Sunday, 25 August 2013

மகாபாரத யுத்தத்தில் பாண்டவர்கள் பெற்ற வெற்றி நேர்மையானதா ? சூழ்ச்சியால் பெற்றதா ?




உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!


இதை  உரக்கச்  சொல்வோம் 



உலகுக்கு !! 



இனம் ஒன்றாக, மொழி வென்றாக, 



புது வேலை எடுப்போம்  விடிவுக்கு !!                            



நம் வெற்றிப் பாதையில் நரிகள் 



வந்தால் விருந்து வைப்போம்               



விண்ணுக்கு !!                                                 



உலகத் தமிழர்கள் அனைவருக்கும் 



சிரம் தாழ்ந்த, கரம் குவிந்த 



வணக்கம்.



இன்றைய தினம் எனது 



வலைதளமாம்"எண்ணச்சிறகுகள்" 



பதிவினில் நான் எனதுஎண்ணத்தை 



புராண திசைநோக்கி சிறகுகளின் 



துணையுடன் பறக்க நினைத்தேன். 



அதன் சிகரத்தை தொட்டேன். அந்த 



அனுபவ நினைவுகளை உங்களுடன் 



பகிர்ந்து கொள்ள விழைகிறேன் என் 



அன்புத் தமிழ் உடன் பிறப்புகளே !!   



பொதுவாக நாங்கள் ஈரோட்டு 



பகுத்தறிவுச் சிங்கம்/பகுத்தறிவுப்   



பகலவன் தந்தை பெரியாரின் 



வழியில், ஆறாவது அறிவான 



பகுத்தறிவின் துணையோடு 



வாழ்ந்து வரும் திராவிட 



பாரம்பரியத்தில் ஊறிவளர்ந்த தமிழ் 



குடிமகன்கள்.   புராணங்களை 



புளுகுகளின் சிகரங்கள் என்று 



நாட்டிற்கு எடுத்துக் கூறி மக்களை 



மக்களாக வாழ்ந்திடுங்கள். புராண 



இதிகாச புளுகு மூட்டைகளை 



உண்மை என நம்பி ஏமாந்து 



மூடர்களாக, மாக்களாக வாழ்ந்திட 



கூடாது, மானிடனை மானிடன் 



மதித்திடல் வேண்டும், பிறப்பால் 



உயர்குலம், கீழ்குலம் என்கின்ற 



பேதங்கள் ஒழிக்கப்பட்டாக 



வேண்டும் மனிதர்கள் அனைவரும் 



ஒரே இனம் என்று சொல்வதோடு 



மட்டும் நின்று விடாமல் செயலிலும் 



காட்டிவரும் தூய்மையான தமிழன் 



என்று சொல்வதில் இறுமாப்பு 



அடைந்திடும் மனிதன்தான் இந்த 



கட்டுரைதனை உங்களுக்கு 



காணிக்கையாகவடிவமைத்து தரும் 



சிந்தனை செயல் வீரன்தான் இந்த 



 மதுரை T.R.பாலு எனது அன்புத் 



தமிழ் உடன் பிறப்புகளே !!                     



அப்படிப்பட்ட புராண புளுகுகளில் 



ஒன்றான " மகாபாரதத்தில் " இரு 



வேறு பங்காளிகளுக்கு இடையில் 



நடைபெற்றதாகச் சொல்லப்படும் 



சண்டைகளும் சச்சரவுகளும் 



நிறைந்த ஒன்று தான் மகாபாரதம் 



என்ற புராணம் என்பது நாம் 



யாவரும் அறிந்திட்ட ஒன்று தான். 



இருந்தாலும் அந்த புராணத்தில் 



பங்களிகட்கு இடையில் இறுதியாக 



நடைபெறும் யுத்தத்தில் ஸ்ரீ கண்ண 



பிரான் பாண்டவர்கள் பக்கம் 



நின்றதால் மட்டுமே அவர்களால் 



கௌரவர்களை வெற்றிகாண 



முடிந்தது என்பது உலகு அறிந்த 



உண்மை, இது ஒரு கதைதான். அந்த 



யுத்தத்தில் கௌரவர்களுக்கு 



கிடைத்த ஒரு மாபெரும் பக்க பலம் 



ஒரு சக்தி மிகுந்த ஆயுதம் நம் 



நடைமுறையில் சொல்வது 



என்றால் வலிமை மிக்க துருப்புச் 



சீட்டு என்று கருதப் படுபவன் பஞ்ச 



பாண்டவர்களின் தாயார் குந்தி 



தேவியார் தனக்கு குரு ஒருவர் 



கற்றுத் தந்த குழந்தைப்பேறு பெரும் 



மந்திரத்தினை சூரிய பகவானை 



நோக்கி உச்சரித்ததால் உதித்த 



(உண்மையை சொன்னால் கள்ளக் 



காதலுக்குப் பிறந்த) மாவீரன்தான் 



கர்ணன் என்பவன். விதிவசத்தால் 



தான் பெற்ற குழந்தை கர்ணனை 



ஊரார்  ஏச்சுக்கும் பேச்சுக்கும்பயந்து 



ஆற்றுத் தண்ணீரில் அலைக்கழிக்க 



விட்டவளே  பஞ்ச பாண்டவர்களின் 



தாயார் குந்தி தேவியார். 




சரி ! நாம் இப்போது கட்டுரையின் 



தலைப்பிற்கு வருவோம்.               



மகாபாரத யுத்தத்தில் பாண்டவர்கள் 



பெற்ற வெற்றி நேர்மையானதா ? 



அல்லது சூழ்ச்சியால் பெற்றதா ? 



இதுதான் நான் முன் வைக்கும் 



கேள்வி.  இந்தக் கேள்விக்கு நான் 



பதில் சொல்வதற்கு முன் ஒரு 



விஷயத்தினை உங்களுக்கு 



தெளிவாக்க விரும்புகிறேன் அன்புத் 



தமிழ் நெஞ்சங்களே !!               



பொதுவாக  உடல்கூறு தத்துவ 



ரீதியாக ஒரு பெண் பெறுகின்ற 



முதன் முதல் குழந்தை அவளின் 



மொத்த இளமையின் முத்திரை 



படைப்பு அதற்கு உள்ள பலம், சக்தி , 



இவைகள் அவள் ஈன்றெடுக்கும் 



அடுத்தடுத்த குழந்தைகளிடம் 



இருக்கும் வாய்ப்பு மிகவும் 



குறைச்சல் தான் அன்புத் தமிழ் 



நெஞ்சங்களே. அந்த வகையில் 



குந்தி தேவியார் கள்ளத்    தனமாக 



ஈன்றெடுத்த கர்ணன் (இந்த சம்பவத்-



திலிருந்து நாம் அறிந்துகொள்ள 



வேண்டிய முக்கியமான விஷயம் 



என்னவென்றால் திருட்டுத்தனமாக 



பிள்ளைகள் பெறுவது என்பது 



கலிகாலத்தில் ஒன்றும் புதிதாக 



வந்தது அல்ல அது மகாபாரத காலம் 



தொட்டு நடைமுறையில் உள்ள 



ஒன்றுதான் என்று நம்மை நாமே 



சமாதானப் படுத்திக்கொள்ள 



வேண்டிய ஒன்று என்பதனை இந்த 



இடத்தில் நான் பதிவு செய்திடக் 



கடமைப் பட்டுள்ளேன்) குந்தி தேவி 



அதற்கு அடுத்து பெற்ற ஏனைய 5 



புதல்வர்களை காட்டிலும் மிகசக்தி 



வாய்ந்த,பலம் மிக்கவன் கர்ணன் 



என்பதில் யாருக்கும் இருவேறு 



கருத்துக்கள் இருக்க இடம் இல்லை. 



ஆக அப்படிப்பட்ட கர்ணன் 



விதிவசத்தால்கௌரவகுலத்திலகம் 


துரியோதனன் வசம் சென்று 



விட்டான். இவன் உயிரோடு 



இருக்கும் வரை கௌரவர்களை 



யுத்தத்தில் நேர்மையான முறையில் 



போர் புரிந்து வெல்ல முடியாது 



என்பதனை அறிந்திட்ட ஸ்ரீ கண்ண 



பிரான் வடிவமைத்த சூழ்ச்சிவலை 



தனில் கர்ணனை சிக்க வைத்து 



அவனை கொன்றால் ஒழிய பஞ்ச 



பாண்டவர்கள் வெற்றிக் கனியை 



பெற்றிடவே முடியாது என்பதை 



அறிந்த ஒரே கள்வன் கண்ணன் 



ஒருவனே.  அதனால்தான் கண்ணன் 



கர்ணனை அழித்திட கீழே 



குறிப்பிட்ட எட்டு நபர்களை அனுப்பி 



கர்ணனது மரணத்திற்கு அடித்தளம் 



அமைக்கின்றான் அன்பர்களே !! 



அதனை வரிசைக்கிரமமாக உங்கள் 



அனைவரின் சிந்தனைக்கும் 



செழுமைநிறைந்தஅறிவைசீர்தூக்கி 



ஆராய்ந்திடும் திறனுக்கும் 



காணிக்கை செய்கிறேன்.                       



 1)  கர்ணன் பிறக்கும்போது 



அவனோடு கூடவே பிறந்த 



கவச,குண்டலங்களை இந்திரனை 



விட்டு ஏழை பிராமணன் 



வேடந்தரித்து வந்து அபகரிக்கச் 



செய்தவன் கண்ணன். ஏன் என்றால் 



இந்த கவச,குண்டலங்கள் 



கர்ணனோடு இருக்கும்வரை 



அவனை யாரும் கொல்ல முடியாது.




2)  வில்வித்தைக்கு அதிபதியான 



பரசுராமரிடம் தான் ஒரு பிராமணன் 



என்று பொய் உரைத்து கர்ணனை 



பிரம்மாஸ்திரம் கற்கவைத்து அவன் 



ஒரு பிராமணன் அல்ல என்பதனை 



பரசுராமர் அறிந்திடச் செய்வதற்கு 



கண்ணபிரான் வண்டு உருவில் 



வந்து கர்ணனின் தொடைக்குள் 



புகுந்து வெளியே வந்ததால் வந்த 



இரத்தம் பார்த்து விழித்திட்ட 



பரசுராமர் நீ ஒரு பிராமணன் அல்ல 



எனவே என்னிடம் கற்ற 



அஸ்திரமான பிரம்மாஸ்திரம் 



உனக்கு மறந்து போகக் கடவாயாக 



என பரசுராமரை சொல்லிடச் 



செய்தவனும் சூழ்ச்சியில் 



மன்னனான கண்ணனே !!                       



 3)  கர்ணனால் தன் மகன் ஒருவனை 



இழந்த ஏழை அந்தணன் ஒருவன் 



தக்க சமயத்தில் உன் தேர் ஓடாது 



நிற்கட்டும் என சாபமிட்டு பழி தீர்க்க 



வைத்ததும் சூழ்ச்சி மன்னன் 



கண்ணனின் லீலைகளுள் ஒன்றே   



 4)  சக்திவாய்ந்த நாகாஸ்திரத்தினை 



ஒருமுறைக்கு  மேல் இரண்டாவது 



முறை பயன்படுத்த கூடாது எனதாய் 



குந்திதேவியை கர்ணனிடம்அனுப்பி 



வரம் பெற்றதும் கண்ணனது சூழ்ச்சி 



என்கின்ற கிரீடத்திற்கு வைரக்கல் 



பத்தித்தது போன்றது.                                 



 5)  யுத்தத்தின்போது கர்ணனுக்கு 



தேரோட்டியாக வந்த சல்லியன், 



நாகாஸ்திரத்தினை அர்ச்சுனனின் 



நெஞ்சுக்கு குறிவை என்று 



எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் 



அந்த யோசனையை புறந்தள்ளிடும் 



அறிவினை கர்ணனுக்கு தந்ததும் 



கண்ணனின் சூழ்ச்சியே.   அதன் 



விளைவாக தேர் ஒரு  குழிக்குள் 



வீழ்ந்துவிட்டதும்  சல்லியன் தேரை 



நடு வழியில் நிறுத்திவிட்டு போகச் 



செய்ததும் கண்ணனின் சூழ்ச்சியின் 



மறு பக்கமே !!                                               



 6)  நாகாஸ்திரத்தை கர்ணன் 



அர்ச்சுனன் தலைக்கு குறி வைக்க 



வைத்து அதை கர்ணன் எய்திடும் 



போது கண்ணன் தனது காலால் 



தேரை பூமி நோக்கி அழுத்தியதால் 



தலைக்கு வந்த அஸ்திரம் 



தலைப்பாகையோடு போக 



வைத்ததும்கண்ணனின்சூழ்ச்சிதான்.



7) 

இறுதியாகயுத்தநெறிமுறைகளுக்கு 



நேர்மாறாக கர்ணன் 



நிராயுதபாணியாக சல்லியன் 



குழிக்குள் விட்டுச் சென்ற தேரினை 



முட்டுகொடுத்து தூக்கிட 



முனைந்திடும் வேளையில் 



அர்ச்சுனனை விட்டு அம்புபாய்ச்சிட 



சொன்னவனும் சூழ்ச்சிகுலமன்னன் 



கண்ணன் தான்.                         



 8)  இறுதியாக போர்களத்தில் 



கர்ணன் குற்றுயிரும் 



குலைஉயிருமாக இருக்கும் அந்த 



பரிதாபமான் சூழ்நிலையிலும் கூட 



கர்ணன் செய்த தர்மங்கள்அவனிடம் 



இருக்கும்வரை கர்ணனைக்கொல்ல 



முடியாது என்பதனை அறிந்த 



கண்ணன் பிராமண வேடந்தரித்து 



யாசகம் கேட்பது போல பாவனை 



செய்து அவனிடம் அவன் (கர்ணன்) 



செய்த தர்மங்கள் அனைத்தையும் 



தானம்   பெற்றதுதான் 



இருப்பதிலேயே தலையான சூழ்ச்சி 



கோட்டையின் எல்லைகோடு 



அன்பர்களே.                                                   



எனவே இறுதியாக இந்தக் 



கட்டுரையின் வாயிலாக நாம் 



அறிந்து கொள்ள வேண்டிய 



உண்மை என்னவென்றால் 



கண்ணனின் சூழ்ச்சி ஒன்றினால் 



மட்டும்தான் மகாபாரத யுத்தத்தில் 



பாண்டவர்கள் மாவீரன் கர்ணனை 



அழித்து   ஒழித்து 



வெற்றிபெற்றார்கள் இந்த எட்டு 



சூழ்ச்சிகள் இல்லையேல் மாவீரன் 



கர்ணனுக்கு மரணம் என்பதே 



கிடையாது. அவன் உயிருடன் 



இருக்கும் வரை பஞ்ச 



பாண்டவர்களால் கௌரவர்களை 



அழித்து  யுத்தத்தில் நேர்மையாக 



வெற்றி பெற்றிருக்கவே முடியாது 



பெற்ற வெற்றி முழுக்க முழுக்க 



சூழ்ச்சியால் மட்டுமே!! சூழ்ச்சியால் 



மட்டுமே !! என பறைசாற்றி உங்கள் 



அனைவரிடமும் இருந்து விடை 



பெறுகிறேன் என் அன்புத் தமிழ் 



உடன் பிறப்புகளே !! 




நன்றி !! வணக்கம் !!                                   



அன்புடன் மதுரை T.R. பாலு.

No comments:

Post a Comment