Saturday, 20 July 2013

மறைந்த வாலிபக் கவிஞர் பிறப்பால் ஐயங்கார் குலம்--விபூதி குங்குமம் பூசியதன் காரணம் என்ன?



உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 


தமிழனாக வாழ்ந்திடுங்கள்!!               


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!! 


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!   


தமிழ்பேசும் சகோதர, சகோதரிகள் 


நடுவினில் உரையாடிடும் பொழுது!!



உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என் 


உயிரினும் மேலான அன்புத் தமிழ் 


உடன்பிறப்புகளே!! முதற்கண் 


உங்கள் அனைவருக்கும் எனது 


இனிய காலை வணக்கங்கள் பல.



கடந்த வியாழன் (18-07-2013) அன்று 


இயற்கையோடு இரண்டறக் கலந்து 


விட்ட வாலிபக் கவிஞர் வாலி 


(உண்மைப் பெயர்:ரெங்கராஜன்) 


திருச்சி:ஸ்ரீ ரங்கத்தில் அவதரித்த 


கவிஞர் தமது பெயரை திரை 


உலகிற்காக " வாலி" என்று மாற்றி 


அமைத்துக்கொண்டார்.இராமாயண 


காவியத்தில் வாலி என்ற கதா 


பாத்திரத்தின் தன்மை என்ன என்று 


உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள் 


இருந்தாலும் தெரியாத நல்ல பல 


உள்ளங்களுக்கு இந்த விளக்கம்:- 


வாலி கிஷ்கிந்தா குலத்தில் பிறந்த 


உருவம். மிகச்சரியான பலசாலி. 


இறைவன் வாலிக்குத் தந்த 


மாபெரும் வரம்  என்றால் யார்வாலி 


எதிரில் வந்து நின்று சண்டை 


செய்திட்டாலும் எதிரியின் பலத்தில் 


பாதி வாலிக்கு வந்துவிடும். 


அதனால் தான் அவதார புருஷன் ஸ்ரீ 


இராமபிரானே வாலியை மறைந்து 


நின்று அம்பு பாய்ச்சி கொன்றது நாம் 


அறிந்த ஆயிரம் ஆயிரம் புராணப் 


புளுகுளில் தலையாய ஒன்று. சரி. 


அது இருக்கட்டும். ஆகவே அது 


போலவே தனக்கும் எதிரியின் 


வலுவில் பலத்தில் பாதி வர 


வேண்டும் என்று கருதியோ 


என்னவோ ரங்கராஜன் வாலியாக 


தனது பெயரை மாற்றம் செய்து 


கொண்டு வரும் வேளையில் ஸ்ரீ 


ரங்கத்தில் வாலி குடி இருக்கும் 


வீட்டுக்கு எதிர் வீட்டில்  வசித்து 


வந்தவர்   உபன்யாசகுல திலகம் 


"எம்பார் " ஸ்ரீ விஜயராகவ 


ஆச்சாரியார் அவர்.  அன்னார்- வாலி 


இடையே ஒருநாள் சந்திப்பு 


நிகழ்ந்தது. அப்போது:-


எம்பார்:- ஏண்டா அம்பி ரங்கராஜா !!


சித்த இப்படி வாடா!!அட மடையா!!.   


வாலி:- பெரியவாள் ஷமிக்கணும் 


(மன்னிக்கணும் அப்டீங்கறதுக்கு 


"அவாள்"பாஷை) என்ன !! என்ன !! 


விஷயம்.ஷேமமா இருக்கேளா!!   


எம்பார்:- நேக்கு என்னடா 


ஷேமத்துக்கு குறைச்சல். எல்லாம் 


அந்த நாராயணன் க்ருபையால ஒரு 


குறைச்சலும் நேக்கு இல்லடா அம்பி 


வாலி:- ரொம்ப சந்தோசம். பின்ன 


எதுக்கு என்னையை கூப்டேள்.     


 எம்பார்:- விஷயம் இருக்குடா அம்பி. 


வாலி:-(மனசுக்குள்.சீக்ரம்சொல்லித் 


தொலையும்) என்ன விஷயமோ?   


எம்பார்:- ஏண்டா உன்னோட 


தோப்பனார் நோக்கு அழகா பேர் 


ரங்கராஜன் அப்டின்னு வச்ருக்கர். நீ 


பாட்டுக்கு அத்த வாலின்னு 


மாத்திண்டுட்டியாமே !!கேள்விப் 


பட்டேன்!! நேக்கு எவ்வளவு 


கவலையா இருக்கு நோக்குத் 


தெரியுமோ?                                                       


வாலி:- ஏன் மாமா !!(பொதுவா இந்த


ஐயர்,ஐயங்கார் இந்தப்  பிரிவு 


ஜாதிகளில் சர்வ சாதரணமா மாமா 


என்ற சொல் எல்லோருக்கும் 


வழங்கப்பட்டுவருவது ரொம்ப 


ரொம்ப சகஜம். ஆண், பெண் இரு 


பாலருமே பெரியவாளை அப்டிதான் 


அழைப்பா. அத்த அவாளும் தப்பா 


எடுத்துண்டிட மாட்டா) இதுக்கு 


போய் நீங்க கவலைப்படறேள்? 


நேக்கு பிடிச்சது. வச்சுண்டுடுட்டேன் 


இப்ப அதுக்கு என்ன?                               


எம்பார்:- அட போடா மட்டிப்பயலே!! 


(முட்டாப் பயலேக்கு "அவாள்" 


பாஷையில் 


இப்படித்தான்சொல்வா)அப்படி 


அந்தப் பேர்ல என்னடா அப்டி 


விசேஷம் இருக்கு? சித்த நானும் 


தெரிஞ்சுக்கறேன்.                                         


வாலி:- சொல்றேன் மாமா. வாலி 


என்று யார் பெயர் வச்சுன்டாலும் 


அவாளுக்கு எதிரில் யார் 


நிக்கறாளோ அந்த எதிரியோட 


அறிவு,ஆற்றல், வல்லமை,பலம்இது 


எல்லாத்லயும் சரிபாதி வந்திடுமாம் 


வாலி என்ற பேர் உள்ளவாளுக்கு. 


அதனாலேதான் மாமா அந்தப் பேரை 


நான் வச்சுண்டேன்.இப்ப அதுக்கு 


என்ன?                                                           


 எம்பார்:- அட போடா மண்டு!! 


கிறுக்குப் பயலே!! உன்னையைப் 


பார்த்த அப்படி பாதி அறிவு ஆற்றல் 


பலம் வல்லமை வந்த 


புள்ளையாண்டனா  நேக்கு 


தெரியல்லையேடா உன்ன பாத்தா


எனக்கு எதுத்தாப்லே நீ இப்ப 


நின்னுட்டு இருக்ரதாலே 


என்னாண்ட இருக்கிற 


அறிவு,ஆற்றல்,வல்லமை,பேச்சுத் 


திறமை இது  நோக்கும் 


வந்த்ருக்கணும் இல்லையா. அப்டி 


ஒன்னும் நேக்கு தெரியலையேடா 


அம்பி!!ஹி..ஹி..


(என எம்பார்சிரிக்கிறார்)உடன்வாலி 


வாலி:- மாமா உங்களாண்ட நீங்க 


சொன்ன அத்தனையும் 


உண்மையிலேயே உங்கட்ட 


இருந்திருந்தா நிச்சயம் நேக்கு 


வந்திருக்கணும். வரலை.அப்ப 


உங்கட்ட ஒன்னும் இல்லன்னு 


தெரியறது ஹி..ஹி..ஹி..சிரித்த 


படியே மாமா நேக்கு நாழியாறது 


நான் வாரேன்(எனசொல்லி விடை 


பெற்று செல்கிறார்)                               


எம்பார்:- என்னடா இது அநியாயமா 


இருக்கு. இத்துனூண்டு படவா 


ராஸ்கல்!! இப்டி சொல்லிட்டு 


போயிட்டானே. உம்..எல்லாம் கலி 


முத்திடுத்து. அதான்.கோவிந்தா !! 


இந்த லோகத்தை நீதான் 


ரக்ஷிக்கணும்.(அப்டீன்னா 


காப்பாத்தணும் " அவாள் " பாஷை)          

சரி. இப்போது தலைப்பு சம்பந்தப் 


பட்ட விஷயத்திற்கு நாம்வருவோம். 


பிறப்பால் ஸ்ரீ ரங்கம் ஐயங்கார் 


குலத்தில் அவதரித்த வாலி மத 


சம்பந்தம் ஜாதி சம்பந்தம் 


இவைகளுக்கு அப்பாற்பட்டுவாழ்ந்த 


மகான் வாலி. திராவிட இயக்கத்தில் 


அதிக ஈடுபாடு (மனதளவில்) 


கொண்ட உத்தம புருஷன் வாலி. 


ஒருமுறை அவரது உயிருக்கும் 


உயிராக நேசிக்கும் அவரது உடன் 


பிறந்த சகோதரி நோய் வாய்ப்பட்டு 


உடல்நிலை மிகமிக மோசம் 


அடைந்த நிலையில் வாலிக்கு 


வேண்டிய நண்பர்களுள் ஒருவர் 


சுந்தரம் அவர் பெயர். அவர் 


வாலியிடம் நீ இப்ப செய்ய 


வேண்டிய விஷயம் இது 


ஒண்ணுதான். முருகப் 


பெருமானிடம் மனமார 


வேண்டிக்கோ.மத்ததெல்லாம் அவர் 


பாத்துப்பார். என்று சொல்ல, 


வாலியும் உள்ளம் உருக வேண்டி 


நின்றார் ஸ்ரீ முருகப் பெருமானிடம். 


ஸ்ரீ ரங்கத்தில் உள்ள ஒரு முருகன் 


கோவில் சென்று விபூதி,குங்குமம் 


எடுத்து வந்து தனது  சகோதரியின் 


நெற்றியில் அணிவித்தார். என்ன 


அதிசயம். மூன்றே நாளில் நல்ல 


விதமாக நோய் முற்றிலும் நீங்கி 


வாலியின் சகோதரி எழுந்து நடமாட 


ஆரம்பித்துவிட்டார். அப்போதுவாலி 


எழுதிய பக்திப் பாடல்தான் மதுரை 


T.M.சவுந்திரராஜனின் தேன் ஒழுகும் 


தெள்ளுதமிழ் இனிய பக்திரசம் 


ததும்பிய பாடல் இது தான்:-


" உள்ளம் உருகுதையா -முருகா     

 உன்னடி காண்கையிலே"-என்ற 


பாடல்.அன்றில் இருந்து தனது உயிர் 


பிரியும்வரைஅவர்அந்தவிபூதி,


குங்குமத்தை, மறக்காமல் தனது 


நெற்றியில் பூசி மகிழ்ந்த அந்த 


புண்ணியவான் வாலி.அவர்  உயிர் 


பிரிந்தவுடன் ஐயங்கார் ஜாதியில் 


உள்ள வெறியர்கள் செத்த அவரது 


பூத உடலின் நெற்றியில் நன்கு 


குழைத்து நாமம் போட்ட காட்சியை 


நானும் கண்டேன். எனக்கு 


சிரிப்புத்தான் வந்தது ரசிகப் 


பெருமக்களே. செத்தாக்கூட 


போகாதாம் இந்த ஜாதி வெறி 


அப்படீன்னு பெரியவா சொல்வா. 


அது என்னவோ வாலி விஷயத்லே 


சரியாத்தான் பொருந்திருக்கு. சரி. 


நேக்கும் நாழி ஆயிடுத்து. நான் 


வரட்டுமா. ஏன்னா 


உங்களைத்தானே !! வரேன்!!               


நன்றி!! வணக்கம்!!அன்புடன்!! 


மதுரை.TR.பாலு.


No comments:

Post a Comment