Monday, 5 August 2013

தேடல் முடிந்த பின்பு, சரிதான் போடா என்பதே கலியுகத்தின் சிறப்பு !!





உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!!



உலகெங்கிலும் வாழ்ந்துவரும் 


எனது அன்புத் தமிழ்உடன் 


பிறப்புகளே  !!  


வணக்கம்.  தமிழ் பேசும் சகோதர,


சகோதரிகள் நடுவினில் 


உரையாடிடும் பொழுது தூய,


தனித் தமிழில்மட்டுமே பேசிடுங்கள். 


ஆங்கில மொழிகலப்பு ஏதும் இன்றி. 


தமிழன் என்று ஒரு இனம் உண்டு.


தனியே அதற்கு ஒரு குணம் உண்டு 


என்ற முதுமொழிக்குஏற்ப நாம் 


அனைவரும்வாழ்ந்திடல்வேண்டும். 


நிற்க!


இன்றையதினம் அவசரகதியில் 


சுழன்றுவரும் பூமிதனில் நாம்


அனைவருமே வாழ்கின்ற 


வாழ்க்கை என்பது தேடல் எப்போது,


எங்கே முடியும்,சீக்கிரமாக அதனை 


அடைந்திட வேண்டும் என்ற 


வெறியுடன் தான் வாழ்ந்து 


வருகிறோம். அப்படி ஒரு  

வேகத்தோடுவாழ்ந்திடும்போது


எதையும் பழசை நினைத்து பார்த்து 


நினைவினில் கொள்வதோ அல்லது 


நடந்த நிகழ்வுகளுக்கு 


காரணமாக இருந்தவர்களுக்கு 


நன்றி சொல்வது என்பதோ 


நடைமுறையில் சாத்தியம் 


இல்லாத ஒன்றுதான் 


என்பதை மன வேதனையோடு 


இங்கே நான் அழுத்தமாக


குறிப்பிட்டே ஆக வேண்டி உள்ளது 


அன்பர்களே.  இதுபோன்ற குணம் 


மனித இனத்திற்கு என்றுமே 


உரித்தானது மட்டும் அல்ல நன்றி 


மறக்கும் குணம் என்பது மனித 


இனத்தில் வெகு சிலரிடம் மட்டுமே 


இருக்கக்கூடிய ஒன்று என சங்க 


கால இலக்கியங்கள் நமக்கு 


உணர்த்திடும் வண்ணம் உள்ள ஒரு 


பாடல் ஒன்றினை நான் உங்களின் 


பார்வைக்கு விருந்துபடைக்கிறேன்.   



"பிள்ளைதான் வயதில் மூத்தால்


பிதாவின் சொற்புத்தி கேளான்!!           


கள்வனில் குழலால் மூத்தால்     


கணவனைக் கருதிப்பாராள்!!         


தெள்ளற வித்தை கற்றால்     


சீடனும் குருவைத் தேடான் !!     


உற்றதோர் பிணிகள் தீர்ந்தால் 


உலகோர் பண்டிதரைத்தேடார் !!         




விளக்கம் :-  ஆண் பிள்ளையை 


சீராட்டிபாராட்டி வளர்க்கும்வரையே 


அவன் தந்தையின் சொல்பேச்சு 

கேட்டு வளர்ந்திடுவான். அவனே 

வயதுக்குவந்து சுயமாக தானே 


சம்பாதிக்கும் நிலைதனை அடைந்து 


விட்டானேயானால் அப்பாவின் 


பேச்சை கேட்க மாட்டான் (நன்றி 


மறத்தல் செயல் எண்.1)                           


கணவனைவிட மனைவியாக 


வருபவள் மூத்தவளாக (இங்கே 


மூப்பு என குறிப்பிடப்படுவது வயது 


என்ற ஒரு அம்சம் மட்டும் அல்ல 


அன்பர்களே.அழகு,அந்தஸ்து,அறிவு,


செல்வம்,செல்வாக்கு,குடும்பப் 


பாரம்பரியம் இவைகளையும் 


சேர்த்து கணக்கிடல் என்பது மிகமிக 


அவசியம் அன்பர்களே) இருந்து 


விட்டாலோ அமைந்துவிட்டாலோ 


அப்படிப்பட்ட மனைவி கணவனை 


கருத்தில் கொள்ளவே மாட்டாள். 


(கணவனை, "அது கிடக்குது " என்று 


சொன்னாலும் சொல்வாள்) (இது 


இல்லறதர்மம்என்றசொல்பதத்திற்கு 


ஊருவிளைவித்திடும் நன்றி மறந்த 


செயல் எண்:-2)         



குருநாதர் என்று சொல்லப்படும் 


ஆசான் என்பவர் தாம் கற்ற 


அனைத்து வித்தைகளையும் மந்திர 


தந்திரங்களையும் தனது சீடனுக்கு 


கற்றுத் தந்துவிடுவாரேயானால் 


அதுவே போதுமானது.அதன்பின்னர் 


சீடன் எதற்காக தனக்கு கல்வி 


கற்றுத்தந்த குருவைத் தேடிடப் 


போகிகிறான் (நன்றி கெட்ட செயல் 


எண் 3.)                                                             


நடு இரவு நேரம். வயிற்றுவலியால் 


துடிப்பான்.துவளுவான்/நெளிவான் 


நொந்துபோவான். மருத்துவரிடம் 


சென்று அந்த நடுநிசி நேரம் 


காண்பித்து அவர்தந்த நல்ல மருந்து 


மாத்திரைகளினால் மறுநாள் வலி 


நீங்கி சுகம் அடைந்திடுவான். 


ஆனால் மருத்துவர்,வயிற்று  வலி 


நீங்கினாலும் மறுநாள் மாலை ஒரு 


பரிசோதனைக்கு வரவேண்டும் என 


சொல்லி இருப்பார். அப்போது 


மனைவி கேட்பாள் ஏங்க வலி 


நீங்கினாலும் மருத்துவர் வரச் 


சொன்னாரே என்று சொல்வாள். 


உடனே வலி நீங்கி நிவாரணம் 


அடைந்த கணவனோ என்ன 


சொல்வான் தெரியுமா அன்பர்களே. 


அடப்போடி அறிவு கெட்டவளே. 


யார்ட்ட இருக்கு துட்டு? அவருக்கு 


எடுத்து பளிச்னு நீட்ட. விடு விடு 


எல்லாம் வயிற்று வலிதான்சரியாய் 


போச்சுல்ல இன்னும் சாயந்திரம் 


டாக்டர்ட்டே போயி காண்பிக்க 


வேணும்னா அதுக்கு நூறு ரூபாய் 


ஆகிவிடும்.ஏண்டி! உங்கப்பன் 


கிட்டேயா காசு கொட்டிக்கிடக்குது. 


(இது நன்றி கெட்டசெயல் எண்:-4) 


 ஆக நான் கட்டுரையின் 


தலைப்பினில் குறிப்பிட்டு 


உள்ளதைப்போல இன்று மனித 


எண்ணங்கள் இந்தக் கலிகாலத்தில் 


தேடல்முடிந்தபின்பு சரிதான் போடா 


என்றுதான் வாழ்ந்துகொண்டும் 


வளர்ந்து கொண்டும் உள்ளது 


அன்பர்களே. நாம் எல்லோரும் 


அவர்களைப்போல இல்லாமல் 


நன்றி மறவாத நல்ல மனிதர்களாக 


வாழ்ந்திடுவோம் அன்பர்களே !! 


மீண்டும் அடுத்த புதிய எண்ணச் 


சிறகுகள் தொகுப்பினில் உங்கள் 


அனைவரையும் சந்திக்கிறேன். 


நன்றி !! வணக்கம் !!                               


அன்புடன் !!                                                     


மதுரை TR. பாலு.

No comments:

Post a Comment