கட்சிக்கு உண்மையான தலைவர் யார் ?
உடல் மண்ணுக்கு !! உயிர் தமிழுக்கு !!
தமிழனாக வாழ்ந்திடுக !!
தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!
ஆங்கிலமொழிக்கலப்புஏதுமின்றி !!
தமிழர்களுடன் உரையாடும்போது !!
உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என்
அன்புத்தமிழ் நெஞ்சங்களே !!
ஆண்டவனால் படைக்கப்பட்ட இந்த
பூமியில் எத்தனை எத்தனையோ
நாடுகளில் ஏகப்பட்ட கட்சிகள்
உள்ளது.ஆனால் அந்த அத்தனை
நாடுகளிலும் உள்ள அரசியல் கட்சி-
களுக்கும் இல்லாத ஒரு பெரும்
சிறப்பு இங்கேநம்தாயகமாம் தமிழ்த்
திருநாட்டினில் உள்ள ஒரே ஒரு
கட்சிக்கும் அதன் தலைவருக்கும்
மட்டுமே பொருந்துவதாக உள்ளது.
அப்படி என்னய்யா பெரிய சிறப்பைக்
கண்டீர்கள்.சீக்கிரம் உளராமல்
சொல்லித் தொலையும் என்று
உங்களில் அனைவரும் மனதுக்குள்
எண்ணுவது என் காதுகளில்
விழாமல் இல்லை அன்பர்களே!!
விடை இதுதான் அன்பர்களே !!
அப்படிப்பட்ட சிறப்பு, கட்சியின்
பெயருக்கும், கட்சித் தலைவரின்
பெயருக்கும், இருக்கும் ஒற்றுமை
உள்ள ஒரே ஒரு அரசியல்கட்சி, இந்த
பூவுலகில் அந்தப் பெரும் சிறப்பினை
பெற்ற இயக்கம் தான் பேரறிஞர்
அண்ணா அவர்களால் உருவாக்கப்-
பட்டு கலைஞர்அவர்களால்கருத்துச்
செறிவுடன் வளர்க்கப்பட்ட நமது
திராவிட முன்னேற்றக் கழகம் தான்
அந்த சிறப்பு பெற்றது அன்பர்களே
அதாவது இந்த இயக்கம் ஒன்றிற்கு
மட்டுமே இயக்கமதின் பெயரும்
அந்தக் கட்சியின் தலைவரின்
பெயரும் ஒருசேர இணைந்து
இருப்பதை நாம் காணலாம்.
அதாவது திராவிட முன்னேற்றக்
கழகம் என்பதை சுருக்கமாக நாம்
தி.மு.க. என்றே அழைப்பது வழக்கம்.
அதுபோலவே தலைவர் கலைஞர்
அவர்களுக்கும் இதே பெயர் சுருங்க
உரைத்திடின் வருவதுதான்
விந்தை.திருக்குவளை முத்துவேலர்
கருணாநிதி என்ற பெயரில் உள்ள
மூன்று வார்த்தைகளின் முதல்
வார்த்தையை மட்டும் எடுத்து
வைத்து படித்துப் பாருங்கள்.
அப்போது உங்களுக்கே புரியும்.
அப்போதும் வருவது தி.மு.க.
என்பதே.
இப்படிப்பட்ட இமாலாய சிறப்பு
பெற்ற இயக்கம் திராவிட
முன்னேற்றக் கழகம். அதன் இயக்க
தலைவர் முத்தமிழ் அறிஞர்
கலைஞர் அவர்களே !!
வாழ்க இந்த மக்கள் இயக்கம்.
வளர்க கலைஞர் அவர்களின்
பொதுத் தொண்டு !!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
No comments:
Post a Comment