அழகிய விலைமகள் விமலாவின்
வீட்டிற்கு முன்பாக மழைக்கு
ஒதுங்கிய பஞ்சாபகேச அய்யர் அந்த
வீட்டினுள் இருந்து,முக்கல்,முனகல்,
முத்தமிடும் ஓசை இவைகளைக்
காதால் கேட்டதால் லேசாகத்
திறந்திருந்த ஜன்னல் கதவுகளைத்
தொட்டவுடனது திறந்து கொண்டது.
அங்கே அறையின் உள்ளே அய்யர்
கண்ணுற்ற காட்சி !!
அட..கண்றாவியே !! அதைப் பற்றி
நான் என்னத்தை சொல்ல) சிறிது
நேரம் அய்யர் " சிறப்பு காட்சியைத் "
தொடர்ந்து 5 நிமிடங்கள் பார்த்தார்
அய்யர். அங்கே அறைக்குள் "படம்"
முடிந்து விலைமகள் விமலாவும்
அவளோடு உறவு கொண்டிருந்த
ஆடவனும் கதையை முடித்து பின்
எழுந்திட முயற்சிக்கும்வரைஅய்யர்
அந்த ஆனந்தக் காட்சியை கண்டு
களித்தார். மழையும் ஓய்ந்தது.
இங்கே வீட்டுக்குள் நடந்த
கதையும் முடிந்தது. வெளியே வந்த
அய்யர் அங்கே தொட்டியில் இருந்த
தண்ணீரை எடுத்து தனது
தலையிலும் உடம்பின் மீதும்
தெளித்துக்கொண்டார். ஈஸ்வரா.
நீதான் என்னை இரட்சிக்கவேண்டும்
என்று வேண்டிக்கொண்டார்.
(ஆனால் இந்தப் பாவத்தைப் பார்த்த
அவரது கண்களை மட்டும் ஏனோ
நீர்கொண்டு கழுவிட வில்லை
அய்யர் அவர்கள்.) தான் இன்று
பார்த்த இந்தக் காட்சிக்கு ஒரு
சாட்ஷி வேண்டுமே, அதற்காக ஒரு
சிறு கல் ஒன்றினைத் தேர்ந்து
எடுத்து அதனை விமலாவின்
வீட்டின் முன்பாக உள்ள ஒரு பெரிய
காலியாக இருந்த தண்ணீர்பிடிக்கும்
ட்ரம் அதனுள் சேர்த்துவைத்தார்
அய்யர் அவர்கள். நேராக
கோவிலுக்கு சென்றார். அர்த்தஜாம
பூஜையை முடித்தார்.பூஜையை
மட்டுமே அவரால் செய்திட
முடிந்தது. மந்திரத்தினை மட்டுமே
அவரது உதடுகளால் உச்சரிக்க
முடிந்தது. ஆனால் அவரதுஉள்ளத்து
நினைவுகள் எல்லாம், ஏறத்தாழ 1௦
ஆண்டுகள் கழித்து தனது மனைவி
மங்களம் இறந்ததற்குப் பிறகு
பார்த்திடாத,பார்த்திட முடியாத
(அதிலும் ஒரு அழகிய இளம் பெண்)
காந்தர்வக் காட்சியை மட்டுமே
மனம் நினைத்துக்கொண்டே
இருந்தது. சும்மாவா சொன்னார்கள்.
சாண் பிள்ளை என்றாலும் ஆண்
பிள்ளை என்று? ஒருகைப்பிடி
உமியை எடுத்து தூக்கிடும் வலு
உள்ளவரை ஒரு ஆண் மகனுக்கு
"அந்த" ஆசை என்பது போகவே
போகாதாம். பலபேர் சொல்லக்
கேட்டிருக்கிறேன். அங்கே
பார்ப்போம் விலைமகள்
விமலாவின் வீட்டினில் என்ன
நடந்தது என்று? வந்த ஆடவனிடம்
தான் செய்த "வேலைக்கு "ஊதியம்
பெற்றுக்கொண்டாள். சிரித்தபடியே
அப்புறம்..அடுத்து..எப்ப..பாப்போம்..
என்று கேட்க ?வந்தவனோ..என்
விம்மிகுட்டி. மாசக் கடைசி
இல்லையா. சம்பளம்
வாங்கியவுடன் முதல் வாரம் ஒரு
நாள் வாரேன்(இந்த வசனம்
பெரும்பாலும் விலைமாதர்கள்
வீட்டிற்கு அடிக்கடி செல்பவர்கள்
கூறிடும் வழக்கமான வசனம்தான்
என்று என் நண்பன் நடேசன்
சொன்னது அப்போது என் நினைவு
க்கு வந்தது) என் செல்லகுட்டி
என்று சொல்லியபடிய தான்
கொண்டு வந்த சைக்கிளைத்
தள்ளிக்கொண்டு சென்று விட்டான்
அவன். மறுநாள் இரவு பஞ்சாபகேச
அய்யர் அர்த்த ஜாம பூஜைக்காக
கோவிலுக்குக் கிளம்பினார்.
நடந்தார்.நடந்தார்.வேகமாக
நடந்தார். ஆனால் என்ன செய்வது..
விலைமகள் விமலாவின் வீட்டின்
அருகே வரும்போது அவரையும்
அறியாமல் அவரது கால்கள் பிரேக்
போட்டது.(இது என்னடா சுத்தக்
கன்றாவியா இருக்கே ? அடவிடுப்பா
இப்ப நீ அந்த அய்யரோட இடத்துலே
இருந்திருந்தீன்னா நீயும் தான் பிரேக்
போட்டு இருப்பே.இங்க தான் நான்
சத்ய ராஜ் நடிச்ச படத்துலே ஒரு
பாட்டு வரும்.அதனை நான் நினைவு
படுத்திக்கிறேன். " எவன்டா புத்தன்
இங்கே !! எவண்டா சுத்தம் இங்கே !!
விளக்கை அணைச்சுப்புட்டா
எவன்டா ராமன் இங்கே ?
கடவுளுக்கும் இருக்குதடா !!
ஆயிரம் தொல்லை !!
என்னைப்போல சுதந்திரமா
கடவுளும் இல்லே !!
அய்யா யாரு !! போர்ட்டர்
கோவிந்தன் சாரு !! என்று பாடலில்
சில வரிகள் வரும் ) சரி. அய்யரோட
கால்கள் பிரேக் போட்டுச்சு..
அப்புறம்...என்ன...நடந்துச்சு...
அச்சச்சோ...ராத்திரி மணி 1
ஆயிருச்சு.... எனக்கு தூக்கம் வருது.
மீதிக்கதையை நான் நாளைக்குச்
சொல்றேனே ப்ளீஸ். குட் நைட்.
அன்பர்களே கட்டுரை மீண்டும்
வேறு ஒரு நாளில் தொடருவோம்.
நன்றி!! வணக்கம்!!
அன்புடன். மதுரை T.R.பாலு.
தொடர்ச்சி....பாகம்....எண்.3.....
வழக்கம்போல இரவு அர்த்தசாம
பூசைக்கு சென்ற பஞ்சாபகேச
அய்யரின் கால்கள் விலைமகள்
விமலாவின் வீட்டைக் கடக்கும்
வேளையில் தானாக நின்றது.
மீண்டும் அதே முக்கல்,முனகல்
ஓசைதான். வழக்கம் போல அய்யர்
ஜன்னல்வழியே எட்டிப் பார்த்தார்.
பிறகு கோவிலுக்குச் சென்றார்.
அர்த்தசாம பூசையைதொடர்ந்து
செய்து வந்தார். மனம் முழுவதும்
தான் அங்கே கண்ட " காமக்
காட்சியில் " திளைத்திருக்க கைகள்
மட்டும் ஆண்டவனை வழிபட்டது.
எப்போதும்போல இரண்டாம்நாள்,
தான்,விமலாவின் வீட்டினில் கண்டு
இரசித்த காட்சிக்கு சாட்சியாக
மேலும் ஒரு கல்லை எடுத்துப்
போட்டார் அய்யர் தண்ணீர்பிடிக்கும்
காலி ட்ரம் உள்ளே. ஆனால் அழகி
விலைமாது விமலாவோ, தனது
பிழைப்புக்கான " தொழில் " நேரம்
முடிவுற்றதும் குளித்தாள், பிறகு
தலைவாரி பூச்சூடி நல்ல உடை
அணிந்து பின்னர் வீட்டில் உள்ள
இறைவனின் படத்தின் முன்பாக
அமர்ந்தாள்.மனமுருக பக்தியுடன்
வேண்டி நின்றாள். இறைவா !! நான்
என்ன பாவம், போன ஜென்மம்,
செய்தேனோ, எனக்கே தெரிய
வில்லை.இத்தகையான பாவம்
நிறைந்த ஒரு வேசித்தொழில்தனை
என்னைச் செய்திட வைத்து என்
காலட்சேபத்தை நடத்த வைத்தாய்.
அடுத்த ஜென்மம் என்று ஒன்று
இருந்து, அதுவும் மனித ஜென்மமாக
இருந்தால், இறைவா !!
அப்போதாவது என்னை நல்ல ஒரு
கண்ணியம் நிறைந்த குடும்பத்தில்
பிறக்க வைத்து, நல்ல குணம்
நிறைந்த மணவாளன் ஒருவனுடன்
என்னைச் சேர வைத்து,ஒருவனுக்கு
ஒருத்தி என்ற தத்துவத்தை எனது
உடலிலும் உயிரிலும் இரண்டறக்
கலந்து என்னையொரு கற்புநெறி
தவறாத, குடும்பக் குத்துவிளக்காக
படைத்து என்னை நீதான் காப்பாற்ற
வேண்டும் என்று மனம் உருகி
வேண்டி நின்றாள் அந்தப் பெண்.
பஞ்சாபகேசஅய்யர்தான்இவ்வுலகை
விட்டு விடைபெற்றுச் சென்றிடும்
அந்த மகாசிவராத்திரி இரவுக்காக
காத்திருந்தார். ஆனால் அதற்கு
இன்னும் ஆறு மாதத்திற்கு மேல்
கால அளவு இருந்தது. இது ஒருபுறம்
இருந்தாலும் அய்யர்
ஒவ்வொருநாள் இரவும்
கோவிலுக்கு சென்று அர்த்தசாம
பூசை செய்வது,என்பது எப்படி நாள்
தவறாமல் செய்து வந்தாரோ,
அதுபோலவே, ஒவ்வொருநாள்
இரவும், அழகிய விலைமகள்
விமலாவின்வீட்டினில் நடைபெறும்
மன்மத லீலைகள் நிறைந்த
காட்சியைக் கண்ணுற்று
மகிழ்வதையும் நிறுத்த வில்லை
அய்யர் அவர்கள். அந்த காதல்
காட்சியை அய்யர் கண்ணுற்றதற்கு
சாட்சியாக அனுதினமும் கல்
ஒன்றை அந்த தண்ணீர் ட்ரம்உள்ளே
போடுவதற்கும் பஞ்சாபகேச அய்யர்
மறப்பதும் இல்லை. கல்லின்
எண்ணிக்கையும் கூடிக்கொண்டே
வந்தது. ட்ரம் நிரம்பி வழிந்திட,
வந்தது, மகா சிவராத்திரியும்.
அன்றையதினமும்கூட அய்யர்
விமலாவின் வீட்டினில் காமக்
களியாட்டத்தை கண்டு இரசித்திட
அய்யர் தவறவேஇல்லை. அதைப்
பார்த்தபின், தான் நாள் தவறாமல்
ஈசனுக்கு செய்திட அர்த்தசாமப்
பூசை செய்திட கோவிலுக்குவந்தார்.
பூசையை முடித்தார் அய்யர்.
அன்றைய தினமே அய்யர்
கோவிலை விட்டு வீட்டுக்கு திரும்பி
வரும் பாதையில் விலைமகள்
விமலாவின் வீட்டிற்கு முன்பாக
அவர் வந்தபோது அய்யருக்கு
திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டு
அங்கேயே அவரது மூச்சின் ஓசை
நின்று அய்யர் அமரர் ஆனார். அதே
நேரத்தில் அழகிய விலைமகள்
விமலா அவள் வீட்டினுள்ளே உயிர்
பிரிந்து விமலாவும் இறந்து
கிடக்கிறாள். ஒரே நேரத்தில் இந்த
இருவரின் உடலையும் விட்டுப்
பிரிந்த அவர்களின் ஆன்மாவும்
நேராக மேலோகம் சென்றடைந்தது.
நீங்கள் எல்லாம் நினைப்பீர்கள்,
ஈசனை இடைவிடாமல் பூசை
செய்து வழிபட்ட அய்யர் ஆன்மா
சொர்கத்திற்கும், கேவலமான
விபச்சாரம் என்ற பாவகரமான
"தொழில் "செய்துவந்த விலைமகள்
விமலாவின் ஆன்மா நரகத்திற்கும்
சென்றிருக்கும் என ஒரு முடிவுக்கு
வந்திருப்பீர்கள். ஆனால் அதுதான்
நடக்க வில்லை!! பிறகு என்னதான்
நடந்தது? விடை இன்னும் சற்று
நேரத்தில். அதுவரை தயவு செய்து
இரசிகப் பெருமக்கள் பொறுமை
காத்து இருந்திட வேணுமாய்க்
கேட்டுகொண்டுவிடைபெறுகிறேன்
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை TR.பாலு. ************************************************************************************************************************
விடை :- நீங்கள் உங்கள்
உள்மனதில் நினைத்திருந்ததற்கு
நேர்மாறாகவே நிகழ்வுகள்
நடந்தேறியது அன்பர்களே !! ஆம் !!
அனுதினமும்அர்த்தசாம பூசை
செய்து ஆண்டவனை பஞ்சாபகேச
அய்யர்வழிபட்டிருந்தாலும்கூட
அவரது மனமும் சிந்தனையும்
விலைமகளின் லீலைகளிலே
மட்டும் வீழ்ந்திருந்தார்
ஆழ்ந்திருந்தார். இந்த
காரணங்களுக்காக அவர்
நரகத்திற்கு இறைவனால் அனுப்பி
வைக்கப் பட்டார். ஆனால் அதே
சமயம் அய்யரோடு உயிர் துறந்த
விலைமகள் விமலாவோ
சொர்கத்திற்கு இறைவனால்
அனுப்பி வைக்கப்பட்டாள். அவள்
செய்திருந்த தொழில் விபச்சாரம்
என்பதென்னவோ பாவமான
தொழில்தான். ஆனால் அதை அவள்
மனம் விரும்பி செய்திட வில்லை.
அத்துடன்கூட ஒவ்வொரு நாளும்
அவள் " தொழில் " முடித்திட்டபிறகு
தூய நீராடி,மலர்கள்சூடி மனமார
இறைவனை வேண்டினாள். அடுத்த
ஜென்மமாவது நல்ல பிறவியைத்தா
இறைவா என்று பாவ
மன்னிப்புவேண்டி கடவுளை
வணங்கியதால் அவள் செய்திருந்த
பாவம் அங்கே இறையருளால்
மன்னிக்கப் பட்டது. இதன்மூலம்
நாம் அனைவரும் அறிந்திட
வேண்டிய மூலக் கருத்து
யாதெனின், மனமது
செம்மையானால் மந்திரங்கள்
ஜெபிக்க வேண்டாம் என்ற
திருமூலரின் வாசகங்களே நமக்கு
வாழ்க்கையின் வழிகாட்டி. எனவே
இந்தக் கட்டுரையைப் படித்த நீங்கள்
எல்லோரும் உங்களது மனத்தை
மட்டும் செம்மையாக,உண்மையாக,
நன்மையாக வைத்துக்கொண்டால்
அதே ஒன்றே போதுமானது.
நன்மைகள் உங்களைத் தேடித்
தானே ஓடிவரும். இது உண்மை.
மீண்டும் அடுத்த வலைப் பதிவில்
உங்கள் அனைவரையும் நான்
சந்திக்கிறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் !!
மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment