Monday, 30 December 2013
Saturday, 28 December 2013
தொடர்ச்சி...பாகம் எண்.2. கண்டிப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும் ( A ) STRICTLY FOR ADULTS ONLY !!
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்
என் அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
வணக்கம்.
" கண்டிப்பாக வயது
வந்தவர்களுக்கு மட்டும் " என்ற
தலைப்பினில் நான் எழுதிய
கட்டுரையின் இரண்டாம் பாகம்
உங்கள் அனைவரின் கண்களுக்கும்
விருந்து படைக்க இதோ. இங்கே,
காத்துக்கொண்டு இருக்கிறது.கண்டு
பின் அந்தக் கட்டுரையை மனதினுள்
கொண்டு சென்று, பின் அதை
உங்கள் கருத்தால் உண்டு
மகிழ்ந்திடுவீர் !! நன்றி !! வணக்கம்!!
இந்தக் கதை நடபெற்றதாகச்
சொல்லப்படும் ஒரு நாட்டின் தலை
நகரம்தான் பாக்தாத் ஆகும். உலகின்
தலைசிறந்த அழகிகள் அவதரித்த
ஒரு புண்ணிய பூமியது.
ஆண்களாகப் பிறப்பு எடுத்த
அத்தனை பேர்களும் அந்த
நகரத்தின் மண்ணை எடுத்து
தங்களது நெற்றியில் தொடங்கி
உடம்பு முழுவதும் நாள் ஒன்றிற்கு
மூன்று முறை அல்ல முப்பதுமுறை
பூசிக்கொண்டாலும் கூட எடுத்த
ஜென்மம் கடைத்தேறாது!!
அன்பர்களே !! ஆம் அதுதான்
உண்மை !!. அது மட்டுமே உண்மை!!.
அந்த நகரத்தில் உள்ள
அழகியபெண்களைஒருமுறை,ஒரே
ஒரு முறை மட்டும் சுகித்திட
வேண்டும் என்று முடிவெடுத்தால்
அதற்கு நீங்கள் இன்னும் பல
பிறவிகள் எடுத்தாக வேண்டும்.
அழகோ அழகு. கொள்ளை அழகு.
உம்.. அங்கே பிறந்து அவர்களை
அனுபவிக்க வேண்டும் எனில்
அதற்கு எத்தனை ஜென்மங்கள்
புண்ணியம் செய்திருக்க
வேண்டுமோ ? அதற்கு உங்கள்
ஜாதகத்தில் பூர்வபுண்ணிய
ஸ்தானம் எவ்வளவு வலுப்பெற்று
இருக்க வேண்டும் ? யான்
அறிந்திலேன் பராபரமே !!
ஒவ்வொரு பெண்ணிடமும்
ஒவ்வொரு விதமான இன்பமும்
சுகமும் கிடைக்குமாம். ( யோவ்..
நான் ஒன்னும் எங்கேயும்,நிஜமா
யார்கிட்டேயும் போகலையா !! என்
பொண்டாட்டியைத் தவிர இதுநாள்
வரைக்கும் வேற ஒரு பொம்பளைய
என் மனசாலகூட நினைச்சவனும்
நான் இல்ல அன்றி சுகிச்சவனும்
நான் இல்ல. ஆமாசொல்லிபுட்டேன்.
நம்புனா நம்புங்க !! நம்பாங்காட்டி
போங்க. எனக்குக் கவலையே
இல்ல. I DON'T CARE.) எத்தனை
கிண்ணத்தில் இட்டாலும் மது
அத்தனையும் சுவை ஒன்றாகும் !!
சித்திரக் கிண்ணத்தில் பேதம்
இல்லை !! உன் சிந்தையிலேதான்
பேதமடா !! மன்மத லீலை !!
மயக்குது ஆளை !! மந்திரம் போலே
சுழலுது காளை !!
என்ற கவியரசர் கண்ணதாசனின்
கருத்துக்களில் இருந்து நான் சற்றே
மாறுபடுகிறேன் என்று எனது
நண்பன் மாரிச்சாமி சொல்கிறான்.
அது எந்த அளவுக்கு உண்மையோ
நான் அறிந்திலேன். ஏன் ? என்
என்றால் எனக்கு எனது அன்பான
மனைவியைத் தவிர வேறு எந்தப்
பொம்பளையையும் பாத்ததும்
இல்ல.....உம்...........தும்
இல்லை..யோவ்..யோவ்.. எதுக்கு
எடுத்தாலும்கெட்ட எண்ணம்தானா?
உம்...இல்ல....கேக்கிறேன்...பாத்ததும்
இல்ல....பேசினதும் இல்ல....
அப்டீன்னு தான்யா எழுதவந்தேன்...
ஆனா....அதுக்குள்ளே கையிலஉள்ள
நரம்பு நங்குன்னு சுண்டி
இழுத்துக்குச்சு. உம்...அப்புறம்... இப்ப
நாம கட்டுரைகுள்ளாகச்
செல்வோமா எனது அன்புத்தமிழ்
பேசும் நண்பர்களே !!
மனைவி அமைவதெல்லாம்
இறைவன் கொடுத்த வரம் !! மனது
மயங்கி என்ன உனக்கும் வாழ்வு
வரும் என்று அந்தப் பாடல் வரிகள்
வரும். அந்தப் பாடலின்
நடுப்பகுதியில் ஒரு காவியச் சிறப்பு
மிகுந்த பகுதி என்று ஒன்று உண்டு....
பொருத்தம் உடலிலும் வேண்டும் !!
புரிந்தவன் துணையாக வேண்டும் !!
கணவனின் துணையோடுதானே
காமனை வென்றாக வேண்டும் !!
என்று !! என்ன ஒரு அற்புதமான
வரிகள்இது. மனிதகுலம் இந்த
மண்ணில் முற்றிலுமாக
அழிந்துபோகும் வரையிலும்
அழிந்திடாத காலம் என்ற
பெட்டகத்தின் கல்வெட்டில்
பொறிக்கப்பட்ட வரிகள் இது.தங்கத்
தகட்டில் வைர ஊசியின்
முனைகொண்டு எழுதிட வேண்டிய
வாசகம் இது)
ஆக இப்படிப்பட்ட புண்ணியம்செய்த
முஹலாய சக்கரவர்த்தி சுல்தான்
அஹமதுவிற்கு ஏகப்பட்ட
மனைவிமார்கள், இது போதாது
என்று நூற்றுக்கணக்கான அந்தப்
புரத்து அழகிகள் வேறு ( டேய்!! தம்பி
யார் யாருக்கோ வயித்தெரிச்சல்
போல பல சத்தம் வருதுடா தம்பி !!
அத்த முதலில் கவனி !!) அப்படி
இருக்கும் வேளையில் சுல்தான்
அஹமது இந்த அத்தனை
பெண்மணிகளையும் அவரவர்களது
ஆசைதீர்ந்திட அனுதினமும்
அனுபவித்து வந்தான், அதற்கு
என்ன காரணம் ? அங்குதான் ஒரு
விஷயம் அது ஒரு பரம இரகசியம்
அன்பர்களே !! இந்தக் கதை மீண்டும்
நாளையும் தொடர்கிறது. அதுவரை
ஒரு சிறிய விளம்பர இடைவேளை!!
சற்றே பொறுத்து இரும் பிள்ளாய் !!
மீண்டும் சந்திப்போம்.
நன்றி!! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R. பாலு.
எனதருமைவாசகப் பெருமக்களே !!
எனது இதுபோன்ற பல்வேறு
கதைகள், கவிதைகள், பொது
சிந்தனைத் தேன்துளிகள்,
திருக்குறள் விளக்கங்கள்.. என்று
பல்வேறு வகையான, பலதரப்பட்ட
எண்ணற்ற கருத்துக்குவியல்கள்
எனது தனிப்பட்ட இணையதளப்
பக்கம்
Facebook.com/MaduraiTRBalu
என்னும் பக்கத்திற்குச் சென்று
அங்கே உள்ள பலவகைத்
தலைப்புகளுள்நீங்கள் Astrology for All
என்னும் தலைப்பினை க்ளிக் செய்து
பாருங்கள், முதலில் அந்தப்
பக்கத்தை நீங்கள் அனைவரும்
விரும்புங்கள்(LIKE) பிறகு
படியுங்கள். இப்ப சற்றே
ஓய்வெடுங்கள். நானும் எடுக்க
வேண்டும். எதை ? ஓய்வை. ஓகோ !!
அப்படியா !! நன்றி!!வணக்கம்!!
அன்புடன். மதுரை T.R.பாலு.
தொடர்ச்சி.... பாகம் எண்.2.
ஆக முகலாய சக்ரவர்த்தி சுல்தான்
அஹமது இப்படி ஏகப்பட்ட
மனைவிகள், ஆசை நாயகிகள்,
அந்தப்புரத்து அழகிகள், என்று
அவருக்கு என்று இருக்கும்
அத்தனை அழகிகளில் தினசரி
குறைந்தது 5 முதல் 6 பெண்கள்
வரை அவர்கள் விரும்பும் சுகத்தை
சுல்தான் அகமதுவால் எப்படி தினம்
தினம் வழங்கிட முடிகிறது ?
அதுதான் அன்பர்களே நான்
ஏற்கனவே சொல்லியபடி இரகசியம்
என்று. அது என்ன இரகசியம் என்று
அவரது பிரதமமந்திரி பக்ருதீன் அலி
ஒருநாள் அரண்மனை இராஜாங்க
வைத்தியர் மன்சூர் அலிகான்
அவர்களை தனியாகச் சந்தித்து
கேட்டார் பக்ருதீன் அலி.அதற்கு
மன்சூர் அலிகான் சொன்ன பதில்
மந்திரி பக்ருதீனை வியப்படையச்
செய்தது. இந்தியாவின்
தென்பகுதியில் உள்ள மலையடி-
-வாரங்களில் உள்ள பல்வேறு
வகையான மூலிகைச் செடிகளைப்
பறித்துவந்து அவற்றை வேருடன்
பதப்படுத்தி அதனை பக்குவமாகப்
பதப்படுத்தி காயவைத்து இடித்துப்
பொடியாக்கி, அந்த பொடியோடு
கலந்து தாம்பூலம் போட்டுக்
கொண்டு அதன் சாறை மட்டும்
முழுங்கி விட்டு சக்கையை
ஒதுக்கிக்கொண்டு ஒரு அரை மணி
நேரம் (இரவு படுக்கப்போவதற்கு
முன்பாக) கழித்து சுல்தான் இல்லற
சுகத்தை அனுபவிக்க முடிவு
செய்தார் என்றால் அந்த
மூலிகைகளின் சாறு தந்த
போஷாக்கினால் ஒரு இரவுக்குள்
எட்டு முதல் பத்து பெண்களை அவர்
சுகிப்பதொடு, சம்பந்தப்பட்ட
பெண்களையும் இன்பத்தில்
இமயத்தின் உச்சிக்கே கொண்டு
சென்றிட முடியும் என்று பதில்
உரைத்தார் அரசாங்க வைத்தியர்
மன்சூர் அலிகான். ஆனால் இந்த
பொடியை அவருக்குத் தவிர வேறு
எவருக்கும் தரவும் கூடாது
தயாரிக்கும் முறையை சொல்லித்
தரவும் கூடாது என்று சுல்தான்
அகமது, நமது அரசாங்க
வைத்தியரிடம் அல்லா மீது
ஆணையிட்டு சத்தியம் வேறு
பெற்றுக் கொண்டாராம் மன்னர்.
இந்த சூழலில்தான் கதை இப்போது
சற்றே வேகமாக நடைபோடத்
துவங்குகிறது அன்பர்களே !!
சக்கரவர்த்தி சுல்தான் அகமது
ஆயுளை நன்கு அனுபவித்துக்
கொண்டு வரும் வேளையில்
மன்னருக்கு துணிமணிகள்
வெளுத்துக் கொண்டுவரும்
சலவைத் தொழிலாளி இபுறாஹீம்
கதையை இப்போது பார்ப்போம்.
அவன் மிகவும் நல்லவன். மிகவும்
பயந்த சுபாவம் உள்ளவன்.
இல்வாழ்க்கை விஷயத்தில் மிகவும்
தளர்ந்தவன். என்றாவதோ,
எப்போதாவதோ தான் இவனால்
மனைவி நூர்ஜகானுடன் இணைந்து
இருக்க முடிகிறது.இதனாலேயே
இவனை அவள் மதிப்பதும் இல்லை.
மரியாதை தருவதும் இல்லை.
(இன்றையதினம் நாட்டினில் 77
விழுக்காடுகளுக்குமேல் உள்ள
ஆண்களின் நிலைமையும்
இதுதான்.)ஆனால் இவன் மனைவி
நூர்ஜகானோ தன் கணவனுக்கு
நேர்மாறான குணம் கொண்டவள்.
அவள் தான் விரும்பும் நேரத்தில்
விரும்பும்படி தனது கணவன்தனக்கு
சுகம்தர வில்லையே என்ற அந்த
ஆதங்கத்தினால் எப்போதும்
வெறுப்புடனேயே கணவனுடன்
உறவு பெயரளவிற்கு குடித்தனம்
நடத்திக்கொண்டு இருந்தாள்.
(இதுவும்கூட இந்தக் காலப்
பெண்மணிகளில் 9௦
விழுக்காடுகளுக்குமேல் இதே
நிலைதான் நீடிப்பதாக எனது
நண்பன் பாண்டியன்
நெடுஞ்செழியன்
சொல்கிறான்)இந்நிலையில்
மன்னருக்கு துணிமணிகள்
வெளுத்து அதை அரண்மனைக்கு
கொண்டு சென்றிட
எத்தனித்துக்கொண்டு
இருக்கும்போது இந்த தம்பதிகள்
இருவருக்கும் இடையில்
நடைபெறுகின்ற உரையாடலை
நான் உங்களுக்கு நேரலையாகத் தர
முடிவு செய்துள்ளேன். ஆனால் அது
ஒரு சிறிய இடைவேளைக்குப்
பிறகுதான்.
மீண்டும் சந்திப்போம். அதன் பிறகு
சிந்திப்போம்.
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R.பாலு.
Subscribe to:
Posts (Atom)