Saturday, 31 August 2013
பிழையாகிப்போன பழமொழிகள் ....தொடர்ச்சி...(புதுப்பிக்கப்பட்ட மறு பதிவு )
செய்திகளை நீங்கள்
படித்துபார்த்து
விளக்கம்.
காணோம்.
கருத்து யாதெனின்:-
காணோம்.
தமிழ் நெஞ்சங்களே !!.
விடைபெறுகிறேன்.
T.R.பாலு.மீண்டும்
சந்திப்போம்.
Friday, 30 August 2013
பிழையாகிப் போன பழமொழிகள் !! (மறுபதிப்பு)
உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
இதை உரக்கச் சொல்வோம்
உலகுக்கு !!
இனம் ஒன்றாக, மொழி வென்றாக,
புது வேல் ஒன்று எடுப்போம்
விடிவுக்கு !!
நம் வெற்றிப்பாதையில் நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு !!
பழமொழிகளா அல்லது
பிழைமொழிகளா?
பொதுவாக நாம்
நமது பேச்சு
வழக்கத்தில் பல்வேறு
பழமொழிகளை பயன்படுத்தி
பேசுவது இயல்பு. அந்த
அடிப்படையில் பலவற்றை நாம்
தவறாகவே பொருள்கொண்டு
பயன்படுத்தி வருகிறோம் என்பதே
உண்மை. உதாரணமாக ஒன்று:-
“ சட்டியில் இருந்தால் தானே
அகப்பையில் வரும் “
இந்த பழமொழிக்கு நம்மில்
பெருன்பான்மையான மக்கள்
கொண்டுள்ள பொருள் யாதெனின்
நாம் உண்ணும் சாதம் அதன்
சட்டியில் இருந்தால்தானே அதை
அள்ளும்அகப்பையில் வரும்
என்பது.
ஆனால் உண்மையான பொருள்
அதுவன்று. குழந்தைப்பேறு இன்றி
வாடிடும் தம்பதியர்கள்
குழந்தைவரம் வேண்டி கந்த
“ஷஷ்டியில்" விரதம் "இருந்தால்"
அகப்பையில் (கருப்பையில்)வரும்”
(குழந்தை) என்பதுதான் அந்த
பழமொழியின் உண்மையான
கருத்து. இது போல பலவற்றின்
உண்மை பொருள் விளக்கம்
அடுத்து அடுத்து உங்கள் கனிவான
பார்வைக்கு வர உள்ளது.படித்து
மகிழ்வோம். நன்றி !! வணக்கம்.
மதுரை T.R.பாலு.
தமிழ்த்தாய் வாழ்த்து கடவுள் வாழ்த்துக்கு இணையாகுமா?( மறு பதிப்பு)
உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
இதை உரக்கச் சொல்வோம் நாம்
உலகுக்கு !!
இனம்ஒன்றாக!!மொழி வென்றாக !!
புது வேல் ஒன்று எடுப்போம்
விடிவுக்கு !!
நம் வெற்றிப்பாதையில் நரிகள்
புகுந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு !!
உலகெங்கிலும் வாழ்ந்து வரும்
எனது உயிரினும் மேலாக
நான் நேசித்து வணங்கும் எனது
அன்பு உடன் பிறப்புகளே !!
உங்கள் அனைவருக்கும் என்
இனிய மாலை வணக்கங்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்து கடவுள்
வாழ்த்துக்கு இணையாகுமா?
பொதுவாக இன்று ஒரு அரசு
சம்பந்தப்பட்ட விழா என்றாலும் சரி
அல்லது ஒரு பொது அமைப்புகள்
ஏற்பாடு செய்யும் விழாவாகட்டும்
முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து
பாடுவது என்பது இன்று
வழக்கமாகிவிட்டது. இது சரியாஇது
முறையா?இது தர்மம் தானா?சற்றே
நாம் யோசிப்போம்.இறைவனால்
படைக்கப்பட்ட இந்த உலகில்
எத்தனையோ ஜீவ ராசிகள்
உள்ளன.அவற்றுள் மானுடமும்
ஒன்று. அந்த மானுடர்கள் பற்பல
கண்டங்களில் பற்பல நிறங்களில்
பல்வேறு சமுதாய அமைப்புகளுடன்
வாழுகின்றனர். அவர்கள்
ஒருவருக்கு ஒருவர் தத்தமது
உணர்வுகளை வெளிப்படுத்தபல
மொழிகளை கண்டுபிடித்து
உரையாடுகிறார்கள்.அப்படிப்பட்ட
மொழிகளில் தமிழ் மொழியும்
ஒன்று. அந்த மொழிக்கு
மனிதர்களால் வணங்குவதர்காக
உருவகப்படுத்தப்பட்ட அன்னைதான்
தமிழ்த்தாய். அப்படி மானுடனால்
உருவகப்படுத்தப்பட்ட
தமிழ் அன்னையை வணங்குவது
எப்படி சர்வ உலகத்தையும் காத்து
இரட்சிக்கும் கடவுளை
வணங்குதற்கு சமமாகும்?இதுதான்
என்போன்ற சிந்தனையாளர்கள்
எழுப்பும் கேள்வி. நாங்கள் என்ன
சொல்கிறோம் என்றால் தமிழ்த்தாய்
பாடல் பாடுங்கள்.வேண்டாம் என்று
சொல்லவில்லை அனால் அந்த
பாடலை கடவுள் வாழ்த்து
பாடலுக்கு இணை வைத்து
வணங்கவேண்டாம் என்று
கேட்டுகொள்கிறோம்.
இறைவனுக்கு இணைவைப்பதும்
பேசுவதும் நம்மில் ஒரு மதத்தார்கள்
ஒருபோதும் எற்றுகொள்வதும்
இல்லை. அந்த பாதகச்செயலை
மன்னிப்பதும் இல்லை. நீங்களும்
கொஞ்சம் சிந்தியுங்களேன் நன்றி
வணக்கம். மீண்டும் அடுத்த
கருத்துவிவாதத்தில் சந்திப்போமா
நேயர்களே அன்புடன்
மதுரை T.R.பாலு.
Thursday, 29 August 2013
சொந்த வீடு என்பது உண்மையா இல்லை மாயையா ?--ஒரு சிந்தனை கண்ணோட்டம்.
உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!
இதை உரக்கச் சொல்வோம்
உலகுக்கு !!
இனம் ஒன்றாக,மொழி வென்றாக
புது வேல் எடுப்போம் விடிவுக்கு !!
நம் வெற்றிப்பாதையில் நரிகள்
வந்தால் விருந்து வைப்போம்
விண்ணுக்கு !!
" சொ ந் த வீ டு " !
அனைவருக்கும் வணக்கம்!
பொதுவாக நம்மில்
பெரும்பாலோனோர்கள் புதுசா
யாரையாச்சும் பார்த்தா கேட்கிற
முதல்கேள்வி என்னான்னு கேட் -
டீங்கனா “ ஆமா உங்களுக்குசொந்த
வீடு இருக்கா?” என்பதே!!
முதல்லே நான் சொல்றது
என்னன்னா ,இது ஒரு நாகரீகம்
இல்லாத கேள்வி. என் கருத்து
என்னன்னா யாருக்கும் எதுவும்
சொந்தம் என்பது கிடையாது. வீடு
வேணும்னா சொந்தமா இருக்கலாம்
சுத்தி எடுத்துள்ள சுவர், நிலை,
ஜன்னல்,கதவு,மின்சாதனப்
பொருட்கள், குழாய்கள், இது
சொந்தம் ஆகலாம்.ஆனா நிலம்/
பூமி அரசாங்கத்துக்குசொந்தம்.
அதனாலேதான் வரி கட்டுகிறோம்.
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
பொது உடமை கவிஞர் தான்எழுதிய
முதல் சினிமா பாடலில் சொல்றார்:-
குட்டி ஆடு தப்பி வந்தா !!
குள்ளநரிக்கு சொந்தம் !!.
குள்ளநரி மாட்டிக்கிட்டா !!
குறவனுக்கு சொந்தம் !!.
தட்டுக்கெட்ட மனிதன் கண்ணில் !!
பட்டதெல்லாம் சொந்தம் !!.
சட்டப்படி பார்க்கப் போனா !!
எட்டடிதான் சொந்தம் !!.
அதாவது எட்டடிமண் தான்சொந்தம்
என அவர்சொன்ன கருத்து என்னை
மிகவும் கவர்ந்தது ஆனால்
என்னைப் பொருத்தவரை உடல்
என்னும் இந்த கூட்டிலே உயிரே
வாடகைகுத்தானே குடி இருக்குது
அப்புறம் என்ன பேச்சு
வேண்டிகிடக்குது ?
என்னடா இது நம்ம மதுரைTR.பாலு
வாடகைக்கு குடி இருப்போர்
சங்கத்துக்கு வக்காலத்து வாங்கி
பேசுறார்னு நீங்க நினைச்சா அதுக்கு
நான் பொறுப்பு இல்லை.என்ன
நான் சொல்றது ?சரியா!
நன்றி!வணக்கம்!!
அன்புடன் மதுரை T.R.பாலு.
மீண்டும்நாளை சந்திப்போமா?
(பேராசிரியர் திரு சாலமன்
பாப்பையா அவர்கள் பாணியில்)
Subscribe to:
Posts (Atom)