தொடர்ச்சி....மற்றும் இறுதி பாகம் எண் :-3. ஆண்கள் திருமணத்தின்போது கால் விரலில் மிஞ்சி அணிவது எதற்காக ?....
உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
ஆண்கள் திருமணத்தின்போது
கால் விரலில் மிஞ்சி அணிவது
எதற்காக ?
இந்தக் கட்டுரையை இதுவரை
படிக்காத நேயர்களுக்காக
சுருக்கமாக அதனை நான் இங்கே
மீண்டும் பதிவு செய்கிறேன். 4 பங்கு
காம உணர்வுகள் உள்ள ஒரு
பெண்ணை 2 பங்கு மட்டுமே காம
உணர்வுகள் உள்ள ஒரு
ஆண்மகனால் எப்படிசமாளிக்க
முடிகிறது? இது ஒரு உண்மையான,
நியாயம் நிறைந்த, கேள்வியாகவே
நான் கருதுகிறேன் அன்பர்களே !!
(இங்குதான் எல்லாம் வல்ல
இறைவன், ஆண்மகனுக்கு சில வழி
முறைகளை,எவ்வாறெல்லாம்இந்த
பெண்களுக்கு உள்ள, 4 பங்கு காம
உணர்வுகளை குறைத்திடலாம்
என்பதற்கு உண்டான அறிவினைத்
தந்துள்ளான். அதுபற்றியவிபரங்கள்
இதோ உங்களின் கனிவான
கவனத்திற்கு :-
1) தங்க நகைகளை பெண்களின்
மேனியில் அணிவிப்பதன் மூலமாக
ஒரு பங்கு காம உணர்வு குறைக்கப்
படுகிறது. ( இதனால்தான்
அன்பர்களே எனது அன்புக்கும்
பாசத்துக்கும் உரிய இஸ்லாமியத்
தோழர்கள் ஆண்களுக்கு தங்கநகை
எதுவும் அணிந்திடக் கூடாது என்று
இறைவன் சொன்ன அறிவுரையை
ஏற்று அவர்கள் வெள்ளியை
மட்டுமே அணிவதிலிருந்து நீங்கள்
கண்டுகொள்ளலாம். ஏன் என்றால்
தங்கத்துக்கு அந்தக் காம
உணர்வுகளை பெண்களுக்கு
குறைத்திடும் ஆற்றல், மற்றும்
வல்லமையை இந்த தங்க
உலோகத்திற்குவழங்கிஇருக்கிறான்
என்ற அரும்பெரும் இரகசியத்தை
இஸ்லாம் மதம் அவர்களுக்கு
போதித்து உள்ளது. இப்போது 4ல்
ஒன்று போக மீதம் இருப்பது 3 பங்கு.
2) வாசனைகள் மிகவும் நிறைந்த
மலர்களான மல்லிகை,முல்லை,
பிச்சி போன்றபூக்களை தலையில்
சூடிக்கொள்வதினால் மேலும் ஒரு
பங்கு காம உணர்வு இந்த இடத்தில்
குறைக்கப்படுகிறது அன்பர்களே !!
இப்போது 3 ல் 1 போக மீதம் இருப்பது
2பங்கு(அட.....என்ன.......ஆண்டவா......
அதான் சரிக்கு சரி ஆயிருச்சே...இந்த
பொம்பளைகளை வுட்ர
வேண்டியதுதானே ?
அட..என்ன..நான்...சொல்றது !!-அடே
மனிதா !! நீ இன்னும் இந்தப்
பெண்களைப்பற்றி சரியாகப்
புரிந்துகொள்ளவே இல்லை. தனது
மேனியில் சரி பங்குகொடுத்துவிட்டு
அந்த ஈசன் என்ன பாடுபட்டார்
என்பதைத்தான் புராண மற்றும்
இதிகாச நூல்களின் வரலாறுகளில்
பார்த்திருக்கிறோமே நாம் !!
3) இறுதியாக பெண்கள் அணிந்து
கொள்ளக்கூடிய அந்தப் பட்டாடை
(அதாவது பட்டுச் சேலை,இரவிக்கை
இது போல ஆடை அணிவதினால்
மேலும் 1 பங்கு குறைக்கப் பட்டு 2ல்
1கழிந்தது போக மீதம் இருப்பது
ஒன்றே ஒன்றுதான் அன்பர்களே !!
அதனால்தான் மட்டுமேஆண்களால்
அவர்களை "எதிர்கொண்டு"(?) அந்த
"யுத்தத்தில் "ஆண்கள் வெற்றி
அடைவதும் இதில்தான் அந்த
சூட்சுமம் அடங்கி இருக்கின்றது.)
அன்பர்களே !! இந்தக்
கட்டுரையின்இறுதி மற்றும் பாகம்
எண் .3 அநேகமாக இன்று
மாலையோ அல்லது நாளை
அதிகாலையிலோ நிச்சயமாக நான்
உங்களுக்குத் தந்து விடுகிறேன்
என்று உறுதிமொழி தந்து
உங்களிடம் இருந்து அன்புவணக்கம்
கூறி விடை பெற்றுச் செல்கிறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R. பாலு.
பின் குறிப்பு :- எனது அன்புக்கு உரிய
வெளிநாடுகளில் வாழ்ந்து வரும்
தமிழ் நேசர்களே / இணையதள
பார்வையாளர்களே !! நீங்கள் எனது
கீழ்க்கண்ட 5 விதமான வலை
தளங்களை பார்த்து,படித்து, ரசித்து
வருவது என்னவோ உண்மைதான்.
அதனை நான் இல்லை என்று
மறுப்பதற்கு இல்லை. ஆனால்
அந்தக் கட்டுரைகளை நீங்கள்
விரும்புவதாகவோ (LIKE) அல்லது
விமர்சனம் செய்வதாகவோ ஏதும்
(COMMENT) நான் இதுவரை எந்த
குறியீடுகளையும் உங்களிடம்
இருந்து நான் பெற்றதாக வரலாறே
இல்லை என்றும் சொல்லலாம்.
1) குறள் விளக்கம்.
2) கவிதை தொகுப்பு .
3) எண்ணச் சிறகுகள்.
4) எண்ணத்தில் தோன்றியவை.
5) எனது எண்ணங்கள்(MY
PERSONAL VIEWS)
தயவு செய்து நீங்கள் blogger.spot.
தளத்தின் கீழே அடியினில் உள்ள
கட்டத்தில் ஏதாவது ஒன்றினை
நீங்கள் குறியீடு செய்யுங்கள்
அல்லது எனது
Facebook.com/MaduraiTRBalu என்ற
தளத்திற்குள்ளாகச் சென்று அதில்
உள்ள Astrology For All என்னும்
பக்கத்திற்குள்ளாகச் சென்று
தங்களது குறியீடுகளைப்
பதிவு செய்திடுங்கள் என்று
வேண்டிவிரும்பிக்கேட்டுக்கொண்டு
விடை பெறுகிறேன் அன்புத் தமிழ்
நெஞ்சங்களே !! மீண்டும் நன்றி!!
வணக்கம்!! அன்புடன்.மதுரை
TR.பாலு)
தொடர்ச்சி ......பாகம் எண்.3.........
அன்பர்களே !! மனித உடல்கூறு
தத்துவத்தின்படி பெண்களைப்
பார்த்த மாத்திரத்தில் அவனுக்கு
கண்களின் வழியாக அவனது
மூளைக்கு தகவல் வருகிறது
அவளதுஎழில் ரூபம், பற்றிய
விபரங்கள். உடனே மூளை என்ன
செய்கிறது என்றால், தனக்கு
கண்கள் மூலமாக வந்த காட்சியின்
தகவல்களை நரம்புகளின் வழியாக
ஆண்களின் அந்தரங்க
உணர்வுகளைத் தூண்டிடும்
இடத்திற்கு மூளை அனுப்பி
வைக்கிறது. இந்த அந்தரங்க
உணர்வுகள் செயல் படும்
இடத்தினை உந்துவதும்,செயல்
இழக்கச் செய்திடும் இந்த இரண்டு
செயல்களைக் கட்டுப்படுத்தும்
நரம்புகள் மனித இனத்தில் எந்த
இடத்தில் வைக்கப் பட்டு உள்ளது
என்றால், அந்த இடம்தான்
அன்பர்களே ஆண்கள்/பெண்கள்
இந்த இருபாலரின் கால்களில்
பெருவிரலுக்கு அடுத்தபடியாக
உள்ள விரலில் தான் இந்த காம
உணர்ச்சிகளை கட்டுப் படுத்தும்
நரம்பின் ON/OFF SWITCH அமையப்
பட்டு உள்ளது. அன்பர்களே !! இந்த
கால் விரலில்தான்
திருமணத்தின்போது வெள்ளியால்
செய்த மிஞ்சி என்ற ஆபரணம்
அணிவிக்கப் படுகிறது. எதற்காக?
ஆண்/பெண் இருவரும் தங்களது
மனமதில் இந்தக் காம எண்ணங்கள்
அதீத வெறியினைக் கிளப்பும்
நேரத்தில் அந்த விரலில் உள்ள
நரம்பினில் இருந்துதான்
உத்தரவுகள் ஆரம்பம் ஆகின்றது.
இந்த மிஞ்ஜியின் வேலை அந்தத்
தகவலை முழுவதுமாக செல்ல
வேண்டிய இடத்திற்கு போய்ச்சேர
விடாமல் தடுப்பதுதான். இந்தக்
காரணாமா்தான் ஆண்களின் கால்
விரலில் வெள்ளியால் செய்யப்பட்ட
மிஞ்சி என்ற ஆபரணம்
மனைவியின் (அண்ணன்/தம்பி )
சகோதரனால் மாப்பிளைக்கு
அணிவிக்கப் படுகின்றது. எனது
ஆருயிர் சகோதரிக்கு (தாங்கள்
மனத்தில் ஒருவேளை இந்தக் காம
உணர்வுகள் அதிகரித்து )எந்தக்
காலத்தும் மாப்பிளையாகிய நீங்கள்
துரோகம்ஒருபோதும்பின்வரும்நாட்
களி ல் செய்து விடக்கூடாது
என்பதை அறிவுறுத்தும்
சம்பிரதாயம்பின்வரும் நாட்களில்
ஒரு சடங்காக மாறிவிட்டது
அன்பர்களே. இந்த கால்
விரலில்தான் காம நரம்புகள்
முடிச்சுப் போடப்பட்டு உள்ளது
என்பதற்கு ஒரு வரலாற்றுச்
சான்றும் ஒன்று உள்ளது. அதுதான்
முந்திய காலங்களில் இந்த
நாட்டினில் வாழ்ந்து வந்த
ரிஷிகளும்,முனிவர்களும்,சித்தர்க
ளும் தங்களது மனத்தில்
பெண்களின் ஆசைமூலமாக வரும்
காம உணர்வுகள் பீரிட்டு
எழுந்துவிடக் கூடாதுஎன்பதற்காகத்
தான்மரத்தால்ஆன செருப்புகள்
அணிந்திடுபோது அந்த
பாதரட்ஷையில் ஒரேஒரு சிறிய பிடி
மரத்தால் செய்யப் பட்டு இருக்கும்.
அந்தப் பிடியைத்தான் காலின்
பெருவிரலுக்கும் மிஞ்சி
அணிவிக்கும் விரலுக்கும்
நடுவினில் வைத்துப்
பிடித்துக்கொண்டு நடந்திடும்போது
சுத்தமாக முனிவர்களின் மனமதில்
எந்தவிதமான காம உணர்வுகளும்
எழுந்து நிற்க வாய்ப்பே கிடையாது.
அன்பர்களே !! இப்போது உங்களது
சந்தேகத்திற்கு விடை
கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்,
இதேபோலத்தான் பெண்களின்
திருமணத்தின் போது தாலி
அணிவிக்கும் சடங்கு எதற்காக
நடைபெறுகிறது என்று சொன்னால்
தாலி இருப்பது அவளது நெஞ்சின்
நடுப்பகுதில். முந்தையகாலங்களில்
எல்லாம் அதனை பெண்கள்
வெளியில் தெரியும்படி
தொங்கவிட்டுக்கொண்டு வருவது
வழக்கம். அப்போது இவர்களது
தலை குனிந்து நிலத்தினைப்
பார்த்தபடியேதான் நடந்து வருவது
பெண்களின் வழக்கம்.(அதாவது
அந்தக் காலத்துப் பெண்கள்)
அப்போது தனக்கு எதிரில் வரும்
ஆண்களின் கால்விரலில் மிஞ்சி
அணிவிக்கப்பட்டு இருப்பின் அவன்
மணம் ஆனவன் என்று
அதற்கும்தான் மிஞ்சி அணிவது
என்று சொல்வோரும் உண்டு.
அதுபோல ஆண்கள் எப்போதும்
தனது தலையை
நிமிர்த்திவரும்போது பெண்களின்
நெஞ்சினில் தாலியை வெளியில்
தொங்கவிட்டு வரும்போது
அதனைக் கண்ணுற்ற ஆண்கள்
,ஓகோ இவள் திருமணம் ஆனவள்
மற்றும் ஒருவனுக்கு இவள்
சொந்தமானவள் என்பதைத்
தெரிவிக்கும் கருவியாக இந்த தால்
தொங்குகிறது என்று அறிவில்
சிறந்த ஆன்றோர்கள் சொல்லிட
நான் கேட்டது உண்டு.
கட்டுரை இத்துடன் நிறைவு
பெறுகிறது. மீண்டும் சந்திப்போம்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment