பேசும் தெய்வங்கள் ஊமையானது எப்போது ?--ஒரு சிறு கதை !!
உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
** " சிறுகதை " **
(இந்தக்கதையில்வரும்
சம்பவங்கள்,
கதாபாத்திரங்கள் அனைத்தும் கதை
ஆசிரியரின்கற்பனையில் உதித்ததே
தவிர, வேறு தனிப்பட்ட யாரையும்
குறிப்பிடுவன அல்ல.)
அந்திகாலம்.ஐப்பசியின்அடைமழை
பூமி எங்கும் கொட்டித் தீர்த்துக்
கொண்டு இருந்தது. திருச்சி மாநகர்
எங்கும் மக்கள் வெள்ளத்துடன்
மழைவெள்ளமும் இணைந்து நகர்
எங்கும் சிறிது நேரத்திற்கு உள்ளாக
இயற்கையே குளிரூட்டப்பட்டுள்ள
அறையில் வாழ்ந்திடும்
உணர்வுகளை நடை பாதையில்
வாழ்ந்திடும் ஏழைக்கும் வாரி
வழங்கிக் கொண்டு இருந்தது. நம்
கதாநாயகனும் மழையில்
நனைந்துகொண்டே தனது குடும்ப
ஜோதிடரை நோக்கி சென்று
கொண்டு இருந்தான். அவனுக்கு
இப்போதுநேரம் சரியில்லை.தொட்ட
தொழில்எதுவுமே விளங்கவில்லை.
கெட்ட நேரம் அதற்கு நம் கதையின்
நாயகனும் தப்பவில்லை. நாயகன்
பெயர் சுப்பு. பொதுவாக ஜோதிடம்
பார்ப்பவர்கள் இரண்டு வகையைச்
சேர்ந்தவர்கள் மட்டுமே. ஒன்று
அடித்தட்டு மக்கள். அடுத்தது மேல்
தட்டு பணக்காரர்கள் என்பது எனது
கருத்து. எப்போது பணக்காரன்
ஆவோம் என்று முதலாமவனும்
நான் ஒன்றும் ஏழை ஆகி விட
மாட்டேனே என்று இரண்டாமவனும்
அவ்வப்போது ஜோதிடர்களை
சந்தித்துக்கொண்டேதான்
இருப்பார்கள். நானும் ஒரு
ஜோதிடன்தான். அதனால் என்
அனுபவம் பேசுகிறது. இப்ப நாம
கதைக்கு வருவோம். நம்ம சுப்பு
தனது கஷ்டம் எப்போ தீரும் என்று
கேட்பதற்காக ஜோதிட சிரோன்மணி
ஸ்ரீ சகாதேவ் குருஜிகிட்ட தனது
பிறந்த ஜாதகத்தை காண்பித்து
கேட்கிறான். அவரும் அந்த
ஜாதகத்தை நல்லா ஆராய்ந்து
பார்த்த பின் சொல்கிறார்:- தம்பி !!
உனக்கு கஜ தோஷம் இருக்கு.
அதனாலே நீ இன்னா செய்றே
நாளையில் இருந்து ஒரு நாற்பத்தி
எட்டு நாளைக்கு அதிகாலை 5
மணிக்கு எழுந்து குளிச்சு உன்ட்ட
இருக்கிறதிலேயே நல்ல வேட்டி
சட்டை போட்டுக்கினு நெத்தி
நிறைய விபூதி பூசிக்கினு திருச்சி
மலைக்கோட்டை பிள்ளையார்
கோவிலாண்டை போயி அவரை
தினமும் 12 சுத்துசுத்திட்டு
வந்தீன்னா
47ஆவது நாள் உனக்கு பிள்ளையார்
நேரடியா காட்சி தந்து பக்தா உன்
பக்தியை யாம் மெச்சினோம்
அப்படின்னு சொல்லிட்டு உன்னோட
கஜ தோஷம் இன்னையோட
நீங்கிபோச்சு அப்படீன்னு
சொல்லிட்டு நாளைக்கு இதே நேரம்
நீ வா அப்படி வந்தீன்னா
நாளையோட நாப்பத்தி எட்டு நாள்
ஒரு மண்டலம்முடிஞ்சுது.அதனாலே
உனக்கு இன்னா வரம் வேணும்னு
கேப்பார். நீ இன்னா சொல்றே
அவராண்ட உன்கு என்னென்ன
வேணுமோ கேட்டுக்க. உன் கஷ்டம்
தீர்ந்து போய்டும்னு சொல்றார்.அப்ப
எல்லாம் ஒரு மண்டலம் விரதம்
இருந்து சாமியைகும்பிட்டா சாமியே
நேரா காட்சிதந்து பக்தர்கிட்டே
நேரடியா பேசிக்கொண்டு இருந்த
காலம். நம்ம சுப்பு வீட்டுக்கு எதிர்
வீட்டுக்காரன்தான் அப்பு. இந்த
இரண்டு பேரும் பரம விரோதிங்க
ஒருத்தன் வாழ்வது ஒருத்தனுக்கு
பிடிக்காது. சுப்பு காலையில் 5
மணிக்கு எந்திரிச்சு குளிச்சுட்டு
விபூதி பூசி வெள்ளை வேட்டி சட்டை
போட்டு வெளியில் வருவதை
பார்த்த அப்பு, இன்னாடா இது ஒரே
அதிசயமா கீது. என்னைக்கும் 1௦
மணிக்கு மேலே எந்திரிக்கிற சுப்பு
நாயி, இன்னைக்கு 5 மணிக்கே
எழுந்துகுளிச்சுபோறான்அப்படீன்னு
சொன்னா இதுலே ஏதோ விஷயம்
கீது அப்படின்னுட்டு இவனும்
குளிச்சு
விபூதி பூசிகிட்டு வெள்ளை வேட்டி
சட்டை போட்டுக்கிட்டு சுப்புக்கு
தெரியாம மலைகோட்டை
பிள்ளையாரை தினசரி 12 தரம் சுத்தி
வர்ரான். 47 ஆவது நாள் வந்தது. சுப்பு
பிள்ளையார்கிட்டே நின்னு ரொம்ப
பய பக்தியோட சாமி நேர காட்சி தா
சாமி என் கஷ்டம் எல்லாம் தீத்து
வைக்கோணும் என மனமுறுக
வேண்டியவுடன் அவரும் காட்சி
தந்தார். புன்சிரிப்புடன் பக்தா நின்
பக்தியை யாம் மெச்சினோம்.
இன்றோடு உனது கஜ தோஷம்
நீங்கியது. நாளை நாற்பத்தி
எட்டாவது நாள். உனக்கு என்ன
வேண்டும் என்று யோசித்து வந்து
என்னிடம் கேள் தருகிறேன் என்று
சொல்ல மிக்க மன மகிழ்வோடுசுப்பு
திரும்புகிற போது பிள்ளையார்
அவனை மீண்டும் அழைக்கிறார்.
சுப்பு நீ ஜோதிடரிடம் சென்று,உனது
ஜாதகத்தைக் காட்டி என்ன பரிகாரம்
செய்தால் என்ன பலன் கிடைக்கும்
என்று ஆராய்ந்து வந்து என்னை
சுற்றினாய். ஆனால் உன் பரம
விரோதி அப்புவோ எதுவுமே
அறியாமல் என்னை இந்த ஒரு
மண்டல காலம் வலம்
வந்தான்.அவனது பக்தி
உன்னைவிட
இரட்டிப்பானது. எனவே நீ என்ன
கேட்டாலும் அதைப்போல
அவனுக்கு இரண்டு பங்கு நான் படி
அளப்பேன். உதாரணமாக நீ 1௦
இலட்சம் ரூபாய் கேட்டால் உனக்கு
தருவேன் ஆனால் அப்புவுக்கு 2௦
இலட்சம் கொடுப்பேன். நீ 5 அடுக்கு
மாடி வீடுகள் கேட்டால் உனக்கு நீ
கேட்டதை தந்துவிட்டு அவனுக்கு
அப்புவுக்கு அதைப்போல இரு
மடங்கு தர இருக்கிறேன். நன்கு
யோசித்து உன் எதிர்கால வாழ்க்கை
வளம்பெற என்ன என்ன
தேவையோ
அவை அனைத்தையும் நாளை
வந்து
என்னிடம் கேட்டு பெற்றுக்கொள்.
ஆனால் நீ கேட்பதைப்போல
அப்புவுக்கு இரண்டு மடங்கு. நீ
சென்று வா மகனே என்றார்
பிள்ளையார். இவனுக்கு ஒரேகடுப்பு.
என்னாடா இது அநியாயம்.நமக்கு
ஒரு பங்கு ஆனால் நம்ம
விரோதிக்கு இரண்டு மடங்கா?
என்ற
ஆத்திரத்துடன் இரவு தூங்கச்
செல்கிறான். முழுஇரவும்
யோசித்துக்கொண்டே இருக்கிறான்.
பொழுது விடிகிறது.வழக்கம்போல
அதிகாலை 5மணிக்கு நீராடி விபூதி
பூசி வெள்ளையும் சொள்ளையுமாக
12 முறை விநாயகப் பெருமானை
வலம் வந்து நிற்கிறான் நம்ம
கம்பெனியின் கதாநாயகன் சுப்பு.
விநாயகரும் காட்சிதந்து பேசுகிறார்
அவனிடம். என்ன பக்தா யோசித்து
வந்தாயா உனக்கு என்னென்ன
தேவை என்று என வினவுகிறார்
விநாயகர். உடனே சுப்பு அவரிடம்:-
சாமி. நீங்க பேச்சு மாற
மாட்டீங்கள்ள. எனக்கு என்ன
கொடுக்கிறீங்களோ, எனக்கு என்ன
செய்ரீங்களோ அது போல எனது
பரம விரோதிக்கு அப்புவுக்கு
இரண்டு பங்கு அப்படித்தானே என
கேட்கிறான் பிள்ளையார்கிட்டே.
உடனே பிள்ளையார் நிச்சயம் நான்
பேச்சு மாறவே மாட்டேன். உனக்கு
ஒரு பங்கு அப்புவுக்கு ரெண்டு
பங்கு.இப்படி சாமி சொன்னவுடன்
சுப்பு கேட்டான் பாருங்க ஒரு
தேவையை. அட அட அட நான்
என்னத்தைச் சொல்ல . அவனின்
தேவையை கேட்டு அப்ப வாயை
மூடின பிள்ளையார்தான்,
இன்னைக்கு வரைக்கும் மூடின
கண்ணும் பொத்தின
வாயுமாத்தானே இருக்கார்.
என்னங்க ஒரே சஸ்பென்ஸ்.
சட்டுன்னு சொல்லுங்க சுப்பு அப்படி
பிள்ளையார்ட்ட என்னதான்
கேட்டான் அப்படீங்கிறதை .
அதுல ஏன் அவர்
வாயை அடைச்சுப் போனாருன்னு
நாங்க தெரிஞ்சுக்கலாமா. சுப்பு
பிள்ளையார்கிட்டே அப்படி ஒன்னும்
பெருசா கேக்கலைங்க அவன் என்ன
கேட்டான் அப்படீங்கிறதை நான்
நீங்க எல்லாரும் படிக்கணும்
அதனாலே கீழே தந்து இருக்கேன்.
படிச்சுட்டு சாமியை கும்பிட்டு
தூங்கப் போறீயளா!!
சுப்பு கேட்ட தேவை இதுதான் :-
பிள்ளையாரே !! என்னோட ஒரு
கண்ணை குருடாக மாத்திடு !!
( இது எப்படி இருக்கு )
(16 வயதினிலே ரஜினி டயலாக்)
நன்றி !! வணக்கம் !!
அன்புடன்.மதுரை TR. பாலு.
No comments:
Post a Comment