கலைவாணரின் பகுத்தறிவுச் சிந்தனைகள் பிற்காலத்தில் தோல்விதான் அடைந்தது --சிறு விளக்கம்.!!
உடல் மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!
ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!
இது ஒவ்வொரு தமிழனின் கடமை!!
உலகெங்கிலும் வாழ்ந்துவரும்
எனது அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
உங்கள் அனைவருக்கும் எனது
நெஞ்சார்ந்த அன்பு நிறைந்த காலை
வணக்கம்.
பகுத்தறிவுப் பகலவன் என்று
அழைத்திடும் ஈரோட்டுச் சிங்கம்
தந்தை பெரியாரின் சீடர்களுள்
ஒருவராகவேதனது வாழ்க்கையைத்
தொடங்கி இறுதிவரை அதே
கொள்கையைப் பின்பற்றி
வாழ்ந்தவர் மறைந்த கலைவாணர்
ஆவார்.
அந்தக் காலத்தில் வெளி வந்த
கருப்பு வெள்ளைத் திரைப்படமான
டாக்டர். சாவித்திரி என்ற படத்தில்
N.S.K.மற்றும்T.A.மதுரம்அம்மையார்
இருவரும் இணைந்து நடித்தனர்.
அதில் இருவரும் இணைந்து பாடிய
பாடல் காட்சி ஒன்று இடம் பெரும்.
இருவருமே (கலைவாணர் &
T.A.மதுரம் )தத்தமது சொந்தக்
குரலில் பாடிய பாடலில் கடைசி
வரியில் நான் கட்டுரையின்
தலைப்பில் குறிப்பிட்டுள்ளபடி
கலைவாணரின் பகுத்தறிவுச்
சிந்தனைகள் தோல்விதான்
அடைந்தது என்பது தெள்ளத்
தெளிவாக நாம் அறிந்து கொள்ள
முடியும் என் அன்புத் தமிழ்
நெஞ்சங்களே !!இப்போது நாம்
பாடலை பார்ப்போமா :-
கலைவாணர் :-
காசிக்குப் போனா கரு
உண்டாகுமென்ற காலம் மாறிப்
போச்சு !!இப்ப ஊசியைப்போட்டா
உண்டாகுமென்கிற உண்மை
தெரிஞ்சு போச்சு !!
T.A. மதுரம் :-
ஈசன் செயலால் இறப்பும் பிறப்பும்
எல்லாம் நடக்குதுங்க !! அத
இல்லன்னு எவனோ சொன்னான்னு
கேட்டு ஏமாந்து போகாதீங்க !!
கலை :- ஆகாரம் சமைக்க சூரிய
ஒளியால் அடுப்பை மூட்டுறாங்க !!
ஆணைப் பெண்ணாக, பெண்ணை
ஆணாக, ஆளையே மாத்துறாங்க !!
T.A. மதுரம் :- அது ஆயிரம்
காலத்துக்கு அப்பாலே நடக்குற
ஆராய்ச்சி விஷயமுங்க !! ஆமா
ஆராய்ச்சி விஷயமுங்க !! நமது
வாழ்க்கைக்கு ஏத்த நடைமுறை
விஷயம் அது ஒன்னும் இல்லங்க !!
கலை:- கோழி இல்லாம
முட்டையிலே இருந்து குஞ்சுகளை
பொரிக்க வச்சான் !!
பாரு குஞ்சுகளைபொரிக்கவச்சான் !!
ஓங்கப்பன் பாட்டன் காலத்தில் யார்
இந்தகோளாறைக்கண்டுபிடிச்சான்!!
T.A. மதுரம் :-
அந்தக் கோளாருக்காரனை கோழி
இல்லாம முட்டை ஒன்னு பண்ணச்
சொல்லுங்க பாப்போம். முட்டை
ஒன்னு பண்ணச் சொல்லுங்க !!
நம்மஅறிவுக்குப் பொருத்தம்ஆறு,
கோவில், அரசமரந்தானுங்க !! ஆமா
அரசமரந்தானுங்க !!
( இத்துடன் பாடல் நிறைவு )
என்ன நேயர்களே !! எப்படி அந்தக்
காலப் பாடல்கள் இயற்கை மணம்
செழிக்க அமைந்திருந்தது.
இப்போது என்ன என்றால் :-
டாடி ! மம்மி !! வீட்டில் இல்லை !!
தடை போட யாரும் இல்லை !!
விளையாடுவோமா உள்ளே
வில்லாளா!!
என்ன செய்வது ?எங்களைப்போன்ற
6௦ வயதினை நெருங்கிவாழ்வோரது
தலை எழுத்து !!இது போன்ற
நாராசமான பாடல்களையும்
கேட்டுத்தான் வாழ்ந்திட வேண்டும்
என்பது.
""எல்லாம் அவன் செயல் ""
அனைவருக்கும் நன்றி !!வணக்கம்!!
அன்புடன் மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment