Wednesday, 3 July 2013

கவியரசர் கண்ணதாசன் திரைஉலகில் கடந்துவந்த கரடுமுரடான பாதைகள் !!





உடல்மண்ணுக்கு !! உயிர்தமிழுக்கு!! 


தமிழனாக  வாழ்ந்திடுங்கள் !!  


தனித்தமிழில்மட்டுமே பேசிடுங்கள்!! 


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!


தமிழ்பேசும் சகோதர,சகோதரிகள் 


நடுவில் உரையாடிடும் பொழுது !!



உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 


எனது உயிரினும் மேலாக நான் 


போற்றி வணங்கி வரும் என் அன்புத் 


தமிழ் உடன்பிறப்புகளே !!                         


உங்களில் அனைவரின் பொற்கமல 


பாதங்களை தொட்டு வணங்கி என் 


கட்டுரைதனை நான் பதிவு செய்திட 


விழைகிறேன்!!                                                        


இன்றைய தினம் கவியரசர் மறைந்த 


கண்ணதாசன் தமிழ் திரை உலகம்   


பெற்ற   தவப்புதல்வன்   என்பது  


மறைக்க முடியாத, மறுக்கக்கூடாத 


உண்மையே என்பது ஒருபுறம் 


இருந்தாலும் கூட  கவிஞரைப் 


பொறுத்த வரையில் தமிழ் திரை 


உலகம்  அவரை ஒரு மேகக்கூட்டம் 


போலத்தான் பயன்படுத்திக் 


கொண்டது என்பதுதான் முற்றிலும்  


உண்மை. முழுக்காலும் உண்மை.  


"மேகத்தால் மழை பொழியும் !!


மேகத்திற்கு லாபம் என்ன ?           


தியாகத்தால் என்னை வளர்த்த 


தெய்வம் கண்ட லாபம் என்ன ? 


இயக்குனர் சிகரம்/இமயம் எனது **** 


*^*               மானசீக குருநாதர்            *^*


**                திரு. K.பாலச்சந்தர்


அவர்கள்  எழுதி  இயக்கிய  காவியம் 


**                 " அரங்கேற்றம் "                  **  


படத்தில் மனித பெண் குயில் 


P.சுசீலா அவர்களால் பாடப்பட்டு 


கவியரசர் அவர்கள் எழுதிய 


வரலாற்று சிறப்பு மிக்க பாடல் அது. 


அந்தப் பாடலுக்கு கவிஞர் 


அவர்களே உதாரணம் ஆகிப்போனது 


அவரது துரதிர்ஷ்டம் என்று 


சொல்வதைத்தவிர தமிழில் எனக்கு 


வேறு வாசகம் தெரியவில்லை. 


ஏதோ கவிஞர் தமிழ் திரைப்பட 


உலகத்திற்கு கிடைத்த ஒரு விலை 


மதிப்பில்லா மாணிக்கம், வைரம், 


வைடூரியம், இப்படி எல்லாம் நாம் 


தமிழ் சொற்களால் அவருக்கு புகழ் 


மாலைகள் பல சூட்டி மகிழலாம். 


**                    "ஆனால்"                           **  


கவிஞர் திரைப்படத்தினால் லாப 


நோக்கினில் பத்து ரூபாய் அளவு 


கூட  சம்பாதித்திடவில்லை என்பதே 


உண்மை. அது மட்டும் அல்ல என் 


உயிரினும் மேலான அன்புத் தமிழ் 


உடன் பிறப்புகளே!! 


பல லட்சங்களை(இன்றைய 


மதிப்பின்படி  பார்த்தால்   பல 


கோடிகள்) கவிஞர் திரைப் படங்கள் 


பல எடுத்ததினால் நஷ்டங்களை 


மட்டுமே அன்னார் சம்பாதித்தது 


உண்மை.அப்படிப்பட்ட ஒரு 


சூழ்நிலையில்தான் அவர் ஒரு 


திரைப்படம் தயாரித்துக்கொண்டு 


இருந்தபோது மிகவும் அவசரமாக   


பணம் தேவைப்பட்ட நிலையில் 


அவரது உடன்பிறப்பு A.L.சீனிவாசன் 


அவர்களிடம் சென்று பண உதவி 


கேட்டபோது அவர் மறுத்துவிட 


அன்று வாழ்க்கையை  வெறுத்து 


எழுதிய பாடல்தான் :-                                           


அண்ணன்என்னடா தம்பி என்னடா !!                                      


அவசரமான உலகத்திலே !!                     


ஆசை கொள்வதில் அர்த்தம்           

  **                                                   என்னடா !!


காசில்லாதவன் குடும்பத்திலே !!         


என்று "பழனி" என்ற திரைப்படத்தில் 


அவர் எழுதிய பாடல் தான் இதுவும்.   


அது அநேகமாக 1961 அல்லது 1962ம் 


ஆண்டு என நினைக்கிறேன். சரியாக 


நினைவுப் பெட்டகத்தில் இல்லை. 


குறித்த ஆண்டு தவறாக இருந்தால் 


இச்சிறியோனை மன்னியுங்கள்.


ஒரே நேரத்தில் இரண்டு படங்கள் 


கிட்டத்தட்ட ஒரே விஷயத்தைப் 


பற்றி வெளிவந்தது அந்த 1961 


அல்லது 1962 ஆண்டினில். ஒன்று 


பத்மினி பிக்சர்ஸ் பெரும் பொருட் 


செலவில் தயாரித்த " வீரபாண்டிய 


கட்டபொம்மன்"இது வண்ணப்படம். 


மற்றொன்று கவிஞர் தயாரித்த படம் 


" சிவகங்கை சீமை " இது கருப்பு 


வெள்ளை படம். 



முதல் படம் நடிகர் திலகம் சிவாஜி 


கணேசன்,S.வரலக்ஷ்மி,பத்மினி, 


ஜெமினி கணேசன் என ஒரு 


மாபெரும் நட்சத்திரப் பட்டாளங்கள் 


நிறைந்திட்டபடம் அது.    


மற்றொன்று நான் ஏற்கனவே 


சொன்னது போல கவிஞரின் கருப்பு 


வெள்ளைப்படமான சிவகங்கை 


சீமை இதில் T.K.S. சகோதரர்கள், 


P.S.வீரப்பா, S.S.இராஜேந்திரன்,குமாரி 


கமலா,M.N.இராஜம் ஆகியோர் 


நடித்தது.                                                             


மேலேசொன்ன இந்த இரண்டு 


படங்களுமே ஆங்கிலேயர்களை 


எதிர்த்து நம் நாட்டு விடுதலைப் 


போரில் பங்குபெற்ற வீரபாண்டிய 


கட்டபொம்மனைப் பற்றியும் மருது 


சகோதரர்களைப் பற்றிய வரலாறு 


சம்பந்தப்பட்ட கதை. இந்த இரண்டு 


படங்களுமே ஒரே நேரத்தில் வெளி 


வந்தது.                                                    


அந்தப் போட்டியில் சிவாஜி படம் 


வீரபாண்டிய கட்டபொம்மன் 


மாபெரும் வெற்றி.வசூல் குவிந்தது 


ஆனால்  கவிஞர் படம் படு தோல்வி 


இத்தனைக்கும் ஆடல்,பாடல்,காட்சி 


அமைப்பு,வசனத்தில் அனல் 


தெறிக்கும் உச்சரிப்பு,மிக ரம்மியம் 


நிறைந்த இசை அமைப்பு இத்தனை 


இருந்தாலும் சிவாஜி என்ற மனித 


மதிப்பு அங்கே வெற்றி பெற்றது. 


நல்ல படம் நல்ல நடிகர்களின் 


உண்மை உழைப்பு தோல்வி 


அடைந்தது. இதுதான் சினிமாவின் 


நிலைமை.                                                        


ஆக இந்தப் படத்தில் பெரும் 


நஷ்டத்தை சந்தித்த கவிஞர் அந்த 


இழப்பைஈடுகட்ட "கவலை இல்லாத 


மனிதன் " என்றொரு கருப்பு 


வெள்ளை திரைப்படம் J.B.சந்திரபாபு 


M.R.ராதா, இராஜசுலோச்சனா 


மற்றும் பலர் நடித்த இனிமையான 


மற்றும் தத்துவ பாடல்கள் பல 


நிறைந்த படம். படப்பிடிப்பு 


முடிவடையும் நேரம். இரண்டு கால் 


ஷீட் இருந்தால் முடித்து விடலாம் 


படத்தை.சந்திரபாபு தர மறுக்கிறார் 


எல்லாம் கவிஞரின் கெட்ட நேரம் 


தான். எப்படியாவது சந்திரபாபுவின் 


கால் ஷீட் பெற்றுவிட வேண்டும் என 


நினைத்த கவிஞர் அதிகாலை 


வேளை JB. வீட்டுக்கு சென்றார். 


மானேஜர் கவிஞரிடம் சந்திர பாபு 


நன்கு உறங்குவதாக சொல்ல,எப்ப 


எழுந்து வந்தாலும் வரட்டும்.நான் 


இருந்து பாத்துட்டு அவரை படப் 


பிடிப்பு தளம் அழைத்து செல்ல 


வேண்டும் என்று சொன்னவர் முன் 


வராண்டாவில் உட்கார்ந்து 


கொள்கிறார். மணி பத்து ஆச்சு,மணி 


12 ஆச்சு,பிற்பகல் மணி 2 ஆச்சு. 


J.B.சந்திரபாபு வந்த பாடு இல்லை. 


வீட்டில் உள்ள பையனிடம் கவிஞர் 


தம்பி அண்ணன் எப்ப எழுந்திரிப்பார் 


என கேட்க,அதற்கு உதவியாளர் 


பையன்:- அண்ணன் 9 மணிக்கே 


வீட்டு  பின் வாசல் வழியே சென்று 


விட்டதாக சொன்னதைக் கேட்டு 


கவிஞர் அடைந்த துன்பத்திற்கு 


இல்லை எல்லை. அதன் பிறகு அவர் 


MR.ராதாவை சந்தித்து JBயை மிக 


சிரமப்பட்டு நடிக்கவைத்து படம் 


வெளிவருவதற்குள் அப்பப்பா 


போதும்போதும் என்றாகிவிட்டது. 


ஆனால் கவிஞரை வஞ்சித்த J.B.பாபு 


பிற்காலத்தில் MGR. வசம் சிக்கி 


சீரழிந்து மாடி வீட்டு ஏழை என படம் 


பெயர்  வைத்து பாபு கடைசிலே 


அவர் ஏழை ஆனது தான் மிச்சம். 


முற்பகல் செய்யின் பிற்பகல் 


விளையும் என்ற முது மொழிக்கு 


ஏற்ப சந்திரபாபு அடைந்த தோல்வி 


அவமானம் அவரால் இறுதி வரை 


போராட முடியாமல் செய்த துரோகம் 


அவரையே பழிவாங்கிவிட்டது 


.கண்ணதாசன் திரை உலகில் கடந்து 


வந்த கரடுமுரடான பாதைகளில் 


நாம் இதுவரை பார்த்தது ஒரு சிறு 


கடுகு அளவு மட்டுமே. 


பொறுமையுடன் படித்த அன்பு 


நிறைந்த ஆற்றல் பொதிந்த 


சிங்கங்களே !! நன்றி!! வணக்கம் !!   


அன்புடன் மதுரை TR. பாலு.










No comments:

Post a Comment