பெருந்தலைவர் மறைந்த காமராஜரின் பிறந்த தேதி இன்று !! 15-௦7-2௦13.
உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
தமிழனாக வாழ்ந்திடுங்கள்!!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!
ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!
தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள்
நடுவில் உரையாடிடும் பொழுது!!
உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என்
உயிரினும் மேலாக நான் மதித்து
வணங்கி வரும் என் அன்புத் தமிழ்
உடன் பிறப்புகளே!!
இன்றைய தினம் தூய்மைமிக்க
தலைவர்களுள் ஒருவராக பொது
வாழ்வினில் கறைபடியாத
கரங்களுக்கு சொந்தக்காரருமான
காங்கிரஸ் கட்சியை தமிழ்நாட்டில்
வளரச் செய்தவர்களுள் மிக
முக்கியமானவரும் ஆன கர்ம வீரர்
"காமராஜரின்" பிறந்ததேதி ஆகும்.
19௦3 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ம்
தேதி இன்று விருதுநகர் என்று
அழைக்கப்படும் அந்நாள்
விருதுபட்டி என்ற கிராமத்தில்
தாயார் சிவகாமி அம்மாள்-தந்தை
குமாரசாமி ஆகியோருக்கு பிறந்த
அதி உன்னதத் தலைவர் நமது
காமராஜர் ஆவார். அவருக்கு
பெற்றோர்கள் வைத்த பெயர்
அவர்களது குலதெய்வத்தின் பெயர்
காமாட்சி என்று. மகாகவி பாரதியார்
எப்படி கண்ணனை கண்ணம்மா என
மருவி அழைத்தாரோ அதுபோல
ஆண் குழந்தையான காமராஜரை
காமாட்சி என்று செல்லமாக
அழைத்து மகிழ்ந்தனர். ஆனால்
தயார் சிவகாமி அம்மாள் தனது
செல்ல மகனை ராஜா என்றே
அழைத்து மகிழ்ந்தார். இந்த இரண்டு
பெயர்களும் எதிர்காலத்தில்
இணைந்து காமராஜர் என்று
ஆயிற்று என் அன்புத் தமிழ்
நெஞ்சங்களே!! (காமாட்சி + ராஜா)
இந்திய அரசியல் அரங்கத்தையே
தனது ஆட்காட்டி விரலுக்கு
அடிமைப் படுத்தி வாழ்ந்தவர்
பெருமைக்குரிய காமராஜர் ஆவார்.
தமிழ் நாட்டின் முதல் அமைச்சராக
இருந்த காலத்தில் அவரால்
அறிமுகப் படுத்தப் பட்ட திட்டம்தான்
இலவச மதிய உணவு மற்றும்
இலவச சீருடை பள்ளியில் பயிலும்
மாணவச் செல்வங்களுக்கு. கடந்த
காலத்திலும் சரி இனிவரும்
காலத்திலும் சரி காமராஜர் போல
தூய்மைமிக்க தலைவர் எவரையும்
நாம் பார்க்க முடியாது அன்பர்களே.
எங்கே தான் திருமணம் செய்து
கொண்டு குழந்தைகள் பெற்று ஒரு
குடும்பஸ்தன் ஆகிவிட்டால் நாட்டு
வளர்ச்சியின்மேல் ஆர்வம்
குறைந்து வீட்டின்மேல் அக்கறை
வந்து விடுமோ என்று திருமணமே
செய்துகொள்ளாமல் இறுதிவரை
கட்டை பிரம்மச்சாரியாகவே
வாழ்ந்து மறைந்த தன் நலம் அற்ற
உண்மைத் தியாகியே கர்மவீரர்
காமராஜர் ஆவார்.பொதுப்பணத்தில்
ஒரு நயாபைசாவிற்குக் கூட
ஆசைப் படாத அதி உன்னதத்
தலைவர் அவர்.
9 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்
நாட்டின் முதல் அமைச்சராககடமை
ஆற்றிய அவர் இயற்கை எய்திய
பொழுது அவரிடம் இருந்த சொத்து
என்ன தெரியுமா அன்பர்களே.
தலையணைக்கு கீழே இருந்த 155
ரூபாய் பணமும் மர பீரோவில்
இருந்த இரண்டு ஜோடி கதர்
வேட்டியும் கதர் சட்டையும் மட்டுமே
ஆகும் அன்பர்களே!! இந்த கருத்தை
நான் பதிவு செய்திடும்போது என்
கண்களில் இருந்து கண்ணீர் தாரை
தாரையாக வழிந்து ஓடுகிறது
அன்பர்களே. அவர் வாழ்க்கை
மட்டும் அல்ல அவரே ஒரு
சரித்திரம் ஆகும். இங்கே உள்ள எந்த
அரசியல் கட்சியைச் சேர்ந்த எந்த
தலைவருக்கும் அவரது திரு
உருவச்சிலையை தொடக் கூட
அருகதை கிடையாது. அப்படி
தொட்டால் அந்த சிலைக்கு மீண்டும்
பாவம் தீர்க்க அபிஷேகம் செய்தாக
வேண்டும். கர்மவீரர் காமராஜர்
புகழ் இந்த உலகம் இருக்கும்வரை
என்றும் நிலைத்து இருக்கும்.
நன்றி!!வணக்கம்!! கண்ணீருடன் !!
மதுரை TR.பாலு.
No comments:
Post a Comment