Sunday, 23 June 2013

ஆண் இனத்திற்கு அழிவு ஆரம்பம் ஆவது எப்போது ?





உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!!


தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!                


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!  


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!   


தமிழ்பேசும்சகோதர,சகோதரிகள் 


நடுவில் உரையாடிடும்பொழுது !!        



உலகெங்கிலும் அன்புடனும் நல்ல 


தமிழ்ப்பண்புடனும் வாழ்ந்துவரும் 


என்உயிரினும்மேலான அன்புத்தமிழ் 


உடன்பிறப்புகளே!!                                            



முதற்கண் உங்கள் அனைவரையும் 


வணங்கி மகிழ்கிறேன்.                



இன்றைய தினம் சற்று வித்தியாசம் 


நிறைந்த ஒரு தலைப்பில் உங்கள் 


அனைவரையும் நான் இன்று 


சந்திக்கிறேன்.                                                


ஐம்பெரும்  காப்பியங்களுள் 


ஒன்றான இளங்கோ அடிகளின் கை 


வண்ணத்தில் உருவான 


"சிலப்பதிகாரம்" அதில் கோவலன் 


எவ்வாறு அழிவைச் சந்திக்கிறான் 


என்பதனை கோவலனே சொல்வது  


போன்றஒரு செய்யுள்அதன் பொருள்                                  


பொதிந்த கருத்துக்களைப்பாருங்கள் 


என்அன்புத்தமிழ்உடன் பிறப்புக்களே   


பாடல் இதோ உங்கள் கண்களுக்கு:-  


நண்டு சிப்பி வேல்கதலி நாசமுறுங்கால் தான்    


கொண்ட கருவேஅழிக்கும்கொள்கையதுபோல் 


பண்டு தனம் கல்வி மனம்பாழடையும்நாள் உளம் 


பாவையர்மேல்நாடுமெனபடித்துணர்ந்தும்நான்  


கொண்டவளைத்தான் துறந்து மாதவி சதமென     


நினைத்தேனே !!                                                                             


என்பது பாட்டு. இந்தக் காவியத்தின் 


வாயிலாக ஆண் இனம் கற்றுக் 


கொள்ள வேண்டிய பாடம் என்ன 


என்றால் இறைவனால் 


படைக்கப்பட்ட இந்த பூவுலகில்    


நண்டு, சிப்பி,கதலி என சொல்லிடும் 


வாழை இனத்தின் ஓர் வகை ஆக 


இந்த மூன்று இனங்களும் தான் 


தனது வாரிசுகளை இவ்வுலகிற்குத் 


தரும் வேளையே அவைகளின் 


இறுதி வாழ்நாள் தினமாக ஆகிறது 


அதுபோல ஒரு ஆண் மகனின் புகழ், 


செல்வம்,படித்தபடிப்பு செம்மையான 


அவனுள்ளம் ஆக இவையனைத்தும் 


என்றுஒரு பாவையின்மேல் இவன் 


உளம் நாடுகிறதோ அன்றேஅழிந்து 


போம் என நான் படித்து அறிந்தும் 


நான் முறைப்படி தொட்டுத் தாலி 


கட்டிய என் புனித உளங்கொண்ட 


கண்ணகியை துறந்து, இந்த ஆடல் 


அரசி,பூம்பாவை,(இவர்கள் பொருட் 


பெண்டிர் என வள்ளுவர் காலத்தே 


அழைக்கப்பட்டவர்கள்)மாதவியை 


உண்மை,நிஜம்,வாழ்க்கைத்துணை 


என்று நினைத்து மேற்சொன்ன 


அனைத்தும் இழந்து இன்று கள்வன் 


என்னும் பட்டத்தையும் பெற்று இந்த 


நிலைக்கு ஆளாகிப்போனேனே 


என்று கோவலனின் மனம் வருத்தம் 


அடைவதாக புனையப்பட்ட இந்தப் 


பாடல் ஆண் இனத்திற்கு ஒரு 


எச்சரிக்கைமணியாகும்.பொதுவில் 


தமிழிலோர்சொல் வழக்கு ஒன்று 


உண்டு. அது என்னவென்றால்:-   


கிளி போன்றதொரு மனைவி 


வீட்டில் இருந்தாலும் கூட குரங்கு 


போல் ஒரு"வைப்பாட்டி" வைத்துப் 


பார்ப்பது உலக வழக்கம் என்று.   


நான் ஏற்கனவே முந்தைய கட்டுரை 


ஒன்றில் இதுபற்றி குறிப்பிட்டு 


இருந்ததை மீண்டும் அன்பர்களின் 


நினைவுக்கு வழங்குகிறேன். 


மனைவி இருக்க மேலும் ஒரு 


பெண்ணின்மேல் ஆணுக்கு மையல் 


உண்டாவதன் விளைவு ,அதனால் 


வந்த வரவு,இந்தப் புது உறவு,இவள் 


இந்த ஆண் மகன் மனப் பார்வையில் 


மனைவியை விட சகல விதமும் 


சிறந்தவளாக,  உயர்ந்தவளாக, 


இவன் "உள்ளத்தேவையை புரிந்து" 


நடந்துகொள்பவளாகவே அமைவது 


தான்இந்தப்பெண்களுக்கு கிடைக் 


கும் தொழில் ரீதியான அங்கீகாரம் 


என்றே நான் கருதுகிறேன். அடுத்து 


மிகவும் இளமை அழகும் எழிலான 


தோற்றமும் உள்ள இந்த பாவை ஏன் 


"பாட்டி"எனும்அடைமொழிச்சொல் 


(வைப்பாட்டி)கொண்டு அழைக்கப் 


படுகிறார்கள். அதற்கும் ஒரு 


காரணம் உள்ளது அன்பர்களே.  


பொதுவாக இந்த ஆண்கள் இறுக்கி-   


றார்களே இவர்களது கோபம்,வேகம் 


அடக்கிஆளும்குணம்இதுஎல்லாமே 


முதலில் இவனுக்கு வாக்கப்பட்டு 


வரும் மனைவியிடம் மட்டுமே 


செல்லுபடியாகிறது.  ஆனால் இந்த    


("பொருட்பெண்டிர்")பூம்பாவையர் 


மீது மையல் கொண்ட ஆண்களால்  


மனைவிமேல்காட்டியஅடக்கி 


யாளும் குணத்தை இவர்கள்மீது 


காட்டிட இயலாதது மட்டும் அல்ல 


அந்தப்பெண்கள் இந்த மோக வெறி 


கொண்ட ஆணைஆட்டி வைப்பாள். 


இந்தக்கடைசி வார்த்தையான ஆட்டி 


வைப்பாள் என்றசொல்லை திருப்பி 


திருப்பிசொல்லிப்பாருங்கள் விடை 


உங்களுக்கு தானாக புரிந்திடும்.அது 


"வைப்பாட்டி" என்றே வரும். 


இந்திரன் கெட்டதும் பெண்ணாலே!! 


சந்திரன் கெட்டதும் பெண்ணாலே 


என்னும் முதுமொழிக்கு ஏற்ப ஆண் 


இனம் அழிய முற்படுகிறது என்று 


சொன்னால் மனைவியை விடுத்து 


பிறபெண்ணிடம் இவன் எப்போது 


உடலுறவு கொள்ள முனைகிறானோ  


அதுமுதல் ஆரம்பம் ஆகிறது 


என்பதே இந்தக் கட்டுரையின் இறுதி 


விடையாக நான் எடுத்துக்கூறி 


இதுவரை இந்தக் கட்டுரையை மிக 


பொறுமையோடு படித்த அன்புத் 


தமிழ் நெஞ்சங்கள் அனைத்திற்கும் 


என் உளமார்ந்த மனமார்ந்த நன்றி 


வணக்கமதை  காணிக்கையாக்கி 


விடை பெறுகிறேன்.                                       


அன்புடன் மதுரை T.R.பாலு.

No comments:

Post a Comment