Friday, 30 August 2013

பிழையாகிப் போன பழமொழிகள் !! (மறுபதிப்பு)





உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!



இதை உரக்கச் சொல்வோம் 



உலகுக்கு !!                         



இனம் ஒன்றாக, மொழி வென்றாக,



புது வேல் ஒன்று எடுப்போம் 



விடிவுக்கு !!



நம் வெற்றிப்பாதையில் நரிகள் 



வந்தால் விருந்து வைப்போம் 



விண்ணுக்கு !!

 



பழமொழிகளா அல்லது 



பிழைமொழிகளா?


பொதுவாக நாம் நமது பேச்சு 


வழக்கத்தில் பல்வேறு 


பழமொழிகளை பயன்படுத்தி 


பேசுவது இயல்பு. அந்த 


அடிப்படையில் பலவற்றை நாம் 


தவறாகவே பொருள்கொண்டு 


பயன்படுத்தி வருகிறோம் என்பதே 


உண்மை. உதாரணமாக ஒன்று:-   


“ சட்டியில் இருந்தால் தானே 


அகப்பையில் வரும் “

இந்த பழமொழிக்கு நம்மில் 


பெருன்பான்மையான மக்கள் 


கொண்டுள்ள பொருள் யாதெனின் 


நாம் உண்ணும் சாதம் அதன் 


சட்டியில் இருந்தால்தானே அதை 


அள்ளும்அகப்பையில் வரும் 


என்பது.
 

ஆனால் உண்மையான பொருள் 


அதுவன்று. குழந்தைப்பேறு இன்றி 


வாடிடும் தம்பதியர்கள் 


குழந்தைவரம் வேண்டி கந்த 


ஷஷ்டியில்" விரதம் "இருந்தால்" 


அகப்பையில் (கருப்பையில்)வரும்” 


(குழந்தை) என்பதுதான் அந்த 


பழமொழியின் உண்மையான 


கருத்து. இது போல பலவற்றின் 


உண்மை பொருள் விளக்கம் 


அடுத்து அடுத்து உங்கள் கனிவான 


பார்வைக்கு வர உள்ளது.படித்து 


மகிழ்வோம். நன்றி !! வணக்கம்.  


மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment