உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
தமிழனாக வாழ்ந்திடுக !!
தனித்தமிழில்ம்ட்டுமேபேசிடுங்கள்!!
ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!
தமிழ்பேசும்சகோதர,சகோதரிகள்
நடுவில் உரையாடும்போது !!
அன்புள்ள உலகெங்கிலும் வாழ்ந்து
வரும் என் இனிய தமிழ்
நெஞ்சங்களே!!
அன்று அந்த ஊர் இராமநாதபுர
மாவட்டம். இன்று சிவகங்கை
மாவட்டம். அந்தத் திருத்தலத்தின்
பெயர் " சிறுகூடல்பட்டி" அப்படி
அந்த சிற்றூர் என்ன அவ்வளவு
சிறப்பு பெற்றது என நீங்கள்
அனைவரும் உங்கள் புருவங்களை
சற்றே உயர்த்தி பார்ப்பதை எனது
மனக்கண்ணால் பார்க்க முடிகிறது.
ஆம்! அன்பர்களே !!
அந்த சிற்றூரில் பிறந்த மகான்தான்
கவியரசர் கண்ணதாசன். இன்று
2௦-௦6-2௦13அவர் பிறந்த நாள். தமிழ்
மொழிமேல்மாறாப்பற்றும் உணர்ந்த
விசுவாசமும் கொண்ட தமிழர்கள்
அனைவரும் சிறப்புடன் கொண்டாடி
மகிழ்ந்திட வேண்டிய திருநாள்
இன்று. இவர்போன்ற கவியரசர்
ஒருவர் இந்த தமிழ்மண்ணில்
பிறந்திடத்தான் நாம் என்ன தவம்
செய்திருக்க வேண்டும். நான்
எண்ணிப் பார்கிறேன் என் அன்புத்
தமிழ் நெஞ்சங்களே !! கையில்
வெள்ளைக் காகிதமும் எழுது
கோலும் பிடித்தவர்கள் எல்லோரும்
கவிஞர்கள் ஆகிவிட முடியாது.
பொதுவாக நான் என் நண்பர்களிடம்
பேசும் போது வேடிக்கையாக
ஒன்றை கூறுவேன். அது என்ன
என்றால் பூணூல் போட்டவன்
எல்லாம் அய்யனும் அல்ல.
பேனாவைக் கையில் பிடித்தவன்
எல்லோரும் கலைஞரும் அல்ல
கவிஞரும் அல்ல அன்பர்களே.
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்
நடித்துவெளிவந்த"இரத்தத் திலகம்"
என்னும் திரைப்படத்தில் அவர்
எழுதிய அந்தப் பாட்டுக்கு கவிஞர்
அவர்களே நடித்தும் காட்டிய பாட்டு
அவர் வாழ்ந்த காலம் மற்றும் அவர்
மறைந்தகாலம் இவை இரண்டிற்கும்
பொருத்தமாக பாடல் எழுதி அவர்
வரலாற்றுச் சிறப்பினைப் பெற்றார்
என்றால் அது மிகையானது அல்ல.
பாடல் இதோ உங்கள் கவனத்திற்கு:-
ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு!
ஒரு கோலமயில்என் துணைஇருக்கு
இசைப் பாடலிலே என் உயிர்த்துடிப்பு
நான் பார்பதெல்லாம் அழகின் சிறப்பு
காவியத்தாயின்இளையமகன் !!
காதல்பெண்களின் பெருந்தலைவன்
பாமரஜாதியில் தனிமனிதன்-நான்
படைப்பதனால்என்பேர்இறைவன் !!
மானிட உலகை ஆட்டிவைப்பேன்!!
அவன் மாண்டுவிட்டால் அதை பாடி * வைப்பேன்!! நான்நிரந்தரமானவன்அழிவதில்லை
எந்தநிலையிலும்எனக்குமரணம்இல்லை!!
அன்பிற்கினிய என் தமிழ்
நெஞ்சங்களே!! பார்த்தீர்களா. என்
கவி அரசரின் தீர்க்கதரிசனம்
நிறைந்த வரிகள். எழுதிய பாடலில்
உள்ள வரிகளைப் போலவே தான்
வாழ்ந்து காட்டிய அந்தஉத்தமக் கவி
பெயர் வாழ்கவே !!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R. பாலு
No comments:
Post a Comment