானால் சக்ரவர்த்தியாக 



பட்டம் சூட்டப் பட்டிருந்தால் அது 



நிச்சயமாக கழகத்தின் 



உண்மையான தொண்டர்கள் 



(அழகிரி அவர்களின் 



அடிவருடிகளைப் பற்றி நான் இங்கே 



சொல்லவரவில்லை.அவரைச்சுற்றி 



இருப்பவர்கள்தான் அவரைக் 



கெடுத்துக் குட்டிச் சுவராக்கி 



நாசமாக்கிவிட்டார்கள். அழகிரிக்கு 



"தேவையானவைகளை" வழங்கி, 



அழகிரி அவர்களிடம் நல்ல பெயரை 



பெற்றுக்கொண்டு அதன் மூலமாக 



அவர் பெயரை உபயோகித்து பல 



கோடிகளைச் சம்பாதித்தவர்கள் 



மதுரை மாநகரிலே ஏராளமானோர் 



இன்னுமும் இருக்கத்தான் 



செய்கிறார்கள்--2௦11 தேர்தல் 



முடிந்தவுடன், தி.மு.க. 



தோல்வியைத் தழுவியதற்கு என்ன 



காரணம் என்று 



பத்திரிக்கையாளர்கள் 



சந்திப்பின்போது தலைவர்கலைஞர் 



சொன்ன கருத்து, அவரது 



மனதுக்குள் முழுக்க முழுக்க திரு 



மு.க.அழகிரி அவர்களைப் பற்றியே 



சரியான எடைபோட்டு சொன்ன 



காலத்தினால் அழித்திட முடியாத 



ஒரு ஆய்வுக்குப் பின்னரே தலைவர் 



கலைஞர் அவர்கள் வெளியிட்ட 



ஒன்றாகும். இது காங்கிரஸ் 



கட்சிக்காகசொல்லப்பட்டகருத்தல்ல 


எல்லோராலும் கண்டிப்பாக 



அங்கீகாரம் செய்திட வேண்டிய ஒரு 



விஷயம். " கூடாநட்பு கேடாய் 



முடியும்" இதுதான் தலைவர் 



கலைஞர் அவர்கள் சொன்ன நல்ல 



கருத்து)  தான் பெற்ற பிள்ளை என்ற 



ஒரே காரணத்திற்காகவும், 



இவரைவிட வயதிலும், 



அனுபவத்திலும் மூத்த, , கட்சிக்கு 



தங்களது சொந்தக் கைக்காசினை 



போட்டு வளர்த்த மூத்த 



தலைமுறையினர் அனைவரையும் 



புறம் தள்ளி விட்டு,  



திரு.அழகிரி அவர்களுக்கு, அவரது 



தரத்திற்கும், தகுதிக்கும் சற்றும் 



பொருந்திடாத வகையில், அவர்ஒரு 



(நூதனமான பார்மூலாவின் மூலம் 



திருமங்கலத்தில் நடைபெற்ற அந்த 



இடைத்தேர்தலில் தி.மு.க.வை 



வெற்றி பெற வைத்தார்) புதிய பதவி 



ஒன்றினை  உருவாக்கி அந்தப் 



பதவிக்கு " தென்மண்டல அமைப்பு 



செயலாளர் " என்று பெயரிட்டுஅதை 



தலைவர் கலைஞர் அவர்களே, 



என்றைக்கு அந்தப் பட்டத்தை 



உங்கள் சீமந்திர புத்திரனுக்கு 



வழங்கி மகிழ்ந்தீர்களோ, 



அன்றைக்கே ஆரம்பம் ஆகிவிட்டது 



உங்களுக்குத் தொல்லைகள்/



தலைவலிகள்,மனஉளைச்சல்கள்  



என்கின்ற அடைமழையின் 



தூறல்கள். இதனைப் பற்றிய முழு 



விபரங்களும் நாளை உங்களுக்கு 



விரிவாகவும், விளக்கமாகவும் தர 



இருக்கின்றேன். அதுவரை சற்று 



அமைதியாக நீங்கள் இருக்கவும். 



நன்றி !! வணக்கம்!!                                 



அன்புடன். மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment