Thursday, 21 November 2013

தொடர்ச்சி.......பாகம் எண்.3....கணேசனின் மனைவி கனகா " தர்ம பத்தினியா ? இல்லை !! " அதர்ம பத்தினியா! ஒரு ஆராய்ச்சிக்கு உரிய அறிவு பூர்வமான கட்டுரை !! இதோ இப்பொழுது உங்களின் கனிவான கவனத்திற்கு !!

ஸ்வாமிகள்:- பக்தனே !! கணேசா !!



உன்னை மட்டும் நான் தனியாக 



சந்தித்து ஆசிகளை வழங்குகிறேன் 



ஏன் என்பதை நீ அறிவாயா?               



கணேசன்:-  இல்லை ஸ்வாமி 



எனக்குத் தெரியவில்லை. தாங்களே 



பதிலைக் கூறிவிடுங்கள். 




ஸ்வாமி:-  உன்னிடம் ஒரு மாபெரும் 



குறை ஒன்று உள்ளது பக்தனே. நீ 



ஒரு ஏமாளியாகவும் இருக்கிறாய். 



அதனை உன்னிடம் சொல்லி அந்த 



மாயையிலிருந்து நீ விடுபட்டு அந்த 



அன்பு வளையத்தினை விட்டும் நீ 



வெளிவந்து இனிமேலாவது 



ஏமாறாத மனிதனாக நீ வாழ்ந்திட 



வேண்டும் என்பதற்காகத்தான் 



உன்னை தனியே சந்தித்துஆசிகளை 



இப்போது வழங்குகிறேன்.                   



கணேசன்:- சுவாமி !! தாங்கள் 



கூறுவது ஒன்றும் எனக்குப் 



புரியவில்லை. நான் ஏமாளியா? 



நான் எந்த மாயைக்குள் 



மாட்டிக்கொண்டு இருக்கிறேன். 



தாங்கள் தயைகூர்ந்து அதனை 



எனக்கு இப்போதே தெரிவியுங்கள் 



ஸ்வாமி.                                                             



ஸ்வாமி:- அட!! மட மனிதனே !! நீ 



வேறுயாரிடமும்ஏமாறவில்லையே. 



ஆசை மனைவியிடம் அல்லவோ 



ஏமாந்து கொண்டு இருக்கிறாய்.   



கணேசன்:- (சற்றே அதிர்ந்துபோய்) 



ஸ்வாமி !! தாங்கள் என்ன 



கூறுகின்றீர்கள் ? உண்மையாகவா? 



சுவாமி:- ஆம் மகனே!! உனக்கு 



இந்த சேதி சற்று அதிர்ச்சியாகவே 



இருக்கும். ஆனால் அதைத்தான் 



நான் உண்மை என்று கூறுகிறேன். 



உனக்கு எனது பேச்சில் நம்பிக்கை 



இல்லை என்றால், அதை சோதித்து 



பார்த்திட உனக்கு ஓர் வாய்ப்பு 



தருகிறேன். ஒரு அதிசயமானகல்பம் 

                   (மாத்திரையைப் போன்றது) 


தருவேன். நீ அதை இரவு படுக்கப் 



போவதற்கு முன்பாக உட்கொள். 



அதன் பலன் உனது பூத உடலின் மீது 



முழுவதுமாக பரவிட சுமார் எட்டு 



மணி நேரமாவது ஆகும். இரவு 1௦ 



மணிக்கு நீ இந்தக் கல்பத்தை 



உட்கொள்.காலை6மணிக்குஎல்லாம் 



நீ உயிருள்ள பிணம்போல 



மாறிடுவாய். உனது விழிகள் மட்டும் 



மூடி இருக்கும். ஆனால் உனது 



செவிகள் திறந்தே இருக்கும். 



அப்போது உன்னைச் சுற்றி என்ன 



நடக்கிறது என்பதை நீ உற்றுக் 



கவனி.  அப்போதாவது உன் 



மனைவியைப் பற்றி நீ அறிந்து 



கொள்வாய். அவள் விரும்புவது 



உன்னை அல்ல. உன்னிடம் உள்ள 



பணத்தை மட்டுமே. இந்த 



சோதனையில் உனதுமனைவியைப் 



பற்றிய உண்மையை நீ தெரிந்து 



கொள்வாய்.ஆனால் இதில் ஒரு 



விஷயம் மிகவும் முக்கியமாக 



கவனிக்கவேண்டும்.                                   



கணேசன் :- அது என்ன சுவாமி ?     



ஸ்வாமி:-  உனது உடல் ஏதாவது 



ஒன்றின்மீது முட்டினாலோ அல்லது 



மோதினாலோ கல்பம் தனது செயல் 



இழந்து நீ உயிர்பெற்றிடுவாய்.இந்தா 



மகனே!!பிடி. இன்று இரவு நீ உண்ண 



வேண்டிய கல்பம்.                                         



கணேசன் :- மிக்க நன்றி ஸ்வாமி. 



இந்த அக்னிப் பரீட்சையில் யார் 



வெல்லப் போகிறார்கள் என்று 



பார்ப்போம். தாங்களா ? அல்லது 



எனது மனைவியின் மேல் நான் 



வைத்து இருக்கும் பாசம்,நேசம், 



அன்பு  மற்றும் காதலா என்று !! நான் 



வருகிறேன்.(வீட்டுக்கு கிளம்பினார் ) 



அன்பர்களே !!  கட்டுரையின் நீளம் 



ஹனுமார் வால் போல நீண்டு 



கொண்டே போவதால் ஒரு சிறிய 



இடைவேளை !! இப்போது.  நன்றி!! 



வணக்கம் !!                                                     



அன்புடன். மதுரை T.R.பாலு.                   



(கட்டுரையின் இறுதி பாகம் மீண்டும் 



நாளை தொடரும்.)                                       



அளவற்ற  அருளாளரும் நிகரற்ற 



கொடையாளருமான எல்லாம் 



வல்ல இறைவன் " அல்லாஹ் "வின் 



திருப்பெயரை உச்சரித்து வணங்கி 



இந்தக் கட்டுரையை நான் எழுதிடத் 



தொடங்குகின்றேன் என் 



அன்புத்தமிழ் உடன்பிறப்புகளே !!     



பிஸ்மில்லாஹ் ஹிர் ரகுமான் நிர் 



ரஹீம் !!                                                           




அஸ்ஸலாமு அலேக்கும் !!                   



(உங்களுக்கு சாந்தியும் 



சமாதானமும் உண்டாகட்டும் 



என்பதே மேலே உச்சரித்த 



மந்திரத்தின் உட்பொருளாகும்)             



வ அலேக்கும் சலாம் ஹிர் 



ரஹ்மத்துல்லாயு பரக்காத்துஹூ  !!   



(அதே சாந்தியும் சமாதானமும் 



முதலில் எங்களுக்கு சொல்லிய           


உங்களுக்கும்      உண்டாகட்டும் 


என்பதே இந்த வாசகத்தின் 


உட்பொருள்)                                                     



என்னடா !! இது !! எப்பய்யா நம்ம 



மதுரை T.R.பாலு அய்யா இஸ்லாம் 



மதத்திற்கு மாறினார்/தழுவினார் 



என்று வாசகர்களாகிய உங்கள் 



அனைவரின் இரண்டு புருவங்களும் 



மேல்நோக்கி உயர்ந்து பின்னர் 



பழைய நிலைக்கு திரும்புவதை 



என்னால் இங்கிருந்தே பார்த்திட 



முடிகின்றது அன்புத் தமிழ் 



நெஞ்சங்களே !!                                             



அன்பர்களே !! உங்களுக்கே மிக 



நன்றாகத் தெரியும் நான் 



எப்பொழுதும் அய்யன் வான்புகழ் 



திருவள்ளுவரின் குறள்படி எனது 



வாழ்க்கைப் பாதையை அமைத்துத் 



தரும்படி எப்போதும் விரும்பி 



இருப்பவன் என்று. அந்த வகையில் 



வள்ளுவர் உரைத்த அந்த வாசகம் 



"எப்பொருள் யார்யார் வாய்க் 



கேட்பினும் அப்பொருள் 



மெய்ப்பொருள் காண்பது அறிவு " 



என்று அய்யன் ஒரு குறளில் நம் 



மானிட ஜென்மங்களுக்கு எழுதிச் 



சென்று உள்ளார் என்பது.  ஆனால் 



அதனை நம்மில் எத்தனைபேர்கள் 



தங்களது வாழ்க்கையில் 



கடைப்பிடித்து நடக்கிறார்கள் 



என்பதும் உங்களுக்கு மிக 



நன்றாகவே தெரியும். ஆனால் நான் 



அப்படி அல்ல அன்பர்களே. எனக்கு 



இஸ்லாம் மதம் மிகமிக நன்றாகவே 



மனதுக்கு பிடித்ததொரு மதம். ஏன் 



என்றால் அவர்களது 



வழிமுறைகளில்/நடைமுறைகளில் 



எனது மனதைப் பல 



சந்தர்ப்பங்களில் நான் பறிகொடுத்து 



இருக்கிறேன் என்பது நான் ஒருவன் 



மட்டுமே அறிந்திட்ட உண்மை.எனது 



உண்மை ஆறுயிர்த் தோழர் 



அல்ஹாஜ்: முகம்மது யூனுஸ் பற்றி 




இப்பொழுது என்னால் 



குறிப்பிடாமல் இருக்க முடியாது. 



அவரோடு இணைந்து நானும் (இந்து 



மதத்தைச் சேர்ந்தவன்) ஒவ்வொரு 



வருடமும் 3௦ நாட்களும் 



இரம்ஜான்நோன்பு வைத்திருந்தேன், 



கடந்த 25 ஆண்டுகளாக. அன்னார் 



இயற்கை எய்தி இப்போது சுமார் 6 



ஆண்டுகள் ஆகிவிட்டது. 



இராஜ்ஜியத்தையேஆண்டுகொண்டு 



இருக்கும் முடிசூடா மன்னராகவே 



இருந்தாலும் இறைவனைத் 



தொழுவதற்கு அவனது 



சன்னிதானத்திற்கு வந்தாரே 




ஆனாலும் அவருக்கு 



என்றுமுதல்வரிசையில் இடம் 



ஒதுக்குவது, அவருக்குமரியாதை, 



 முதல் மரியாதை செலுத்துவது, 



அவர் வந்து இறைவனைத் 



தொழுதுவிட்டு திரும்பும்வரைவேறு 



எந்த பக்தனையும் சன்னிதானத்தின் 



உள்ளே அனுமதிக்க மறுப்பது, 



இதுபோன்ற அநியாயமான, 



அக்கிரமம் மட்டுமே நிறைந்த, 



"பர்பலாட்டு " வேலைகளும் 



லீலைகளும் எந்தக் காலத்தும் 



இஸ்லாமியர்கள் நடுவிலே 



இருந்தது என்பது கிடையவே 



கிடையாது எனது அன்புத் தமிழ் 



நெஞ்சங்களே !! இறைவனின் முன் 



அனைவரும் சமம் என்றஅவர்களின் 



கொள்கை எனக்கு முதலில் பிடித்த 



ஒன்று. இரண்டாவதாக பிடித்தது 



பெண்களுக்கு அவர்கள் வீட்டு 



வாசலைவிட்டு வெளியில் 



தெருவிற்கு வரும்போதுஅவர்களின் 



அழகு மேனி/உடல் வனப்பு 



அவர்களது கணவன்/அல்லது 



வரப்போகின்ற துணைவன் 



இவனைத் தவிர வேறு ஆடவர் 



எவரும் பார்த்திடலாகாது என்ற 



மிகவும் அருமையான 



கோட்பாடுகளில் தனது மனத்தை 



பறிகொடுத்தவந்தான் இந்த மதுரை 



T.R.பாலு அன்பர்களே!! இசைமுரசு 



என்று பெருமையுடன் 



அழைக்கப்படும் நாகூர் திரு 



E.M.ஹனீபா அவர்கள் தமது 



பாடல்களின் ஒன்றில் இதைப்பற்றி 



மிகத்தெளிவாகவே குறிப்பிடுவார் 



அது என்னவென்றால் :-                           



கணவனின் கண்களிலே நிறைந்து     

                                                  வாழுவாள்!! 


பிறர் கண்களுக்கு என்றைக்குமே       

                             மறைந்து வாழுவாள் !!


வகை வகையாய் உணவு செய்து         

                                 இன்பம் ஊட்டுவாள் !!


கணவன் வரவறிந்து செலவு செய்து   

                                          மீதம் ஈட்டுவாள்!!



(இன்றைக்கு உலக மகா 



கோடீஸ்வரர் பில்கேட்ஸ் 



மனைவி கூட மீதம் ஈட்டிட 



மாட்டாள். நீங்கள் எவ்வளவுதான் 



பணம் அள்ளியள்ளித் தந்தாலும், 



மாதத்தின் 2௦ தேதிகளில் மனைவி 



என்ன சொல்லுவாள் என்றால், 



ஆமா!! என்னத்தை நீங்க பெருசா 



குடுத்துக் கிழிச்சுட்டீங்க!!(?) நான் 



எல்லாம் எங்க அப்பா வீட்டிலே 



எவ்வளவு சுகமா, சௌக்கியமா 



வாழ்ந்து இருந்தேன் என்று 



உங்களுக்கு எங்கே தெரியப்போது !!



(அப்டீன்னா, பேசாம அப்பா 



வீட்டிலேயே இருந்திருக்கலாமே ) 



என்று எனது பலதரப்பட்ட 



நண்பர்கள் என்னிடம் கூறுவதும் 



உண்டு. ஆனால் எனது இல்லத்தரசி 



அப்படிப்பட்டவள் அல்ல. இது ஏதோ 



அவளைப் பெருமைப்படுத்திட 



வேண்டும் அதன்மூலமாக அவளது 



தலையில் ஐஸ் வைக்க  வேண்டும் 



என்பதற்காக நான் இங்கே அதை 



குறிப்பிடவில்லை. உள்ளதை 



உள்ளபடியே சொல்லுகின்றேன். 



அப்படி பெண்கள் தங்களது உடல் 



முழுவதையும் மறைத்து உடை 



உடுத்திடுவார்களேயானால் இன்று 



நம் நாட்டில் ஏகப்பட்ட சமூகக் 



குற்றங்களான பெண்களை 



உரசுதல்,கண்ணடித்தல்,அவர்கள்   



மீது காம இச்சை கொள்ளுதல் 



(அவள் மணம்முடித்து மாற்றான் 



ஒருவனுக்கு சொந்தக்காரி என்று 



அறிந்திருந்தாலும்கூட காமவெறி 



பிடித்த சில கயவர்களின் மனம் 



அப்படிஎல்லாம் என்னிடத் 



தூண்டுவது எது? அது அவர்களின் 



அங்க அசைவுகளை, முன்புறம் 



அமைந்துஉள்ளஇறைவன்கொடுத்த 



கொடையினால் பெற்ற அழகு 



நிறைந்த அவயவங்கள், நடக்கும் 



போது குலுங்கிடும் எழில்கள், 



நடந்திடும்போது தெரியும் பின்புற 



எழில்களின் அங்க அசைவுகள் 



இவைகளை எல்லாம் எதிரி 



பார்ப்பதனால்தானே அன்பர்களே!! 



இதுபோன்ற சமுதாய சமூகக் 



குற்றங்கள் இன்றையதினம் நமது 



நாட்டினில் ஏராளமாகப் பெருகிப் 



பெருக்கெடுத்து ஓடுகிறது. 



இதனால்தான், இதனைத் தடுத்திட 



எண்ணியே இஸ்லாமியத் 



தோழர்கள் அவர்கள் வீட்டுப் 



பெண்கள் வீதிக்குச் செல்லும் 



போதெல்லாம் தங்களின் உடலை 



மறைத்திடும் வண்ணம் " பர்தா " 



என்ற கருப்புநிற அங்கியை/



ஆடையை அணிந்திடச் 



சொல்கிறார்கள். (ஆனாலும் 



அவர்களிலும் சில கருப்பு ஆடுகள் 


இந்த புத்திமதியைப் 



புறக்கணிப்பவர்களும்இருக்கத்தான் 



செய்கிறார்கள் அன்பர்களே !!)



சுருக்கமாகச் சொன்னால் " திரி " 



 வெளியில் தெரியும்படியாக 



இருந்தால்தானே அதைப் பற்ற 



வைத்திட நெருப்புப் பெட்டியை கை 



தேடும்.!! 



அட.. என்ன...நான்...சொல்றது.மிக 



முக்கியமான மேலே சொன்ன அந்த 



இரண்டு கொள்கைகளாலும் 



நல்லதொரு கோட்பாடுகளாலும் 



மட்டுமே எனக்கு இஸ்லாம் மதம் 



மிகமிக விரும்பிய ஒன்று 



அன்பர்களே!! அடுத்த பிறவி என்று 



ஒன்று இருந்து அதுவும் மனிதப் 



பிறவியாகஅமைந்தால்அன்பர்களே, 



" இன்ஷாஅல்லாஹ் " நான் ஒரு 



உண்மையான,தூய்மையான, 



நேர்மையான,வாய்மையான, அன்பு 



மட்டுமே தனது உள்ளத்தில் 



நிறைந்திட்ட   இஸ்லாமியனாகவே 



இந்த துனியாவில் (பூமியில்) 



பிறந்திட விரும்புகிறேன்.அல்லாஹ் 



என்ன விரும்புகிறாரோ அது 



மட்டுமே இந்த துனியாவில்நடக்கும். 



இந்தக் கருத்தில் எனக்கு எள்ளின் 



முனை அளவுகூட சந்தேகம் 



கிடையாது அன்புத் தமிழ் 



நெஞ்சங்களே !!   



சரி .இப்போது  கட்டுரையின் 



தொடர்ச்சி ...பாகம் எண்.3 க்கு 



உள்ளாகச் செல்வோமா 



அன்பர்களே!!...................................................




தொடர்ச்சி.....பாகம் எண்.3....                     



சத்தியவந்தன் சுவாமிகளிடம் தனது 



மனைவியை சற்றும் விட்டுக் 



கொடுக்காமல் சவால் விட்டு அதன் 



பிறகு, அவரது அறையை 



காலிசெய்து பின் தனது அலுவலகம் 



சென்று அனைத்து வேலைகளையும் 



செய்து முடித்து பின்னர் இரவு மணி 



சுமார் 9.4௦ க்கு எல்லாம் தன் வீடு 



நோக்கி மகிழுந்து ஒன்றின் 



மூலமாக வீடு வந்து சேர்ந்தான் 



கணேசன்.  வந்தவுடன் தனது 



மனையாள் கனகாவை 



அழைக்கிறான்.(இப்போது"நேரலை" 



மீண்டும் துவங்குகிறது)                           



கணேசன்:- கனகா !! கனகா!!             



கனகா:- இதோ !! வந்துட்டேங்க !! 



(இந்த பசப்பு வார்த்தையில் 



செத்தார்கள் பூமியில் உள்ள 



 பல பெண்களின் அத்தான்கள்)             



கணேசன்:- கனகா!! நான் 



இன்றைக்கு சீக்கிரம் சாப்பிட்டு 



விட்டு தூங்கப் போணும் !! அதனால் 



எனக்கு விரைந்து இரவு உணவை 



எனது அறைக்கு கொண்டுவா !!         



கனகா :- ஏங்க !! உடம்புக்கு 



எதாச்சும்...                                                         



கணேசன்:அதெல்லாம்ஒன்னுமில்ல 



இன்னைக்கு டாக்டர் கிட்டே 



போயிருந்தேன். நன்றாக ஓய்வு 



எடுக்கனும்னு சொன்னார். 



அதான்....வேற ஒண்ணுமில்ல.               



கனகா:- இதோ ஒரு 5 நிமிசத்தில 



இரவு உணவு கொண்டுவாரேன்.                                         



 இரவு உணவைச் சாப்பிட்டான். 



ஸ்வாமிகள் கொடுத்த "கல்பத்தை"   



வாயின் உள்ளே தள்ளினான். 



சரியாக  இரவு 1௦ மணிக்கெல்லாம் 



தூங்க ஆரம்பித்துவிட்டான்.           



காலைப் பொழுது விடிந்தது !! 



சரியாக 6 மணிக்கெல்லாம் 



மனையாள்  கனகா தனது 



கரங்களால் சேர்த்த காப்பியை 



 எடுத்துக்கொண்டு கணவனின் 



அறைக்குள் சென்றாள். அன்புள்ள 



அத்தானை எழுப்பினாள்.  அவன் 



எங்கே எந்திரிப்பது? அவன்தான் 



ஸ்வாமிகள் கொடுத்த கல்பத்தை 



உட்கொண்டதனால் உயிருள்ள 



பிணமாக மாறிவிட்டானே.  காது 



மட்டும் அவனுக்கு கேட்கிறது. 



கண்கள் செத்தவன்போல மூடிக் 



கிடக்கிறது. உடனே அவன் 



செத்துவிட்டான் என்பதை 



உறுதிசெய்துகொண்ட அவன் 



மனைவி கனகா உரத்தகுரலில் 



அழுகையை வரவழைத்துக் 



கொண்டு, கன்னங்களில் கண்ணீர் 



வழிந்திட கத்துகிறாள்,கதறுகிறாள் 



கனகா:- என்னங்க !! எங்களை 



எல்லாம் விட்டுட்டுப் 



போயிட்டீன்களா ? என்று சொல்லி..   


அழுது துடிக்கிறாள் கனகா !!



அன்பர்களே !!  இந்தக் கட்டுரையின் 



இறுதி மற்றும் பாகம் எண்.4. நாளை 



உங்களுக்குத் தருகிறேனே !! தயவு 



செய்து மன்னிப்பீராக !!                         



அஸ்ஸலாமு அலேக்கும் !!                   



அன்புடன். மதுரை T.R.பாலு.                



 (தொடரும்) 



No comments:

Post a Comment