Tuesday, 21 January 2014

" நம்பிக்கை " என்ற வார்த்தைக்கு இந்தக் கலிகாலத்தில் இடம் இருக்கிறதா ? இல்லை அந்த வார்த்தை காணாமல் போய்விட்டதா ?






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!



இதை உரக்கச் சொல்வோம் 



உலகுக்கு!! இனம் ஒன்றாக,மொழி 



வென்றாக புதுவேல் எடுப்போம் 



விடிவுக்கு!! நம்வெற்றிப் பாதையில் 



நரிகள் வந்தால்விருந்துவைப்போம் 



விண்ணுக்கு!!    




உலகம் முழுவதும் 



வாழ்ந்து வரும் என்அன்புத் தமிழ் 



உடன்பிறப்புகளே!! அனைவருக்கும் 



இனிய இதயம் கனிந்த வணக்கம்.         



யுகங்கள் பல கடந்து விட்டன. 



ஒவ்வொரு யுகமும் பற்பல 



கோடானுகோடி வருடங்களைத் 



தன்னகத்தே கொண்டது. 




இதுவரையிலும் திரேதாயுகம், 



துவாபரயுகம், இவை  எல்லாமே 



முடிவுற்று  தற்போது கலியுகம் 



நடைபெற்றுக்கொண்டு 



இருக்கின்றது. முதலில் சொன்ன 



இரண்டு யுகங்களிலும் 



நீதி,நேர்மை,நியாயம், இவைகள் 



எல்லாம் மிகவும் சரியான 



முறையில் இயங்கிக்கொண்டு 



இருந்தன. அப்போதெல்லாம் 



ஒளிதரும்விளக்குகள் கீழிருந்து 



மேல்நோக்கி ஒளிகொண்டு சென்ற 



காலங்கள் அவை.ஆனால் 



கலிகாலத்திலோ இவை எல்லாமே 



தலைகீழ்தான். ஆம் அன்பர்களே !! 



மேலுருந்து கீழ்நோக்கி ஒளி தரும் 



விளக்குகள் பிரகாசித்திடத் 



தொடங்கி விட்டன. இந்த தலைகீழ் 



மாற்றங்கள் என்பது இது ஒன்றில் 



மட்டும் அல்ல, எல்லா 



விஷயங்களிலும் தலைகீழ்தான். 



மட்டு,மரியாதை,பணிவு,மதித்து 



நடப்பது, பெரியர்கள் சொல்லுக்குக் 



கீழ்படிதல், வாலிபவயது வந்தாலும் 



மனதில் எந்தவிதமான விரசமான 



உணர்வுகளுக்கும் இடங்கொடாமல் 



அம்மா,அப்பா இருவர் பார்த்துமணம் 



முடித்திட பெண் பார்ப்பது வரை, 



அதே போல பெண்ணுக்கு 



மாப்பிள்ளை பார்ப்பது உட்பட இவை 



எல்லாமே பெரியோரின் 



சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பது, 



நம்பிக்கை, இவை எல்லாமே 



சத்தியத்துக்கு அடங்கி 



நடந்தகாலங்கள் எல்லாம் இந்த 



கலிகாலத்தில் மலைஏறிப்போச்சு. 



ஆம் !! அன்பர்களே !! மொட்டு 



வெடிப்பதற்குள்ளாகவே இந்த சிட்டு 



துணையைதேடி அலைவதெல்லாம் 



இந்தக் கலிகாலத்திலே ரொம்பவும் 



சர்வ சாதாரணம். எங்கும் காதல் 



எதிலும் காதல். காதல் காதல். 



காதல். காதல் போயின் சாதல்சாதல் 



சாதல். இதுதான் கலிகாலத்தின் 



லட்சணம் அன்பர்களே. காதலிப்பது 



ஒருத்தனை. கல்யாணம் 



பண்ணுவது வேறு ஒருத்தனை. இது 



எப்படி இருக்கு ? அந்தக் காலத்துலே 



எல்லாம் (நான் சொல்வது எல்லாம் 



ஒரு 4௦ அல்லது 5௦ வருடங்களுக்கு 



முந்திய கதை) அப்ப எல்லாம் MGR 



சரோஜாதேவி இந்த ஜோடி 



கொடிகட்டிப் பறந்த காலம். 



பாத்தீங்கன்னு சொன்னா புருஷனும் 



கருப்பாத்தான் இருப்பான். அதே 



மாதிரி பொண்டாட்டியும் 



மாநிறமாகத்தான் இருப்பாள்.  ஆனா 



பொறக்குற புள்ளை, அது ஆம்பிள 



புள்ளையா இருந்தாக்கா நல்ல 



சிவப்பா சுருட்ட முடியோடயும் 



பொம்பளப் புள்ளையா இருந்தா 



சரோஜாதேவி கணக்கா நல்லா 



சிவப்பா அழகா இப்படித்தான் 



புள்ளைக பொறந்திருந்த காலம்.இது 



எப்படி சாத்தியம்ன்னு கேட்கீகளா ? 



அதுதான் முந்தின நாள் ராத்திரி 



இரண்டாம் ஆட்டம் (SECOND SHOW) 



சினிமாவுக்குப் போயிட்டு வந்து 



புருசனும் பொம்பளையும் ஒண்ணா 



சேரும்போது இவன் மனசுலே 



சரோஜாதேவி நினைப்புமட்டும்தான் 



இருக்குமாம். அதே போல 



பொஞ்சாதி நெஞ்சுக்குள்ளே MGR 



நினைப்புத்தான் இருக்குமாம்.இப்படி 



இருந்துச்சுன்னு சொன்னா புள்ள 



எப்படி அந்தமாதிரித்தானே புறக்கும். 



அட என்ன நான் சொல்றது. அந்தக் 



கதைதான் இந்தக் கலிகாலத்துலே 



கிட்டத்தட்ட 1௦௦க்கு 9௦ ஜோடிகள் 



விஷயத்துல இந்த நாட்டுலே 



நடந்துகிட்டு இருக்கு. ஆமான்னேன். 



எவனையோ மனசார காதலிச்சுட்டு, 



எவனுக்கோ வாக்கப்படுற 



பொம்பளைங்க உலவுற இந்த 



உலகத்துல எப்படி ஐயா 



நம்பிக்கைக்கு இடம் இருக்கும் ? 



அதே மாதிரி எவளோ ஒருத்திய தன் 



மனசாரக் காதலிச்சுட்டு 



பணத்துக்காக எவளோ 



ஒருத்தியைக் கண்ணாலம் 



கட்டிக்கிட்டு வாழுற 



வாழ்கையிலேயும்  எப்படி ஐயா 



நம்பிக்கை இருக்க முடியும்?  நான் 



நிச்சயமாச் சொல்றேன் இந்த 



"நம்பிக்கை "அப்படீங்கிற உயர்ந்த 



தரமான வார்த்தைக்கு இந்தக் 



கலிகாலத்தில் இடமே இல்லை 



என்றுதான் நான் சொல்லுவேன். 



நீங்க என்ன சொல்றீங்க ? பதில் 



சொல்லுங்க !!                                               



நன்றி!! வணக்கம் !!                                     



அன்புடன். மதுரை. T.R.பாலு.


No comments:

Post a Comment