Saturday, 3 August 2013

முடிதிருத்துவோருக்கும் பாட்டு எழுதிய கவியரசர் !!--ஒரு சிறப்பு கண்ணோட்டம் !!



எங்கள் வாழ்வும்!! எங்கள் வளமும்!!


மங்காததமிழ்என்றுசங்கேமுழங்கு!! 


எங்கள்பகைவர்எங்கோமறைந்தார்!


இங்குள்ள தமிழர்கள் ஒன்றாக 


கலந்தார்!!பொங்கு தமிழர்க்கு 


இன்னல் விளைத்தால் சங்காரம் 


நிஜமென்று சங்கே முழங்கு !!


புதுவை நகரின் புரட்சிக்கவிஞர் 


பாரதி தாசனின் சீற்றம் மிகுந்த 


தமிழ்மொழிச் சிறப்புகளை இந்த 


உலகுக்கு எடுத்து விளக்கும் 


அதியற்புத பாடல் வரிகள் நான் 


மேலே குறிப்பிட்டது அன்பர்களே!!   



அப்படிப்பட்ட சிறப்பு பெற்ற தமிழ் 


மொழி பெற்றெடுத்த தவப்புதல்வர் 


பலருள் கவிஞர் கண்ணதாசனும் 


ஒருவர். "  ஹல்லோ மிஸ்டர் 


ஜமீன்தார் "  என்ற பெயரில் அந்தக் 


காலத்தில் வெளிவந்த 


கருப்புவெள்ளை படத்தில் மறைந்த 


நடிகவேள் M.R.ராதா முடிதிருத்தும் 


கலைஞராக அந்தப் படத்தில் நடித்து 


இருப்பார். அந்தக்கடையில் உள்ள 


சூழ்நிலைக்கு ஏற்ப ஒரு முற்றிலும் 


யதார்த்தமான பாடல் தேவை என 


கவிஞரிடம் கேட்டவுடன் அவர் தந்த 


சிந்தனைமுத்துப் பாடல் இதோ:-           


         ஆகா !!சொந்தமும் இல்லே!!                     

         ஒரு     பந்தமும் இல்லே !!                             

         சொன்ன இடத்தில் அமர்ந்து           

         

          கொள்கிறார் !! நாங்கள்                   


           மன்னரும் இல்லே !!                           

           மந்திரி இல்லே !!  வணக்கம்         


          போட்டுதலையை சாய்க்கிறார்!!


                                (சொந்தமும் இல்லே) 


வளர்ந்துவிட்டால் மனிதரெல்லாம் 


குரங்குகளாவார்!! மனிதன்                   


குரங்குகளாவார் !! நாங்கள்               


வழித்துவிட்டால் மறுபடியும்           


மனிதர்களாவார்!! அழகுள்ள 


மனிதர்களாவார்!!                       


மைனருக்கெல்லாம் 


வெட்டிமுடிப்போம்!!   


பக்தருக்கெல்லாம்                                 


மொட்டை அடிப்போம் !!         


தாடையில் மட்டும் தாடியை விட்டு 


மீதியை நீக்குவோம் !!


                               (சொந்தமும் இல்லே)   


இருக்கும்போது தைலம்                       


போட்டு அழகு செய்கிறார் !!                 


தலையை அழகு செய்கிறார்!!           


அது இழந்துவிட்டால்  திரும்பி 


பார்க்க வெறுப்பு கொள்கிறான்!!       


அவனே வெறுப்பு கொள்கிறான் !!     


 உள்ள இடத்தில் உள்ள வரைக்கும் 


இந்த உலகம் உன்னை மதிக்கும் !!   


இடத்தை விட்டு விழுந்து விட்டால் 


ஏறி மிதிக்குமே !!                                                                          

                               (சொந்தமும் இல்லே)  


உலகெங்கிலும் வாழ்ந்துவரும் 


எனது அன்புத் தமிழ் 


உடன்பிறப்புகளே !!கவியரசரின் 


ஆழ்ந்த பொருள்பொதிந்த, சிந்தனை 


மிகுந்த, கவித்துவம் கலந்த,பாடல்


வரிகளின் சுவைதனை கண்டு 


உளமார மகிழ்ந்திருப்பீர்கள் என்று 


கருதுகிறேன்.  அவர் புகழ் 


என்றென்றும் இந்தத் தமிழ் 


உள்ளவரை நின்று நிலைத்து பேசப் 


படும் என்று தெரிவித்து எனது 


இந்தக் கட்டுரையை நான்   நிறைவு 


செய்கிறேன். நன்றி!! வணக்கம் !! 


அன்புடன் !! மதுரை T.R. பாலு.   

No comments:

Post a Comment