உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
இதை உரக்கச் சொல்வோம்
உலகுக்கு !!
இனம் ஒன்றாக,மொழி வென்றாக
புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!
நம் வெற்றிப்பாதையில் நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு !!
" சொ ந் த வீ டு " !
அனைவருக்கும் வணக்கம்!
பொதுவாக நம்மில்
பெரும்பாலோனோர்கள் புதுசா
யாரையாச்சும் பார்த்தா கேட்கிற
முதல்கேள்வி என்னான்னு கேட் -
டீங்கனா “ ஆமா
உங்களுக்குசொந்த
வீடு இருக்கா?” என்பதே!!
முதல்லே நான் சொல்றது
என்னன்னா ,இது ஒரு நாகரீகம்
இல்லாத
கேள்வி. என் கருத்து
என்னன்னா யாருக்கும் எதுவும்
சொந்தம் என்பது கிடையாது. வீடு
வேணும்னா
சொந்தமா இருக்கலாம்
சுத்தி எடுத்துள்ள சுவர், நிலை,
ஜன்னல்,கதவு,மின்சாதனப்
பொருட்கள், குழாய்கள், இது
சொந்தம் ஆகலாம்.ஆனா நிலம்/
பூமி அரசாங்கத்துக்குசொந்தம்.
அதனாலேதான் வரி கட்டுகிறோம்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பொது உடமை கவிஞர் தான்எழுதிய
முதல் சினிமா பாடலில் சொல்றார்:-
குட்டி ஆடு தப்பி வந்தா !!
குள்ளநரிக்கு சொந்தம் !!.
குள்ளநரி மாட்டிக்கிட்டா !!
குறவனுக்கு சொந்தம் !!.
தட்டுக்கெட்ட மனிதன் கண்ணில் !!
பட்டதெல்லாம் சொந்தம் !!.
சட்டப்படி பார்க்கப் போனா !!
எட்டடிதான் சொந்தம் !!.
அதாவது எட்டடிமண் தான்சொந்தம்
என அவர்சொன்ன கருத்து என்னை
மிகவும் கவர்ந்தது ஆனால்
என்னைப் பொருத்தவரை உடல்
என்னும் இந்த கூட்டிலே உயிரே
வாடகைகுத்தானே குடி இருக்குது
அப்புறம் என்ன பேச்சு
வேண்டிகிடக்குது ?
என்னடா இது நம்ம மதுரைTR.பாலு
வாடகைக்கு குடி இருப்போர்
சங்கத்துக்கு
வக்காலத்து வாங்கி
பேசுறார்னு நீங்க நினைச்சா அதுக்கு
நான் பொறுப்பு இல்லை.என்ன
நான் சொல்றது ?சரியா!
நன்றி!வணக்கம்!!
அன்புடன் மதுரை T.R.பாலு.
மீண்டும்நாளை சந்திப்போமா?
(பேராசிரியர்
திரு சாலமன்
பாப்பையா அவர்கள் பாணியில்)
No comments:
Post a Comment