Friday, 27 December 2013

அண்ணா தி.மு.க.பிறந்த கதையும் -- திரு மு.கருணாநிதி அவர்களின் மூத்த புதல்வர் திரு மு.க.முத்து நடித்த முதல் படமான " பிள்ளையோ பிள்ளை " படத்தின் முன்னோட்டம் வெளியீட்டில் வாலிக்கும் எம்.ஜி.ஆருக்கும் இடையே நடந்த கருத்து மோதல்கள் பிறகு ஏற்பட்ட சமாதானங்கள் பற்றிய ஒரு நினைவலை !! உங்களின் கனிவான கவனத்திற்கு !!






உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!! 



உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் 



எனது உயிரினும் மேலான அன்புத் 



தமிழ் நெஞ்சங்களே !!                             



உங்கள் அனைவருக்கும் எனது 



இதயம் கனிந்த வணக்கம்.                     



அன்பர்களே அது 1972ம் ஆண்டு. 



தமிழகத்து அரசியல் வானில் ஒரு 



பெருத்த சத்தத்துடன் கூடிய 



இடியோசையோடு இணைந்த 



பெரும் மழை, அது சாதாரண மழை 



அல்ல அன்பர்களே !! ஒரு மாபெரும் 



தமிழர்களின் வாழ்க்கையில் 



மறுமலர்ச்சி என்னும் விடிவை 



உருவாக்கிட பாடுபட்ட ஒரே ஒரு 



இயக்கமான பேரறிஞர் அண்ணா 



உருவாக்கிய திராவிட முன்னேற்றக் 



கழகம் என்னும் இமயமலையை 



தகர்த்திடவும் , மாபெரும் 



ஆலமரத்தின் ஆணிவேரை 



வேரறுக்கும்  செயலில், குள்ள நரித் 



தனத்தின் ஒட்டு மொத்த உருவமான 



அகில இந்திய காங்கிரஸ் 



பேரியக்கம் தனது வழக்கமான, 



திருட்டுத் தனமான, வேலையினை, 



சப்தமின்றி, மிகமெளனமாக, செயல் 



படுத்திடத் துவங்கிய, ஆண்டு அது.     



ஆம் !! அன்பர்களே !! 1971ம் ஆண்டு 



நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் 



தேர்தலின்போது சேர்த்து 



நடைபெற்ற தமிழ்நாடு 



சட்டமன்றத்திற்கான தேர்தலில் 



முத்தமிழ் அறிஞர் கலைஞர் 



அவர்களின் அரசியல் 



சாணக்கியத்தனம் வென்ற ஆண்டு 



அது. பாராளுமன்ற மற்றும் 



சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.க. 



வுடன் கூட்டடணி அமைத்துக் 



கொண்ட அப்போதுதான் உதயம் 



ஆன " இந்திரா காங்கிரஸ் " என்ற 



புதிய அகில இந்தியக் கட்சிக்கு 



தலைவர் கலைஞர்  அவர்கள் 



(இ.காங். கட்சியின் அப்போதைய 



தகுதிக்கு மிக மிக அதிகமாகவே 11 



பாராளுமன்றத் தொகுதிகளைத் 



தந்து அதனால் தமிழ்நாடுசட்டமன்ற 



தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு இடம் 



கூட வழங்கிட இயலாது என்று 



வெளிப்படையாக ஒரு ஒப்பந்தம் 



தலைவர் கலைஞர் அவர்களுக்கும் 



அன்னை இந்திராகாந்திஅம்மையார் 



அவர்களுக்கும் இடையில் டெல்லி 



நகரில் வைத்து நிறைவேற்றப் 



பட்டது) தமிழ்நாட்டின் பாராளுமன்ற 



தொகுதிகளில் 1௦ம் பாண்டிச்சேரி 



பாராளுமன்றதொகுதியையும் 



பகிர்ந்து தந்து மொத்தம் 11 



பாரளுமன்றதொகுதிகளை மட்டும் 



தானே தி.மு.க. தங்களுக்குத் தந்தது 



(அத்தனை இடங்களையும் இ.காங். 



வெற்றி பெற்றது-அது வேறு 



விஷயம் அவர்களைப் பொறுத்த 



வரையில்) என்ற உள்ளத்து 



வஞ்சனையில் இ.காங். கட்சி 



தி.மு.க.வை உடைக்க 



எடுத்துக்கொண்ட கைபாணம்தான் 



எம்.ஜி.ஆர். அவர் 197௦ம் ஆண்டினில் 



தனது மாபெரும் பொருட்செலவில் 



தயாரித்திருந்த வண்ணக் காவியம்   



 "உலகம் சுற்றும் வாலிபன் " 



படத்தின் படப் பிடிப்புகளுக்காக 



ஜப்பான் நாட்டிற்குச் சென்றார். 



அப்போது அங்கே EXPO-7௦ என்னும் 



சர்வதேச வர்த்தக கண்காட்சி ஒன்று 



(INTERNATIONAL TRADE FAIR) மிகவும் 



பிரம்மாண்டமாக நடந்துகொண்டு 



இருந்தது. கிட்டத்தட்ட 5௦௦ ஏக்கர் 



பரப்பளவில் நடந்த அந்தக் 



கண்காட்சி மைதானத்தில், 



மேலே குறிப்பிட்ட தனது உலகம் 



சுற்றும் வாலிபன் திரைப்படத்தின் 



பெரும்பான்மையான காட்சிகளை 



அங்கே எம்.ஜி.ஆர். படம் பிடித்தார். 



அப்போது அவர் அந்நியச் 



செலாவணி விதி மீறல்கள் செய்து 



குற்றம் புரிந்திருந்தது கண்டு 



பிடிக்கப் பட்டது அந்தத் துறையின் 



புலனாய்வுப் பிரிவினரால். அந்தக் 



கோப்பு (FILE) அப்போதைய பிரதமர் 



உண்மையான " புரட்சித் தலைவி" 



என்று அந்நாளிலேயே அமெரிக்க 



நாட்டின் அதிபர் நிக்சன் அளித்த 



பெயர் அது. அன்னை (அம்மா அல்ல) 



இந்திரா காந்தியிடம் கோப்பு வந்தது. 



அதனைத் தக்க வைத்துக்கொண்ட 



அவர் தக்க சமயத்தில் இது தமக்கும் 



தமது காங்கிரஸ் கட்சிக்கும் 



பேருதவியாக இருக்கும் என்று 



எண்ணினார். அந்த வேளையும் 



வந்தது. திராவிட முன்னேற்றக் 



கழகத்தை உடைத்து கலகத்தை 



ஏற்படுத்தித் தர வேண்டும் நீங்கள் 



(M.G.R.) என்று இரகசியதொலைபேசி 



வேண்டுகோள் வந்தது அவருக்கு. 



வேறு வழி இன்றி எம்.ஜி.ஆரும் 



அதற்கான ஆயத்த வேலையில் 



ஈடுபட்டு இருந்தார்.இந்தத் தகவலும் 



தனது உளவுப் பிரிவின் மூலமாக 



கழகத் தலைவர் கலைஞரின் 



காதுகளுக்கு வந்து சேர்ந்தது. சரி !! 



எது எது எப்ப எப்ப எப்படி எப்படி 



நடக்க வேண்டுமோ, அது அது அப்ப 



அப்ப  அப்படி அப்படி நடந்தே தீரும் 



இது தலைவர் கலைஞர் அறிந்த 



உண்மை அவரது அப்போதைய 35 



ஆண்டுகள் பொதுவாழ்க்கையில் 



அவர் அறிந்திராத ஒன்று அல்ல. 



திரை உலகின் ஆதரவு புரட்சி நடிகர் 



என்று தலைவர் கலைஞர் 



அவர்களின் திருக்கரங்களால் 



பட்டம் பெற்ற M.G.R. மூலமாக, 



மக்கள் செல்வாக்கினையும், 



வாக்குகள் வங்கியையும் பெற்ற 



தி.மு.க. இப்போது தம்மையும், தமது 



இயக்கத்தையும் உடைத்து M.G.R. 



வெளியேறப் போகிறார் என்பதை 



முன்கூட்டியே அறிந்துகொண்ட 



தலைவர் கலைஞர் அவர்கள் என்ன 



செய்தார் என்றால் M.G.R. விட்டுச் 



சென்ற கலையுலக இடத்தை 



நிரப்பிட வேண்டியும் திரையுலகின் 



மூலமாக தி.மு.க. முன்பு 



எம்.ஜி.ஆரின் மூலம் பெற்ற அதே 



மக்கள் ஆதரவை , அவர் போன 



பிறகும் தி.மு.க.விற்கு கிடைக்கப் 



பெறச் செய்தல் என்பதுஅவசியமான 



ஒன்று என்றும்  கருதியதால் தனது 



முதல் மனைவியின் புதல்வர்ஆன 



திரு. மு.க.முத்து அவர்களை திரைத் 



துறையில் புகுத்திட முடிவெடுத்து 



அதற்காக கலைஞரின் மருமகன் 



திரு செல்வம் அவர்களை அந்த 



படமான " பிள்ளையோ பிள்ளை " 



என்ற வண்ணக் காவியத்தினை 



அஞ்சுகம் பிக்சர்ஸ் என்ற பெயரில் 



தயாரித்து இருந்த காலம் அது. 



படமும் குறிப்பிட்ட மூன்று மாதகால 



இடைவெளிக்குள் தயாரித்துமுடித்து 



படம் வெளியீட்டிற்கு வந்தது. முதல் 



காட்சி சென்னை தேவி 



திரையரங்கினில் (Premier Show) 



அரங்கேறியது.  தலைவர் கலைஞர் 



அவர்கள், இந்த விழாவிற்கு 



எம்.ஜி.ஆர். ஐ சிறப்புஅழைப்பாளராக 



அழைத்திருந்தார். இந்த திரைப்படம் 



" பிள்ளையோ பிள்ளை "வண்ணக் 



காவியத்திற்கு பாடல்கள் 



அனைத்தையும் காவியக் கவிஞர் 



வாலி எழுதி இருந்தார். விழாவிற்கு 



வாலியும் வந்திருந்தார். படம் 



முழுவதும் திரையிட்டுக் 



காண்பிக்கப் பட்டது. முழுப் 



படத்தையும் M.G.R. பொறுமையுடன் 



பார்த்தார். படம் திரையிட்டு முடிந்த 



பிறகு அவர் திரு மு.க.முத்துவை 



வாழ்த்தி ஒருசில வார்த்தைகள் 



பேசும்போது சொன்னார்:-                         



என் அன்புத் தம்பி முத்து இந்தப் 


படத்தில் மிகவும் திறமையை 


முழுவதுமாக அர்ப்பணித்து நடித்து 


இருந்தார். அவரை நான் பாராட்டிடக் 


கடமைப் பட்டுள்ளேன். இருந்தாலும் 


அவர் படம் முழுவதும் 


என்னைப்போலவே, என்னை 


மனதினுள் வாங்கியே 


நடித்திருந்தார். இது அவரது 


வளர்ச்சிக்கு சற்றும் உகந்தது அல்ல. 


தம்பி மு.க.முத்து அவர்களே !! 


உங்களுக்கு நான் சில அறிவுரைகள் 


கூறிடக் கடமைப் பட்டுள்ளேன். 


முதலில் நீங்கள், நீங்களாக, நடிக்க 


முயற்சி  வேண்டும். என்னைப்போல 


நடிப்பதைத் தவிர்த்து உங்களுக்கு 


என்று ஒரு தனிப் பாணிதனை 


நீங்கள் உருவாக்கிக் கொள்ள 


வேண்டும்.  அப்போதுதான் நீங்கள் 


இந்த மாய சினிமா உலகினில்நின்று 


நிலைத்து புகழ் பெற முடியும். 


உங்களை நான் எனது மனதார 


வாழ்த்துகிறேன் என்று சொல்லி 


அந்தக் காலத்தில் மிகவும் விலை 


உயர்ந்த ROLEX கைக்கடிகராத்தை 


அணிவித்து முத்துவை 


வாழ்த்தினார் M.G.R. அவர் ஏன் 



கடிகாரம் பரிசளித்தார் என்பதன் 



உள்நோக்கத்தை தலைவர்கலைஞர் 



புரிந்துகொண்டதனால் இதழ்களில் 



புன்னகை  நெளிந்திட விழா 



மேடையிலேயே சற்று வாய் விட்டு 



சிரித்து மகிழ்ந்தார் கலைஞர். நான் 



(M.G.R.) இந்த  தி.மு.க.வை விட்டு 



விலகி வெளியேறும் நேரம் வெகு 



தொலைவினில் இல்லை என்பதை 



மறைமுகமாக அவர் தெரிவித்து 



இருந்ததன் உட்கருவைப் புரிந்து 



கொண்டார் கழகத் தலைவர் 



கலைஞர் அவர்கள்.



பின் அரங்கத்தைவிட்டு (தேவி திரை 



அரங்கினை விட்டு) வெளியில் 



வரும்போது அங்கே வாலியைச் 



சந்தித்து, நாளை நீங்கள் எனது 



தோட்டத்திற்கு அவசியம் 



வரவேண்டும். மிகவும் முக்கியம் 



என்று சொல்லிவிட்டு காரில் ஏறி 



கிளம்பினார் புரட்சி நடிகர் M.G.R. 



 மறுநாள் காவியக் கவிஞர் வாலி 



அங்கே சென்றார் எம்.ஜி.ஆரை. 



சந்தித்தார். முதலில் வாலிக்கு 



தடபுடலாக விருந்து நடைபெற்றது. 



M.G.R. தனது கைப்பட உணவுகள் 



பரிமாறினார். அதன்பின்னர் அவர் 



வாலியின் தோளின் மீது கைகளைப் 



போட்டுக்கொண்டபடியே, தாம் 



நேற்றுபார்த்த மு.க.முத்து நடித்த 



"பிள்ளையோ பிள்ளை " படத்தைப் 



பற்றி இருவரும் பேசிடத் 



தொடங்கினர். அப்போது வாலி 



எழுதிய அந்தப் படத்திலேயே 



மிகவும் பிரசித்திபெற்ற ஒரு பாடல்:-  



மூன்று தமிழ் தோன்றியதும்                   


                                           உன்னிடமோ ? நீ 


மூவேந்தர் வழிவந்த மன்னவனோ? 




என்ற பாடலைப் பற்றி வாலியிடம் 



சற்று கோபத்துடன் அவர் 



வினைவினார். ஏன் வாலி, 



மு.க.முத்துவிடம் இருந்துதான் 



மூன்று தமிழ் தோன்றியதோ ? என்று 



சற்றே கிண்டல்கலந்த தொனியுடன் 



அவர் வினவினார். உடனே அவரது 



உள்மனத்தின் கோபத்தைப் புரிந்த 



வாலி, அண்ணே நீங்க தப்பா 



எடுத்துக்கொள்ளக் கூடாது. நான் 



சொல்பலிதம் படைத்த கவி என்று 



தாங்கள்தான்  சொல்லி உள்ளீர்கள். 



எனவே முத்துவிற்கு இந்தப் படம் 



முதல் படம். எனவே அவரை 



வாழ்த்திடும் விதமாகத்தான் நான் 



இப்பாடலை புனைந்து இருந்தேன். 



நீங்கள் இதற்கு வேறு அர்த்தம் 



எடுத்துக்கொள்ளக் கூடாது என்று 



சொன்ன பிறகே அவர் நிம்மதி 



அடைந்தார். உடனே அதற்கு அவர் 



வாலியிடம், பாடல் மிகவும் அற்புதம் 



 வாலி. இந்தப் பாடல் எனது படத்தில் 



இடம் பெற்றிருந்தால் இன்னும் 



சிறப்பாகவே இருந்திருக்கும் என்று 



நான் கருதினேன் என்றாராம் புரட்சி 



நடிகர் M.G.R. மேலே குறிப்பிட்டிருந்த 



அனைத்து நிகழ்வுகளும் இன்று 



ஏறத்தாழ 41 ஆண்டுகளுக்கு முன்பு 



நடைபெற்ற ஒரு வரலாற்று 



நினைவுகளின் தொகுப்பு 



அன்பர்களே. நீங்கள் அப்போது 



இந்த உலகில் பிறந்து இருக்க 



வில்லை. எனவே கடந்தகால 



வரலாறுகளை நீங்கள் 



அறிந்திருக்கவும் வாய்ப்பு இல்லை. 



எனவேதான் நான் இந்தக் கட்டுரை 



கட்டுரையின் வாயிலாக உங்கள் 



அனைவருக்கும் தெரிந்திருக்க 



வேண்டும் என்னும் உயரிய 



நோக்குடன் இங்கே பதிவு 



செய்திருந்தேன். நீண்ட கட்டுரைஇது 



பொறுமையுடன் படித்த அத்தனை 



அன்பு உள்ளங்களுக்கும் எனது 



நெஞ்சார்ந்த நன்றியையும் 



வணக்கத்தையும் காணிக்கை 



செய்து விடைபெறுகிறேன்.                     




 நன்றி !! வணக்கம் !!                                     



 அன்புடன். மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment