உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
உலகெங்கிலும் வாழ்ந்து வரும்
எனது அன்புக்கும் பாசத்திற்கும்
உரிய அருமைத் தமிழ்
உடன்பிறப்புகள் அனைவருக்கும்
இனிய காலை வணக்கங்களும்
அதனுடன் கூடிய வாழ்த்துக்களும்
உரித்தாகுக!!
உங்கள் அனைவரின் அன்புக்குஉரிய
அன்பு உடன்பிறப்பு ஆகிய நான் (என
நம்பும்) தமிழ்த் திரைப்பட உலகில்
கால் பதித்திட்ட செய்தியை நான்
ஏற்கனவே உங்கள் அனைவரின்
கவனத்திற்கும் கொண்டு சென்றது
நினைவினில் இருக்கும் என்று
கருதுகிறேன் அன்புத் தமிழ் உடன்
பிறப்புகளே !!
இது வரை நான் நடித்த படங்களின்
பட்டியலை இதோ கீழே உங்கள்
அன்பு கவனத்திற்கு அளிக்கிறேன்.
1) "மாங்கா". (திரு.கங்கை அமரன்
அவர்களின் அன்புப் புதல்வர்களுள்
ஒருவரான) திரு பிரேம்ஜி இந்தப்
படத்தின் கதா நாயகன். இதில் நான்
ஒரு கதா பாத்திரத்தில் வசனம் பேசி
நடித்துள்ளேன்.(அநேகமாகதீபாவளி
அன்று இந்தத் திரைப்படம் வெளி
வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2) " பட்டத்து யானை " இந்தப் படம்
கடந்த மாதம் ஜூலை 26ம் தேதி
திரைஅரங்குகளில் வெளிவந்து
வெற்றிக்கொடிகட்டுகின்றது. இதில்
கடைசி காட்சியில் நடிகர் திரு
சந்தானம் அவர்கள் " ஹோட்டல்
கெளரவம்" என்னும் உணவு விடுதி
ஒன்றினைத் திறந்து வைத்திடும்
காட்சியில் நடிகர் திரு.விஷால்
அவர்களின் பின்னால்,பக்கத்தில்
நிற்கும் காட்சியில் எனது
தலைகாட்டி நடித்துள்ளேன்.
3) " யா !! யா !! " இந்த வண்ணப்
படத்தில் ஒரு திருமண வரவேற்பு
காட்சியில் பார்வையாளர்களுள்
ஒருவனாக தலையை காட்டி
உள்ளேன். இந்தப் படத்தில் திரு.
சிவா அவர்களும் திரு. சந்தானம்
அவர்களும் இணைந்து நடிக்கும்
பாடல் காட்சி ஒன்றினில் தான் நான்
தோன்றும் காட்சி இடம்
பெறுகின்றது.
4) " கப்பல் " இந்தப் படத்தில் சின்ன
வயது கதாநாயகிக்கு(17) " தாத்தா "
வேடத்தில் நடித்து அவளுக்கு
T.V.S.5௦ இரு சக்கர வாகனம் ஓட்ட
கற்றுகொடுக்கும் பாத்திரத்தில்
நடித்து உள்ளேன். படத்தின்
கதாநாயகனாக திரு. வைபவ்
அவர்கள் நடித்து உள்ளார்கள்.
5) " ஜில்லா "இந்தப்படத்தில்
முஹூர்த்தக்கால் நடும் நிகழ்வு
ஒன்றினில் பார்வையாளர்களுள்
ஒருவனாக, திரு மோகன்லால்,
திருமதி பூர்ணிமா (திரு பாக்யராஜ்
அவர்களின் துணைவியார்) மற்றும்
இளம் கதாநாயகனும்கதாநாயகியும்
(பெயர் தெரியவில்லை) நடித்து
உள்ள இந்த படத்தில் தலை காட்டி
உள்ளேன். கதா நாயகன் திரு விஜய்
அவர்கள்.
6) " ஐ " நடிகர் திரு விக்ரம் நடிக்க
திரு ஷங்கர் அவர்களின்
இயக்கத்தில் திரு P.C. ஸ்ரீராம்
அவர்களின் ஒளிப்பதிவு ஆகிய
இவ்வளவு சிறப்பு பெற்ற இந்தப்
படத்தில் திருமண நிகழ்ச்சி
ஒன்றினில் கலந்து கொண்டு உள்ள
பார்வையாளர்களுள் ஒருவனாக
தலை காட்டி நடித்து உள்ளேன்.
7) " வாலு " இளம் புயல் நடிகர் திரு
T.இராஜேந்தர் அவர்கள் பெற்று
எடுத்த முத்து, நடிகர் திருசிம்பு
அவர்கள் நாயகனாகவும் செல்வி
ஹன்சிகா அவர்கள் கதாநாயகியாக
நடிக்க சிரிப்பு நடிகர் திரு சந்தானம்
அவர்களும் இணைந்து நடிக்க
இந்தப் படத்தில் கோவிலின் உள்ளே
பூ விற்கும் வியாபாரியாக நடித்து
உள்ளேன்.
8) " பிரம்மன் " எங்கள் ஊர் மதுரை
மண்ணின் மைந்தன் திரு சசிகுமார்
அவர்கள் நடித்திடும் இந்தப் படத்தில்
"லக்ஷ்மி சினிமாஸ்" என்ற சினிமா
தயாரிப்பு நிறுவனத்தில் வாய்ப்பு
கேட்டு வரும் 6 நபர்களுள் நானும்
ஒருவனாக நடித்து உள்ளேன். இந்த
திரைப்படத்தினை திரு சாக்ரடீஸ்
அவர்கள் இயக்குகிறார்.
இந்த விபரங்களை அனைத்தையும்
உங்களுக்கு வழங்குவதில் பெரும்
மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த
சினிமாத்துறையில் நான் மேலும்
மேலும் பல வாய்ப்புகள் பெற்று
உயர்ந்த குணச்சித்திர நடிகனாக
வளர்ந்திட நீங்கள் அனைவரும்
எனக்காக " எல்லாம் வல்ல
இறைவனிடம் " வேண்டி விரும்பி
கேட்டுக் கொள்ள வேணும்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment