உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என்
இனிய தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் என் இனிய காலை
வணக்கம்.
நான் ஏற்கனவே மறைந்த வாலிபக்
கவிஞர் வாலி நம் தமிழ்த்திரை
உலகிற்குள் எப்படி கால்பதித்து
தமதுகவிதைதனைஅரங்கேற்றினார்
என்பதுபற்றியஒருசிறுவிளக்கத்தை
அன்னார் மறைந்த அன்று நான்
வடித்த கண்ணீர் நினைவு அஞ்சலிக்
கவிதையின் முடிவுரையில் சிறு
செய்திக்குறிப்பாக எழுதிஇருந்தேன்.
அதன் விரிவாக்கத்தினை இப்போது
உங்கள் கருத்துக்கு விருந்தாக ,
இதயத்திற்கு மருந்தாக, படைப்பதில்
மிகவும் மகிழ்ச்சி உள்ளவனாக
இருக்கிறேன்.
பேரறிஞர் அண்ணா கதை வசனம்
எழுதி புரட்சி நடிகர் M.G.R.நடித்து
அந்நாளில் வெளிவந்த வரலாற்று
சிறப்பு மிக்க படம்தான் "நல்லவன்
வாழ்வான் " எனும் அதியற்புதமான
திரைக்காவியம். அந்தப்
படத்தில்தான் வாலிக்கு முதன்
முதலாக பாடல் எழுதுகின்ற
வாய்ப்பு கிடைத்தது. படத்தின்
இயக்குனர் காலஞ்சென்ற
ப.நீலகண்டன் வாலியைப் பார்த்து,
என்னப்பா, உம்..,நல்லா பாட்டு
எழுதுவியா? உன்னையை
நம்பித்தான் இந்த வாய்ப்பை
உனக்கு தருகிறோம். என்ன..சரியா...
என்று சொல்லிவிட்டு பாடலுக்கு
உரிய காட்சியைப் பற்றியும் எந்த
சூழ்நிலையில் அந்த பாடல்
வருகிறது என்பது பற்றியும் எந்த
கருத்துக்களை அந்த பாடலில்
பதியம் செய்திடல் வேண்டும்
என்பது பற்றியும் வாலிக்கு
விளக்கம் தரப்பட்டது.
அத்தனையையும் மிகப் பொறுமை
நிறைந்த அவருக்கே உரிய
இயல்பான குணத்தோடு
கேட்டுக்கொண்ட வாலி ஒரு பத்து
நிமிடத்தில் பாடல் தருகிறேன்என்று
சொல்லி தனது ஜோல்னா பையில்
வைத்திருந்த வெள்ளைப் பேப்பரை
எடுத்து மளமள என பாட்டினை
எழுதி சமர்பித்தார்.அந்த வரலாற்று
சிறப்புமிக்க பாடல் இதோ உங்கள்
அனைவரின் கவனத்திற்கு:-
(MGR.வாயசைக்க TMS.பாடுகிறார்):-
சிரிக்கின்றாள்இன்றுசிரிக்கின்றாள்!!
சிந்திய கண்ணீர் மாறியதாலே !!
சிரிக்கின்றாள்இன்றுசிரிக்கின்றாள்!!
(ராஜசுலோச்சனாவாயசைக்கஇசை--
-க்குயில் P.சுசீலா பாடுகிறார்):-
அன்புத் திருமுகம் காணாமல்
நான்துன்பக்கடலில் நீந்திவந்தேன்!!
TMS.:-காலப் புயலில் அணையாமல்
நெஞ்சில் காதல் விளக்கை
ஏந்தி வந்தேன் !!
சுசீலா:- உதயசூரியன் எதிரில்
இருக்கையில்உள்ளத்தாமரை
மலராதோ ?
TMS.:- எதையும் தாங்கும் இதயம்
இருக்கையில் இருண்ட
பொழுதும்புலராதோ!இருண்ட
பொழுதும் புலராதோ !!
(சிரிக்கின்றாள்)
சுசீலா:-தென்மலராடும் மீன் விளை--
- யாடும் அருவியின்
அழகைக் காணீரோ !!
TMS. :- நான் வரவில்லை
என்பதனால் உன் மீன்விழி
சிந்திய கண்ணீரோ ?
சுசீலா :- மலர்மழைபோலே
மேனியின் மேலே குளிர்நீர்
அலைகள் கொஞ்சிடுதோ ?
TMS.&சுசீலா இருவரும் சேர்ந்து:-
சிரிக்கின்றோம் !! இன்று
சிரிக்கின்றோம் !!சிந்திய
கண்ணீர் மாறியதாலே
சிரிக்கின்றோம் இன்று
சிரிக்கின்றோம் !!
(இத்துடன் பாடல் நிறைவு
பெறுகிறது)
மறைந்த வாலிபக் கவிஞர் வாலி
பாடலை ஒரு 1௦ நிமிடத்திற்குள்
எழுதி முடித்து இயக்குனர் வசம்
ஒப்படைக்கிறார். அவர் இந்தப்
பாடலை பேரறிஞர் அண்ணா வசம்
ஒப்புதலுக்கு அனுப்புகிறார்.வாலி
நெஞ்சில் பயம். முதல் முதலாக
எழுதிய பாட்டு. அண்ணா
ஒருவேளை ஏற்க மறுப்பாரோ ?என
அண்ணா பார்வை இட்ட பிறகு
மீண்டும் அந்தக்கவிதை காகிதம்
இயக்குனர் கைக்கு வருகிறது,பல
இடங்களில் சிவப்பு மையினால்
அண்ணா வட்டமிட்டும் கீழே கோடு
இட்டும் குறியீடு செய்து இருப்பதை
வாலி கண்டு மன வேதனை
அடைகிறார். பாட்டு மறுக்கப்பட்டு
விட்டதோ என அவரே ஒரு
முடிவெடுத்து முகத்தை சோகமாக
வைத்திருக்க இயக்குனர் வாலி
அருகினில் வந்து அவரை முதுகில்
ஒரு சபாஷ்போட்டு தட்டிக்கொடுத்து
முதல் பாடலை அண்ணா மனதாரப்
பாராட்டி இருக்கிறார். சிவப்பு
மையினால் வட்டமிட்டதும் கோடு
இட்டதும் பாட்டுக்கு மிக
முக்கியமான வார்த்தைகள். எனவே
எக்காரணமும் கொண்டு இந்த
வார்த்தைகள் விடுபடக்கூடாது
என்பதற்காகவே அண்ணா குறியீடு
செய்துள்ளார் என இயக்குனர்
சொல்லியதற்குப் பிறகுதான் வாலி
நிம்மதிப் பெருமூச்சு வெளியிட்டார்.
அந்த வார்த்தைகள் இவைதான் :-
1)உதயசூரியன் எதிரில்
இருக்கையில்
2)எதையும் தாங்கும் இதயம்
இருக்கையில்
இத்துடன் இந்தக் கட்டுரை நிறைவு
பெறுகிறது என் அன்புத் தமிழ் உடன்
பிறப்புகளே !! மீண்டும் நாளை வேறு
ஒரு தலைப்பினில் உங்கள்
அனைவரையும் சந்திக்கிறேன்.
அதுவரை உங்கள் அனைவரிடமும்
இருந்து நன்றி பாராட்டி விடை
பெறுகிறேன்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் !!
மதுரை TR.பாலு.
No comments:
Post a Comment