உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும்
என் உயிரினும் மேலான அன்புத்
தமிழ் உடன்பிறப்புகளே !!
அனைவருக்கும் எனது இதயம்
கனிந்த காலைவேளையின் அன்பு
வணக்கங்கள் உரித்தாகட்டும்!!
இன்றைய தினம் நாம் பேசுகின்ற
தமிழ்ப் பேச்சுகளில் கெட்ட
வார்த்தைகளைப் பேசாத நபர்கள்
என்று எவருமே இல்லை. ஆம்
அன்பர்களே !! இதோ இங்கே
நடைபெறுகின்ற இரண்டு
நண்பர்களின் நடுவில் அவர்கள்
பேசுகின்ற வார்த்தைகளில்
எத்தனை கெட்டவார்த்தைகள் இடம்
பெற்றுள்ளன என்று நீங்களே
பாருங்கள்:-
மடையன்:- டேய்!! மாப்ளே !!
வாடா எங்க ஆத்தா !! இன்னைக்கு
இன்னாட பேசனும். சொல்றா என்
மசுறு.
சடையன்:- அடங்கொக்காலி !!
இன்னைக்கு காலங்காத்தாலேயே
ஆரம்புச்சுட்டான்யா. வக்காலி
இன்னைக்குப் பொழப்பு மசுருமாறித்
தாண்டா இருக்கும் மச்சான்!!
அன்பர்களே !! அவர்கள் இன்னும்
பேசிக்கொள்ளும் பேச்சுக்களை
நான் இங்கே பதிவு செய்கிறேன்
என்று ஒரு பேச்சுக்கு வைத்துக்
கொள்ளுங்கள், நீங்கள், எந்த
நாட்டில் எந்தப் பகுதியில்
இருந்தாலும் என்னைத் தேடி வந்து
அடிப்பீர்கள் அல்லது உதைப்பீர்கள்.
ஆம் அன்பர்களே !! இன்று நாட்டின்
நிலைமை அந்த அளவிற்கு கெட்டுப்
போய்விட்டது என்பதே உண்மை.
நாமெல்லாம் தமிழர்கள்.
நல்லவர்கள் அதிலும் குறிப்பாகச்
சொல்லவேண்டும் என்றால்
வல்லவர்கள், அறிவு உள்ளவர்கள்.
நாம் இப்படி எல்லாம் அசிங்கமாக,
அவதூறாக பேசலாமா?
சிந்தியுங்கள் நண்பர்களே
சிந்தியுங்கள். கவியரசர்
கண்ணதாசன் " திருடாதே " என்ற
படத்தில் ஒரு பாடலில் சொன்ன
கருத்து இது :-
சிந்தித்துப்பாத்துசெய்கையைமாத்து
சிறுசா இருக்கையில் திருத்திக்கோ
தவறு சிறுசா இருக்கையில்
திருத்திக்கோ !!
தெரிஞ்சும் தெரியாம நடந்திருந்தா!!
அது திரும்பவும்வராம பாத்துக்கோ!!
என்று அறிவு பூர்வமாக சிந்தித்து
எழுதியிருப்பார். ஆனால் நம்மில்
எத்தனை நபர்கள், இந்த அறிவுரை
தனைக்கேட்டு திருந்தியிருப்பார்கள்.
எனக்குத் தெரிந்து 1௦௦ க்கு 5 நபர்கள்
இருக்கலாம் ( அந்த ஐவரில்
அடியேனும் ஒருவன்) ஆக
திருந்துங்கள். திருவள்ளுவர் என்ன
சொல்லி இருக்கிறார் தமது குறளில்
இதோ இங்கே பாருங்கள்:-
தினம் ஒரு திருக்குறள்.
அதிகாரம் :- இனியவைகூறல்.
குறள் எண்:- 1௦௦.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று... ... ...
விளக்கம் :- இனிய சொற்கள்
இருக்கும்போது அவற்றைவிட்டுக்
கடுமையான சொற்களைக் கூறுதல்,
கனி இருக்கும்போதுஅதைவிடுத்துக்
காய்களைப் பறித்துத் தின்பதைப்
போன்றது.இது திருவள்ளுவர்
நமக்கு அருளிச் சென்ற குறளும்
அதன் விளக்கமும் ஆகும்.
ஆகவே என் அன்புக்குரிய உலகத்
தமிழ் நெஞ்சங்களே !! நாம்
இன்றுமுதல் ஒரு சபதத்தினை
மேற்கொள்வோம். என்ன என்றால்
நாம் இதுவரை பேசிய கெட்ட
வார்த்தைகளே போதுமானது.
இனியாகிலும் வாழ்நாள் முழுவதும்
எந்தவிதமான கெட்ட
வார்த்தைகளையும் பேசமாட்டோம்
என்று உறுதிமொழி எடுத்துச்செயல்
படுவோமாக இந்த எதிர்வரும்
தைத்திங்கள் முதல் நாளாம்
பொங்கல் திருநாள் முதலாக, ஏன்
என்றால் அன்றுதான்
தமிழ்ப்புத்தாண்டு பிறக்கும் திருநாள்
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment