Thursday, 7 November 2013

தொடர்ச்சி...எண்...பாகம் ...5. இரண்டாம் தாரத்தின் எக்காளமான/தற்பெருமையான பேச்சும் அதற்கு முதல் தாரத்தின் இடை சொருகலான பதிலும் !!உங்களின் கனிவான பார்வைக்கு !!

காந்திஜா:- ( சற்றே அவசரத்துடன்) 



அம்மா!!..அம்மா!!ஏன்..ஏன்..நிக்கிறே. 



சும்மா உக்காரு  கண்ணு. எனக்கு 



இந்த மாதிரி வெளி வேஷமான 



மரியாதை எல்லாம் எப்பவுமே 



பிடிக்காது.   மதிப்பு, மரியாதை, 



இதெல்லாம் 



உள்ளத்துல இருக்கணும். 



சும்மா உதட்டளவுல 



இருந்தா யாருக்கு என்ன 



பிரயோசனம் ?.                                             



ஆஷா :-  உண்மைதான்,இப்ப  நீங்க 



சொல்றது. இருந்தாலும் வயசுன்னு 



ஒன்னு இருக்கே !!                                 



 காந்திஜா:-  என்னம்மா வயசு..உம்.. 



எல்லாருக்கும் ஒருநாள் வயசு 



கூடிட்டேதான் இருக்கப்போது !! 



எனக்கு இப்ப வயசாயிட்டுது. 



இன்னும் ஒரு 4௦, 45 வருஷம் கழித்து 



உனக்கும் என்னோட வயசு 



வரத்தான் போகுது. அத பாத்தா 



எப்படி. (இப்படி அம்மையார் 



சொல்லிட்டே இருக்கும்போது, 



முழுமதி,ஆஷா இவர்கள் இருவரும் 



காந்தி ஜானகி அம்மையாரின் 



கால்கள் முன்பாக மண்டியிட்டு 



வணங்க முற்படுகின்றனர். உடனே 



அந்தச் செயலைத் தடுக்க முயலும் 



அம்மையார், ஆஷாவைத் தனது 



இருகரங்களால் தொட்டு தூக்கிட 



முயல்கிறார்.) என்ன ஆஷா ? இப்ப 



தானே சொன்னேன். எனக்கு இந்த 



காலில் விழுந்து வணங்கும் 



வழக்கம் என்னைக்குமே பிடிக்காது 



ஏன்..ஏன்னா இறைவன் ஒருவனக்கு 



மட்டும்தான் நம் சிரசு தரைதொட்டு 



வணங்கிடனும்.(கணவரைப்பார்த்து) 



ஏங்க..அவதான் சின்னப்பொண்ணு.. 



ஏதோ தெரியாம கால்ல விழுந்தா .. 



என்ன .... நீங்களுமா?                                 



முழுமதி :- அப்படி இல்லம்மா !! உம் 



பெரிய மனசுக்கு முன்னாலே இது 



எல்லாம் வெறும் தூசு..                         



காந்திஜா:-       (ஆஷாவைப் பார்த்து) 



நீ உக்காரு கண்ணு. ஏங்க.அட...... 



உங்களைத்தானே..நீங்களும் அவ 



பக்கத்தல போயி உக்காருங்க..உங்க 



ரெண்டு பேர் ஜோடிப் பொருத்தம் 



எப்படின்னு பாக்கிறேன்.(மூவரும் 



இப்ப "கொல்" என்று சிரிக்கின்றனர். 



அன்பர்களே !! இந்தக்கதையின் 



இறுதி மற்றும் பாகம் எண் :-5 நாளை 



வெளிவரும். அதுவரை சற்று 



அமைதியாக இருக்க வேண்டும். 



நன்றி !! வணக்கம் !!                                     



அன்புடன். மதுரை T.R.பாலு.                 



நேயர்கள் அனைவருக்கும் எனது 



இதயம் கனிந்த, அன்பு நிறைந்த         



              "  தீப ஒளித்திருநாள்  "



நல்வாழ்த்துக்கள் !!



வாழ்வோம் நாம் அனைவரும் 



அன்புடனும் !! தூய்மைத் தமிழ்ப் 



பண்புடனும் !!                                               



(இப்போது பாகம் எண்:-5 



தொடர்கிறது )                                             



 ஒரு நல்ல நாள் பார்த்து 



காந்திஜானகி அம்மையார் பெரிய 



மனதுடன் முழுமதி,ஆஷாஇருவரின் 



திருமணத்தை நடத்தி முடிக்கிறார். 



அது முதல் அவர்கள் இருவரும் 



(ஆஷா & முழுமதி) இல்லறத்தை 



தொடங்குகின்றனர். காலம் 



மாறுகிறது. கதைகள் 



ஓடுகின்றன.அன்று ஒரு நாள் 



காந்திஜா & ஆஷா இருவரும் 



சமையல் செய்திடும் அறையினில் 



ஒன்றாக இருந்து  வேலை 



செய்திடும்வேளையில் ஆஷா, சற்று 



எதையும் யோசிக்காமல், 



அவசரகதியில்  சற்றே எக்காளமான/



தற்பெருமையான குணத்தோடு தன் 



மூத்த சகோதரியிடம் (காந்திஜா )பல 



விஷயகளைப் பற்றி உரையாடிக் 



கொண்டு வருகிறாள். அப்போது 



தனது அழகையும் இளமை நிறைந்த 



வயதில், தான், அவர்கள் இருவரது 



ஒரே கணவனான முழுமதியான் 



அவர்களுக்குத் தாம், மனைவியாக 



அமைந்து இருப்பதையும், தனது 



சகோதரி காந்திஜா அவரது 45 



வயதில் அன்னாருக்கு மனைவியாக 



இருந்தபோது தம்மைவிட வயது 



மூத்தவராக இருந்த இருவரிடையே 



யாரிடம் அவர் அதிக இன்பம் 



பெற்றிருப்பார் என்பதைப்பற்றிய 



கருத்துக்கள்/விவாதங்கள் என 



அப்போது நடைபெறும் 



உரையாடலின் தொகுப்பு, இதோ 



உங்கள் அனைவரின் கனிவான 



கவனத்திற்கு :-     




ஆஷா :-  அக்கா !! உங்ககிட்டே ......   



காந்திஜா:- சொல்லும்மா !! ஏதோ 



சொல்லவந்தே!! என்னன்னு 



கேளும்மா !!                                                 



 ஆஷா :-  இல்ல ...எனக்கு கொஞ்சம் 



வெட்கமாக இருக்கு....உங்க 



கிட்டேயே இதை கேட்பதற்கு.....     


 

காந்திஜா :- சும்மா கேளு கண்ணு. 



நான்என்ன வெளிஆளா? உன்னோட 



அன்பான அக்காதானே ?



சொல்லுகண்னு                     



ஆஷா :- இல்லக்கா .. நீங்க 



அவரைக்கல்யாணம் செய்றப்போ 



உங்களுக்கு வயது 45 தானே.           



காந்திஜா:- ஆமா !! கண்ணு. ஏன் 



அதுக்கு இப்ப என்ன?ஏன் நீ இப்ப 



அதை கேக்கிற ?                                




ஆஷா :-  இல்லக்கா .. அவர் 



என்னைக் கல்யாணம் செய்றப்போ 



எனக்கு வயது 21. அதான் உங்களை 



அவர் உங்களோட 45 வயதில் 



கல்யாணம் செஞ்சுகிட்டு  உங்கட்டே 



அவர் சுகம் அனுபவிச்சதுக்கும் 



என்கிட்டே என்னோட 21 வயதில் 



அழகும் இளமையும் ஒருங்கே 



அமையப்பெற்ற என்னிடம் அவர் 



இல்லற இன்பம் அனுபவிச்சதுக்கும் 




நிறைய வித்தியாசம் அவர் 



உணர்ந்திருப்பாரே. அவர்அதிகமான 



இன்பம் அடைஞ்சது 



என்கிட்டேதானே இருந்திருக்கும் 



அவருக்கு, ஏன்னா, நான் உங்களை 



ஒப்பிடும்போது, நீங்க அவரைப் 



பொருத்தவரையிலும் ஒரு 



நடுத்தரவயதையும் தாண்டிய 45 



வயதுள்ள பெண்மணி, ஆனா நான் 



அப்படி இல்ல அதான் அவர் நம்ம 



இருவரிடமும் அவர் அனுபவிச்ச 



இல்லற சுகத்தில் உங்களைவிட 



என்னிடம் தானே அதிகமான மன 



ஈடுபாடும், சுகமும்,நிம்மதியும்,அவர் 



அடைஞ்சு இருப்பார். இத தான் நான் 



உங்கட்டே கேட்கனும்னு இருந்தேன், 



ரொம்ப நாளா !! இன்னைக்குகேட்டே 



விட்டேன் ..... தப்பா இருந்தாஎன்னை 



மன்னிச்சுக்கங்க அக்கா என்றாள் !! 



(சற்றே எக்காளமான /தற்பெருமை 



 மிகுந்த குரல்  வளத்தோடு, உடனே 



அதற்கு, அந்தக் கேள்விக்கு பதில் தர 



முடியாமல் காந்திஜா அம்மையார், 



சற்றே யோசித்தார். என்ன, இவள் 



ரொம்ப சின்னப் பெண் என்றுதானே 



இதுகாறும்நாம்நினைத்திருந்தோம்.



ஆனா இவள் அந்தவளையத்தையும் 



தாண்டிஇப்படிசிறுபிள்ளைத்தனமாக 



இருக்கிறாளே என நினைத்துவிட்டு 



சற்றே அமைதியாகி,அவளுக்குத் 



தகுந்ததொரு இடைச்சொருகல் 



நிறைந்த பதில் ஒன்றினைத் 



தருகிறார் திருமதி காந்திஜா 



அம்மையார்.)                                                 



காந்திஜா :-  கண்ணு !! இப்ப நீ 



சொன்ன கருத்து இருக்கே அது 1௦௦ 



க்கு 1௦௦ சதவீதம் உண்மை. அந்த 



விஷயத்தில உண்மையைத்தவிர 



வேறு எதுவும் இல்ல கண்ணு.



(அம்மையார் பேச்சைமுடிப்பதற்குள் 



தானும் தனது இளமையும் வெற்றி 



பெற்றுவிட்டதை தனது அக்காவே 



மனமுவந்து ஒத்துக்கொண்டதை 



எண்ணி அவசரமாகப் பேசிட 



முயல்கிறாள் ஆஷா)                               



ஆஷா :-  ரொம்ப ரொம்ப நன்றி 



அக்கா !!  இதைத்தான் உங்ககிட்டே 



இருந்து நான் எதிர்பார்த்தேன். 



காந்திஜா: இரு கண்ணு. ஏன்..ஏன்.. 



உனக்கு..இந்த அவசரம்..நான் 



இன்னும் பேசி முடிக்கலையே..     



ஆஷா :- மன்னிச்சுக்குங்க அக்கா !! 



என் இளமைக்கு வெற்றி 



கிடைச்சுட்டுதே அப்படீங்கிற  மன 



சந்தோஷத்தில நான் குறுக்கிட்டுப் 



பேசிட்டேன் அக்கா. தயவு செய்து 



என்னை மன்னிச்சுகுங்க.                   



காந்திஜா:- என்ன கண்ணு !! 



எனக்குத் தங்கையா இருந்துகிட்டு நீ 



இப்படி அவசரப்படலாமா? தவிரவும் 



இந்த விஷயத்தில வெற்றி, தோல்வி 



அப்படீங்கிரதைத் தீர்மானம் பண்ண 



நாம யாரும்மா கண்ணு? உம்...அதை 



அந்த வேலையை எல்லாம் வல்ல 



இறைவன் பாத்துப்பான். கண்ணு ! 



இங்கே நீ இந்த இளமை,சுகம்,இதை 



நாம ரெண்டுபேர்கிட்டே யாரிடம் 



அவர் அனுபவிச்சார்னு நீ கேக்கிற 



அதே நேரத்தில அங்கே இன்னொரு 



விஷயமும் ஒளிஞ்சுட்டு இருக்கு 



கண்ணு. அத நீ பார்த்தியா கண்ணு. 



ஆஷா:- அது என்னக்கா புதுக் கதை? 



காந்திஜா:- கண்ணு. புதுக்கதையும் 



இல்ல பழைய கதையும் இல்ல இது 



பொதுவான கதைதான். நீ இப்ப 



சொன்னியே, அந்த இளமை,வேகம், 



தேக சுகம், இந்த அதே 



விஷயங்களை நாம ரெண்டுபேர் 



கிட்டே  அவர் அடைந்தார்னு நீ இப்ப 



கேட்டியே !! அதையே கொஞ்சம் 



மாத்தி யோசி !! நம்ம ரெண்டுபேர்ல 



அவர்கிட்ட நம்ம ரெண்டு பேரிலயார் 



அதிகம் அனுபவிச்சோம் அப்படீன்னு 



பாத்தா இந்த விஷயத்துலநான்தான் 



கண்ணு ரொம்ப ரொம்பவே 



கொடுத்துவச்சவ.                                         



ஆஷா:-அது...எப்படி..அக்கா....(  மனம் 



சற்று குழம்பிய நிலையில்)               



காந்திஜா:- சொல்றேன் தங்கம். 



என்னையை அவர் கல்யாணம் 



பண்றப்போ அவருக்கு வயது 21. 



எனக்கு 45.  ஆனா உன்னையைஅவர் 



கல்யாணம் செய்றப்போ உனக்கு 



என்னவோ வயசு 21 இருக்கலாம். 



நான் இல்லன்னு அதை மறுக்கல. 



ஆனா...அவருக்கு வயசு...45 கண்ணு. 



அதாலே என்னாலேதான் 



உன்னையை விடவும் அவர்கிட்டே 



இளமை, வேகம், தேக சுகம் போன்ற 



விஷயங்களை நான்தான் ரொம்ப 



ரொம்பவே அதிகமா உன்னைய விட 



அனுபவிச்சிருப்பேன் இல்லையா. 



நான் ஏன் சொல்றேன்னா !! 21 



வயசுல ஒரு ஆணுக்கு வேகமும் 



விறுவிறுப்பும் அதிகமா இருக்குமா? 



இல்ல 45 வயசுல ஒரு ஆண் 



மகனுக்கு காம வேகம் விறுவிறுப்பு 



அதிகம் இருக்குமா? நீயே கொஞ்சம் 



யோசிச்சு பாத்துக்கம்மா ? என்று 



ஆஷாவிடம் காந்திஜா அம்மையார் 



கேட்டவுடன்....ஆஷா தனது தவறை 



உணர்கிறாள். அவளது தலை 



தோல்வியால் பூமியை நோக்கித் 



தாழ்ந்திட தொடங்குகிறது.               



 ஆஷா:- அக்கா.. என்னையை 



மன்னிச்சுகுங்க !! என் அவசரம் 



நிறைந்த குணம், அழகாக , 



இளைமையாக  நான் இருக்கிறேனே 



என்று அகம்பாவம் நிறைந்த 



மனத்தில் எழுந்த சுபாவமும் தந்த 



அழுத்தத்தினாலேதான் நான் இப்படி 



உங்ககிட்டே கேட்டுவிட்டேன். 



வருத்தம் அடைகிறேன். மணி 



ஆயிருச்சு... நான் போயி அவருக்கு 



காலை சிற்றுண்டி கொடுக்கப் 



போறேன் அக்கா.(என சொல்லி 



விட்டு அந்த இடத்தைவிட்டு ஆஷா 



நகர்கிறாள் )                                             



 காந்திஜா :- இலேசான 



புன்னகையை பூக்கிறாள்.  எல்லாப் 



புகழும் இறைவனுக்கே என்று 



காந்திஜா அம்மையாரின் மனம் 



எண்ணுகின்றது.         



(இந்தக் கதை இத்துடன் நிறைவு 



பெறுகிறது அன்பர்களே !!)



அன்பர்களே இந்தக் கதைதொடர்ந்து 



5 பாகங்களாக இங்கே நான் எழுதி 



இருந்தேன். படித்து இரசித்திட்ட 



அத்தனை அன்பு நிறைந்த நல்ல 



உள்ளங்கள் அனைவருக்கும் எனது 



உளம் கனிந்திட்ட நன்றியும்!! 



வணக்கமும் !!                                                 



வாழ்வோம் நாம் அனைவரும் 



அன்புடனும்,பண்புடனும்.                   



இப்படிக்கு, 




அன்பன் மதுரை  TR.பாலு.                                                           

No comments:

Post a Comment