Tuesday, 28 January 2014
Monday, 27 January 2014
அந்நாட்டு மக்கள் அயோக்யத்தனம் செய்யலாம் தவறு இல்லை !! ஆனால்.....அந்நாட்டு அரசே இப்படி ஒரு அயோக்கியத்தனம் செய்திடலாகுமா ? இது நியாயம்தானா நீ சொல்லு !!
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுதும் வாழ்ந்து வரும்
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
ஒரு நாட்டில் வாழும் மனிதர்கள்
அவர்களுக்குள்ளாக என்ன
வேண்டுமானாலும்
அயோக்கியத்தனம் செய்து
கொள்ளலாம். தவறு இல்லை.
ஆனால் அவர்களை நல்ல வழிக்கு
நடத்தி சென்று புத்திமதி சொல்லிட
வேண்டிய அந்நாட்டு அரசாங்கமே
அயோக்கியத்தனம் செய்தால்இந்தக்
கொடுமையை என்ன சொல்வது?
இது எந்த நாட்டில் நடைபெற்று
வருகிறது என்று நீங்கள்கேட்கலாம்.
வேறு எங்கும் நீங்கள் இந்தக்
கொடுமையை தேடி அலைந்திட
வேண்டாம். நம்ம செந்தமிழ்நாட்டில்
தான் இந்த அயோக்கியத்தனம்
தற்போது உள்ள அரசாங்கத்தினால்
நடை பெற்றுக்கொண்டு இருக்கிறது
அன்பர்களே. இன்றைய தினம்
அரசாங்கமே ஏற்று நடத்தும்
மதுகடைக்கு விற்பனைக்கு வரும்
குவாட்டர் பாட்டில்களின்
கொள்முதல்விலை என்னாவாக
இருக்கும் என்று கருதுகிறீர்கள்?
வெறும் 1௦ ரூபாயில் இருந்து அதிக
பட்சம் 25 ரூபாய்தான். ஆனால்
விற்பனை விலை 9௦ ரூபாய் முதல்
14௦ வரைக்கும். இப்படி
பொதுமக்களிடம் கொள்ளை
லாபத்திற்கு விற்று பணத்தை
சம்பாதித்திடும் அரசாங்கம் அந்தப்
பணத்தில் இலவச (இதற்குஇப்போது
ஒரு கௌரவமான பெயர்:
"விலையில்லா "என்று. எவன்
கண்டு புடிச்சான்னு தெரியல்லிங்க
இந்த வார்த்தையை. அவனுக்கு
செருப்பாலேதான் மாலையைப்
போட்டு விளக்குமாத்தை கையிலே
பூச்செண்டாகத் தரனும் !! )
மிக்சி,கிரைண்டர்,மின்விசிறி
ஆகியவற்றை வழங்கி
பொதுமக்களின் காதுலே
பூச்சுத்துகின்ற அயோக்கியத்தனம்
நிறைந்த ஒரு அரசாங்கத்தை
உலகத்துலே வேற எந்த
நாட்டிலேயும் நீங்க பார்த்திட
முடியாதுங்க. அதே மாதிரித்தான்
முத்தமிழ் அறிஞர் தலைவர்
கலைஞர் அவர்களது சீரிய
முயற்சியினால் தளபதி ஸ்டாலின்
அவர்கள் ஜப்பான் நாட்டிற்குச்
சென்று அங்கு போடப்பட்ட
தொழில்நுட்ப ஒப்பந்தத்தினால்
சென்னையில் உருவாக்கப்பட்ட
மாபெரும் கடல் நீரைக் குடிநீராக
மாற்றும்திட்டத்தினால் சென்னை
மாநகர் மக்களுக்கு இலவசமாக
குடிநீர் தரவேண்டும் என்று
போடப்பட்ட திட்டத்தினால்கிடைத்த
குடிநீரை 1 ரூபா பிளாஸ்டிக்
பாட்டில்லே அடச்சு அதுக்கு
"அம்மா குடிநீர்" அப்படீன்னு
பேரவச்சு விக்கிறது எவ்வளவு
பெரிய கடஞ்சு எடுத்த
அயோக்கியத்தனம் ? அதுவும்
வெறும் ரூபா1.5௦ காசு மட்டுந்தாங்க
அடக்கம் ஆகுற தண்ணியை பத்து
ரூபாய்க்கு விக்கிற
படுபாவித்தனத்தை நான்என்னன்னு
சொல்லுவேன்? எப்படீன்னு
சொல்லுவேன்? எங்கே போயி
சொல்லுவேன்? யார்கிட்ட போயி
சொல்லுவேன்? ஆக இன்னைக்கு
இப்படி அநியாயம்,அக்கிரமம்,
அயோக்கியத்தனம் இந்த மூன்றின்
ஒட்டு மொத்த வடிவம் தான்
இன்றைக்கு இந்த நாட்டினைஆண்டு
கொண்டுஇருக்கும் சர்க்கார் என்று
சொல்லி கட்டுரைக்கு முற்றுப்புள்ளி
வைக்கிறேன். நன்றி!! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R.பாலு.
Tuesday, 21 January 2014
" நம்பிக்கை " என்ற வார்த்தைக்கு இந்தக் கலிகாலத்தில் இடம் இருக்கிறதா ? இல்லை அந்த வார்த்தை காணாமல் போய்விட்டதா ?
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
இதை உரக்கச் சொல்வோம்
உலகுக்கு!! இனம் ஒன்றாக,மொழி
வென்றாக புதுவேல் எடுப்போம்
விடிவுக்கு!! நம்வெற்றிப் பாதையில்
நரிகள் வந்தால்விருந்துவைப்போம்
விண்ணுக்கு!!
உலகம் முழுவதும்
வாழ்ந்து வரும் என்அன்புத் தமிழ்
உடன்பிறப்புகளே!! அனைவருக்கும்
இனிய இதயம் கனிந்த வணக்கம்.
யுகங்கள் பல கடந்து விட்டன.
ஒவ்வொரு யுகமும் பற்பல
கோடானுகோடி வருடங்களைத்
தன்னகத்தே கொண்டது.
இதுவரையிலும் திரேதாயுகம்,
துவாபரயுகம், இவை எல்லாமே
முடிவுற்று தற்போது கலியுகம்
நடைபெற்றுக்கொண்டு
இருக்கின்றது. முதலில் சொன்ன
இரண்டு யுகங்களிலும்
நீதி,நேர்மை,நியாயம், இவைகள்
எல்லாம் மிகவும் சரியான
முறையில் இயங்கிக்கொண்டு
இருந்தன. அப்போதெல்லாம்
ஒளிதரும்விளக்குகள் கீழிருந்து
மேல்நோக்கி ஒளிகொண்டு சென்ற
காலங்கள் அவை.ஆனால்
கலிகாலத்திலோ இவை எல்லாமே
தலைகீழ்தான். ஆம் அன்பர்களே !!
மேலுருந்து கீழ்நோக்கி ஒளி தரும்
விளக்குகள் பிரகாசித்திடத்
தொடங்கி விட்டன. இந்த தலைகீழ்
மாற்றங்கள் என்பது இது ஒன்றில்
மட்டும் அல்ல, எல்லா
விஷயங்களிலும் தலைகீழ்தான்.
மட்டு,மரியாதை,பணிவு,மதித்து
நடப்பது, பெரியர்கள் சொல்லுக்குக்
கீழ்படிதல், வாலிபவயது வந்தாலும்
மனதில் எந்தவிதமான விரசமான
உணர்வுகளுக்கும் இடங்கொடாமல்
அம்மா,அப்பா இருவர் பார்த்துமணம்
முடித்திட பெண் பார்ப்பது வரை,
அதே போல பெண்ணுக்கு
மாப்பிள்ளை பார்ப்பது உட்பட இவை
எல்லாமே பெரியோரின்
சொல்லுக்கு கட்டுப்பட்டு நடப்பது,
நம்பிக்கை, இவை எல்லாமே
சத்தியத்துக்கு அடங்கி
நடந்தகாலங்கள் எல்லாம் இந்த
கலிகாலத்தில் மலைஏறிப்போச்சு.
ஆம் !! அன்பர்களே !! மொட்டு
வெடிப்பதற்குள்ளாகவே இந்த சிட்டு
துணையைதேடி அலைவதெல்லாம்
இந்தக் கலிகாலத்திலே ரொம்பவும்
சர்வ சாதாரணம். எங்கும் காதல்
எதிலும் காதல். காதல் காதல்.
காதல். காதல் போயின் சாதல்சாதல்
சாதல். இதுதான் கலிகாலத்தின்
லட்சணம் அன்பர்களே. காதலிப்பது
ஒருத்தனை. கல்யாணம்
பண்ணுவது வேறு ஒருத்தனை. இது
எப்படி இருக்கு ? அந்தக் காலத்துலே
எல்லாம் (நான் சொல்வது எல்லாம்
ஒரு 4௦ அல்லது 5௦ வருடங்களுக்கு
முந்திய கதை) அப்ப எல்லாம் MGR
சரோஜாதேவி இந்த ஜோடி
கொடிகட்டிப் பறந்த காலம்.
பாத்தீங்கன்னு சொன்னா புருஷனும்
கருப்பாத்தான் இருப்பான். அதே
மாதிரி பொண்டாட்டியும்
மாநிறமாகத்தான் இருப்பாள். ஆனா
பொறக்குற புள்ளை, அது ஆம்பிள
புள்ளையா இருந்தாக்கா நல்ல
சிவப்பா சுருட்ட முடியோடயும்
பொம்பளப் புள்ளையா இருந்தா
சரோஜாதேவி கணக்கா நல்லா
சிவப்பா அழகா இப்படித்தான்
புள்ளைக பொறந்திருந்த காலம்.இது
எப்படி சாத்தியம்ன்னு கேட்கீகளா ?
அதுதான் முந்தின நாள் ராத்திரி
இரண்டாம் ஆட்டம் (SECOND SHOW)
சினிமாவுக்குப் போயிட்டு வந்து
புருசனும் பொம்பளையும் ஒண்ணா
சேரும்போது இவன் மனசுலே
சரோஜாதேவி நினைப்புமட்டும்தான்
இருக்குமாம். அதே போல
பொஞ்சாதி நெஞ்சுக்குள்ளே MGR
நினைப்புத்தான் இருக்குமாம்.இப்படி
இருந்துச்சுன்னு சொன்னா புள்ள
எப்படி அந்தமாதிரித்தானே புறக்கும்.
அட என்ன நான் சொல்றது. அந்தக்
கதைதான் இந்தக் கலிகாலத்துலே
கிட்டத்தட்ட 1௦௦க்கு 9௦ ஜோடிகள்
விஷயத்துல இந்த நாட்டுலே
நடந்துகிட்டு இருக்கு. ஆமான்னேன்.
எவனையோ மனசார காதலிச்சுட்டு,
எவனுக்கோ வாக்கப்படுற
பொம்பளைங்க உலவுற இந்த
உலகத்துல எப்படி ஐயா
நம்பிக்கைக்கு இடம் இருக்கும் ?
அதே மாதிரி எவளோ ஒருத்திய தன்
மனசாரக் காதலிச்சுட்டு
பணத்துக்காக எவளோ
ஒருத்தியைக் கண்ணாலம்
கட்டிக்கிட்டு வாழுற
வாழ்கையிலேயும் எப்படி ஐயா
நம்பிக்கை இருக்க முடியும்? நான்
நிச்சயமாச் சொல்றேன் இந்த
"நம்பிக்கை "அப்படீங்கிற உயர்ந்த
தரமான வார்த்தைக்கு இந்தக்
கலிகாலத்தில் இடமே இல்லை
என்றுதான் நான் சொல்லுவேன்.
நீங்க என்ன சொல்றீங்க ? பதில்
சொல்லுங்க !!
நன்றி!! வணக்கம் !!
அன்புடன். மதுரை. T.R.பாலு.
Wednesday, 15 January 2014
அந்தக் கால காதல் பாடல்களில் காணப்பட்ட கண்ணியம் !! இந்தக்கால காதல் பாடல்களில் காணப்படும் விரசம் !!
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்துவரும்
அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!
அனைவருக்கும் எனது வணக்கம்.
இன்றைய தினம் வெளிவரும்
திரைப்படங்களில் உள்ள காதல்
பாட்டுக்கள் இவைகளில்
விரசம்தான் அதிகம்
காணப்படுகிறது. ஆனால்
அன்றையதினம் அந்தக் காலத்
திரைப்படங்களில் வந்த காதல்
பாடல்களில்தான் எத்தனை
மென்மையாக காதல் என்ற
உணர்வுகளை நம் முன்னோர்கள்
வெளிப்படுத்தி இருந்தனர். இதோ
அந்தக் காலத்தில் வெளிவந்த படம்
"அடுத்த வீட்டுப் பெண் "இந்தப்
படத்தில் உள்ள அத்தனை
பாடல்களும் தேன் சொட்டுகள்தான்.
இதோ உதாரணத்திற்கு ஒரு சில :-
https://www.youtube.com/watch?v=GxRLQCz5xAM
இந்தப் படத்தின் கதாநாயகி இரு
தினங்களுக்கு முன்னர் இயற்கை
எய்திய ஆந்திரநாட்டுப் பேரழகி
அஞ்சலிதேவி ஆவார். இந்தப்
படத்தில் அஞ்சலி தேவியினது
எழிலைப் பார்த்தால் ஆண்மை
இல்லாதவனுக்குக் கூட ஆசை
வரும். பாடலில் உள்ள கண்ணியம்
நிறைந்த காதல் கருத்துக்களைப்
படித்து இன்புறுங்கள் அன்பர்களே !!
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R. பாலு.
ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடும் (1980ல் நடந்தது) கவியரங்கம் விஷயத்தில் வாலிக்கும் எம்.ஜி.ஆருக்கும் ஏற்பட்ட கருத்து மோதல்களும் !! ஒரு சுவாரஸ்யமான நிகழ்வின் நினைவலைகள் !! உங்களின் கனிவான கவனத்திற்கு !!
உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!
உலகம் முழுவதும் வாழ்ந்து வரும்
என் உயிரினும் மேலான அன்புத்
தமிழ் உடன்பிறப்புகளே !! உங்கள்
அனைவருக்கும் என் இனிய காலை
வணக்கங்கள்.
அன்பர்களே அது !! 1980ம் ஆண்டு.
அப்போது தமிழக முதல்வர் என்னும்
நாற்காலியில் அமர்ந்து
அலங்கரித்தவர் புரட்சி நடிகர் என்று
முத்தமிழ் அறிஞர் தலைவர்
கலைஞர் திரு மு. கருணாநிதி
அவர்களால் பாராட்டப்பட்டு பட்டம்
பெற்றவர் மறைந்த M.G.R. ஆவார்.
அன்பர்களே அந்த ஆண்டு தான்
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாடு
தேமதுரத் தமிழோசை
முழங்குகின்ற மாமதுரை நகரில்
மிகக் கோலாகலத்தோடும்,
கொண்டாட்டங்களோடும், வெகு
விமரிசையாகக் கொண்டாடப்பட்டு
மகிழ்வுற்றிந்த நேரம் அது. அந்த
உலகத் தமில்மகாநாட்டின்
இறுதிநாள் நிகழ்ச்சிக்குத் தலைமை
தாங்கி சிறபித்தவர் அப்போதைய
பாரதப் பிரதமர் அன்னை
இந்திராகாந்தி ஆகும். அந்த
நிகழ்ச்சியின் சிகரம் போல
அமைந்திருந்தது தமிழ் இனத்தின்
பெருமையை விளக்கிடும் விதமாக,
வண்ண வண்ண அலங்காரம்செய்த
பேருந்துகளில் பொம்மைகளாக,
வரலாற்றின் நிகழ்வுகளின்
பெருமைகளை விளக்கிக் கூறிடும்
உண்மைகளாக ஒரு மாபெரும்
ஊர்வலம் ஒன்று சிறப்புற நடந்தது
அந்த ஊர்வல நிகழ்ச்சிகளை மாநில
முதல்வரான M.G.R. & பாரதப்
பிரதமர் அன்னை இந்திராகாந்தி
ஆகியோர்மதுரை தெற்குமாசிவீதி &
மேல மாசி வீதி சந்திப்பில்
அமைக்கப்பட்டு இருந்த அலங்காரப்
பந்தலில் அமர்ந்து இருவரும்
பார்வையிட்டனர். இந்த ஊர்வலம்
நடைபெற்ற நாளுக்கு, முந்திய நாள்
ஒரு கவியரங்கம் நடை பெற்றது.
அதில் ஒவ்வை நடராஜன்
தலைமையில் அந்த கவியரங்கம்
நடைபெற்றது. அதில் காவியக்
கவிஞர் வாலியையும் இணைத்துக்
கொண்டார் அவர். இந்த விஷயமே
வாலிக்குத் தெரியாது. அன்றுகாலை
தமிழ்மாநாட்டிற்கு வந்த முதல்வர்
M.G.R. வாலியையும் சந்தித்துப்
பேசினார். அப்போது இந்தக்
கவியரங்கத்தில் நீங்கள் கலந்து
கொள்கிறீர்களா ? என்று கேட்டார்.
அதற்கு வாலி இதுவரை என்னை
யாரும் அழைத்திடவில்லை என
சொன்னார். அதன்பின் வாலி தனது
அறைக்குத் திரும்பினார். அப்போது
ஔவை நடராசன் அனுப்பியதாக
ஒருவர்வந்து, மாலை 4 மணிக்கு
கவியரங்கம் நடைபெற
இருப்பதாகவும் அந்த நிகழ்வினில்
தாங்களும் கலந்து கொள்ள
வேண்டும் என்று ஔவை நடராசன்
சொல்லிவரச் சொன்னதாக
சொன்னவுடன் வாலிக்குத் தூக்கி
வாரிப் போட்டது. சற்று நேரம் முந்தி
தானே முதல்வர் கேட்டார்.அப்போது
இல்லை என்று சொல்லிவிட்டு,
இப்போது அவர் முன்னிலையில்
போய் கவியரங்கினில்பங்கேற்றால்
அவர் கோபம் அடைந்திட மாட்டாரா.
இவ்வாறெல்லாம் சிந்தித்த கவிஞர்
வாலி தொலைபேசியில்
எவ்வளவோ முயற்சி செய்தும்
முதல்வரோடுபேசிடமுடியவில்லை.
கவியரங்கம் துவங்கிடும் நேரம்
நெருங்கிடவே கவியரங்கினுள்
நுழைந்தார் வாலி. அவரைப் பார்த்த
முதல்வர் கடுங்கோபம் அடைந்தார்
கைசைகை காட்டி அவரை
தன்னருகே அழைத்து தனது
கோபத்தை வெளிக்காட்டினார்
முதல்வர் MGR. நான்தான்
காலையிலே உங்களிடம்
கேட்டேனே, அப்போது அழைப்பு
எதுவும் வரவில்லை என்றீர்கள்
இப்போது தாங்கள் எது ஒன்றும்
தெரியாத ஆள் மாதிரி உள்ளே
நுழைகிறேரே என்றார்.உடனே
அதற்கு வாலி பதில் சொல்லிட
முயலும் நேரம் கவியரங்கம்
ஆரம்பம் ஆகிட மணியடித்தது.
ஔவை நடராஜன் தலைமை ஏற்க
ஆரம்பம் ஆனது கவியரங்கம்.
ஒவ்வொருவராக வந்து தங்களது
கவிதைகளை அரங்கேற்றம் செய்து
மகிழ்ந்தனர். வாலியின் நேரம்
வந்தது. ஒலி வாங்கு கருவியின்
முன்பாக (MIKE) நின்று அவர் தனது
கவிதை மழையினைப் பொழிந்து
தள்ளினார். அவர் பேசியதாவது :-
ராமச்சந்திர பிரபுவே வணக்கம்.
நான் இந்தக் கவியரங்கிற்கு வரும்
முன்பு தேர்ந்தெடுத்துள்ள தலைப்பு
"திரேதாயுகத்து ராமச்சந்திரன்"
மற்றும்
" கலியுகத்து ராமச்சந்திரன்."
அன்னை கோசலை ஈன்றெடுத்தாள்
அந்த ராமபிரானை!!
அன்னை சத்தியா தவமிருந்து
பெற்றனள் இந்த ராமச்சந்திரனை !!
அந்த ராமச்சந்திரன் ஆரிய
குலத்தினின்று வந்தவன் !!
இந்த ராமச்சந்திரனோ சூரிய
குலத்தினின்று உதித்தவன் !!
அவனும் ஜானகி மணாளன் !!
இவனும் ஜானகி மணாளன் !!
அந்த ராமன் வாலியை மறைந்து
நின்று கொன்றவன்.
இந்த ராமனோ வாலியை
மனந்தனிலே கொண்டவன் !!
அவன் சிறுமதிகொண்ட
சிற்றன்னையால் பதவிலிருந்து
வெளியேற்றப்பட்டவன் !!
இவனோ சிறுமதிபடைத்த சிலரால்
கட்சியிலிருந்து வெளியேற்றப்
பட்டான்.
நீதி நிலை பெற்றபின் அந்த ராமன்
அமைத்ததும் ராம ராஜ்யமே !!
இவனும் இவன் கட்சி ஜெயித்தபின்
அமைத்தும் ராமராஜ்யமே !!
இதனைக் கேட்டவுடன் முதல்வர்
தனது கோபத்தை மறந்து
மேடையேறி வந்து வாலியைக்
கட்டித் தழுவி கன்னத்தில்
முத்தமிட்டு மகிழ்ந்த காட்சி கண்டு
ஆனந்தக் கண்ணீர் சிந்திடாத
மனிதர் அரங்கினில் எவரும்
உண்டோ ?
நன்றி !! வணக்கம் !!
அன்புடன். மதுரை T.R. பாலு.
Subscribe to:
Posts (Atom)