Friday, 5 July 2013

மறைந்த பட்டுகோட்டை கல்யாணசுந்தரம் --ஒரு நினைவலை தொகுப்பு !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 


தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!                 


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!! 


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!   


தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள் 


நடுவினில் உரையாடிடும் பொழுது!!     



உலகெங்கிலும் வாழ்ந்து வரும் என் 


உயிரினும் மேலாக நான் நேசித்து 


வரும் என் இதயம் என்னும் அன்பு 


வீட்டினில் வைத்து பூஜித்து வரும் 


உலகத் தமிழ் உடன் பிறப்புகளே !!


முதலில் உங்கள் அனைவருக்கும் 


எனது தலை தாழ்ந்த கரம் குவிந்த 


இதயம் கனிந்த அன்பு நிறைந்த 


அதிகாலை வணக்கங்கள் பல.


(இந்திய நேரம் காலை மணி ௦5.௦௦)  


நேயர்களே!! தமிழ்த் திரை உலகம் 


என்னும் மிகப் பெரிய வானத்தில் 


எத்தனை எத்தனயோ வண்ணமிகு 


நட்சத்திரங்கள் மின்னிக்கொண்டு 


இருந்தாலும் கூட அவை அத்தனை --


-யும் எப்படி ஒரு வெண்ணிலவிற்கு 


ஈடு ஆகாதோஅதுபோல எத்தனை    


கவிஞர்கள் வாழ்ந்தாலும் 


மறைந்தாலும் அவர்கள் அத்தனை 


பெரும் ஒரே ஒரு மாபெரும் கவிச் 


சக்கரவர்த்தி " பட்டுகோட்டை 


நமக்கு அளித்த பாட்டுக்கோட்டை  


நம்மை விட்டு மறைந்தாலும் இன்று 


வரைஎங்களைப்போன்றஅந்தக்கால 


பெருசுகளின் இதயக்கூட்டினில்  


இன்றளவும் வாழ்ந்து வரும் எங்கள் 


வழிகாட்டி, தத்துவ முத்து,பொது 


உடமை சிந்தனையின் கருத்துப் 


பெட்டகம்,திரை உலகினில் மிகக் 


குறுகிய காலமே அவர் வாழ்ந்து 


இருந்தாலும் என்றும் சாகாத வரம் 


பெற்ற கவிஞர்கள் வரிசையில் 


முதல் இடத்தை இன்றளவும் தக்க 


வைத்துகொண்டு இருக்கும் ஐய்யா 


கல்யாணசுந்தரம் பற்றி பேசிட அவர் 


புகழ் பாடிட எனக்கு இந்த ஒரு ஆயுள் 


காலம் போதாது என்று சொன்னால் 


அது மிகைப்படுத்தப்பட்ட வார்த்தை 


அல்ல என் அன்புத்தமிழ் பேசிடும் 


நெஞ்சங்களே!!                                               


பாசவலை என்னும் திரைப்படம் 


மூலமாக 1952ம் ஆண்டு திரைத்துறை 


தனில்மிகக்கடுமையானபோராட்டத்


-திற்கு பின் கால் பதித்த அந்த மகா 


கவிஞனின் படைப்புகளை 


நினைத்தாலே எனது உள்ளம் நெக்கு 


ருகுகிறது அன்பர்களே !!                            



பொதுஉடைமைக் கருத்துக்களுக்கு 


இன்றளவும் எத்தனை பாடல்கள் 


இருந்தாலும் அவை அத்தனையும் 


பட்டுகோட்டையின் இந்த ஒரு 


பாடலுக்கு நிகர் ஆகாது அன்பர்களே. 


ஏகபோக முதலாளித்துவம்/


ஜமீன்தார்கள்  உழைத்தே சாகும் 


விவசாய்க்கூலித் தொழிலாளர்கள் 


இவர்கள் இருவருக்கும் இடையில் 


நடைபெறும் ஒரு வர்க்கரீதியான 


போராட்டத்தை எவ்வளவு அழகாக 


இந்தப் பாடலில் அன்னார் 


கையாண்டு இருக்கிறார் என்பதை 


நினைக்கின்றபோது என் நெஞ்சம் 


எல்லாம் நடுங்குகிறது அன்பர்களே!!                      


அப்படி ஒரு கருத்துச்செறிவு மிக்க 


பாடல் இடம் பெற்ற திரைக் காவியம் 


தமிழ் இனத் தலைவர்,முத்தமிழ் 


அறிஞர்,திருக்குவளை முத்துவேலர் 


கருணாநிதி அவர்களால் புரட்சி 


நடிகர் என்ற பட்டம் பெற்ற மறைந்த 


MGR மற்றும் பானுமதி, கன்னடத்து 


பைங்கிளி சரோஜாதேவி என ஒரு 


படைபட்டாளமே நடித்து அந்தக்கால 


த்தில்வெளிவந்து வெற்றிக்கொடி 


நாட்டிய "நாடோடி மன்னன்" என்ற 


திரைக்காவியத்தில் இடம் பெற்ற 


இந்தப் பாடல் அதன் வரிகள் கவிஞர் 


பட்டுகோட்டையின் பெருமைதனை 


இந்த உலகமே அறியச் செய்தது. 


பாடலைப் பாருங்கள் நேயர்களே !! 


இந்தப் பாடல் திரையில் MGR வாய் 


அசைக்க, எங்கள் மதுரை மண்ணின் 


மைந்தன் சமீபத்தில் மறைந்த TMS 


என்று சுருக்கமாக அழைக்கப்பட்ட 


சவுந்திரராஜனும் நல்ல நடிப்பாற்றல் 


திறமை உள்ள விரல்விட்டுஎண்ணக் 


கூடிய நடிகையர்களுள் முதலிடம் 


வகிக்கும் ஆந்திர நாடு பெற்றெடுத்த 


அருந்தவப் புதல்வி பானுமதி 


அவர்கள் தமது சொந்தக் குரலில் 


இணைந்து பாடி மாபெரும் வெற்றி 


பெற்ற அந்தப் பொதுஉடமை பாடல் 


இதோ உங்கள் கண்களுக்கு:-              


பானுமதி:-   சும்மா   கிடந்த  நிலத்தை  *                                                             கொத்தி  


சோம்பலில்லாமல் ஏர் நடத்தி            


கம்மாக் கரையை உசத்திக் கட்டி          


கரும்புங்கொல்லையில் வாய்க்கால் *                                                               வெட்டி 


சம்பாப் பயிரை பறிச்சு நாட்டு            


தகுந்த முறையில் தண்ணீர் விட்டு 


நெல்லும்   விளைஞ்சிருக்கு!!


வரப்பும் உள்ளே மறைஞ்சிருக்கு  !!                          


அட காடு விளைஞ்சென்ன மச்சான் 


நமக்குகையும்காலும்தானேமிச்சம் !!          


T.M.S :-    இப்போ காடு   விளையட்டும்                                                  *                                                     பொண்ணே 


நமக்கு காலம் இருக்குது பின்னே !!    


காலம் இருக்குது பின்னே!!                      


மண்ணைபொளந்துசுரங்கம் வச்சு 


பொன்னை எடுக்க கனிகள்வச்சு 


மதிலு வச்சு  மாளிகை கட்டி கடலில் 


மூழ்கி முத்தை எடுக்கும் வழிகாட்டி 


மரமான தொழிலாளி 


வாழ்க்கையிலே !!                                         


பட்ட துயர் இனி மாறும்!!                           


ரொம்ப கிட்ட நெருங்குது நேரம் !!       


கிட்ட நெருங்குது நேரம் !!அவர் பட்ட 


துயர் இனி மாறும் ரொம்ப கிட்ட 


நெருங்குது நேரம் !!                                     


*                                         (காடுவிளைஞ்சு)                           


பானுமதி:-   மாடா உழைச்சவன் 


வாழ்கையிலே பசி வந்திடக் 


காரணம் என்ன மச்சான் ?                         


T.M.S.:- அவன் தேடிய செல்வங்கள் 


வேற இடத்திலே சேர்வதினால் 


வரும் தொல்லையடி !!                               


பானுமதி:-  பஞ்சப்பரம்பரை 


வாழ்வதற்கு இனி பண்ண 


வேண்டியது என்ன மச்சான் ?                 


T.M.S.:- தினம் கஞ்சி கஞ்சி என்றால் 


பானை நிறையாது !!                                      


சிந்தித்து முன்னேற வேணுமடி !!         


பானுமதி :-  வாடிக்கையாய்வரும் 


துன்பங்களை இன்னும் நீடிக்கச் 


செய்வது மோசம் அன்றோ ?                   


T.M.S.:- இருள் மூடிக்கிடந்த மனமும் 


வெளுத்தது.   சேரிக்கும்            இன்பம் *                                                   திரும்புமடி !! 


அட!சேரிக்கும் இன்பம் திரும்புமடி!!  


பானுமதி:-அட காடு விளைஞ்சென்ன  


மச்சான்நமக்குகையும்காலும்தானே *                                                            மிச்சம்!! 


T.M.S:- நானே போடப்போறேன் 


சட்டம் !பொதுவில்  நன்மை 


புரிந்திடும் திட்டம்!! நாடு நலம் 


பெரும் திட்டம் !!                                                  


பானுமதி &T.M.S:-  நன்மை புரிந்திடும் 


திட்டம். நாடு நலம் பெரும் திட்டம்!!    


(இத்துடன்பாடல்நிறைவுபெறுகிறது)


அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!பட்டுக் 


கோட்டையாரின் பொதுஉடைமை 


பாடல்களில் உள்ள சாராம்சத்தின் 


மகிமையைப் பார்த்தீர்களா ? அன்புத் 


தமிழ் உடன்பிறப்புகளே!! பூவுலகில் 


இருந்து அன்னார் மறைந்திட்டாலும் 


அவர் பெயர் இந்த பூமி சுழல்வதை 


நிறுத்தும்வரைஎங்கும்எதிரொலித்து


கொண்டுதான் இருக்கும். அந்தக் 


கருத்தினில் எனக்கு எள்ளின் முனை  


அளவு கூட சந்தேகம் இல்லை என்று 


சொல்லி இந்த கட்டுரைதனை நான்  


நிறைவு செய்கிறேன் என் அன்புத் 


தமிழ் உடன் பிறப்புகளே !!                         


பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 


புகழ் கார் (மேகம்) உள்ளளவும் கடல் 


நீர் உள்ளளவும்,வான் உள்ளளவும் 


வான் நிலவு உள்ளளவும் வாழிய!!


வாழிய !!வாழியவே !!                                 


நன்றி !! வணக்கம் !!                                     


அன்புடன் மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment