ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடும் (1980ல் நடந்தது) கவியரங்கம் விஷயத்தில் வாலிக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட கருத்து மோதல்களும் !! ஒரு சுவாரஸ்யமான நிகழ்வின் நினைவலைகள் !! உங்களின் கனிவான கவனத்திற்கு !!
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும்
என் உயிரினும் மேலான அன்புத்
தமிழ் உடன்பிறப்புகளே !! உங்கள்
அனைவருக்கும் என் இனிய காலை
வணக்கங்கள்.
அன்பர்களே அது !! 1980ம் ஆண்டு.
அப்போது தமிழக முதல்வர் என்னும்
நாற்காலியில் அமர்ந்து
அலங்கரித்தவர் புரட்சி நடிகர் என்று
முத்தமிழ் அறிஞர் தலைவர்
கலைஞர் திரு மு. கருணாநிதி
அவர்களால் பாராட்டப்பட்டு பட்டம்
பெற்றவர் மறைந்த M.G.R. ஆவார்.
அன்பர்களே அந்த ஆண்டு தான்
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு
தேமதுரத் தமிழோசை
முழங்குகின்ற மாமதுரை நகரில்
மிகக் கோலாகலத்தோடும்,
கொண்டாட்டங்களோடும், வெகு
விமரிசையாகக் கொண்டாடப்பட்டு
மகிழ்வுற்றிந்த நேரம் அது. அந்த
உலகத் தமில்மகாநாட்டின்
இறுதிநாள் நிகழ்ச்சிக்குத் தலைமை
தாங்கி சிறபித்தவர் அப்போதைய
பாரதப் பிரதமர் அன்னை
இந்திராகாந்தி ஆகும். அந்த
நிகழ்ச்சியின் சிகரம் போல
அமைந்திருந்தது தமிழ் இனத்தின்
பெருமையை விளக்கிடும் விதமாக,
வண்ண வண்ண அலங்காரம்செய்த
பேருந்துகளில் பொம்மைகளாக,
வரலாற்றின் நிகழ்வுகளின்
பெருமைகளை விளக்கிக் கூறிடும்
உண்மைகளாக ஒரு மாபெரும்
ஊர்வலம் ஒன்று சிறப்புற நடந்தது
அந்த ஊர்வல நிகழ்ச்சிகளை மாநில
முதல்வரான M.G.R. & பாரதப்
பிரதமர் அன்னை இந்திராகாந்தி
ஆகியோர்மதுரை தெற்குமாசிவீதி &
மேல மாசி வீதி சந்திப்பில்
அமைக்கப்பட்டு இருந்த அலங்காரப்
பந்தலில் அமர்ந்து இருவரும்
பார்வையிட்டனர். இந்த ஊர்வலம்
நடைபெற்ற நாளுக்கு, முந்திய நாள்
ஒரு கவியரங்கம் நடை பெற்றது.
அதில் ஒவ்வை நடராஜன்
தலைமையில் அந்த கவியரங்கம்
நடைபெற்றது. அதில் காவியக்
கவிஞர் வாலியையும் இணைத்துக்
கொண்டார் அவர். இந்த விஷயமே
வாலிக்குத் தெரியாது. அன்றுகாலை
தமிழ்மாநாட்டிற்கு வந்த முதல்வர்
M.G.R. வாலியையும் சந்தித்துப்
பேசினார். அப்போது இந்தக்
கவியரங்கத்தில் நீங்கள் கலந்து
கொள்கிறீர்களா ? என்று கேட்டார்.
அதற்கு வாலி இதுவரை என்னை
யாரும் அழைத்திடவில்லை என
சொன்னார். அதன்பின் வாலி தனது
அறைக்குத் திரும்பினார். அப்போது
ஔவை நடராசன் அனுப்பியதாக
ஒருவர்வந்து, மாலை 4 மணிக்கு
கவியரங்கம் நடைபெற
இருப்பதாகவும் அந்த நிகழ்வினில்
தாங்களும் கலந்து கொள்ள
வேண்டும் என்று ஔவை நடராசன்
சொல்லிவரச் சொன்னதாக
சொன்னவுடன் வாலிக்குத் தூக்கி
வாரிப் போட்டது. சற்று நேரம் முந்தி
தானே முதல்வர் கேட்டார்.அப்போது
இல்லை என்று சொல்லிவிட்டு,
இப்போது அவர் முன்னிலையில்
போய் கவியரங்கினில்பங்கேற்றால்
அவர் கோபம் அடைந்திட மாட்டாரா.
இவ்வாறெல்லாம் சிந்தித்த கவிஞர்
வாலி தொலைபேசியில்
எவ்வளவோ முயற்சி செய்தும்
முதல்வரோடுபேசிடமுடியவில்லை.
கவியரங்கம் துவங்கிடும் நேரம்
நெருங்கிடவே கவியரங்கினுள்
நுழைந்தார் வாலி. அவரைப் பார்த்த
முதல்வர் கடுங்கோபம் அடைந்தார்
கைசைகை காட்டி அவரை
தன்னருகே அழைத்து தனது
கோபத்தை வெளிக்காட்டினார்
முதல்வர் MGR. நான்தான்
காலையிலே உங்களிடம்
கேட்டேனே, அப்போது அழைப்பு
எதுவும் வரவில்லை என்றீர்கள்
இப்போது தாங்கள் எது ஒன்றும்
தெரியாத ஆள் மாதிரி உள்ளே
நுழைகிறேரே என்றார்.உடனே
அதற்கு வாலி பதில் சொல்லிட
முயலும் நேரம் கவியரங்கம்
ஆரம்பம் ஆகிட மணியடித்தது.
ஔவை நடராஜன் தலைமை ஏற்க
ஆரம்பம் ஆனது கவியரங்கம்.
ஒவ்வொருவராக வந்து தங்களது
கவிதைகளை அரங்கேற்றம் செய்து
மகிழ்ந்தனர். வாலியின் நேரம்
வந்தது. ஒலி வாங்கு கருவியின்
முன்பாக (MIKE) நின்று அவர் தனது
கவிதை மழையினைப் பொழிந்து
தள்ளினார். அவர் பேசியதாவது :-
ராமச்சந்திர பிரபுவே வணக்கம்.
நான் இந்தக் கவியரங்கிற்கு வரும்
முன்பு தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு
"திரேதாயுகத்து ராமச்சந்திரன்"
மற்றும்
" கலியுகத்து ராமச்சந்திரன்."
அன்னை கோசலை ஈன்றெடுத்தாள்
அந்த ராமபிரானை!!
அன்னை சத்தியா தவமிருந்து
பெற்றனள் இந்த ராமச்சந்திரனை !!
அந்த ராமச்சந்திரன் ஆரிய
குலத்தினின்று வந்தவன் !!
இந்த ராமச்சந்திரனோ சூரிய
குலத்தினின்று உதித்தவன் !!
அவனும் ஜானகி மணாளன் !!
இவனும் ஜானகி மணாளன் !!
அந்த ராமன் வாலியை மறைந்து
நின்று கொன்றவன்.
இந்த ராமனோ வாலியை
மனந்தனிலே கொண்டவன் !!
அவன் சிறுமதிகொண்ட
சிற்றன்னையால் பதவிலிருந்து
வெளியேற்றப்பட்டவன் !!
இவனோ சிறுமதிபடைத்த சிலரால்
கட்சியிலிருந்து வெளியேற்றப்
பட்டான்.
நீதி நிலை பெற்றபின் அந்த ராமன்
அமைத்ததும் ராம ராஜ்யமே !!
இவனும் இவன் கட்சி ஜெயித்தபின்
அமைத்தும் ராமராஜ்யமே !!
இதனைக் கேட்டவுடன் முதல்வர்
தனது கோபத்தை மறந்து
மேடையேறி வந்து வாலியைக்
கட்டித் தழுவி கன்னத்தில்
முத்தமிட்டு மகிழ்ந்த காட்சி கண்டு
ஆனந்தக் கண்ணீர் சிந்திடாத
மனிதர் அரங்கினில் எவரும்
உண்டோ ?
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment