Thursday, 20 June 2013

நல்லதா ? இல்லை கெட்டதா ?




உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு !! 


தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!        


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!! 


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!  


தமிழ்பேசும் சகோதர,சகோதரிகள் 


நடுவே உரையாடிடும் போது !!               



உலகெங்கிலும் வாழ்ந்துவரும் 


எனது உயிரினும் மேலான அன்புத் 


தமிழ் உடன்பிறப்புக்களே !!உங்கள் 


அனைவருக்கும் என் இதயம் கனிந்த 


வாழ்த்துக்களோடு கூடிய வணக்கங் 


களை சமர்பித்துக் கொள்கிறேன்.               


*       நல்லதா, இல்லை, கெட்டதா?           


இன்றைய தினம் நாம் இறைவன் 


தந்த இந்த விலைமதிப்புமிக்க நம் 


உடல் உறுப்புகளை நவ நாகரீக 


பழக்க வழக்கங்கள் பலவற்றில் 


பாழடித்துக்கொண்டுஇருக்கிறோம். 


அதில் தலையாயது எது என்று 


கேட்டால் சூயிங்கம் சுவைப்பது. 


இதைப்போல நமது வயிற்றின் 


இரைப்பைக்கு கேடு விளைவிக்கும் 


பழக்கம் எதுவும் இல்லை. சூயிங்கம் 


நமது வாயில் சென்று அதை மெல்ல 


கொஞ்சம்கொஞ்சமாக அசை 


போட்டு சுவைக்கத் துவங்கியதும் 


ஏதோ உணவுப் பொருள் வயிற்று 


க்குள் வரப் போகிறது என்று எண்ணி 


இரைப்பையில் செரிமான பணிசெய்


அமிலங்கள் சுரக்கத் துவங்குகிறது. 


ஆனால் எந்த உணவுப் பொருளும் 


உள்ளே வராததால் அந்த 


அமிலங்கள் ஆங்காங்கே தேங்கி 


நின்று நமக்கு தாங்கொண்ணாத 


வலியைத் தரும் "அல்சர்" என்னும் 


இரைப்பை புண்கள் அங்கே 


உண்டாகி நமக்கு தீராத வயிற்று 


வலியை இந்த சூயிங்கம் உண்ணும் 


பழக்கம் ஏற்படுத்தித் தருகிறது. இது 


மருத்துவர்களால் ஒப்புக்கொள்ளப் 


பட்ட உண்மை. எனவே நான் உங்கள் 


அனைவரையும் வேண்டிவிரும்பிக் 


கேட்டுக்கொள்வதெல்லாம் நீங்கள் 


இதுவரை அந்த சூயிங்கம் 


உண்ணும்/சுவைக்கும் பழக்கம் 


உள்ளவராக இருந்திருந்தாலும் இனி 


முதற்கொண்டு அதனை நிறுத்தி 


வயிறு வலி நிகழா வண்ணம் 


உங்கள் உடல் உறுப்புகளை 


பாதுகாத்து நீண்ட நாள் நோய்நொடி 


இல்லாமல் வாழ்ந்திட வேண்டுமாய் 


கேட்டுகொண்டு நன்றி பாராட்டி 


விடை பெறுகிறேன். அன்புடன் 


மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment