உடல் மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
இதை உரக்கச் சொல்வோம்
உலகுக்கு !!
இனம் ஒன்றாக, மொழி வென்றாக,
புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!
நம் வெற்றிப் பாதையில் நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு !!
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்
என் உயிரினும் மேலாக நான்
போற்றி வணங்கி வரும் எனது
அன்புத் தமிழ் உடன்பிறப்புகளே!!
உங்கள் அனைவருக்கும் எனது
இதயம் கனிந்த நலம் நிறைந்த
வாழ்த்துக்களுடன் கூடிய
வணக்கங்கள்.
அது 1882ம் ஆண்டு.டிசம்பர்மாதம்11ம்
தேதி தமிழ் வருடம் சித்திரபானு
கார்த்திகை மாதம் 27ம் தேதி மூல
நட்ஷத்திரத்தில் எட்டயபுரம் ஜமீன்
சின்னச்சாமி அய்யர்--லட்சுமி
அம்மாள் இவர்களுக்கு ஒரு மகன்
பிறந்தான். அவனுக்கு
சுப்பிரமணியன் என்று பெயரிட்டும்
செல்லமாக சுப்பையா என
அழைத்தும் அவனை வளர்த்து
வந்தனர். ஆனால் அவர்களுக்குத்
தெரியாது, இவன் எதிர்காலத்தில்
ஒரு மகாகவியாக உருவெடுத்து
சுதந்திர இந்தியப் போராட்டத்தில்
தன்னை ஈடுபடுத்தி ஒரு தன்னநலம்
அற்ற தியாகியாக, கவி மேதையாக
வளரப் போகிறான், வாழப்
போகிறான், எதிர்காலத்தில் இந்திய
மக்கள் மனத்தில், குறிப்பாகச்
சொல்ல வேண்டும் என்றால் தமிழ்
இன மக்களின் மனத்தில் என்றும்
நீங்கிடாத ஒரு இடத்தினைப்
பெறப்போகிறான், இறந்தும்
இறவாமல் என்றென்றும்
சிரஞ்சீவியாக இந்த தமிழ் இன
மக்கள் எண்ணத்தில் இரண்டறக்
கலக்கப் போகிறான் என்றெல்லாம்.
இந்த மகன்தான் எதிர்காலத்தில்
முண்டாசு கட்டி (அய்யர் குலத்தில்
மீசை வளர்ப்பது, என்பது அறவே
தடுக்கப்பட்ட, தவிர்க்கப்பட்ட
காலத்தில், இவைகளுக்கு எல்லாம்
அப்பாற்ப்பட்ட நிலையில், மீசை
வளர்ப்பது ஒரு மன்னித்திட
முடியாத பாவம் என்று
எண்ணப்பட்ட அந்தக்
காலத்திலேயே நல்லதொரு
முறுக்கு மீசையை வளர்த்த
முண்டாசுக் கவிஞன் அல்லவோ
அந்த மகா கவி ) தேசிய
விடுதலைப்போராட்டத்தில்தன்னை
ஈடுபடுத்திக்கொண்டு சிறைகள் பல
சென்றவர். களங்கள் பல கண்டவர்.
இவரது கவித்துவத்தைப் போற்றிப்
பாராட்டி இவருக்கு பாரதியார் என்று
சிறப்புப் பட்டமும் ஆன்றோர்களால்
அறிவிற் சிறந்த சான்றோர்களால்
வழங்கப் பட்டது.
பாரதி தாம் இயற்றிய சுதந்திரப்
பள்ளு என்னும் ஒரு பாடலில் இவர்
என்ன எழுதி இருக்கிறார் என்றால்:-
ஆடுவோமே-பள்ளுப்பாடுவோமே !!
ஆனந்த சுதந்திரம் அடைந்து
விட்டோமென்று !!
(ஆடுவோமே)
பார்ப்பானை ஐயரென்ற காலமும்
போச்சே !!-வெள்ளைப்
பரங்கியைத் துரையென்ற காலமும்
போச்சே !!-பிச்சை
ஏற்பாரைப் பணிகின்ற காலமும்
போச்சே !!-நம்மை
ஏய்ப்போருக் கேவல் செய்யும்
காலமும் போச்சே !!
(ஆடுவோமே)
அன்பர்களே!!
மகாகவி பாரதி, மேலே
குறிப்பிட்டுள்ள பாடலில், இவரே
ஒரு (பார்ப்பான்) ஐயர். ஆனால்இந்த
பாடலில் இவர் எதற்காக அப்படி
குறிப்பிட்டு இருக்கிறார் ?
பார்ப்பானை ஐயர் என்ற காலமும்
போச்சே !! என்று ? ஏன் என்றால்
எனது சிந்தனைக்கு என்ன
தெரிகிறது, நான் உணருகிறேன்
என்றால், பாரதியார் வாழ்ந்த
காலத்திலேயே பார்ப்பான்கள் எது
அவர்களது ஜாதிக்கு என்று
உரித்தான ஆகம விதிகளின்படி
வாழாமல், வேதங்களில்
சொன்னபடி மந்திரங்களில்
கூறியதற்கு முரணாக அதற்கு
நேர்மாறாக வாழத் தொடங்கி
விட்டார்கள் என்று உணரத்
தொடங்கிவிட்டார் என்றே நான்
கருதுகிறேன். வள்ளுவர், அந்தணர்
என்றால் அவர்கள் இப்படித்தான்
வாழ வேண்டும் என்று ஒரு விதி
வகுத்துக் கொடுத்திருப்பார், தனது
திருக்குறள் நூலில். அது எந்தப்
பாடலில் வருகிறது என்று
சொன்னால் :-
அதிகாரம்:- நீத்தார் பெருமை.
குறள் எண் :- 3௦.
அந்தணர் என்போர் அறவோர்மற்
றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்......
வள்ளுவர் தரும் விளக்கம் :-
எல்லா உயிர்களிடத்திலும்
செம்மையான அருளை
மேற்கொண்டு ஒழுகுவதால்
(நடப்பதால்) அறவோரே (இத்தகைய
நல்ல குணம் கொண்டவரே)
அந்தணர் எனப்படுவோர் ஆவர்.
நமது நாட்டு நடப்பு விளக்கம்:-
மண்டக் காய்ச்சி :- ஏலே !!
கண்டங்கறுப்பா! இங்கன வால!!
கண்டங்:- என்ன வோய் !! எதுக்கு
ஒய் கூப்பிடுதீறு ?
மண்ட:- ஏலே !! என்னால
ரொம்பத்தான் பிகு பண்ணிகிடுதீறு !!
எங்கலே கிளம்பிட்டீய !!
கண்டங்:- அண்ணே !! நான் ஒன்னு
சொல்லுதேன் !! சத்தியமா அத நீறு
யார்ட்டேயும் சொல்லிப்புடாதீரும் !!
மண்ட:- ஏலே !! அப்ப நீ இம்மா
நாளும் அண்ணனைப் பத்தி
அம்புட்டுத்தான்
தெரிஞ்சிக்க்கிட்டியாலே !! ஏலே!!
என்னாலே !! நாம்பாட்டுக்கு
சொல்லிக்கிட்டே கிடக்கேன்.
எங்கலே!! பிராக்கு பாக்க !!
கண்டங்:- அண்ணாத்தே !! இப்பநான்
உம்மகிட்ட சொல்லுத விசயத்தை
ரகசியமா வச்சிக்கிடுங்க !! நம்ம
ஈஸ்வரன் ஐயர் இருக்காரே அவரு
என்னாண்ட 1௦௦ ரூவா கொடுத்து
நம்ம பாய் கடையிலே 1/2 பிளேட்
மட்டன் பிரியாணியும் ஆம்லேட்டும்
வாங்கியாரச் சொன்னாக. அத
வாங்கத்தான் நான் இப்ப போயிட்டு
இருக்கேன் அண்ணாத்தே !!
மண்ட:- ஏலே !! நிசமாத்தான்
சொல்லுதியாலே !! இப்பத்தான்லே
தெரியுது ஏண்டா மட்டன் விலையும்
முட்டை விலையும் ஏறிப்போச்சு
அப்படீன்னு !! ஐய்யரே சாப்பிட்டா
ஏன்லே விலை ஏறாது ? ஐய்யருக
காய்கறிதானேலே சாப்ப்ட்டுக்கிட்டு
இருந்தாக இம்புட்டு நாளா !! உம் !!
எல்லாம் கலி காலம் !!
கெட்டுக்கிடக்குலே !! எந்த
உசுருக்கும் கெடுதல் பண்ணாம அத
கொல்லாம இருக்கவகதான்லே
ஐயர்னு நம்ம ஐயா வள்ளுவரு
சொல்லிருக்காரு. அத இந்த
ஐயனுங்க மாத்திக் கெடுத்துப்
புட்டானுகளே !! நான் இன்னாத்த
சொல்லலே !! சரி !! சனியன்கள
விட்டுத் தொலை!! நீ போய் ஈஸ்வர
ஐயர் கேட்டதை வாங்கியாந்து
அவரு தலைலே போட்டு அழு!!
எனக்கு சோலி கிடக்கு நிறைய.நான்
வரட்டால. நீ கோளாறா
போய்ட்டுவால !!
கண்டங்:- சரி !! அண்ணாத்தே !!
நானும் போயிட்டு வாரேன்.
(நமது நாட்டு நடப்பு விளக்கம்
இத்துடன் நிறைவு பெறுகிறது)
ஆக மகாகவி பாரதி காலத்திலேயே
ஐயருங்க கறி சாப்பிட
ஆரம்பிச்சதாலதான் அவரே
சொல்லி இருக்காருபோல
பார்ப்பானை ஐயரென்ற காலமும்
போச்சேன்னு!!
சரி !! அன்பர்களே !! நாம இப்ப
கட்டுரையின் இறுதிப் பக்கத்துக்கு
வந்து விட்டோம். பாரதியார்
எண்ணற்ற கவிதைகளை நமக்கு
வாரி வாரி வழங்கி விட்டுச்
சென்றிருந்தாலும்கூட அத நாம
யாருமே படிக்கிறது கிடையாது.
ஏண்டு கேட்டுகிட்டீகன்னா நமக்கு
"டைம்" கிடையாது. நேரம் இல்லை
அப்படீன்னு சொல்லக்கூட நம்மால
முடியலங்கிறதுதான் உண்மை.ஏன்?
நாம படிச்சது கான்வென்ட் பள்ளி
இல்லையா ? அதுதான் காரணம். சரி
அப்ப நாம எப்படித்தான் நம்ம
பாரதியார் கவிதைகளை மக்கள்
கிட்டே கொண்டு போயி சேக்கறது?
இப்படித்தான். சினிமால அவரு
கவிதை வந்ததைசொன்னோன்ம்னு
வச்சிக்கிடுங்க. நம்ம ஜனங்க
அப்பத்தான் அத ஏத்துக்கிடுவாங்க.
அது மாதிரியே சொல்லுதேன்
கேட்டுக்கிடுங்க. இயக்குனர் சிகரம்
எனது மானசீக குருநாதர் திரு
K.பாலச்சந்தர் அவர்கள் கதை
மற்றும் வசனம் எழுதி, இயக்கிய
வரலாற்றுச் சிறப்பு மிக்கதொரு
திரைக்காவியம் தான் "வறுமையின்
நிறம் சிகப்பு". இந்தப் படத்தின்
இறுதிக் காட்சியில் இயக்குனர்
சிகரம் பாரதியின் கவிதைகளில்
நமது அனைவரின் மனம்
கவர்ந்ததொரு கவிதை, சாதிக்
கொடுமையை சாட்டை கொண்டு
சாடிய ஒரு கவிதையுடன் அந்தப்
படத்தினை நிறைவு செய்திருப்பார்
அவர்.
இறுதிக் காட்சி. கதையின் நாயகன்
கமல், தனது மனைவி ஸ்ரீதேவியுடன்
ஒரு பழைய காயலான் கடைக்குச்
செல்லும் அளவு மோசமானதொரு
வேன் ஒன்றினில் (அதுதான்
அவர்கள் வசிக்கும் வீடு) அமர்ந்து
இருப்பார்கள். அப்போது கமல் &
ஸ்ரீதேவி இருவரின் நடுவினில் ஒரு
உரையாடல் நடைபெறுவதுபோல
காட்சி அமைப்பு.(கமல் M.A.,Philosophy
படித்து முடித்தவர், சுயமரியாதை
உணர்வு மிகக் கொண்டவர்.
எவருக்கும் அடிமைத்தொழில் புரிய
மனதளவில்கூட இடம் சிறிதும்
கொடுத்திடாத தன்மான வீரர்
இறுதியில் வேறு வழியின்றி ஒரு
முடிதிருத்தும் கடையில் பணியில்
சேர்கிறார். அப்போது மறைந்த
நகைச்சுவை & குணச்சித்திர நடிகர்
"தேங்காய் சீனிவாசன் " அங்கே
வருகிறார். கதை நடை பெரும் இடம்
நமது இந்தியத் திருநாட்டின்
தலைநகர் புதுதில்லி. தேங்காய்
எதற்காக அங்கே விஜயம் செய்தார்
என்றால், தமக்கு ஒரு முகச் சவரம்
செய்துகொள்ள வந்தவர் அந்தக்
கடையின் முதலாளி செல்வராஜ்
என்பவரை இந்தி மொழியில் (ஏன்
என்றால் இருப்பது புதுதில்லி)
அவரது பெயரை அழைத்தபடியே
கடையின் உள்ளே பிரவேசிக்கிறார்.
தேங்காய் :- செல்வராஜ் !! தும் நய
ஆத்மி ஹை ? (இதன் தமிழாக்கம்
செல்வராஜ் புதிய மனிதனே !! என்று
பொருள்)
கமல்:- (அங்கே அவர் மட்டும் சவரக்
கத்தியை தோல் பெல்ட்டில் பதம்
ஏற்றிக்கொண்டிருந்தவர்,
தேங்காயைப் பார்த்து) சார்.. (என
பதட்டத்துடன் பார்க்கிறார்)
தேங்காய் ":- (கமலைப்பார்த்து)
செல்வராஜ் கிதர் ? (செல்வராஜ்
எங்கே)
கமல்:- சார் அவர் வெளியில
போயிருக்கார் சார் (என்று
சொல்கிறார் தமிழில்)
தேங்காய்:- (கமலை ஆச்சர்யத்துடன்
பார்த்துவிட்டு அவரது இரு
தோள்களை பிடித்த வண்ணம்) ஆ !!
நீ தமிழனா ? என்று கேட்டவுடன்
உடனே கமல் அதற்கு ஆமாம்
என்று சொல்லிவிட்டு அந்த சேவிங்
நாற்காலியில் அமரச் செய்கிறார்.
முகச்சவரம் செய்திட சோப்
போடும்போது கேட்கிறார்
தேங்காய்:- ஆமா !! நீ எந்த ஊரு ?
கமல்:- நீடாமங்கலம் .
தேங்காய்:- ஓ !! இந்த நாய்க்கடிக்கு
எல்லாம் மருந்து போடுவாங்களே
அந்த ஊரா ? என்று கேட்க,அதற்கு
கமல் :- ஆம் சார் !!(இப்போது கமல்
தனது கையில் உள்ள சவர
பிரஷ்ஷினால் தேங்காயின்
முகத்தில் தாடைப் பகுதி முழுதும்
சோப் நுரையினால் முழுக்கமுழுக்க
நுரைபொங்கிட தடவி விடுகிறார்.
தேங்காய் :- ஆமா !! நீ என்ன ஜாதி ?
கமல்:- (இப்போது பாரதியின்
கவிதைதனை எடுத்து
வெளியிடுகிறார்)
வெள்ளை நிறத்தொரு பூனை !!
எங்கள் வீட்டில் வளருது கண்டீர்!!
தேங்காய் :- சரி !! (இப்போது கமல்
தேங்காயின் தாடை முழுவதும்
நல்ல பொங்கிவரும் நுரையோடு
ப்ரஷினால் தேய்க்கிறார்)
கமல்:- பிள்ளைகள் பெற்றதப்பூனை
அவை பேருக் கொரு நிறமாம் !!
