Thursday, 11 July 2013

காற்று உள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும் !!






உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!!




உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 


என் உயிரினும் மேலான அன்புத் 


தமிழ் நெஞ்சங்களே !!                                 



உங்கள் அனைவருக்கும் என் இதயம்  


கனிந்த வாழ்த்துக்களுடன் கூடிய 


வணக்கங்கள்!!.                                                      




இன்றைய தினம் நம் தமிழ்நாட்டின் 


மின்சார நிலைமை மிகவும் மகிழ்ச்சி  


தரும் நிலையில் இருப்பதைக்கண்டு 


மிகவும் மனம் மகிழும் தமிழர்களுள் 


நானும் ஒருவன்.                                                   



ஆனால் அதே நேரம் தென்மேற்குப் 


பருவமழை  இப்போது தொடங்கி 


இருப்பதினால் காற்றாலை மின்சார 


உற்பத்தி மிக அதிக அளவில் 


இருப்பதினால் தமிழ் நாட்டில் மின் 


வெட்டு என்பதே இல்லை என்று 


சொல்லிடும் நிலைதனில் நாம் 


இருக்கின்றோம்.  ஆனால் தமிழில் 


ஒரு சொல் வழக்கு ஒன்று உண்டு. 


கட்டிகொடுத்த சோறும் !!                                   


சொல்லிகொடுத்த பாடமும் !!                         


எந்நாளும் கூட வராது !!


என்று சொல்வார்கள்.  



அது போலவே இந்த  காற்றாலை 


மின் உற்பத்தி மிஞ்சிமிஞ்சிப் 


போனால்  இன்னும் 35 நாட்கள்தான் 


கிடைக்கும்.


 ஆனால் ?அதற்கு அப்புறம் ?    


பழைய குருடி !! கதவைத் திறடி !! 


என்ற கதைதான். மீண்டும் 16 மணி 


நேரம் முதல் 19 மணி நேர மின்சார 


வெட்டினை இந்த தமிழகம் சந்திக்க 


வேண்டிய நிலை தான் காத்துக் 


கொண்டு இருக்கிறது.இதனை ஆட்சி 


நடத்துவர்கள் சற்றே ஆழமாக 


சிந்தித்து மக்களை இந்த 


கொடுமையானமின்சார வெட்டினில்      


இருந்து காப்பாற்றினால் தான் 


அடுத்த ஆண்டு வரும் நாடாளுமன்ற 


தேர்தலில் வாக்குகள் பெறுவதைப் 


பற்றி நினைத்துப் பார்த்திட முடியும் 


என்பதனை ஆளும் அரசுக்கு 


அறிவுரையாக கூற விரும்புகிறேன்.   


"சொல்லுறதை சொல்லிபுட்டேன் !!                   


செய்றதை செஞ்சுக்குங்க !!                     


நல்லதுனா கேட்டுக்குங்க !!                     


கெட்டதுன்னா விட்டுடுங்க !!                       


மீண்டும் நாளை சந்திப்போமா ?           


நன்றி !! வணக்கம் !!                                     


அன்புடன் மதுரை TR.பாலு.

No comments:

Post a Comment