Friday, 28 June 2013

ஆண்டவன் கட்டளை !!/ கனவுலக சாம்ராஜ்யம் !!





உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 


தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!                 


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!! 


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!   


தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள் 


நடுவில் உரையாடிடும் பொழுது !!   


(முதலில் சற்று சிரமமாகத்தான் 

இருக்கும்." வைராக்கியத்துடன் " 

முயன்றால், முடியாதது என்று ஏதும் 

இங்கே இல்லை.சொல்வது சரியா?)                                                    



உலகெங்கிலும் வாழ்ந்து வரும் என் 


உயிரினும் மேலாக நான் போற்றி 


வணங்கி வரும் என் அன்புத்தமிழ் 


நெஞ்சங்களே !! அருமை மிகுந்த 


உடன்பிறப்புகளே !!


உங்கள் அனைவருக்கும் எனது 


இனிய காலை வணக்கம். (௦3.32 A.M)  


நான் சிறு வயது பையனாக அன்று 


இருந்தபோது (அநேகமாக 13 அல்லது 


15வயது என நான் எண்ணுகிறேன்)  


தமிழ் திரை உலகில் வில்லன் 


நடிகர்களில் மிகவும் பிரசித்தி பெற்ற 


வர்களுள், தலையாய வில்லன் 


நடிகர் மறைந்த P.S.வீரப்பா என்பவர். 


அவரது சிரிப்பு அந்தக் காலத்தில் 


மிகவும் ரசிகர்களை கவர்ந்ததாய் 


இருந்திருந்தது.உண்மையில்வீரப்பா, 


வில்லன் வேடத்தில்  நடித்து 


இருந்தார், என்றாலும், உண்மை 


வாழ்க்கையில், மிக மிக நல்லவர். 


அது போலவே, நம்பியார்.   அவரும் 


மிகப் பெரும்பான்மை திரை 


படங்களில் அவர் வில்லன் வேடம் 


மட்டுமே தனது முத்திரை இடப்பட்ட 


கோலமாக இருந்தாலும், உண்மை 


வாழ்கையில் அவரும் மிகச் சிறந்த 


ஆன்மீகவாதி,ஐயப்ப பக்தர், மூத்த 


குருசாமி,நல்ல எண்ணம் உள்ள 


உத்தமர். 


(         (தொடரும் ...இடை வேளை)      )



"  கனவுலக கற்பனை சாம்ராஜ்யம்"     


(இந்தப் பகுதியில் வரும் செய்திகள் 


குறிப்புகள்,சம்பவங்கள் இவை 


அனைத்தும் கட்டுரை ஆசிரியரின் 


தனிப்பட்ட கற்பனையில் அவர் 


கண்ட கனவில் /சொப்பனத்தில் 


புனையப்பட்ட/எழுதப் பட்ட 


கருத்துக்களே அன்றி வேறு எந்த 


தனிப்பட்ட நபரையோ வேறு 


எவரையோ பற்றிக் குறிப்பிடுவன 


அல்ல.இது கட்டுரை ஆசிரியரின் தன் 


நிலை விளக்கம்)


அந்த நாட்டு மக்கள் ஒரு தொன்மை 


மிக்க புகழ் கொண்ட மொழி பேசிடும் 


மக்கள்.எல்லோரையும் நல்லவர்கள் 


என்று நம்பியே தங்களது 


வாழ்க்கையை இன்றுவரை 


தொலைத்த/தொலைத்துக் கொண்டு 


இருக்கும்  பெருமையும் அந்த 


மக்களையே சாரும்.அந்த நாட்டு 


மக்கள் இருக்கிறார்கள் அல்லவா 


அவர்களுக்கு என்று தனி குணம் 


ஒன்று உண்டு. வெளுத்தது 


எல்லாமே பால் எனக்கருதும் 


கள்ளம் இல்லா வெள்ளை மனம் 


அவர்களுக்கு. கதாநாயகன் 


நல்லவன் போல நடிப்பதினால் 


அவன் நல்லவன் என்றே நம்பி 


மோசம் போகும்//போன  குணமும் 


அவர்களிடம் உண்டு. அப்படி (நடித்து 


மக்களை ஏமாற்றி அவன் 


திரைப்படத்தில் நடித்து இருப்பது 


போல) உண்மை வாழ்விலும் ஏழை 


எளிய மக்களுக்கு வாழ வழி 


வகுப்பான், வறுமைக் கோட்டுக்கு 


கீழே உள்ள மக்களின் வாழ்வினில் 


"ஒளி விளக்கு" ஏற்றி வைப்பான், 


அவனது கை,"அன்னமிட்ட கை", 


இந்த நல்லவேடம் போட்டவன் 


கைதனில் அந்த புண்ணிய பூமியை 


கொடுத்தால் அதை "புதிய பூமி " 


ஆக்கி   மக்களது "உரிமைக்குரல்" 


தனை உலகெங்கிலும் ஒலிக்கச் 


செய்திடுவான் என நம்பி அவர் 


கையிலும் அந்த நாட்டை ஏறத்தாழ 


13 ஆண்டுகட்கு மேலாக நிர்வகிக்க 


ஆளத்தந்தனர் அம்மக்கள். அந்த 


நல்ல மகான் கிழவிகளை எங்கே 


கண்டாலும் அப்படியே பாசம் 


இருப்பது போல எல்லோரையும் 


நம்ப வைக்க, அந்த வயது முதிர்ந்த 


மூதாட்டியை கட்டி பிடித்து அவளது 


நல்ல ஆசிகளை வாங்குவது போல 


நடிப்பார் அவர் "எங்க வீட்டுப் 


பிள்ளை "ஏழைகளின் தோழர் என்று 


நம்பி ஆட்சிப் பொறுப்பினை அந்த 


போலியான வேடம் தரித்த 


நல்லவர்கையில் நாட்டையே 


ஆளும் வாய்ப்பைக் கொடுத்து அகம் 


மகிழ்ந்தவர்கள் தான் அந்நாட்டு 


மக்கள். அந்த நல்லவர் (போல 


நடித்து எமாற்றிவர்) அவர் அந்த 


நாட்டைக் கெடுத்துக் குட்டிச் சுவர் 


ஆக்கியது போதாது என கருதி தனது 


காலத்திற்குப் பிறகு தான் கண்ணை 


மூடிய பிறகு அந்த நாட்டை 


தன்னைப்போலவே கெடுத்துக் 


கெட்டழிவு செய்வதற்கு தனது 


அரசியல் வாரிசாக அந்த நாட்டைக் 


கெடுத்துக் குட்டிச் சுவர் போலவே 


ஆக்குவதற்கு  மனத்தில் தீர்க்கமாய்


முடிவெடுத்து இன்னொரு "வசந்த 


சேனையாக" மூலையில் கிடந்த 


அதற்கு முடிசூடிவிட்டு விண்உலகம் 


சென்று விட்டார். அந்த மூலையில் 


கிடந்தது அந்த நாட்டைக் கெடுத்து 


நாசக்காடாக ஆக்குகிறது என்றால் 


என்ன பொருள்? அதுதான் அந்த 


நாட்டு மக்களின் தலை எழுத்து. 


எல்லாம் வல்ல ஆண்டவனமட்டுமே 


இந்தத் தலைவிரி கோலத்தை 


மாற்றி அமைக்கும் வல்லமை 


பெற்றவன். அவனை அந்த 


ஆண்டவனை நாட்டு நல்ல அறிவு 


படைத்த மக்கள் தற்போது 


பிரார்த்தனை செய்யத் தொடங்கி 


விட்டார்கள்.இறைவா சீக்கிரம் இந்த 


போக்கினைத் தடுத்து நிறுத்து. 


மாற்றத்தினை கொண்டு வா என 


கேட்கத் துவங்கிவிட்டனர் என்று 


சொல்லிகொண்டிருக்கும் போது 


கட்டுரை ஆசிரியரின் வீட்டுஅழைப்பு

மணி ஓசை கேட்டிட ஆழ்ந்த 


தூக்கத்தில் மேலேசொன்ன 


நல்லதோர் சம்பவங்கள் நிறைந்த 


அவரின்  "கனவுல கற்பனை 


சாம்ராஜ்யம்" அப்போது கலைந்து 


விடுகிறது.)                                                                


இப்போது இடைவேளை முடிந்து 


மீண்டும் படம் துவங்குகிறது. 


இந்தக் கட்டுரையின் தலைப்பில் 


நான் குறிப்பிட்டுள்ள இறைவன்  


ஆண்டவன், அவனின் கட்டளை 


என்ன அது எத்தனை என்று P.S.V.     


பிக்சர்ஸ் அந்தக் காலத்தில் எடுத்த 


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 


அழகு ராணி தேவிகா முதலியோர் 


நடித்து மறைந்த சிறந்த இயக்குனர் 


A. பீம்சிங் அவர்களின் இயக்கத்தில் 


வெளி வந்த வில்லன் நடிகர் P.S. 


வீரப்பா தயாரித்துஅளித்த  படம்தான்    


" ஆண்டவன் கட்டளை "                       


அந்தப் படத்தில் சமீபத்தில் இயற்கை 


எய்திய மதுரை மண்ணின் மைந்தன் 


T.M.சவுந்திரராஜன் பாடிட சிவாஜி 


வாய் அசைக்க கண்ணதாசன் 


இயற்றிட மெல்லிசைமன்னர்கள் 


இசை அமைக்க வெளிவந்த பாடல் 


தான்:-



 "  ஆறு மனமே ஆறு !! 


  அந்த ஆண்டவன் கட்டளை ஆறு "                    



என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க 


பாடல். நானும் பாருங்க,கடந்த 45 


ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் 


பாடலில் வரும் அந்த ஆறு கட்டளை 


அதனை மனப்பாடம் செய்திட  


வேணும் என எண்ணி முயற்சி பல 


செய்தது உண்டு. அந்த முயற்சி 


எனக்கு நேற்று வரை பலிக்காமல் 


இருந்தது.  ஆனால் நேற்று அந்தப் 


பாடலை நான் அரும்பாடுபட்டு பதிவு 


செய்தேன். இப்போது நான் அந்தப் 


பாடலை உங்கள் அனைவரின் 


பார்வைக்கு இதோ தருகிறேன்:-          



ஆறு மனமே ஆறு  !! அந்த 


ஆண்டவன் கட்டளை ஆறு !!                       


தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு !! 


தெய்வத்தின் கட்டளை ஆறு !!       


தெய்வத்தின் கட்டளை ஆறு !!                      


*                                     (ஆறு மனமே ஆறு)           


ஓன்றே சொல்வார் !!


ஓன்றே செய்வார் !! 


உள்ளத்தில்உள்ளது அமைதி !!                    


இன்பத்தில் துன்பம் !!                                   


துன்பத்தில் இன்பம் !!                             


இறைவன் வகுத்த நியதி !!                       


சொல்லுக்குசெய்கைபொன்னாகும்!!  


வரும்துன்பத்தில் பட்டாகும்!!                 


இந்த இரண்டு கட்டளை அறிந்த 


மனதில் எல்லா நன்மையும் 


உண்டாகும் !!


எல்லா நன்மையையும் 


உண்டாகும்!!                      (ஆறு மனமே) 



உண்மையைச் சொல்லி !!                           


நன்மையைச் செய்தால் !!                         


உலகம் உன்னிடம் மயங்கும் !!               


நிலைஉயரும்போதுபணிவு                  


கொண்டால் !!


உயிர்கள் உன்னை வணங்கும் !!        


உண்மை என்பது அன்பாகும் !!


பெரும் பணிவு என்பது பண்பாகும்!!    



இந்த நான்கு கட்டளை அறிந்த 


மனதில் எல்லா நன்மையையும் 


உண்டாகும் !!எல்லா நன்மையையும்  


உண்டாகும் !!    (ஆறு மனமே ஆறு )   



ஆசை கோபம் களவு கொள்பவன் !!    


பேசத்தெரிந்த மிருகம் !!                        


அன்புநன்றி கருணை கொண்டவன்!! 


மனித வடிவில் தெய்வம் !!                       


இதில் மிருகம் என்பது கள்ள மனம் !!


உயர் தெய்வம் என்பது பிள்ளை 


மனம்!! 


இந்த ஆறு கட்டளை அறிந்த 


மனமே  ஆண்டவன் வாழும் 


வெள்ளை மனம் !! ஆண்டவன்                  


வாழும் வெள்ளை மனம் !!                                        



ஆறு மனமே ஆறு !! அந்த                                 


ஆண்டவன் கட்டளை ஆறு !!                              


தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு  


தெய்வத்தின் கட்டளை ஆறு !!               


தெய்வத்தின் கட்டளை ஆறு !!



இத்துடன் பாடல் முடிகிறது !!           




நன்றி !! வணக்கம் !!                                     


அன்புடன் மதுரை T.R. பாலு.           


மீண்டும் நாளை சந்திப்போமா 


நேயர்களே !!


No comments:

Post a Comment