Monday, 27 January 2014

அந்நாட்டு மக்கள் அயோக்யத்தனம் செய்யலாம் தவறு இல்லை !! ஆனால்.....அந்நாட்டு அரசே இப்படி ஒரு அயோக்கியத்தனம் செய்திடலாகுமா ? இது நியாயம்தானா நீ சொல்லு !!







உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!   



உலகம் முழுதும் வாழ்ந்து வரும் 



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!               



ஒரு நாட்டில் வாழும் மனிதர்கள் 



அவர்களுக்குள்ளாக என்ன 



வேண்டுமானாலும் 



அயோக்கியத்தனம் செய்து 



கொள்ளலாம். தவறு இல்லை. 



ஆனால் அவர்களை நல்ல வழிக்கு 



நடத்தி சென்று புத்திமதி சொல்லிட 



வேண்டிய அந்நாட்டு அரசாங்கமே 



அயோக்கியத்தனம் செய்தால்இந்தக் 



கொடுமையை என்ன சொல்வது? 



இது எந்த நாட்டில் நடைபெற்று 



வருகிறது என்று நீங்கள்கேட்கலாம். 



வேறு எங்கும் நீங்கள் இந்தக் 



கொடுமையை தேடி அலைந்திட 



வேண்டாம். நம்ம செந்தமிழ்நாட்டில் 



தான் இந்த அயோக்கியத்தனம் 



தற்போது உள்ள அரசாங்கத்தினால் 



நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது 



அன்பர்களே. இன்றைய தினம் 



அரசாங்கமே ஏற்று நடத்தும் 



மதுகடைக்கு விற்பனைக்கு வரும் 



குவாட்டர் பாட்டில்களின் 



கொள்முதல்விலை என்னாவாக 



இருக்கும் என்று கருதுகிறீர்கள்? 



வெறும் 1௦ ரூபாயில் இருந்து அதிக 



பட்சம் 25 ரூபாய்தான்.  ஆனால் 



விற்பனை விலை 9௦ ரூபாய் முதல் 



14௦ வரைக்கும். இப்படி 



பொதுமக்களிடம் கொள்ளை 



லாபத்திற்கு விற்று பணத்தை 



சம்பாதித்திடும்  அரசாங்கம் அந்தப் 



பணத்தில் இலவச (இதற்குஇப்போது 



ஒரு கௌரவமான பெயர்: 



"விலையில்லா "என்று. எவன் 



கண்டு புடிச்சான்னு தெரியல்லிங்க 



இந்த வார்த்தையை. அவனுக்கு 



செருப்பாலேதான் மாலையைப் 



போட்டு விளக்குமாத்தை கையிலே 



பூச்செண்டாகத் தரனும் !! ) 



மிக்சி,கிரைண்டர்,மின்விசிறி 



ஆகியவற்றை வழங்கி 



பொதுமக்களின் காதுலே 



பூச்சுத்துகின்ற அயோக்கியத்தனம் 



நிறைந்த ஒரு அரசாங்கத்தை 



உலகத்துலே வேற எந்த 



நாட்டிலேயும் நீங்க பார்த்திட 



முடியாதுங்க. அதே மாதிரித்தான் 



முத்தமிழ் அறிஞர் தலைவர் 



கலைஞர் அவர்களது சீரிய 



முயற்சியினால் தளபதி ஸ்டாலின் 



அவர்கள் ஜப்பான் நாட்டிற்குச் 



சென்று அங்கு போடப்பட்ட 



தொழில்நுட்ப ஒப்பந்தத்தினால் 



சென்னையில் உருவாக்கப்பட்ட 



மாபெரும் கடல் நீரைக் குடிநீராக 



மாற்றும்திட்டத்தினால் சென்னை 



மாநகர் மக்களுக்கு இலவசமாக 



குடிநீர் தரவேண்டும் என்று 



போடப்பட்ட திட்டத்தினால்கிடைத்த 



குடிநீரை 1 ரூபா பிளாஸ்டிக் 



பாட்டில்லே அடச்சு அதுக்கு  




"அம்மா குடிநீர்" அப்படீன்னு 



பேரவச்சு விக்கிறது எவ்வளவு 



பெரிய கடஞ்சு எடுத்த 



அயோக்கியத்தனம் ? அதுவும் 



வெறும் ரூபா1.5௦ காசு மட்டுந்தாங்க 



அடக்கம் ஆகுற தண்ணியை பத்து 



ரூபாய்க்கு விக்கிற 



படுபாவித்தனத்தை நான்என்னன்னு 



சொல்லுவேன்? எப்படீன்னு 



சொல்லுவேன்? எங்கே போயி 



சொல்லுவேன்? யார்கிட்ட போயி 



சொல்லுவேன்? ஆக இன்னைக்கு 



இப்படி அநியாயம்,அக்கிரமம், 



அயோக்கியத்தனம் இந்த மூன்றின் 



ஒட்டு மொத்த வடிவம் தான் 



இன்றைக்கு இந்த நாட்டினைஆண்டு 



கொண்டுஇருக்கும் சர்க்கார் என்று 



சொல்லி கட்டுரைக்கு முற்றுப்புள்ளி 



வைக்கிறேன். நன்றி!! வணக்கம் !!   



அன்புடன். மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment