Friday, 29 November 2013

கேள்வியும் ? பதிலும் !! (சும்மா சிரிப்பதற்குத்தான் )






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!!



இதை உரக்கச் சொல்வோம் 



உலகுக்கு !!                                                     



இனம் ஒன்றாக, மொழி வென்றாக, 



புது வேல் ஒன்றினை நாம் 



எடுப்போம் விடிவுக்கு !!                           



நம் வெற்றிப் பாதையில் நரிகள் 



வந்தால் விருந்து வைப்போம் 



விண்ணுக்கு !!                                                 



(இந்த பகுதியில் இடம்பெறும் 



யாவையும் கற்பனையே அன்றி 



வேறு எந்தத் தனிப்பட்டவரையோ 



அல்லது இயக்கத்தையோ 



குறிப்பிடுவன அல்ல.)                                 




கேள்வி அனுப்பியவர்.


S.மொக்கச்சாமி. நம்பம்.


கேள்வி :-  ஐயா ! T.R. பாலு சார். இப்ப 


அடுத்த மாதம் 4ம் தேதி 


இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் 


நம்ம பாற்காடு சட்டமன்றதேர்தலை 


பார்க்கும் நம்ம மாநிலத்தின்ஏனைய 


மற்ற சட்டமன்ற தொகுதிகளைச் 


சேர்ந்த வாக்காளப் பெருமக்கள் 


என்ன சார் தங்களது மனசுக்குள்ளே 


நினைச்சுக்கிட்டு இருப்பாங்க ? மிகச் 


சரியாக பதிலைச் சொன்னீங்கன்னு 


வச்சுக்குங்க ! உங்களுக்கு 1,௦௦௦/= 


ரூபாய் அன்பளிப்பாகத்தர நான் 


தயாராக இருக்கேன்.                                 


பதில் :- ஏன் ஐயா !! மொக்கச்சாமி 


என்ன கேள்வியே இம்புட்டு நீளமா 


இருந்தா என் பதிலும் அம்புட்டு 


நீளமா இருக்கும்னு நினச்சீயளோ ? 


அதுதான் மொக்கச்சாமி கிடையாது. 


அஞ்சே அஞ்சு வரிலேபதில்இதோ:


எல்லா சட்டசபைத் தொகுதி 


மக்களும் இதேமாதிரி எப்ப 


நம்ம தொகுதிக்கும் இடைத் தேர்தல் 


வரும்னு சாமிட்டே வேண்டிக்கிட்டு 


இருக்கானுகப்போ(இதுஎப்டிஇருக்கு) 

****************************************

கேள்வியை அனுப்பியவர்.                     V. புஷ்பவனம். சதுரை.                                

ஏன் சார்  ? இப்ப நம்ம முதல்வர் 


மிகத் திறமையாத்தானே ஆட்சி 


செஞ்சுண்டு இருக்கா. அவாளை 


போயி இப்படி பழிச்சுப் பேசுறாளே? 


இது அன்னியாயமா  தெரியலையோ 


நோக்கு? பதில் சொல்லும் ஒய்!!     


பதில் :- ஏய் !! இந்தபாரும் ஒய்.என்ன 


நீரு பாட்டுக்கு பேசிண்டே போறேள். 


இதெல்லாம் அவா அவா இஷ்டம் 


ஒய் !! இந்தா இப்ப நீரு எல்லாம்எப்டி 


தைரியமா     கேள்வி   கேக்றேள் ? 


நோக்கு எப்படி கருத்து சுதந்திரம் 


இருக்கோ அதே மாதிரித்தான் 


எல்லோருக்கும் உண்டு ஒய். பேசாம 


மாமிட்டே சொல்லி பாதாம் பருப்பு 


சூப் வச்சு குடிச்சுட்டு ராத்திரி 7 


மணிக்கெல்லாம் போயி 


தூங்குகானும்அல்லாம்சரியாயிரும் 


 அட..என்ன..நான்..சொல்றது.....           

****************************************

கேள்வி கேட்பவர் :-                                    

P. பரிபூரணம். கேவ தோட்டை.          


கேள்வி :-  ஐயா !! ஏன் இந்நாட்டு 


அமைச்சர்கள் அல்லாரும் முதல்வர் 


தங்கச்சாமியைப்  பாத்தவுடன் 


கூனிக் குறுகி வளைஞ்சு நெளிஞ்சு 


அவர்கிட்டே வாயைப் பொத்தி 


பேசுராய்ங்க ? உமக்கு எதுனாச்சும் 


தெரியுமா? தெரிஞ்சாசொல்லும்ஒய். 


பதில்:- யோவ்...உனக்கு இன்னா 


...கிறுக்கு கிறுக்கு 


பிடிச்சுருக்கா..இந்தக் கேள்விக்கு 


நான் பதில் சொன்னேன்னு வச்சுக்க 


மவனே எனக்கே வாயே 


இருக்காதுல. படக்குன்னு வந்து 


அத்துட்டுப் போயிருவானுவள்ள. 


அத்தமாதிரிதான் உனக்கும் பதில 


கேட்டேன்னு வச்சுக்க இனிமே உம் 


பொண்டாட்டி இன்னா பேசுனாலும் 


உன்கு K.காதுதான்.பரவால்லையா?.


(தனது பதில் கடிதத்தில்) 

 K.பரிபூரணம்.  கேவ தோட்டை.


அண்ணே ! சட்டு புட்டுன்னு செய்யச் 


சொல்லுன்னே. இவளோட இம்சை 


தாங்க முடிலே அண்ணே .                     


பதில்:- (இனி உனக்கு மருவாதி 


இல்ல.) என்னடா. பிச்சுப்புடுவேன் 


உம்பொண்டாட்டியோட லொள்ளு 


தீரனுன்ட்டு என்னோட வாயக் 


கிழிச்சுக்க சொல்ரியாலே !!  மவனே 


பேசாம ஓடிப்போயிரு அந்தாண்ட . 


திருப்பி கிருப்பி ய்த்னச்சும் கேள்வி 


அனுப்ப்நேன்னு வச்சுக்க. உன் 


குடலை உருவி மாலையாப் 


போட்றுவேன்.ஓடுரா அந்தாண்டே.

**************************************************************************************


Wednesday, 27 November 2013

(வயது வந்தவர்களுக்கு மட்டும்!!) ( A ) புரிஞ்சாப் புரிஞ்சுக்குங்க !! புரியலேன்னா வுட்ருங்க !!






உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 



உலகம் முழுவதும் வாழ்ந்துவரும் 



எனது உயிரினும் மேலான அன்புத் 



தமிழ் உடன்பிறப்புகளே !!                     



உங்கள் அனைவருக்கும் எனது 



இதயம் கனிந்த வணக்கம்.                       



இப்பவும் இன்றையதினம் நான் 



உங்கள் அனைவருக்கும் 



வயது வந்தவர்களுக்கு மட்டும் " A " 



JOKE  கதை ஒன்று. (கண்ணியம் 



சற்றுக் குறைந்ததுதான்--ஆனால் 



ஆபாசம் எழுத்தில் அல்ல--எனவே 



நீங்கள் தைரியமாகப் படிக்கலாம்)                     



 

மதுரை மாவட்டம் மேலூர் 



வட்டத்தைச் சேர்ந்த சிறிய 



கிராமம்தான் நமது கதை 



நடைபெறுகின்ற சிற்றூர் அதன் 



பெயர் கீழவளவு. அதில் வாழ்ந்து 



வந்தவர்கள் பாமா மற்றும் ஹேமா . 



இவர்கள் இருவரும் மேல்நிலைப் 



பள்ளியில்  முன்பு ஒன்றாகப் 



படித்தவர்கள். (அதாவது 7ம் 



வகுப்புவரை மட்டுமே படித்து 



பின்னர் கல்வி ஏறாததாலேயே 



பாமா படிப்பை அத்துடன் நிறுத்திக் 



கொண்டார்.) ஹேமா +2 படித்துப்பின் 



கல்லூரி சென்று இளங்கலை, 



மற்றும் முதுகலை  பயின்று பெரிய 



இடத்து மாப்பிள்ளைக்கு 



வாக்கப்பட்டு மும்பைக்கு 



சென்றுவிட்டார். அதன் பிறகு 



ஒருமுறை ஹேமா, தான்  பிறந்து, 



வளர்ந்து, வாழ்ந்த  கீழவளவு 



கிராமம்/சிற்றூர் வந்தாள்.( எதற்கு ? 



கோவில் திருவிழாவிற்கும் மற்றும் 



குல     தெய்வ    வழிபாட்டிற்கும்) 



தோழிகள்  இருவரும் சந்தித்தனர். 



அளவளாவினர். ஆனந்தம் 



கொண்டனர். (இப்போது நேரலை )   



பாமா :-  என்னடி ஹேமா ? எப்படிடி 


இருக்கே ? மாப்பிள்ளை, 


குழைந்தைகள் எல்லாம் 


சௌக்கியமா ?                                             



ஹேமா :- எல்லோரும் நலம்தாண்டி 


பாமா.  ஆமா !! நீ எப்டி இருக்கே. 


உன்வீட்டுக்காரர் எப்டி இருக்கார்?     



பாமா :- உம்."அதுக்குஎன்ன"  நல்லா 


சாப்பிட்டு சாப்பிட்டு  தூங்குதுடி.  


(ஏம்மா ஆம்பிளையாளுக உங்களை 


எல்லாம் தொட்டுத் தாலி கட்டின 


அந்தஒரே பாவத்துக்காக அவனை, 


அந்தப்புண்ணிய கணவனை ஆடு, 


மாடு,  மாதிரி "அதுக்கு"என்னவாம் 


இல்ல - இன்றைக்கு அன்பர்களே 


1௦௦க்கு 95 விழுக்காடுகளுக்கு மேல் 


உள்ள இந்தக்காலப் பெண்களது 


வழக்கமான, அவர்களது மொழியில் 


சொல்லப்போனால் இப்படிப்பட்ட 


"அடைமொழியில் " அழைத்துக் 


கணவன்மார்களை பேசுவதுதான் 


இந்தக் காலப் பெண்களுக்கு 


ரொம்பவே பிடிக்கும்.)                                 



பாமா :-  அது (!) ரொம்பக் கொடுத்து 


வச்சதுடி. எங்க மாமா சொத்துசேத்து 


வச்சுருக்காரு. போதாக்குறைக்கு 


நான் வேற வீட்டு வேலைக்குப் 


போயி 2௦௦௦ ரூபா சம்பாதிச்சுக் 


கொண்டுவந்து கொட்டுறேன்.ஏண்டி 


அப்புறம் அழைச்சு வேலை எதுக்குடி 


"அது" உடம்ப வளைச்சு வேலை 


செய்யன்னும் ? அட..என்ன...நான்.. 


சொல்றது ?  ஏண்டி? உன் வீட்டுக்கார் 


என்னடி படிச்சுருக்காரு?என்னடி 


உத்தியோகம் பாக்கறாரு?                     



ஹேமா :- (பெருமை மிகுந்த கர்வ 


உணர்வுகளோடு )என் ஹப்(புருஷன், 


கணவர், இல்ல வீட்டுக்காரர், அதை 


எல்லாம்கூட விடுங்க, ஹஸ்பண்டு 


அப்படிக்கூட கூப்பிடமுடியாதாம். 


அத்த சுருக்கி " ஹப் " ஆம்---என்ன 


பாஷையோ, என்ன ஆசையோ 


எல்லாம் அந்தக் கடவுளுக்குத்தான் 


வெளிச்சம்) ஆஸ்திரேலியாவில் 


M.B.A. படிச்சு முடிச்சுட்டு பம்பாயிலே 


 CALL CENTER ல ஒர்க் பன்றார்டி.         



பாமா :- ஏண்டி ? நான் 


தெரியாமத்தான் கேக்குறேன் ? 


"அதுக்கு "எதுக்குடி வெளிநாட்டுலே 


போயி அம்புட்டுப்பெரிய படிப்பு 


படிக்கணும்.(இவளுக்கு அந்த அளவு 


M.B.A. ன்னா என்ன படிப்புங்றதைப் 


புரிஞ்சுக்கிற அளவுக்கு ஆங்கில 


அறிவு இல்லவே இல்லை--அதாலே 


இந்தக் கேள்வியை கேக்குறாள்.)என் 


புருஷன் எட்டாங்கிளாஸ் படிப்பு 


படிச்சுட்டு நீ சொன்ன அந்த அதே 


" இடத்துலேதானேடி " வேலை 


பாக்கிறார்.                                 



அன்பர்களே !!  கதை இத்துடன் 


முடிகிறது. இந்தக்கடைசி எட்டு 


வரிகளுக்குள் ஒளிந்து இருக்கிற 


விஷயத்தைப் பத்தி அந்த JOKE  பத்தி 



" புரிஞ்சாப் புரிஞ்சுக்குங்க "  !!                  


" புரியலேன்னா  வுட்ருங்க " !!               




ஆளை உடுங்கடா சாமியோய் !!         



நான் போயிட்டு வாரேன்.!!               



நன்றி !!    வணக்கம் !!                                 



அன்புடன். மதுரை T.R. பாலு.                   





என்ன இன்னுமா புரியலை ?                 


வேணுமின்னா உங்களுக்கு ஒரு 


சின்ன " க்ளூ " வேனா தரலாம். 


அப்படியும் உங்களுக்கு ஒருவேளை 


புரியல்லன்னு வச்சுக்குங்க. நீங்க 


இந்த ஆட்டத்துக்கு லாயக்கு 


இல்லன்னு தான் அர்த்தம்.                       


கால் (CENTRE) இந்த ஆங்கில 


வார்த்தைக்கு மட்டும் அர்த்தம் 


தமிழில் என்ன என்று அகராதியைப் 


பார்த்துட்டு அதையும் சேர்த்து 


படியுங்க. இப்ப புரியும்னு 


நினைக்கிறேன். அய்யா சாமிஎனக்கு 


நிறைய வேலை இருக்கு. நான் 


போயிட்டு வாரேன்.                                     


(இவங்களுக்கு விளக்கம் 


சொல்லியே நான் ஓஞ்சு 


போயிருவேன் போல இருக்கு !!)        



மீண்டும் நன்றி !! வணக்கம் !!

Sunday, 24 November 2013

தொடர்ச்சி...பாகம் எண்.4....கணேசனின் மனைவி கனகா தர்மபத்தினியா ? இல்ல அதர்ம பத்தினியா? விடை காண இருக்கும் இறுதிப் பதிப்புக்கு முந்திய பதிப்பு !! !! உங்கள் அனைவரின் கனிவான கவனத்திற்கு !!

தொடர்ச்சி ...பாகம் எண்.3 க்கு 



உள்ளாகச் செல்வோமா 



அன்பர்களே!!...................................................




தொடர்ச்சி.....பாகம் எண்.3....                     



சத்தியவந்தன் சுவாமிகளிடம் தனது 



மனைவியை சற்றும் விட்டுக் 



கொடுக்காமல் சவால் விட்டு அதன் 



பிறகு, அவரது அறையை 



காலிசெய்து பின் தனது அலுவலகம் 



சென்று அனைத்து வேலைகளையும் 



செய்து முடித்து பின்னர் இரவு மணி 



சுமார் 9.4௦ க்கு எல்லாம் தன் வீடு 


நோக்கி மகிழுந்து ஒன்றின் 



மூலமாக வீடு வந்து சேர்ந்தான் 



கணேசன்.  வந்தவுடன் தனது 



மனையாள் கனகாவை 



அழைக்கிறான்.(இப்போது"நேரலை" 



மீண்டும் துவங்குகிறது)                           



கணேசன்:- கனகா !! கனகா!!             



கனகா:- இதோ !! வந்துட்டேங்க !! 



(இந்த பசப்பு வார்த்தையில் 



செத்தார்கள் பூமியில் உள்ள 



 பல பெண்களின் அத்தான்கள்)             



கணேசன்:- கனகா!! நான் 



இன்றைக்கு சீக்கிரம் சாப்பிட்டு 



விட்டு தூங்கப் போணும் !! அதனால் 



எனக்கு விரைந்து இரவு உணவை 



எனது அறைக்கு கொண்டுவா !!         



கனகா :- ஏங்க !! உடம்புக்கு 



எதாச்சும்...                                                         



கணேசன்:அதெல்லாம்ஒன்னுமில்ல 



இன்னைக்கு டாக்டர் கிட்டே 



போயிருந்தேன். நன்றாக ஓய்வு 



எடுக்கனும்னு சொன்னார். 



அதான்....வேற ஒண்ணுமில்ல.               



கனகா:- இதோ ஒரு 5 நிமிசத்தில 



இரவு உணவு கொண்டுவாரேன்.                                         



 இரவு உணவைச் சாப்பிட்டான். 



ஸ்வாமிகள் கொடுத்த "கல்பத்தை"   



வாயின் உள்ளே தள்ளினான். 



சரியாக  இரவு 1௦ மணிக்கெல்லாம் 



தூங்க ஆரம்பித்துவிட்டான்.           



காலைப் பொழுது விடிந்தது !! 



சரியாக 6 மணிக்கெல்லாம் 



மனையாள்  கனகா தனது 



கரங்களால் சேர்த்த காப்பியை 



 எடுத்துக்கொண்டு கணவனின் 



அறைக்குள் சென்றாள். அன்புள்ள 



அத்தானை எழுப்பினாள்.  அவன் 



எங்கே எந்திரிப்பது? அவன்தான் 



ஸ்வாமிகள் கொடுத்த கல்பத்தை 



உட்கொண்டதனால் உயிருள்ள 



பிணமாக மாறிவிட்டானே.  காது 



மட்டும் அவனுக்கு கேட்கிறது. 



கண்கள் செத்தவன்போல மூடிக் 



கிடக்கிறது. உடனே அவன் 



செத்துவிட்டான் என்பதை 



உறுதிசெய்துகொண்ட அவன் 



மனைவி கனகா உரத்தகுரலில் 



அழுகையை வரவழைத்துக் 



கொண்டு, கன்னங்களில் கண்ணீர் 



வழிந்திட கத்துகிறாள்,கதறுகிறாள் 



கனகா:- என்னங்க !! எங்களை 



எல்லாம் விட்டுட்டுப் 



போயிட்டீங்களா ? என்று சொல்லி..   


அழுது துடிக்கிறாள் கனகா !!



அன்பர்களே !!  இந்தக் கட்டுரையின் 



இறுதி மற்றும் பாகம் எண்.4. நாளை 



உங்களுக்குத் தருகிறேனே !! தயவு 



செய்து மன்னிப்பீராக !!                         



அஸ்ஸலாமு அலேக்கும் !!                   



அன்புடன். மதுரை T.R.பாலு.                



(தொடரும்)                                                       



தொடர்ச்சி ....பாகம் எண்.4.                       



உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் 



என் உயிரினும் மேலான அன்புத் 



தமிழ் நெஞ்சங்களே !!  



கணேசனின் மனைவி கனகா,           



"தர்ம பத்தினியா "? இல்ல "அதர்ம 



பத்தினியா?"என்றசின்னக்கதையின் 



4ம் மற்றும் இறுதிபாகத்திற்க்கு 



முந்திய பாகம், இதோ, 



உங்கள் அனைவரின் கண்களுக்கும், 



விருந்தாக  கீழே தரப்பட்டுள்ளது. 



படித்த பின்னர், உங்களது எண்ணக் 



கருத்துக்களைத் தெரிவியுங்கள் என் 



அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!



கண்ணீரும் கம்பலையுமாக் கதறி 



அழுதபடியே அறையை விட்டு 



வெளியே வந்த கனகா உடனேதனது 



குடும்ப டாக்டர் ரத்தினத்திற்குபோன் 



செய்து சிறிதுநேரத்தில் அவரும் 



வந்து கணேசனை பரிசோதிக்கிறார். 



வழக்கம்போல சினிமாவில வரும் 



டாக்டரைப் போலவே தனது 



உதட்டை பிதுக்கி,தலையை ஆட்டிக் 



கொண்டே ஸ்டெதஸ்கோப்பை 



காதில் இருந்து கழட்டியபடியே 



(கனகாவிடம்) I am sorry  கவிதா. 



எல்லாம் முடிஞ்சுபோச்சு. இனிமே 



ஆக வேண்டியதை பாருங்க என்று 



சொல்லியபடியே வீட்டை விட்டு 



வெளியேறுகிறார் டாக்டர். பிரபல 



தொழில் அதிபர் கணேசன் மரணம் 



அடைந்த செய்திகாட்டுத்தீபோலவே



ஊர்முழுவதும்  பரவிட அனைத்து 



மக்களும் இறந்த (?) கணேசனுக்கு 



கடைசி மரியாதை செலுத்தும் 



முகமாக வீட்டின் முன் குவியத் 



தொடங்கினர். மறுநாள் மாலையில் 



வந்து சேர்ந்தார் அமெரிக்க நாட்டில் 



இருந்து அவரது புண்ணிய குமாரன் 



குப்புசாமி. இரவு சுமார் 9.3௦ மணி 



அளவில் அவரது பூத உடல் 



ஆம்புலன்ஸ் வண்டியில் ஏற்றி 



இடுகாடு செல்வதற்குத் தயார் 



நிலையில் இருந்தது. மகன் 



தந்தைக்குச் செய்ய வேண்டிய 



காரியங்கள் முழுவதும் அந்த ஊரில் 



இருக்கும் கருமாந்திரம் மட்டுமே 



செய்துவைக்கும் பிராமணர் 



கந்தசுவாமி அய்யர் நடத்தி முடித்து 



வண்டியில் ஏற்றுவதற்கு 



கணேசனின் உடலை ஸ்ட்ரெச்சர் 



மீது வைக்கப்பட்டு, வீட்டின்ஹாலில் 



இருந்து தூக்கிச் செல்ல முற்படும் 



வேளையில் கணேசனின் மனைவி 



கனகா, அழுது, புலம்பி,கத்திக்கதறி 



கூக்குரல் இடுகிறாள். அய்யய்யோ 



இனிமே நான் யாரை நம்புவேன்? 



எனக்குன்னு இருந்தஒரேஉசிரையும் 



அட ஆண்டவா என்கிட்டே இருந்து நீ 



பறிச்சுக்கிட்டேயே? இது நியாயமா?



உனக்கு இதயமே இல்லையா? அப்டி 



இப்டின்னு ஊரையே கூப்பாடு 



போட்டு கலக்கு கலக்குன்னு கலக்கி 



விட்டார் கனகா. இவை அனைத்தும் 



இந்த அழுகுரல்கள் எல்லாம் 



இறந்ததாக (?)எல்லோரும் 



நினைத்துக்கொண்டு இருக்கும் 



கணேசனின் செவிகளில் விழாமல் 



இல்லை. என் மனைவி எவ்வளவு 



உத்தமமானவள் ? உம்.. இவளைப் 



போய் சாமியார் தவறாக நினைத்து 



விட்டாரே என்றெல்லாம் பிரேதமாக 



இருக்கும் கணேசன் நினைக்காமல் 



இல்லை. நாளைக்குச் சாமியாரிடம் 



நடந்தவைகளை விளக்கிச் சொல்லி 



அவரது கூற்று தவறு என்பதை 



நிரூபிக்க வேண்டும் என்றெல்லாம் 



கணேசன் மனதில் நினைத்துக் 



கொண்டு இருக்கும்போதுதான் அந்த 



அதிசயம் நிகழ்ந்தது. ஸ்ட்ரெச்சரில் 



வைத்துக்கொண்டுபோனஅவரது 



உடல் ஹால்கதவிலும்நிலையிலும் 



ஒருசேர இடித்திட்டதால்கணேசன் 



மீண்டும் உயிர் பெற்று சுயநினைவு 



திரும்பிட, கண் விழித்து, கைகால் 



அசைந்து, உணர்வு திரும்ப,அதனால் 



கணேசன் மீண்டும் உயிர்பெற்றதை, 



எல்லோரும் மகிழ்ச்சி அடைந்து 



ஆனந்தக்களியாட்டம்ஆடுகின்றனர். 



அவரது உடல் ஒருசேர கதவிலும் 



நிலையிலும் இடித்ததை மனைவி 



கனகா கவனிக்கத் தவறவில்லை.   



உடனே கனகா தனது அவிழ்ந்த 



கூந்தலை சரிசெய்து கொண்டு 



எழுந்து வந்து ஸ்ட்ரெச்சரில் இருந்து 



உயிரோடு மீண்டுவந்த தனது 



கணவர் கணேசனை அப்படியே 



இறுகக் கட்டி அணைத்துக் 



கொண்டாள். என் கணவர் மீண்டும் 



உயிர் பெற்று எழுந்தது அவளின் 



மாங்கல்ய பலம்தான். அவள் தனது 



கணவரின் மீது வைத்திருக்கும்அந்த 



பந்த பாசம் என்ற உணர்வுகளுக்குக் 



கிடைத்திட்ட வெற்றி என்று 



அத்தனை ஊர்க்கூட்டதின் முன்பாக 



உரத்த குரலில் பேசியது 



கணேசனுக்கு இன்னும் சற்று அதிக 



மகிழ்வினைத் தந்தது. நாளை அந்த 



சுவாமிகளிடம் சென்று நடந்தவை 



அத்தனையையும் எடுத்துக் கூறி 



அவர் சொன்ன சொல் அத்தனையும் 



பொய்த்துப்போய் விட்டது என்று 



சொல்லிட வேண்டும் என்று முடிவு 



எடுத்தான் கணேசன். இதென்னடா !!



அதிசயம் !! செத்தவன் மீண்டும் 



உயிர் பெறுவது ? என்று ஊர்ஜனம் 



அவர்களுக்குள் பேசிக்கொண்டே 



திரும்பினார்கள். மறுநாள் 



காலையில் தனது அலுவலகம் 



சென்ற கணேசன் அத்தனை 



வேலைகளையும் முடித்துவிட்டு 



ஆசிரமத்தில் இருக்கும் சுவாமியை 



நேரில் சந்திக்கப் புறப்பட்டுச் 



சென்றார்.  இப்போது  இந்த  நிகழ்ச்சி   



 " நேரலை "   வடிவம் அடைகின்றது. 



கணேசன்:- (கண்களை 



மூடிக்கொண்டு தியானத்தில் 



இருக்கும் சுவாமியை நோக்கி தனது 



இருகரங்களையும் ஒருசேரக் 



குவித்துவைத்துக்கொண்டே 



வணக்கம் சுவாமிகளே !! என்று 



அழைத்தான்.                                                     



அதுவரையில் தியானத்தின் மூலம் 



நிஷ்டையில் இருந்த அவரின் 



செவிகளில் கணேசனின் குரல் 



ஒலித்திடவே கண்விழித்த அவர்,     



(கணேசனைப் பார்த்து) 



ஸ்வாமி :-என்ன !!மகனே என்னோடு 



விவாதம் நடத்தவே நீ இங்கு 



வந்திருக்கின்றாயோ என்றார் அவர். 



கணேசன்:-  ஆம்.சுவாமிகளே!! 



தங்களின் கணக்கு பொய்த்துப்போய் 



விட்டதே.                                                           



ஸ்வாமி:-   மகனே !! இந்த பூமியில் 



சில நேரங்களில் நாம் காணும் 



கானல் நீர்கூட பருகும்நீர் போலவே 



தோன்றவில்லையா? 



அதுபோலத்தான் இந்த நிகழ்வும். 



எல்லாம் "அவன்" செயல்.                     



கணேசன் :- இல்லை ஸ்வாமி. 



தாங்கள் குறிப்பிடுவது, என் 



மனைவியைப் பொறுத்தவரையில் 



தவறாகவே அமைந்துவிட்டது. நான் 



தாங்கள் கொடுத்த " கல்பத்தை " 



உட்கொண்டு அதன் பயனாக 



இறந்தவன் போல ஆகிவிட்ட 



நிலையில் நீங்கள் சொன்னதுபோல 



அவள் எனது பணத்தை மட்டும் 



விரும்பி இருந்தவள் என்பது 



உண்மையானால் அவள் 



எதற்காக,கண்ணீரும் 



கம்பலையுமால்க அழுது புரண்டு 



ஆர்ப்பரித்து என்னை 



இழந்துவிட்டோமே என்று கதறி 



இருக்க வேண்டுமே ?துடித்து இருக்க 



வேண்டுமே ?சொல்லுங்கள் 



சுவாமி.சொல்லுங்கள்.                             



ஸ்வாமி :- மகனே!! கடலிடைத் 



துரும்பு மனித வாழ்வு. இந்த 



தத்துவத்தின் பொருள் அறியாமல் நீ 



பிதற்றுகிறாய். பெண்களின் உள்ளம் 



எத்தன்மைவாய்ந்தது என்பதை நீ 



அறியாதவனப்பா. பாட்டு என்ன 



சொல்கிறது கேள்.                                   




 ஆறு !! அது ஆழமில்லை !! அது       


 சேரும் கடலும் ஆழமில்லை !!       


ஆழம் எது ஐயா ? அந்தப் 


பொம்பளை மனசு தான்யா !!             




கேள்விப்பட்டிருக்கிறாயா இந்தப் 



பாடலை. சரி பரவாயில்லை. நான் 



முதலில் வைத்தகுறி சற்று திசை 



மாறி பறந்து இருக்கலாம். இம்மாதம் 



வரும் பவுர்ணமி அன்று நீ இப்போது 



உட்கொண்டது போல உட்கொள்ள, 



இன்று மேலும் ஒரு கல்பம் உனக்கு 



தருகிறேன். அதை நீ உட்கொள். 



அப்போது நடைபெறும் நிகழ்வின் 



போது உன்மனைவி உன்னை 



விரும்புவது உன்னையோ அல்லது 



உன்னிடம் உள்ள அறிவையோ 



அல்லது உனது உடல் அழகையோ 



அல்ல !! அவள் அன்றும் இன்றும் 



இனி என்றென்றும் விரும்புவது 



உன்னிடம் குவிந்து உள்ள வற்றாத



செல்வச் செழிப்பையும் சொகுசு 



வாழ்க்கையையும் மட்டுமே என்பது 



உனக்குத் தெளிவாக புரியும். 



(இன்றைய தினம் நம் நாட்டினில் 



உள்ள ஏறத்தாழ 95 



விழுக்காடுகளுக்கு மேல் உள்ள 



திருமணம் முடித்து கணவர் 



மாபெரும் செல்வச் செழிப்பு உள்ள 



சீமான்களாக வாழ்ந்திடுவோர்களது 



மனைவிமார்களின் நிலையும் 



கிட்டத்தட்ட இதுவாகத்தான் இருக்க 



முடியும்.நடுத்தர வர்கத்தில் உள்ள 



மனைவிமார்களில் 5௦ 



விழுக்காடுகளுக்கு மேல் உள்ள 



அந்த மனைவியரின் நிலைமையும் 



அவர்களதுஆழ்மனதினில் உள்ள 



விருப்பமும் அதுவாகத்தான் 



இருந்திட முடியும்) ஆனால் 



இந்தமுறை உனது மனைவி மிகவும் 



எச்சரிக்கையாகவே செயல் 



படுவாள். எனவே  நீ இறந்ததுபோல 



இருக்கும் நிலைதனிலிருந்துவிடுபட 



ஓர் வழி ஒன்று உனக்குச் 



சொல்கிறேன். நீ பவுர்ணமி அன்று 



இறப்பதுபோல நடித்திடும் சம்பவம் 



நடைபெறும் இடத்திற்கு சரியான 



நேரத்தில் நான் அங்கே 



பிரசன்னமாகி உன் உயிரையும் உன் 



உடலையும் காப்பாற்றுவேன். நீ 



எதற்கும் கவலைப்படாமல் இந்த 



கல்பத்தை பத்திரமாக வைத்திருந்து 



வரும் பவுர்ணமி அன்று உட்கொள். 



மற்றவற்றை நான் பார்த்துக் 



கொள்கிறேன். இப்போது நீ சென்று 



வா மகனே !!                                              



சரி என்று சொல்லி கணேசன் 



ஸ்வாமிகள் தந்த கல்பத்தைப் 



பெற்றுக் கொண்டு வீடு 



திரும்பினான். நாட்கள் 



உருண்டோடின. ஸ்வாமிகள் 



சொன்ன பவுர்ணமியும் வந்தது. 



அன்றைய தினம் கணேசன் 



வாழ்வினில் நடந்தது என்ன ? 



நாளை வரைதான் சற்று பொறுத்து 



இருங்களேன் ?                                              



"" விடியும்வரை காத்திருங்கள் ""    



நன்றி !! வணக்கம் !!                                     



அன்புடன். மதுரை T.R.பாலு.