Friday, 29 November 2013

கேள்வியும் ? பதிலும் !! (சும்மா சிரிப்பதற்குத்தான் )






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!



இதை உரக்கச் சொல்வோம் 



உலகுக்கு !!                                                     



இனம் ஒன்றாக, மொழி வென்றாக, 



புது வேல் ஒன்றினை நாம் 



எடுப்போம் விடிவுக்கு !!                           



நம் வெற்றிப் பாதையில் நரிகள் 



வந்தால் விருந்து வைப்போம் 



விண்ணுக்கு !!                                                 



(இந்த பகுதியில் இடம்பெறும் 



யாவையும் கற்பனையே அன்றி 



வேறு எந்தத் தனிப்பட்டவரையோ 



அல்லது இயக்கத்தையோ 



குறிப்பிடுவன அல்ல.)                                 




கேள்வி அனுப்பியவர்.


S.மொக்கச்சாமி. நம்பம்.


கேள்வி :-  ஐயா ! T.R. பாலு சார். இப்ப 


அடுத்த மாதம் 4ம் தேதி 


இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் 


நம்ம பாற்காடு சட்டமன்றதேர்தலை 


பார்க்கும் நம்ம மாநிலத்தின்ஏனைய 


மற்ற சட்டமன்ற தொகுதிகளைச் 


சேர்ந்த வாக்காளப் பெருமக்கள் 


என்ன சார் தங்களது மனசுக்குள்ளே 


நினைச்சுக்கிட்டு இருப்பாங்க ? மிகச் 


சரியாக பதிலைச் சொன்னீங்கன்னு 


வச்சுக்குங்க ! உங்களுக்கு 1,௦௦௦/= 


ரூபாய் அன்பளிப்பாகத்தர நான் 


தயாராக இருக்கேன்.                                 


பதில் :- ஏன் ஐயா !! மொக்கச்சாமி 


என்ன கேள்வியே இம்புட்டு நீளமா 


இருந்தா என் பதிலும் அம்புட்டு 


நீளமா இருக்கும்னு நினச்சீயளோ ? 


அதுதான் மொக்கச்சாமி கிடையாது. 


அஞ்சே அஞ்சு வரிலேபதில்இதோ:


எல்லா சட்டசபைத் தொகுதி 


மக்களும் இதேமாதிரி எப்ப 


நம்ம தொகுதிக்கும் இடைத் தேர்தல் 


வரும்னு சாமிட்டே வேண்டிக்கிட்டு 


இருக்கானுகப்போ(இதுஎப்டிஇருக்கு) 

****************************************

கேள்வியை அனுப்பியவர்.                     V. புஷ்பவனம். சதுரை.                                

ஏன் சார்  ? இப்ப நம்ம முதல்வர் 


மிகத் திறமையாத்தானே ஆட்சி 


செஞ்சுண்டு இருக்கா. அவாளை 


போயி இப்படி பழிச்சுப் பேசுறாளே? 


இது அன்னியாயமா  தெரியலையோ 


நோக்கு? பதில் சொல்லும் ஒய்!!     


பதில் :- ஏய் !! இந்தபாரும் ஒய்.என்ன 


நீரு பாட்டுக்கு பேசிண்டே போறேள். 


இதெல்லாம் அவா அவா இஷ்டம் 


ஒய் !! இந்தா இப்ப நீரு எல்லாம்எப்டி 


தைரியமா     கேள்வி   கேக்றேள் ? 


நோக்கு எப்படி கருத்து சுதந்திரம் 


இருக்கோ அதே மாதிரித்தான் 


எல்லோருக்கும் உண்டு ஒய். பேசாம 


மாமிட்டே சொல்லி பாதாம் பருப்பு 


சூப் வச்சு குடிச்சுட்டு ராத்திரி 7 


மணிக்கெல்லாம் போயி 


தூங்குகானும்அல்லாம்சரியாயிரும் 


 அட..என்ன..நான்..சொல்றது.....           

****************************************

கேள்வி கேட்பவர் :-                                    

P. பரிபூரணம். கேவ தோட்டை.          


கேள்வி :-  ஐயா !! ஏன் இந்நாட்டு 


அமைச்சர்கள் அல்லாரும் முதல்வர் 


தங்கச்சாமியைப்  பாத்தவுடன் 


கூனிக் குறுகி வளைஞ்சு நெளிஞ்சு 


அவர்கிட்டே வாயைப் பொத்தி 


பேசுராய்ங்க ? உமக்கு எதுனாச்சும் 


தெரியுமா? தெரிஞ்சாசொல்லும்ஒய். 


பதில்:- யோவ்...உனக்கு இன்னா 


...கிறுக்கு கிறுக்கு 


பிடிச்சுருக்கா..இந்தக் கேள்விக்கு 


நான் பதில் சொன்னேன்னு வச்சுக்க 


மவனே எனக்கே வாயே 


இருக்காதுல. படக்குன்னு வந்து 


அத்துட்டுப் போயிருவானுவள்ள. 


அத்தமாதிரிதான் உனக்கும் பதில 


கேட்டேன்னு வச்சுக்க இனிமே உம் 


பொண்டாட்டி இன்னா பேசுனாலும் 


உன்கு K.காதுதான்.பரவால்லையா?.


(தனது பதில் கடிதத்தில்) 

 K.பரிபூரணம்.  கேவ தோட்டை.


அண்ணே ! சட்டு புட்டுன்னு செய்யச் 


சொல்லுன்னே. இவளோட இம்சை 


தாங்க முடிலே அண்ணே .                     


பதில்:- (இனி உனக்கு மருவாதி 


இல்ல.) என்னடா. பிச்சுப்புடுவேன் 


உம்பொண்டாட்டியோட லொள்ளு 


தீரனுன்ட்டு என்னோட வாயக் 


கிழிச்சுக்க சொல்ரியாலே !!  மவனே 


பேசாம ஓடிப்போயிரு அந்தாண்ட . 


திருப்பி கிருப்பி ய்த்னச்சும் கேள்வி 


அனுப்ப்நேன்னு வச்சுக்க. உன் 


குடலை உருவி மாலையாப் 


போட்றுவேன்.ஓடுரா அந்தாண்டே.

**************************************************************************************


No comments:

Post a Comment