Saturday, 10 August 2013

யாருக்கும் (மனைவி உள்பட) நாமாகத் தெரிவிக்கக் கூடாத விஷயங்கள் ஏழு !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 


தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!               


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!


ஆங்கிலவார்த்தைகள்கலப்புஇன்றி!!


தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள் 


நடுவினில் உரையாடிடும் பொழுது!! 




அங்கிங்கு எனாதபடி ஆழி சூழ்ந்த 


இப்பூவுலகம் எங்கிலும்அன்பு,பாசம், 


கருணை,நன்றி,உண்மை,உழைப்பு 


ஆகிய இந்த ஆறுவிதமான 


அரும்பெரும் குணங்களை தங்கள் 


அணிகலன்களாகக்  கொண்டு 


வாழ்ந்து வரும் என் உயிரினும் 


மேலான அன்புத் தமிழ் உடன் 


பிறப்புகளே!! 



அனைவருக்கும் எனது சிரம் தாழ்ந்த 


கரம் குவிந்த வணக்கங்கள் பல.         




பொதுவாக இரகசியம் என்று ஒரு 


வார்த்தை தமிழ் மொழியில் உண்டு. 


அதற்கு என்ன பொருள் என்றால் 


அது  ஒருவர் மட்டுமே அறிந்துள்ள 


வரைதான். ஒன்றிற்கு மேல்பட்ட 


எண்ணிக்கை வந்து விட்டாலோ 


அதன் பெயர் இரகசியம் அல்ல. 


பரஸ்யம் என்று ஆன்றோர்கள் 


சொல்வதும் உண்டு. அந்த 


முதுமொழிக்கு இணங்க நாமும் 


நமதுவாழ்வினில் கீழே குறிப்பிட்ட


விஷயங்களைநாம்ஒருவர்மட்டுமே 


அறிந்திட்டவையாக வைத்து 


காப்பாற்ற வேண்டியது நம்மில் 


ஒவ்வொரு ஆண்மகனும்தங்களது 


தலையாய கடமையாகக் கொண்டு 


இனியாகிலும் வாழ்ந்திட 


வேணுமாய் கேட்டுக் கொள்கிறேன். 


அந்த இரகசியம் காக்கும் ஏழு 


விஷயங்கள் எவை?எவை? இதோ 


விபரங்கள் உமது  கண்களுக்கு !!      


1)   நமது உண்மை வயது.                           


2)   பிடித்தங்கள் போகநமக்குகைக்கு 


     வந்து சேரும் மாத வருமானம்.         


3)   நமக்கு உள்ள மொத்த அசையும்       

     அசையாத சொத்துக்களின் மதிப்பு 


4)    நமக்கு என்று உள்ள மொத்தக்           

       கடன் தொகையின் அளவு.                   


5)    நமக்கு உள்ள நோய்கள் பற்றிய       


       முழு  விபரங்கள்.                                       


6)    அந்த நோய்களைத் தீர்த்திட               


        உதவிடும் மருந்து விபரங்கள்.         


7)    (மனைவியைத் தவிர)இன்ன பிற     

     பெண்களுடன் நமக்கு உள்ள             


     (கள்ள) தொடர்புகள் பற்றிய ஊர்,     

     பேர், பற்றிய விபரங்கள்.(ஏதேனும்       

      இருந்தால்)                     



மேலே குறிப்பிட்ட இந்த ஏழு 


விஷயங்களையும் எந்த ஒரு ஆண் 


மகன், தான் வாழ்ந்திடும் காலம் 


முதல், இந்தப் பூவுலகை விட்டு 


வானுலகம் செல்லும் காலம் வரை 


இரகசியமாக வைத்து உள்ளானோ 


அவனே புத்திமான்.                             



மீண்டும் நாளை அடுத்து வேறு ஒரு 


விஷயம் பற்றிய கலந்துரையாடல் 


ஒன்றினில் உங்கள் அனைவரையும் 


சந்தித்து மகிழ்கிறேன். அதுவரை 


உங்கள் அனைவரிடம் இருந்தும் 


அன்பு வணக்கம் கூறி விடை 


பெறுவது உங்கள் அன்புக்கு உரிய 


மதுரை TR. பாலு. வணக்கம் அன்புத் 


தமிழ் நெஞ்சங்களே !! 


அன்பு மலர்களே !!


நம்பிஇருங்களேன்!! நாளை நமதே !! 


இந்த நாளும் நமதே !! என்றும் 


வெற்றி உங்களுடையது.வந்தனம்.

No comments:

Post a Comment