Thursday, 18 July 2013

காதலனும் காதலியும் --திருமணம்--கணவன் மனைவி--அப்புறம் என்ன ஆச்சு ? கோவிந்தா !!

உடல்மண்ணுக்கு!!உயிர் தமிழுக்கு !!
 

தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!

தனித்தமிழில் மட்டுமேபேசிடுங்கள்!!


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி !!


தமிழ் பேசும் சகோதர சகோதரிகள்


நடுவில்உரையாடிடும்பொழுதில்!!

உலகெங்கிலும் வாழ்ந்துவரும்


என்உயிரினும் மேலாக நான்


போற்றி வணங்கி வரும் என்


அன்புத் தமிழ் உடன்பிறப்புகளே !!   


முதலில் உங்களில்


அனைவருக்கும் எனது இனிய


மாலை வணக்கங்கள்.

ஏறத்தாழ ஒரு வார காலத்திற்கு


முன்பாக கூகுள் இணைய


தளத்தில் பேஸ்புக் வலைதளத்தில்


பேஸ்புக் தமிழ் பேசுவோர்கள்


சங்கம் என்ற ஒரு சமூக நீதி


காக்கும் அமைப்பின் வாயிலாக


பல்வேறு நல்ல பல


கருத்துக்களை


வாரி வாரி வழங்கிவரும் அந்த


அமைப்பின் சார்பாக ஒரு கட்டுரை


அதனைப் படித்து பின் சிரித்து


சிரித்து என் விலா எலும்பே நோவு


கண்டது.   வயிறோ சிரித்து சிரித்து


புண்ணாகிவிட்டது.அப்படிப்பட்ட


கட்டுரையை  என் நினைவில்


எவ்வளவு பதிய வைத்திட


முடியுமோ அந்த அளவு


நினைவினில் ஏற்றி அதனை


இப்போது உங்கள்முன்பாக


பணிவன்புடன் சமர்ப்பிக்கிறேன்.   


பொதுவாக பருவ வயதினை


அடைந்திடும் போது ஆணுக்கும்


பெண்ணுக்கும் காதல் அரும்புவது


என்பது இயற்கையான


நிகழ்வுகளுள் ஒன்றாக


தற்காலத்தில் கருதப்படுகிறது.


அப்படிப்பட்ட காதலர்களுள் ஒரு


ஜோடி அவர்களது பெயர் காதலன்


பெயர் “பாலன்”   காதலி பெயர்


“பாமா” இவர்கள் இருவரும்


காதலித்துக்கொண்டு


இருக்கும்போது எப்படி


இருந்தார்கள். அதன் பிறகு


திருமணம் நடைபெறுகிறது.


அதுக்கு அப்புறம் அவர்கள் வாழ்வு


எப்படி இருந்தது? பின் எப்படி


மாறியது ? இந்த சம்பவம் பற்றிய


கட்டுரைதான் நாம் காண


இருப்பது.படித்து மகிழ்வோமா


அன்பர்களே!! 

பாலன் :- இதற்காகத்தானே நான்


இத்தனை நாள் காத்திருந்தேன்?


பாமா:-நீ என்னை விட்டு


விலகிடுவாயா ?

பாலன்:-  கனவிலும் அவ்வாறு


நான் நினைக்க மாட்டேன் !!


பாமா:- நீ என்னை


விரும்புகிறாயா?

பாலன் :- ஆமாம். இன்று மட்டும்


அல்ல. என்றென்றும்!!.

பாமா:- நீ என்னை மறந்து


விடுவாயா?.

பாலன் :- அதைவிட செத்துப்


போய்விடுவேன்!!

பாமா:- நீ இப்போது எனக்கு ஒரு


முத்தம் நச்சுன்னு தருவாயா?


பாலன் :-கண்டிப்பாக !!அதுதானே


என் வாழ்நாளில் மிகப் பெரிய


சந்தோஷமான தருணம் !!

பாமா :- நீ என்னை அடிப்பாயா ?

பாலன் :- ஒருபோதும் அந்தத்

தவறை நான் செய்ய மாட்டேன்.

பாமா:- நீ என்னோட இறுதி மூச்சு


உள்ளவரை என்னுடன்


கைகோர்த்து கடைசிவரை


வருவாயா?  *********************************************************************************** அன்பர்களே !! இதுவரை


கதாநாயகனும் கதா நாயகியும்


ஒருவரை ஒருவர் உளமார


மனமார காதலித்து அதன் பின்னர்


இருவர் வீட்டிலும் கஷ்டப்பட்டு


கல்யாணத்திற்கு அனுமதி


பெறுகின்றனர். திருமணம் முடிந்த


கையுடன் தம்பதிகள்


ஊட்டி,கொடைக்கானல் என்று 3


நாள் தங்கி உல்லாசமாக


வாழ்கையின் ஒரு புதுக் கணக்கு


ஒன்றினை அவர்கள்


துவக்குகிறார்கள் மூன்றுமாத


காலம் முடிகிறது!! அதன் பின்னே


அவர்களது வாழ்க்கை? என்ன


செய்வார்கள் ? ஹலோ !!ஒன்


மினிட் ப்ளீஸ்.திருமணம் முடிந்து


தேன் நிலவும் முடிந்து


கோலாகலத்துடன் 9௦ நாள்கள்


இல்வாழ்க்கை முடிகிறது. ஆசை


அது 6௦ நாள் மோகம் அது 3௦நாள்.


ஆக மொத்தம் 9௦நாட்கள்.அதற்குப்


பிறகு !!இவர்கள் என்ன


பேசுவார்கள்? அதைத்


தெரிந்தகொள்ள ஆவல் அதிகமாக


உள்ளதா?அப்படி என்றால்


இதுவரை அவர்கள் காதலித்து


கல்யாணம் வரும்வரையில் பேசிய


பேச்சுக்கள் மேலே தரப்பட்டுள்ளது


அல்லவா. அதனை கீழிருந்து


மேலாக படித்துப்பாருங்கள்


உங்களுக்கே விஷயம் புரிய வரும்.


என்ன சரியா !! படித்துப் பார்த்து


நாளை காலையில் உங்களது


ரசனையைப் பற்றி


விலாவாரியாகச் சொல்லுங்கள்


என் அன்புத் தமிழ் உடன்


பிறப்புகளே !! நன்றி !! வணக்கம் !!


அன்புடன். மதுரை TR. பாலு.                     

No comments:

Post a Comment