Saturday, 9 November 2013

" FOR ADULTS ONLY " !! (கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் ) தமிழ் மாதங்களுக்கு பெயர் வந்ததற்கான காரணங்களும் !! விளக்கங்களும் !! --இது எனது சொந்தக் கற்பனை !!--உங்கள் அனைவரின் கனிவான கவனத்திற்கு !!




உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!!



உலகெங்கிலும் வாழ்ந்து வரும் என் 



உயிரினும் மேலாக நான் போற்றி 



வணங்கி வரும் அன்புத் தமிழ் 



உடன்பிறப்புகளே !! அனைவருக்கும் 



என் இதயம் கனிந்த வணக்கங்கள் 



உரித்தாகுக !!                                           



ஏங்க !! நீங்களே சொல்லுங்க !! 



நியாயத்தை !! இன்னும் எத்தனை 



நாளைக்குத்தான் நான் ! " U " 



சான்றிதழ் அப்டீன்னு சொல்லுற, 



எல்லோரும் பார்க்குற மாதிரி, 



படிக்கிற மாதிரி, கட்டுரையாத்தான் 



எழுதிட்டே இருப்பேன். எனக்கும் 



உள்ளத்துக்குள்ளே ஒரு ஆசைன்னு 



ஒன்னு இருக்காதா? 



(என் மனசாட்சி "அண்ணனாக" ) 



அண்ணன் :-   ராஜா !! அப்படி 



என்னடா உம் மனசுலே ஆசை ? 



சொல்லுடா என் பாலுத் தம்பி !! 



தவறு...தவறு... சொல்லுடா என் 



மதுரை பாலுத் தம்பி !!   



நான் :-    சொல்றேண்ணே !! 



எனக்கும்...வந்து...வந்து...                     



அண்ணன்:-சொல்லுடா தம்பி.. 



சும்மா...தயங்காம..சொல்றா...



நான்:- அது ஒன்னும் 



இல்லண்ணே!!............



அண்ணா:-ஒன்னும் இல்லையா !!.. 



சரி அப்ப விடு....நான் தூங்கப் 



போறேன்... 



நான் :- அட என்ன அண்ணே !!இப்படி 



நீ கோச்சுக்கிட்டா எப்படி ..நான் 



என்ன சொல்ல வர்றேன்னா....               



அண்ணன்:-   ஏலே!! என்ன 



சொல்லவர்ரயோ அத்த இப்ப 



சட்டுபுட்டுன்னு சொல்றீயா இல்ல 



சப்புன்னு ஓங்கி ஒரு அறைதரட்டா !! 



அவனவனுக்கு தூக்கம் சும்மா 



கண்ணை சுழட்டுது. இவன் 



என்னடான்னா சும்மா கதை 



பேசிட்டே இருக்கான். 



சொல்றா.உடனே..                                 



நான்:- சொல்றேன். அண்ணே !! 



எனக்கு இப்ப உடனடியா இப்பவே 



வந்து   "கண்டிப்பாக வயது 



வந்தவர்களுக்கு மட்டும்" 


 

            " (FOR ADULTS ONLY) "             



என்ற பெயரில் ஒரு கட்டுரை நான் 



எழுதணும். இன்னும் எத்தனை 



நாளைக்குத்தான் நானும் 



அறிவு தருகின்ற, 



ஆற்றல் பெறுகின்ற, 



இனிமை நிறைந்த, 



ஈகை நெளிந்த, 



உண்மை அறிந்த, 



ஊக்கம் செறிந்த,



எளிமை அறிந்த,



ஏக்கம் பொதிந்த,



ஐயம் தீர்க்கும்,



ஒழுக்கம் பார்க்கும், 



ஓங்கு தமிழ் புகழ் வளர்க்கும், 



ஓவ்வை பெருமை பாராட்டும் 



தத்துவ முத்துக்கள் கொண்ட 



கட்டுரைகளாகவே தந்து தந்து என் 



மூளையும் ரொம்பவே குழம்பிக் 



கிடக்குது. அதனாலே இந்த ஒரேஒரு 



"  கண்டிப்பாக வயது 


வந்தவர்களுக்கு மட்டும் " 



அப்படீன்னு கட்டுரை எழுத நீங்க 



என்னை அனுமதிக்கணும். ப்ளீஸ்... 



அண்ணா:-  ஏலே !! எதுனாச்சும் 



அசிங்க அசிங்கமா எழுதுனேன்னு 



வச்சுக்க !!மவனே !! உன்னை 



கொண்டே புடுவேன் பாத்துக்க !!           



நான் :-  என்ன அண்ணே !! நான் உன் 



தம்பி !! அண்ணே !! அப்படீல்லாம் 



வரம்பு மீறி எழுதவே எழுத 



மாட்டேன். உம்மேலே சத்தியம் !!         



அண்ணா:-என்னது ? எம்மேலேயா !! 



படவா !!ராஸ்கல் !! உம்மேலே 



சத்தியம் பண்ணிட்டு எழுதுடா !! 



எனக்குத்தூக்கம்வருது..பாரு..



இப்பவே...மணி நடுராத்திரி 3 



ஆகப்போதுடா..எழுது.. காலையிலே 



வந்து படிச்சு பாப்பேன் எதுனாச்சும் 



அசிங்கமா எழுதி இருந்தேன்னு 



வச்சுக்க !! மவனே நீ 



அத்தோடசெத்தடா!!போ.போ.எழுது. 



காலையிலே  நான் வந்து 



படிச்சுக்கிறேன்.                                         



மனசாட்சி என்கின்ற அந்த 



"அண்ணனின்" அனுமதிகிடைத்த 



மன மகிழ்ச்சியில் இப்ப தம்பியாகிய 



நான் எழுத தொடங்குகிறேன். அத 



படியுங்க !! நீங்க !!                                     



தமிழ் மாதங்களுக்கு பெயர் 



வந்ததற்கான காரணங்களும் அதன் 



விளக்கங்களும் !!(என்சுயகற்பனை) 




ஒரு இளம் வயதுள்ள வாலிபன் 



நடந்து வந்து கொண்டு இருந்தான் 



அப்போது எதிரில் ஒரு அழகான 



பெண் ஒருத்தி இவனைப்பார்த்து 



சிரிக்கின்றாள் !! உடனே இவன் 



அவளைப் பார்த்து !! அழகிய 



பெண்ணே !! உன் பெயர் என்னவோ ?



நான் அறியலாகுமோ ? என்றான். 



உடனே அதற்கு அந்த இளம் பெண் 



இதழ்தனில் புன்முறுவல்  பூத்திட   



என் பெயர் .......... "கார்த்திகை"............ 



என்று  பதில் உரைத்தாள்.இதுதான் 



கார்த்திகை மாதம்.               



அப்போதுதான் அந்த இளைஞன் 



சற்றே அவளது ரவிக்கையை உற்று 



நோக்குகிறான். அது சற்றே 



நன்றாகவே நடுவினில் மார்பு 



பகுதியில் கிழிந்து 



இருப்பதைப் பார்க்கிறான். உடனே 



இந்த யுவன் அந்த யுவதியைப் 



பார்த்து பெண்ணே உன்...உன்...உன்.. 



"மார்கிழி"ந்துள்ளது என்று சொல்ல 



(இதுதான் மார்கழி)



உடனே அவளோ இந்த வாலிபனை 



பார்த்து ஊசியும்நூலும் தந்து " தை " 



என்றாளாம் கிழிந்த இடத்தைக் 



காண்பித்து.(இதுதான் தை மாதம்)  



உடனே அந்த வாலிபனும் மனதில் 



எந்த காம உணர்வுகளும்இல்லாமல் 



தைத்து முடித்திட்டான். உடனேஅந்த 



யுவதி இந்த யுவனைப் பார்த்து நீ 



"மாசு"மருவற்றவன்என்றுரைத்தாள்



(இதுதான் மாசி மாதம்) 



இப்போது அந்தப் பெண் இவன்மீது 



இலேசாக விரும்ப 



ஆரம்பிக்கின்றாள். அவள்இவனிடம் 



என் வாழ்வினில் இனி "பங்கு நீ" 



என்றுசொன்னாள்.(இதுதான் 



பங்குனி மாதம்) 



வாலிபன் அந்தப் பெண்ணைப் 



பார்த்து இப்ப நீ சொல்வது 



உண்மையானால் உடனே வா "சித்து 



அறைக்கு" ( இதுதான் சித்திரை 



மாதம் ) என்று அழைத்திட, 



அவளோ என்ன பகர்ந்தனள் 



என்றால் ஓகோ !! நீ ஓசியிலே 



என்னைப் பார்த்திட 



நினைக்கிறாயோ ? " வைகாசு" 



என்றாள்.(இதுதான் வைகாசி மாதம்) 



உடனே வாலிபன் தன் 



சட்டைப்பையில் இருந்து சட் என்று 



1,௦௦௦ ரூபா நோட்டை எடுத்து 



நீட்டுறான். அதைப் பார்த்தவுடன் 



அந்தப் பெண் இவனைப்பார்த்து 



 "ஆண்நீ" என்றாள்.(இதுதான் ஆனி 



மாதம்)



பணம் கை மாறியவுடன் இருவரும் 



ஒருவரோடு ஒருவர் இணைந்து  



"ஆடி"க்களித்தனர். (இதுதான் ஆடி 



மாதம்) 



இளைஞன் தந்த சுகத்தில் மூழ்கிய 



யுவதிக்கு கிடைத்த இன்பத்தில் 



அவனை இறுக அணைத்து பின் 



அவனைப் பார்த்து எனது "ஆவல்நீ" 



என்றாள்.(இதுதான் ஆவணி 



மாதம்)



இப்போது அந்த யுவனுக்குஇவள்மீது 



ஆசை பெருக்கெடுக்க அவளை 



இவன் "புரட்டி புரட்டி ஆசி" எடுத்து 



முடித்தான்.(இதுதான் புரட்டாசி 



மாதம்)  



தொடர்ந்து இருவரும் காமக் 



களியாட்டத்தில் ஈடுபட்டதால் 



இருவருக்குமே வயிற்றில் 



"பசி"எடுக்க அவர்கள் ஒன்றுசேர்ந்து 



ஒரே குரலில் " ஐயோபசி" என்றனர்.



(இதுதான் ஐப்பசி மாதம்)                       



இப்படியாகத்தானே  தமிழ் மாதப் 



பெயர்களுக்கான எனது கற்பனைக் 



காரணங்கள் பற்றிய கட்டுரை 



இத்துடன் நிறைவினைப்பெறுகிறது. 



ஏனுங்கோ  இப்ப நான் மேலே 



எழுதிய கட்டுரையிலே எதாச்சும் 



அசிங்க அசிங்கமா 



இருந்துச்சுங்களா? சும்மா 



சொல்லுங்கோ? ஏதும் இல்லையே. 



அப்பாடா. இப்பதான் எனக்கு 



நிம்மதி.என் அண்ணன்கிட்ட இருந்து 



நான் தப்பிக்கமுடியும். காலைலே 



எந்திரிச்சு வந்தவுடன் முத  வேலை 



அவருக்கு இததான் என்னோட 



கட்டுரையைப் படிப்பாருங்க. சரிங்க 



ரொம்ப சந்தோசம். எனக்கும்தூக்கம் 



வருதுங்க. நீங்களும்தூங்கபோங்க!! 



உங்கள்  அனைவருக்கும் இனிய 



இரவு வணக்கங்கள் சொல்லி விடை 



பெறுகின்றேன்.(கட்டுரையை நான் 



முடித்திடும் நேரம் இந்திய நேரப்படி 



அதிகாலை ௦4.3௦ ஆயிருச்சுங்க !!)           



நன்றி !! வணக்கம் !!                                     



அன்புடன்.மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment