Thursday, 4 July 2013

நிலை இல்லாத உலகினில் கணிணிக்கால "" மனிதனின் உண்மை நிலை"" இதுதான் !!





உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!!  


தமிழனாக வாழ்ந்திடுங்கள்!!                       


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!


ஆங்கிலமொழிகலப்பு ஏதும்இன்றி!!  


தமிழ் பேசிடும் சகோதர,சகோதரிகள் 


நடுவினில் உரையாடிடும் பொழுது!!



உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என் 


அன்பு மற்றும் பாசத்திற்கும் 


நேசத்திற்கும் வணக்கத்திற்கும் 


உரிய எனது அன்புத் தமிழ் உடன் 


பிறப்புகளே !!முதலில் உங்கள் 


அனைவருக்கும் எனது இனிய 


அதிகாலை வணக்கங்கள் பலப்பல!! 


உரித்தாகுக!!(இந்திய நேரம் பிரம்ம 


முகூர்த்த வேளை என்று சொல்லி 


வரும் அதிகாலை ௦4.00 மணி.) 



அன்பர்களே !! மடிக்கணிணியை 


நாள் முழுவதும் (தூங்கும் நேரம் 


தவிர)பயன்படுத்திடுவோர்களது 


மனைவிமார்கள் புலம்பலை நான் 


உங்கள் கவனத்திற்கு 


தருகிறேன்.சிரிப்பதற்காகத்தான் 


அதாவது " சும்மா காச்சுக்கும் " 


படிங்க!படிங்க!! படிச்சுட்டு கொஞ்சம் 


கொஞ்சமா உங்களை நீங்களே 


மாத்திக்கிடுங்க.இல்லன்னு 


சொன்னா உங்களுக்கு தலைவலி 


மற்றும் நெஞ்சு வலிதான். சரியா !!


காட்சி எண்:-1.


மனைவி :- (கணவன். கந்தசாமியை 


பார்த்து )


ஏன்யா! உனக்கு தூக்கமே வராதா?


உம்..எப்ப பாரு அந்த கருப்பு 


பொட்டியையே கட்டி அழுதுகிட்டு 


இருக்கியே! உம்..இங்க 


பொண்டாட்டின்னு ஒருத்தி 


இருக்காளே! அவளை கொஞ்சநேரம் 


கொஞ்சணும்.கட்டிப்பிடிப்போம்.


அப்படீங்கிற ஆசையே உனக்கு  


வராதாய்யா. அப்ப எதுக்குய்யா 


என்னை கண்ணாலம் கட்டிகிட்டே. 


பேசாம அந்த பெட்டிக்கே நீ தாலியை 


கட்டி இருந்திருக்கலாம்ல. ஏன்யா 


என் வாழ்க்கையையே கெடுத்துட்ட. 


என்னையை கொண்டு போய்  எங்க 


ஆத்தா வூட்டுலே கொண்டு போய் 


வுட்ட்ருய்யா.  உனக்கு கோடி 


புண்ணியம் உண்டு.                                        


( மதுரை TR.பாலு தந்த அந்த விலை 


மதிப்பு இல்லாத புத்தி மதியை 


கேட்டு திருந்திய கணவன்  


கந்தசாமி மனைவியையும் 


மடிக்கணிணியுடன் சேர்த்து மதிக்க 


தொடங்கியதன் விளைவு.கீழே 


படித்துப் பாருங்கள் அன்புத் தமிழ் 


நெஞ்சங்களே)                                                      


காட்சி எண் :- 2.                                                  


மனைவி:- மாமு. என்னையே 


கொஞ்சிட்டு இருந்தா அப்புறம் 


பொழைப்பை யார் பாப்பாங்க மாமு. 


போய் அந்த பொட்டியிலே என்ன 


வேலை செய்யணுமோ அதை பாரு 


மாமு. கிணத்துத்தண்ணியை  ஆத்து 


வெள்ளமா கொண்டுபோக முடியும். 


போங்க மாமு. போயி வேலையைப் 


பாருங்க. (உறங்க துவங்குகிறாள்)                                                               


கணவன் கந்தசாமி:- சரிடா கண்ணு. 


ஏதோ..நீ..சொல்றதுனால ..தான்.. 


நான் போறேன். இல்லாட்டி 


உன்கிட்டேயேதான் இருப்பான் இந்த 


கந்தசாமி..உக்கும்..( மனதுக்குள். 


நல்ல நேரம் நம்ம மதுரை TR.பாலு 


ஐயா இந்த புத்திமதி மட்டும் நமக்கு 


சொல்லலைன்னு வச்சுக்குங்க 


அம்புட்டுத்தான்.பொண்டாட்டி 


மாமன் வூட்டாண்ட போயிஇருப்பா. 


நாம பூவாவுக்கு லாட்டரி 


அடிக்கணும். எல்லார்கிட்டேயும் 


நடிச்சுகிட்டு இருந்தாத்தான் 


நம்பளை நம்புரானுக. 


பொண்டாட்டிகிட்ட கூட 


நடிக்கத்தான் வேண்டி 


இருக்கு.உம்..எல்லாம் நம்ம தலை 


எழுத்து) மனத்தில் பூரிப்பு உணர்வு 


பொங்க மடிக்கணிணியை எடுத்து 


மடியினில்வைத்துக்கொண்டு ஆசை 


ஆசையாய் ஒரு முத்தம் கொடுத்து 


விட்டு, திரும்பிப் பார்கிறான் 


மனைவியை. அவளோ நன்கு 


குறட்டை விட்டுத் தூங்குகிறாள். 


உடனே கந்தசாமி கணிணியிடம் 


பேசுகிறான்.(மிக மெல்லிய குரலில்) 


என் தங்கம் நீ தான். நீ  என்னோட 


மனைவியை விட நல்லவ. அவ தர்ற  


இன்பத்துக்கும் மேலாக நீ எனக்கு


" பலான பலான " விஷயத்தை 


காட்டுற. நான் கூப்பிட்டா மட்டும் 


வர்ற. எனக்கு அதை வாங்கித்தா 


இதை வாங்கித்தா அப்படீன்னு அடம் 


பிடிக்க மாட்ட. சொல்றவேலையை 


மட்டும் கச்சிதமாக செய்வடா !!


கண்ணு. போ..போயித்தூங்கு 


அப்படீன்னு சொன்ன உடனே 


தூங்கறே பாரு அதாலே 


அவளைவிட சத்தியமா 


எனக்கு உன்னையைத்தாண்டா 


ரொம்ப பிடிக்கும் என் செல்லமே !! 


கணிணியை கட்டிப்பிடித்தபடியே 


கந்தசாமி உறங்கத் துவங்குகிறான்.                         



அன்புத் தமிழ் நெஞ்சங்களே!! 


இப்படிப் பட்ட மனக்கிறுக்கர்கள் நம் 


கந்தசாமி மட்டும் அல்ல. இந்த 


நாட்டின் ஒவ்வொரு சந்து 


பொந்துகளிலும் மூலை முடுக்கு 


களிலும் வாழ்ந்துகொண்டுதான் 


இருக்கிறார்கள் என் அன்புத் 


தமிழ் நெஞ்சங்களே !! நீங்கள் 


அனைவரும் இப்படிப்பட்ட 


நபர்களிடம் சற்று விலகி இருக்க 


பழகிக் கொள்ளுங்கள். ஏன் என்றால்  


இவர்கள் சற்று வித்தியாசம் உள்ள 


மனிதர்கள்.ஆகவே கவனம் தேவை. 


நாம இவர்களிடம் நெருங்கி பழக 


ஆரம்பித்தால் இவர்களது குணம் 


நமக்கும் வந்து  விடும்.  அதனாலே  


உஷார் !! உஷார் !! உஷார் !!! 



பின் குறிப்பு:- அன்பர்களே!! நீங்கள் 


அனைவரும் தயவு செய்து என்னை 


மன்னிக்கவும்!!இங்கு குறிப்பிட்ட 


வித்தியாசம் நிறைந்த மடிக்கணிணி 


கிறுக்குகளில் " நானும் ஒருவன் ".     


அடப் பாவி !! கெடுத்திட்டியே 


காரியத்தை !! உம்.. நீ..நல்லா 


இருக்கணும் மதுரை T.R. பாலு.



நன்றி !!  வணக்கம் !!                                         


அன்புடன் மதுரை TR. பாலு.

No comments:

Post a Comment