சாம்பல் நிறமொரு குட்டி-கருஞ்
சாந்து நிறமொரு குட்டி !!
பாம்பு நிறமொரு குட்டி-வெள்ளைப்
பாலின் நிறமொரு குட்டி !!
எந்த நிறமிருந் தாலும் ---அவை
யாவும் ஒரேதர மன்றோ ?
இந்த நிறம்சிறி தென்றும் --இஹ்து
ஏற்ற மென்றும் சொல்லலாமோ ?
என்று பாட்டுப் பாடிய கமல் தனது
பிரஷ்ஷினால் தேங்காய்
சீனிவாசனின் தாடைப் பகுதியில்
இலேசாக ஒரு குத்து விடுகிறார்.
தேங்காய் :- (கமலைப் பார்த்து) அட..
என்ன ? இந்தக் குத்து குத்துறே ?
பாட்டெல்லாம் படிக்கிறே !! ஆமா !!
எதுவரைக்கும் படிச்சிருக்கே ?
கமல்:- ரொம்பப் பெருசில்லே !!
M.A.,Philosophy.
தேங்காய் :- (பயம் கலந்த
ஆச்சர்யத்துடன்) என்னது ?
கமல் :- M.A. Philosophy.ங்க.
தேங்காய்:- அடங்கப்பா !! என்னை
ஆளை வுற்றுடா !!
கமல் :- சார் !! சார் !! செல்வராஜ்
வர்றதுக்குள்ளே முடிச்சுடுறேன்
சார் !!
தேங்காய்:- (முகத்தில் உள்ள சோப்
நுரையை துண்டினால் துடைத்துக்
கொண்டே) எத ? என்னய்யா ? இல்ல
சேவிங்கையா?நான் எங்கம்மாக்கு
ஒரே புள்ளையா !!
கமல் :- சார்!! சார் !! போயிராதீங்க
சார் !! நீங்கதான் முதல் போணி சார்!!
தேங்காய்:- நீ போணி பண்றதுக்கு
என் மூஞ்சிதான் கிடைச்சுதா ?
கமல் :- சார் !! சார் !!
தேங்காய்:- விட்டுடு !! விட்டுடு !!
போலீஸ் !!
(தனது அன்றைய தின நிகழ்வினை
கமல், தனது மனைவி ஸ்ரீதேவியிடம்
சொல்லிடும் இந்தக் காட்சியில்,
இவர்கள் இருவரும் வாய் விட்டு
கலகலவென சிரித்துமகிழ்கின்றனர்.
இத்துடன் 1979 அல்லது 1980 இந்த
இடைப்பட்ட காலகட்டத்தில்
வெளிவந்த " வறுமையின் நிறம்
சிகப்பு " என்னும் வண்ணக்காவியம்
நிறைவு பெறுகிறது. இயக்குனர்
சிகரம் என் மானசீக குருநாதர் திரு
K.பாலச்சந்தர் அவர்கள் பெயர்
தமிழ்த்திரை உலகம் இந்த பூமியில்
இருக்கும்வரை என்றென்றும்
நிலைத்து இருக்கும்.)
(அன்பர்களே !! நான் நேற்று
முன்தினம் 11-12-2௦13 அன்றே
மகாகவி சுப்ரமணிய பாரதியின்
பிறந்தநாளை முன்னிட்டு இந்தக்
கட்டுரையினை உங்கள்
அனைவருக்கும் தந்திருக்க
வேண்டும். ஆனால் முடியவில்லை.
காரணம். கடந்த இரு தினங்களாக
" வாலிப ராஜா " என்னும் புதிய
தமிழ்த் திரைப்படம் ஓன்றினில்நான்
நடித்திருந்த காரணத்தினால்
இதனைப் பதிவு செய்திட இயலாத
பாவியாக ஆகிவிட்டேன். பாரதியின்
ஆன்மா என்னை மன்னித்திட
வேண்டுகிறேன்!!)
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R. பாலு.
No comments:
Post a Comment