Saturday, 17 August 2013

வாலிபக் கவிஞர் வாலியின் திரைப்பாடல்களில் என் மனதைத்தொட்டது பல பாடல்கள் !! அதில் சில உங்கள் பார்வைக்கு !!






உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!!


தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!             


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!! 


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!   


தமிழ்பேசிடும்சகோதர,சகோதரிகள் 


நடுவினில் உரையாடிடும் பொழுது!! 



உலகெங்கிலும் வாழ்ந்து வரும் என் 


உயிரினும் மேலாக நான் போற்றி 


வணங்கி வரும் எனது அன்புத் தமிழ் 


உடன் பிறப்புகளே!! அனைவருக்கும் 


என் இனிய காலை வணக்கம்.           


கடந்த மாதம் 18-07-2013 வியாழன் 


அன்று பூவுலகை விட்டு 


விண்ணுலகம் அடைந்த வாலிபக் 


கவிஞர் வாலி எழுதிய ஆயிரம் 


ஆயிரமாயிரம் பாடல்களில் என் 


மனதைத் தொட்டது  பல பாடல்கள். 


அவற்றுள் சில பாடல்களை நான்  


உங்களது கவனத்திற்கு கொண்டு 


வருவதில்  மிகவும் மகிழ்ச்சி 


அடைகிறேன் என் அன்புத் தமிழ் 


உடன் பிறப்புகளே !!                               


பாடல் இடம் பெற்ற 


படம்:படகோட்டி. 


பாடியவர்:- மறைந்த மதுரை 


மண்ணின்  மைந்தர் T.M.சவுந்திர 

ராஜன்.                                                             


பாடல் இதோ :-                                               


உலகத்தின் தூக்கம் கலையாதோ !! 


உள்ளத்தின்ஏக்கம் தொலையாதோ!!


உழைப்பவர் வாழ்க்கை மலராதோ!! 


ஒருநாள்  பொழுதும் புலராதோ!!         



தரைமேல் பிறக்க வைத்தான் !!


எங்களை தண்ணீரில் பிழைக்க 


வைத்தான் !!                                                     


கரைமேல் இருக்க வைத்தான் !!       


பெண்களை கண்ணீரில் குளிக்க 


வைத்தான் !!   தரை மேல் பிறக்க   


வைத்தான் !!                                               



கட்டிய மனைவி தொட்டில் பிள்ளை 


உறவைக் கொடுத்தவர் அங்கே !!         


அலைகடல் மேலே அலையாய் 


அலைந்து  உயிரைக்  கொடுப்பவர் 


இங்கே! 


வெள்ளி நிலாவே விளக்காய்எரியும் 


கடல்தான் எங்கள் வீடு !!                       


முடிந்தால் முடியும் !! தொடர்ந்தால் 


தொடரும் !! இதுதான் எங்கள் 


வாழ்க்கை !!

                                                (தரை மேல்)                                   

கடல் நீர் நடுவே  பயணம் போனால் 


குடிநீர் தருபவர் யாரோ ?                       


தனியாய் வந்தோர்துணிவைத்தவிர 


துணையாய் வருபவர் யாரோ !!   


ஒரு நாள் போவார் !! 


ஒருநாள் வருவார் !!   


ஒவ்வொரு நாளும் துயரம் !!                    

ஒரு சாண் வயிறை வளர்ப்பவர் 


உயிரை ஊரார் நினைப்பது சுலபம்!!...   


ஊரார் நினைப்பது சுலபம்.                       


(பாடலில் இந்த வரிகளில் தனது   


மனதைப் பறிகொடுத்த கவியரசர் 


கண்ணதாசன், வாலிபக் கவிஞர் 


வாலி அவர்களின் வீட்டிற்கே நேரில் 


சென்று அவரை மனமார 


பாராட்டியதுடன் தனது கழுத்தில் 


அணிந்து இருந்த 5 பவுன் தங்க 


சங்கிலியை வாலி அவர்களின்   


கழுத்தில் அணிவித்து அழகு 


பார்த்தவர் கவியரசர். கற்றாரை 


கற்றாரே காமுறுவர் என்ற தமிழ் 


சொற்களுக்கு இலக்கணமாய்நடந்த 


அந்த கவியரசரின் செயல் இன்று 


நினைத்தாலும் எனது கண்கள் 


பனித்திரை இடுகிறது எனது அன்புத் 


தமிழ் உடன் பிறப்புகளே !!      



ஒரு படகோட்டியின் வாழ்க்கை 


வழிமுறைகளை கண்ணீரில் 


எழுதிட இனி ஒரு கவிஞன் 


பிறந்துதான் வர வேண்டும்.தத்துவப் 


பாடல்களுக்கு இது ஒரு உரைகல் 


என்றால் 



காமரசப்பாடல்கள் புனைவதிலும் 


வல்லவர்.அவரைமிஞ்சிடயாராலும் 


இயலாது.                                                             

பாடல் இடம் 


பெற்ற படம்:-எதிர் நீச்சல். (1968)                        

பாடியவர்கள்: T.M.S.& P.சுசீலா.             


தாமரைக் கன்னங்கள் !!                           


தேன்மலர்க்கிண்ணங்கள் !!                 


எத்தனை வண்ணங்கள் !!                     


முத்தமாய் சிந்தும்போது !!                     


பொங்கிடும் எண்ணங்கள் !!         

                                                     (தாமரை)               


மாலையில் சந்தித்தேன் !!                     


மையலில் சிந்தித்தேன் !!                         


 மங்கை நான் கன்னித்தேன் !!             


 காதலன் தீண்டும்போது !!                       


கைகளை மன்னித்தேன் !!                   


கைகளை மன்னித்தேன் !!

                                                                                                                                   (மாலையில்)                         

                                                          கொத்துமலர்குழல் பாதம்               


அளந்திடும் சித்திரமோ  !!                         


முத்துநகை தரும் மெல்லிய             


செவ்விதழ் ரத்தினமோ  !!                   


துயில் கொண்ட வேளையிலே           


குளிர் கொண்ட மேனியிலே !!               


துணை வந்து சேரும் போது                 


சொல்லவோ இன்பங்கள் !!                    


                                           (மாலையில்)     


ஆலிலை மேலொரு கண்ணனைப்


போலிவன் வந்தவனோ ?           


நூலிடை மேலொரு நாடகமாடிட   


நின்றவனோ ?                                             


சுமைகொண்ட பூங்கொடியின்           


சுவை கொண்ட தேன்கனியை !!           


உடை கொண்டு மூடும் போதும்       


உறங்குமோ உன்னழகு !!                         

                                           

                                                     (தாமரை )   


இந்தப் பாடலில் சொட்டுவது போல 


ஏராளமான காதல் இரசம் 


சொட்டிடும் பாடல்கள் வாலிபக் 


கவிஞர் வாலி எழுதி உள்ளார். 


அவைகளை நமது அடுத்த,அடுத்த  


பதிப்புகளில் நாம் காண்போம். 


அதுவரை உங்கள் அனைவருக்கும் 


அன்பு வணக்கம் கூறி விடை 


பெறுவது உங்கள் அன்புத் தமிழ் 


உடன் பிறப்பு. மதுரை T.R. பாலு.



                                         

No comments:

Post a Comment