(வயது வந்தவர்களுக்கு மட்டும்!!) ( A ) புரிஞ்சாப் புரிஞ்சுக்குங்க !! புரியலேன்னா வுட்ருங்க !!
உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்
எனது உயிரினும் மேலான அன்புத்
தமிழ் உடன்பிறப்புகளே !!
உங்கள் அனைவருக்கும் எனது
இதயம் கனிந்த வணக்கம்.
இப்பவும் இன்றையதினம் நான்
உங்கள் அனைவருக்கும்
வயது வந்தவர்களுக்கு மட்டும் " A "
JOKE கதை ஒன்று. (கண்ணியம்
சற்றுக் குறைந்ததுதான்--ஆனால்
ஆபாசம் எழுத்தில் அல்ல--எனவே
நீங்கள் தைரியமாகப் படிக்கலாம்)
மதுரை மாவட்டம் மேலூர்
வட்டத்தைச் சேர்ந்த சிறிய
கிராமம்தான் நமது கதை
நடைபெறுகின்ற சிற்றூர் அதன்
பெயர் கீழவளவு. அதில் வாழ்ந்து
வந்தவர்கள் பாமா மற்றும் ஹேமா .
இவர்கள் இருவரும் மேல்நிலைப்
பள்ளியில் முன்பு ஒன்றாகப்
படித்தவர்கள். (அதாவது 7ம்
வகுப்புவரை மட்டுமே படித்து
பின்னர் கல்வி ஏறாததாலேயே
பாமா படிப்பை அத்துடன் நிறுத்திக்
கொண்டார்.) ஹேமா +2 படித்துப்பின்
கல்லூரி சென்று இளங்கலை,
மற்றும் முதுகலை பயின்று பெரிய
இடத்து மாப்பிள்ளைக்கு
வாக்கப்பட்டு மும்பைக்கு
சென்றுவிட்டார். அதன் பிறகு
ஒருமுறை ஹேமா, தான் பிறந்து,
வளர்ந்து, வாழ்ந்த கீழவளவு
கிராமம்/சிற்றூர் வந்தாள்.( எதற்கு ?
கோவில் திருவிழாவிற்கும் மற்றும்
குல தெய்வ வழிபாட்டிற்கும்)
தோழிகள் இருவரும் சந்தித்தனர்.
அளவளாவினர். ஆனந்தம்
கொண்டனர். (இப்போது நேரலை )
பாமா :- என்னடி ஹேமா ? எப்படிடி
இருக்கே ? மாப்பிள்ளை,
குழைந்தைகள் எல்லாம்
சௌக்கியமா ?
ஹேமா :- எல்லோரும் நலம்தாண்டி
பாமா. ஆமா !! நீ எப்டி இருக்கே.
உன்வீட்டுக்காரர் எப்டி இருக்கார்?
பாமா :- உம்."அதுக்குஎன்ன" நல்லா
சாப்பிட்டு சாப்பிட்டு தூங்குதுடி.
(ஏம்மா ஆம்பிளையாளுக உங்களை
எல்லாம் தொட்டுத் தாலி கட்டின
அந்தஒரே பாவத்துக்காக அவனை,
அந்தப்புண்ணிய கணவனை ஆடு,
மாடு, மாதிரி "அதுக்கு"என்னவாம்
இல்ல - இன்றைக்கு அன்பர்களே
1௦௦க்கு 95 விழுக்காடுகளுக்கு மேல்
உள்ள இந்தக்காலப் பெண்களது
வழக்கமான, அவர்களது மொழியில்
சொல்லப்போனால் இப்படிப்பட்ட
"அடைமொழியில் " அழைத்துக்
கணவன்மார்களை பேசுவதுதான்
இந்தக் காலப் பெண்களுக்கு
ரொம்பவே பிடிக்கும்.)
பாமா :- அது (!) ரொம்பக் கொடுத்து
வச்சதுடி. எங்க மாமா சொத்துசேத்து
வச்சுருக்காரு. போதாக்குறைக்கு
நான் வேற வீட்டு வேலைக்குப்
போயி 2௦௦௦ ரூபா சம்பாதிச்சுக்
கொண்டுவந்து கொட்டுறேன்.ஏண்டி
அப்புறம் அழைச்சு வேலை எதுக்குடி
"அது" உடம்ப வளைச்சு வேலை
செய்யன்னும் ? அட..என்ன...நான்..
சொல்றது ? ஏண்டி? உன் வீட்டுக்கார்
என்னடி படிச்சுருக்காரு?என்னடி
உத்தியோகம் பாக்கறாரு?
ஹேமா :- (பெருமை மிகுந்த கர்வ
உணர்வுகளோடு )என் ஹப்(புருஷன்,
கணவர், இல்ல வீட்டுக்காரர், அதை
எல்லாம்கூட விடுங்க, ஹஸ்பண்டு
அப்படிக்கூட கூப்பிடமுடியாதாம்.
அத்த சுருக்கி " ஹப் " ஆம்---என்ன
பாஷையோ, என்ன ஆசையோ
எல்லாம் அந்தக் கடவுளுக்குத்தான்
வெளிச்சம்) ஆஸ்திரேலியாவில்
M.B.A. படிச்சு முடிச்சுட்டு பம்பாயிலே
CALL CENTER ல ஒர்க் பன்றார்டி.
பாமா :- ஏண்டி ? நான்
தெரியாமத்தான் கேக்குறேன் ?
"அதுக்கு "எதுக்குடி வெளிநாட்டுலே
போயி அம்புட்டுப்பெரிய படிப்பு
படிக்கணும்.(இவளுக்கு அந்த அளவு
M.B.A. ன்னா என்ன படிப்புங்றதைப்
புரிஞ்சுக்கிற அளவுக்கு ஆங்கில
அறிவு இல்லவே இல்லை--அதாலே
இந்தக் கேள்வியை கேக்குறாள்.)என்
புருஷன் எட்டாங்கிளாஸ் படிப்பு
படிச்சுட்டு நீ சொன்ன அந்த அதே
" இடத்துலேதானேடி " வேலை
பாக்கிறார்.
அன்பர்களே !! கதை இத்துடன்
முடிகிறது. இந்தக்கடைசி எட்டு
வரிகளுக்குள் ஒளிந்து இருக்கிற
விஷயத்தைப் பத்தி அந்த JOKE பத்தி
" புரிஞ்சாப் புரிஞ்சுக்குங்க " !!
" புரியலேன்னா வுட்ருங்க " !!
ஆளை உடுங்கடா சாமியோய் !!
நான் போயிட்டு வாரேன்.!!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R. பாலு.
என்ன இன்னுமா புரியலை ?
வேணுமின்னா உங்களுக்கு ஒரு
சின்ன " க்ளூ " வேனா தரலாம்.
அப்படியும் உங்களுக்கு ஒருவேளை
புரியல்லன்னு வச்சுக்குங்க. நீங்க
இந்த ஆட்டத்துக்கு லாயக்கு
இல்லன்னு தான் அர்த்தம்.
கால் (CENTRE) இந்த ஆங்கில
வார்த்தைக்கு மட்டும் அர்த்தம்
தமிழில் என்ன என்று அகராதியைப்
பார்த்துட்டு அதையும் சேர்த்து
படியுங்க. இப்ப புரியும்னு
நினைக்கிறேன். அய்யா சாமிஎனக்கு
நிறைய வேலை இருக்கு. நான்
போயிட்டு வாரேன்.
(இவங்களுக்கு விளக்கம்
சொல்லியே நான் ஓஞ்சு
போயிருவேன் போல இருக்கு !!)
மீண்டும் நன்றி !! வணக்கம் !!
No comments:
Post a Comment