Tuesday, 30 July 2013

கடந்த 18-07-2013 வியாழன் அன்று இயற்கை எய்திய வாலிபக் கவிஞர் "வாலி" முதல் முதலாக MGR.க்காக எழுதிய பாடலின் வரலாறு!! .




உடல்மண்ணுக்கு!!உயிர்தமிழுக்கு!!   


உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என் 


இனிய தமிழ் நெஞ்சங்களே !!         


அனைவருக்கும் என் இனிய காலை 


வணக்கம்.                                                 


நான் ஏற்கனவே மறைந்த வாலிபக் 


கவிஞர் வாலி நம் தமிழ்த்திரை 


உலகிற்குள் எப்படி கால்பதித்து   


தமதுகவிதைதனைஅரங்கேற்றினார் 


என்பதுபற்றியஒருசிறுவிளக்கத்தை 


அன்னார் மறைந்த அன்று நான் 


வடித்த கண்ணீர் நினைவு அஞ்சலிக் 


கவிதையின் முடிவுரையில்  சிறு 


செய்திக்குறிப்பாக எழுதிஇருந்தேன். 


அதன் விரிவாக்கத்தினை இப்போது 


உங்கள் கருத்துக்கு விருந்தாக ,


இதயத்திற்கு மருந்தாக, படைப்பதில் 


மிகவும் மகிழ்ச்சி உள்ளவனாக 


இருக்கிறேன்.                                                 


பேரறிஞர் அண்ணா கதை வசனம் 


எழுதி புரட்சி நடிகர் M.G.R.நடித்து 


அந்நாளில் வெளிவந்த வரலாற்று 


சிறப்பு மிக்க படம்தான் "நல்லவன் 


வாழ்வான் " எனும் அதியற்புதமான 


திரைக்காவியம். அந்தப் 


படத்தில்தான் வாலிக்கு முதன் 


முதலாக பாடல் எழுதுகின்ற 


வாய்ப்பு கிடைத்தது. படத்தின் 


இயக்குனர் காலஞ்சென்ற  


ப.நீலகண்டன் வாலியைப் பார்த்து, 


என்னப்பா, உம்..,நல்லா பாட்டு 


எழுதுவியா? உன்னையை 


நம்பித்தான்  இந்த வாய்ப்பை 


உனக்கு தருகிறோம். என்ன..சரியா... 


என்று சொல்லிவிட்டு பாடலுக்கு 


உரிய காட்சியைப் பற்றியும் எந்த 


சூழ்நிலையில் அந்த பாடல் 


வருகிறது என்பது பற்றியும் எந்த 


கருத்துக்களை அந்த பாடலில் 


பதியம் செய்திடல் வேண்டும் 


என்பது பற்றியும் வாலிக்கு 


விளக்கம் தரப்பட்டது. 


அத்தனையையும் மிகப் பொறுமை 


நிறைந்த அவருக்கே உரிய 


இயல்பான குணத்தோடு 


கேட்டுக்கொண்ட வாலி ஒரு பத்து 


நிமிடத்தில் பாடல் தருகிறேன்என்று 


சொல்லி தனது ஜோல்னா பையில் 


வைத்திருந்த வெள்ளைப் பேப்பரை 


எடுத்து மளமள என பாட்டினை 


எழுதி சமர்பித்தார்.அந்த வரலாற்று 


சிறப்புமிக்க பாடல் இதோ உங்கள் 


அனைவரின் கவனத்திற்கு:-             


 (MGR.வாயசைக்க TMS.பாடுகிறார்):-   


சிரிக்கின்றாள்இன்றுசிரிக்கின்றாள்!! 


சிந்திய கண்ணீர் மாறியதாலே !!       


சிரிக்கின்றாள்இன்றுசிரிக்கின்றாள்!! 



(ராஜசுலோச்சனாவாயசைக்கஇசை--


-க்குயில் P.சுசீலா பாடுகிறார்):-         


 அன்புத் திருமுகம் காணாமல்             


 நான்துன்பக்கடலில் நீந்திவந்தேன்!! 


TMS.:-காலப் புயலில் அணையாமல்   

            

            நெஞ்சில் காதல் விளக்கை         


              ஏந்தி வந்தேன் !!                             


சுசீலா:-  உதயசூரியன் எதிரில்                 

              இருக்கையில்உள்ளத்தாமரை 


               மலராதோ ?                                     


 TMS.:-  எதையும் தாங்கும் இதயம்         

               இருக்கையில் இருண்ட               

             பொழுதும்புலராதோ!இருண்ட 


             பொழுதும் புலராதோ !!

                                                                                                                               (சிரிக்கின்றாள்) 


சுசீலா:-தென்மலராடும் மீன் விளை--


-                யாடும் அருவியின்                       

                 அழகைக் காணீரோ !!                 


TMS. :-    நான் வரவில்லை                         


                 என்பதனால் உன் மீன்விழி     


                 சிந்திய கண்ணீரோ ?                   


 சுசீலா :- மலர்மழைபோலே                     


                 மேனியின் மேலே குளிர்நீர்     


                  அலைகள் கொஞ்சிடுதோ ?     

TMS.&சுசீலா இருவரும் சேர்ந்து:-           

                 சிரிக்கின்றோம் !! இன்று           


                 சிரிக்கின்றோம் !!சிந்திய           


                கண்ணீர் மாறியதாலே               


                 சிரிக்கின்றோம் இன்று               


                 சிரிக்கின்றோம் !!                       


(இத்துடன் பாடல் நிறைவு 


பெறுகிறது)                                                     


 மறைந்த வாலிபக் கவிஞர் வாலி 


பாடலை ஒரு 1௦ நிமிடத்திற்குள் 


எழுதி முடித்து இயக்குனர் வசம் 


ஒப்படைக்கிறார். அவர் இந்தப் 


பாடலை பேரறிஞர் அண்ணா வசம் 


ஒப்புதலுக்கு அனுப்புகிறார்.வாலி 


நெஞ்சில் பயம். முதல் முதலாக 


எழுதிய பாட்டு. அண்ணா 


ஒருவேளை ஏற்க மறுப்பாரோ ?என 


அண்ணா பார்வை இட்ட பிறகு 


மீண்டும் அந்தக்கவிதை காகிதம் 


இயக்குனர் கைக்கு வருகிறது,பல 


இடங்களில் சிவப்பு மையினால் 


அண்ணா வட்டமிட்டும் கீழே கோடு 


இட்டும் குறியீடு செய்து இருப்பதை 


வாலி கண்டு மன வேதனை 


அடைகிறார். பாட்டு மறுக்கப்பட்டு 


விட்டதோ என அவரே ஒரு 


முடிவெடுத்து முகத்தை சோகமாக 


வைத்திருக்க இயக்குனர் வாலி 


அருகினில் வந்து அவரை முதுகில் 


ஒரு சபாஷ்போட்டு தட்டிக்கொடுத்து 


முதல் பாடலை அண்ணா மனதாரப் 


பாராட்டி இருக்கிறார். சிவப்பு 


மையினால் வட்டமிட்டதும் கோடு 


இட்டதும் பாட்டுக்கு மிக 


முக்கியமான வார்த்தைகள். எனவே 


எக்காரணமும் கொண்டு இந்த 


வார்த்தைகள் விடுபடக்கூடாது         


 என்பதற்காகவே அண்ணா குறியீடு 


செய்துள்ளார் என இயக்குனர் 


சொல்லியதற்குப் பிறகுதான் வாலி 


நிம்மதிப் பெருமூச்சு வெளியிட்டார். 


அந்த வார்த்தைகள் இவைதான் :-         

1)உதயசூரியன் எதிரில்                               


               இருக்கையில்                                 


2)எதையும் தாங்கும் இதயம்                     

                இருக்கையில் 


இத்துடன் இந்தக் கட்டுரை நிறைவு 


பெறுகிறது என் அன்புத் தமிழ் உடன் 


பிறப்புகளே !! மீண்டும் நாளை வேறு 


ஒரு தலைப்பினில் உங்கள் 


அனைவரையும் சந்திக்கிறேன். 


அதுவரை உங்கள் அனைவரிடமும் 


இருந்து நன்றி பாராட்டி விடை 


பெறுகிறேன். 


நன்றி !! வணக்கம் !!                                 


அன்புடன் !!                                                    


மதுரை TR.பாலு.

Tuesday, 23 July 2013

கூட்டுக்குடும்பவாழ்வின் பெருமைதனை விளக்கும் கவிதை !!


உடல்  மண்ணுக்கு !!


உயிர்  தமிழுக்கு  !!


தமிழனாக  வாழ்ந்திடுங்கள்  !!


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!


தமிழ்பேசும் சகோதர, சகோதரிகள்


நடுவினில் உரையாடும் பொழுது!!




உலகெங்கிலும்  வாழ்ந்து  வரும்


எனது  உயிரினும்  மேலான


அன்புத்தமிழ் உடன்பிறப்புகளே !!


உங்கள்  அனைவருக்கும்  இனிய,


இதயம்  கனிந்த,


நல்வாழ்த்துக்களுடன்  கூடிய,


வணக்கங்கள் பல  !! சமீப


காலத்தில்(எறத்தாழ 3மாதங்களாக)


தமிழ்த்திரைப்படத்துறைதனில்  


கால்  பதித்துள்ள  உங்கள்


அன்பனாகிய  நான் பொறுப்பேற்று


வசனம்  மற்றும்  பாடல்கள்


எழுதும் இந்திய மலேஷிய கூட்டுத்


தயாரிப்பில்  வெளி வர இருக்கும்


"பிருந்தாவனம் " என்ற வண்ணத்


திரைக்காவித்தில் நான் எழுதிய


மூன்றாவது பாடல்  


"குடும்பஉறவுகளின்பெருமை"தனை


விளக்கும்  பாடல்


ஒன்றினைஎனது அன்புத்தமிழ்


நெஞ்சங்களுக்குக்


காணிக்கையாக்கி


சமர்ப்பணம்  செய்வதில் மட்டற்ற


மகிழ்ச்சிஅடைகிறேன்.பாடலைப்


பார்த்துப்  படித்து  உங்கள்


பொன்னான கருத்துகளை


எனக்கு  எனது  மின்அஞ்சல்


(trbalu1954@gmail.com)மூலம்


உங்களதுகருத்துக்களை


பதிவு செய்திட வேணுமாய்க்


கேட்டுக்கொண்டு  விடை


பெறுகிறேன். நன்றி !! வணக்கம் !!


அன்புடன்  மதுரை  TR.பாலு.




பாடல் எண் :3.

 


கூட்டுக்குடும்பத்தின் சந்தோசம் !!


இங்கே கொண்டாடுது !!- - என்றும்


நாட்டுக் குயில் அதன் சங்கீதம் !!


இங்கே பண்பாடுது.


(கூட்டுக்குடும்ப)


சந்தோஷமென்பது சந்தேகமின்றி!!

                  குடும்பத்தில்தான்!!


சல்லாபமென்பதுநல்லோர்கள்!!


காணா வாழ்வினில்தான் !!


இந்தநாள் தருவது இன்பமென்றும் !!

எங்க கூட்டத்தில்தான் !!


எந்தநாளும்மகிழ்ச்சிகுறைவில்லை 

நாங்கவாழும்வாழ்வினில்தான் !!
( கூட்டுக் குடும்ப)


குழந்தைகள் முகத்தில் காண்பது !!

என்றும் மகிழ்ச்சிதானே !!


குடும்பத்தில் எந்நாளும் இருப்பது !!

இந்த நல்ல சாட்சிதானே !!


குழப்பமென்பதே இல்லாதது !!

குடும்ப காட்சிதானே !!


குதூகலமென்பது மட்டும்தான் !!

எங்கள் மனசாட்சிதானே!!


(கூட்டுக் குடும்ப)
 


நிலையற்றவாழ்வுதான்எப்போதும்!!

இங்கே மனிதவாழ்வு !!


நிலைப்போம் என்பதே தினமும் !!

காணும் நல்லகனவு !!


கலைஎன்பதில்லாமல்முத்தமிழும் !!

என்நாளும் முடிந்ததில்லை !!


கவலைஇன்றிவாழ்ந்தாலேபோதும்!!

என்றும்தொல்லைஇல்லை!!

(கூட்டுக் குடும்ப)

நன்றி !!


வணக்கம் !!


அன்புடன்  மதுரை  T.R.பாலு.



Saturday, 20 July 2013

மறைந்த வாலிபக் கவிஞர் பிறப்பால் ஐயங்கார் குலம்--விபூதி குங்குமம் பூசியதன் காரணம் என்ன?



உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 


தமிழனாக வாழ்ந்திடுங்கள்!!               


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!! 


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!   


தமிழ்பேசும் சகோதர, சகோதரிகள் 


நடுவினில் உரையாடிடும் பொழுது!!



உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என் 


உயிரினும் மேலான அன்புத் தமிழ் 


உடன்பிறப்புகளே!! முதற்கண் 


உங்கள் அனைவருக்கும் எனது 


இனிய காலை வணக்கங்கள் பல.



கடந்த வியாழன் (18-07-2013) அன்று 


இயற்கையோடு இரண்டறக் கலந்து 


விட்ட வாலிபக் கவிஞர் வாலி 


(உண்மைப் பெயர்:ரெங்கராஜன்) 


திருச்சி:ஸ்ரீ ரங்கத்தில் அவதரித்த 


கவிஞர் தமது பெயரை திரை 


உலகிற்காக " வாலி" என்று மாற்றி 


அமைத்துக்கொண்டார்.இராமாயண 


காவியத்தில் வாலி என்ற கதா 


பாத்திரத்தின் தன்மை என்ன என்று 


உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள் 


இருந்தாலும் தெரியாத நல்ல பல 


உள்ளங்களுக்கு இந்த விளக்கம்:- 


வாலி கிஷ்கிந்தா குலத்தில் பிறந்த 


உருவம். மிகச்சரியான பலசாலி. 


இறைவன் வாலிக்குத் தந்த 


மாபெரும் வரம்  என்றால் யார்வாலி 


எதிரில் வந்து நின்று சண்டை 


செய்திட்டாலும் எதிரியின் பலத்தில் 


பாதி வாலிக்கு வந்துவிடும். 


அதனால் தான் அவதார புருஷன் ஸ்ரீ 


இராமபிரானே வாலியை மறைந்து 


நின்று அம்பு பாய்ச்சி கொன்றது நாம் 


அறிந்த ஆயிரம் ஆயிரம் புராணப் 


புளுகுளில் தலையாய ஒன்று. சரி. 


அது இருக்கட்டும். ஆகவே அது 


போலவே தனக்கும் எதிரியின் 


வலுவில் பலத்தில் பாதி வர 


வேண்டும் என்று கருதியோ 


என்னவோ ரங்கராஜன் வாலியாக 


தனது பெயரை மாற்றம் செய்து 


கொண்டு வரும் வேளையில் ஸ்ரீ 


ரங்கத்தில் வாலி குடி இருக்கும் 


வீட்டுக்கு எதிர் வீட்டில்  வசித்து 


வந்தவர்   உபன்யாசகுல திலகம் 


"எம்பார் " ஸ்ரீ விஜயராகவ 


ஆச்சாரியார் அவர்.  அன்னார்- வாலி 


இடையே ஒருநாள் சந்திப்பு 


நிகழ்ந்தது. அப்போது:-


எம்பார்:- ஏண்டா அம்பி ரங்கராஜா !!


சித்த இப்படி வாடா!!அட மடையா!!.   


வாலி:- பெரியவாள் ஷமிக்கணும் 


(மன்னிக்கணும் அப்டீங்கறதுக்கு 


"அவாள்"பாஷை) என்ன !! என்ன !! 


விஷயம்.ஷேமமா இருக்கேளா!!   


எம்பார்:- நேக்கு என்னடா 


ஷேமத்துக்கு குறைச்சல். எல்லாம் 


அந்த நாராயணன் க்ருபையால ஒரு 


குறைச்சலும் நேக்கு இல்லடா அம்பி 


வாலி:- ரொம்ப சந்தோசம். பின்ன 


எதுக்கு என்னையை கூப்டேள்.     


 எம்பார்:- விஷயம் இருக்குடா அம்பி. 


வாலி:-(மனசுக்குள்.சீக்ரம்சொல்லித் 


தொலையும்) என்ன விஷயமோ?   


எம்பார்:- ஏண்டா உன்னோட 


தோப்பனார் நோக்கு அழகா பேர் 


ரங்கராஜன் அப்டின்னு வச்ருக்கர். நீ 


பாட்டுக்கு அத்த வாலின்னு 


மாத்திண்டுட்டியாமே !!கேள்விப் 


பட்டேன்!! நேக்கு எவ்வளவு 


கவலையா இருக்கு நோக்குத் 


தெரியுமோ?                                                       


வாலி:- ஏன் மாமா !!(பொதுவா இந்த


ஐயர்,ஐயங்கார் இந்தப்  பிரிவு 


ஜாதிகளில் சர்வ சாதரணமா மாமா 


என்ற சொல் எல்லோருக்கும் 


வழங்கப்பட்டுவருவது ரொம்ப 


ரொம்ப சகஜம். ஆண், பெண் இரு 


பாலருமே பெரியவாளை அப்டிதான் 


அழைப்பா. அத்த அவாளும் தப்பா 


எடுத்துண்டிட மாட்டா) இதுக்கு 


போய் நீங்க கவலைப்படறேள்? 


நேக்கு பிடிச்சது. வச்சுண்டுடுட்டேன் 


இப்ப அதுக்கு என்ன?                               


எம்பார்:- அட போடா மட்டிப்பயலே!! 


(முட்டாப் பயலேக்கு "அவாள்" 


பாஷையில் 


இப்படித்தான்சொல்வா)அப்படி 


அந்தப் பேர்ல என்னடா அப்டி 


விசேஷம் இருக்கு? சித்த நானும் 


தெரிஞ்சுக்கறேன்.                                         


வாலி:- சொல்றேன் மாமா. வாலி 


என்று யார் பெயர் வச்சுன்டாலும் 


அவாளுக்கு எதிரில் யார் 


நிக்கறாளோ அந்த எதிரியோட 


அறிவு,ஆற்றல், வல்லமை,பலம்இது 


எல்லாத்லயும் சரிபாதி வந்திடுமாம் 


வாலி என்ற பேர் உள்ளவாளுக்கு. 


அதனாலேதான் மாமா அந்தப் பேரை 


நான் வச்சுண்டேன்.இப்ப அதுக்கு 


என்ன?                                                           


 எம்பார்:- அட போடா மண்டு!! 


கிறுக்குப் பயலே!! உன்னையைப் 


பார்த்த அப்படி பாதி அறிவு ஆற்றல் 


பலம் வல்லமை வந்த 


புள்ளையாண்டனா  நேக்கு 


தெரியல்லையேடா உன்ன பாத்தா


எனக்கு எதுத்தாப்லே நீ இப்ப 


நின்னுட்டு இருக்ரதாலே 


என்னாண்ட இருக்கிற 


அறிவு,ஆற்றல்,வல்லமை,பேச்சுத் 


திறமை இது  நோக்கும் 


வந்த்ருக்கணும் இல்லையா. அப்டி 


ஒன்னும் நேக்கு தெரியலையேடா 


அம்பி!!ஹி..ஹி..


(என எம்பார்சிரிக்கிறார்)உடன்வாலி 


வாலி:- மாமா உங்களாண்ட நீங்க 


சொன்ன அத்தனையும் 


உண்மையிலேயே உங்கட்ட 


இருந்திருந்தா நிச்சயம் நேக்கு 


வந்திருக்கணும். வரலை.அப்ப 


உங்கட்ட ஒன்னும் இல்லன்னு 


தெரியறது ஹி..ஹி..ஹி..சிரித்த 


படியே மாமா நேக்கு நாழியாறது 


நான் வாரேன்(எனசொல்லி விடை 


பெற்று செல்கிறார்)                               


எம்பார்:- என்னடா இது அநியாயமா 


இருக்கு. இத்துனூண்டு படவா 


ராஸ்கல்!! இப்டி சொல்லிட்டு 


போயிட்டானே. உம்..எல்லாம் கலி 


முத்திடுத்து. அதான்.கோவிந்தா !! 


இந்த லோகத்தை நீதான் 


ரக்ஷிக்கணும்.(அப்டீன்னா 


காப்பாத்தணும் " அவாள் " பாஷை)          

சரி. இப்போது தலைப்பு சம்பந்தப் 


பட்ட விஷயத்திற்கு நாம்வருவோம். 


பிறப்பால் ஸ்ரீ ரங்கம் ஐயங்கார் 


குலத்தில் அவதரித்த வாலி மத 


சம்பந்தம் ஜாதி சம்பந்தம் 


இவைகளுக்கு அப்பாற்பட்டுவாழ்ந்த 


மகான் வாலி. திராவிட இயக்கத்தில் 


அதிக ஈடுபாடு (மனதளவில்) 


கொண்ட உத்தம புருஷன் வாலி. 


ஒருமுறை அவரது உயிருக்கும் 


உயிராக நேசிக்கும் அவரது உடன் 


பிறந்த சகோதரி நோய் வாய்ப்பட்டு 


உடல்நிலை மிகமிக மோசம் 


அடைந்த நிலையில் வாலிக்கு 


வேண்டிய நண்பர்களுள் ஒருவர் 


சுந்தரம் அவர் பெயர். அவர் 


வாலியிடம் நீ இப்ப செய்ய 


வேண்டிய விஷயம் இது 


ஒண்ணுதான். முருகப் 


பெருமானிடம் மனமார 


வேண்டிக்கோ.மத்ததெல்லாம் அவர் 


பாத்துப்பார். என்று சொல்ல, 


வாலியும் உள்ளம் உருக வேண்டி 


நின்றார் ஸ்ரீ முருகப் பெருமானிடம். 


ஸ்ரீ ரங்கத்தில் உள்ள ஒரு முருகன் 


கோவில் சென்று விபூதி,குங்குமம் 


எடுத்து வந்து தனது  சகோதரியின் 


நெற்றியில் அணிவித்தார். என்ன 


அதிசயம். மூன்றே நாளில் நல்ல 


விதமாக நோய் முற்றிலும் நீங்கி 


வாலியின் சகோதரி எழுந்து நடமாட 


ஆரம்பித்துவிட்டார். அப்போதுவாலி 


எழுதிய பக்திப் பாடல்தான் மதுரை 


T.M.சவுந்திரராஜனின் தேன் ஒழுகும் 


தெள்ளுதமிழ் இனிய பக்திரசம் 


ததும்பிய பாடல் இது தான்:-


" உள்ளம் உருகுதையா -முருகா     

 உன்னடி காண்கையிலே"-என்ற 


பாடல்.அன்றில் இருந்து தனது உயிர் 


பிரியும்வரைஅவர்அந்தவிபூதி,


குங்குமத்தை, மறக்காமல் தனது 


நெற்றியில் பூசி மகிழ்ந்த அந்த 


புண்ணியவான் வாலி.அவர்  உயிர் 


பிரிந்தவுடன் ஐயங்கார் ஜாதியில் 


உள்ள வெறியர்கள் செத்த அவரது 


பூத உடலின் நெற்றியில் நன்கு 


குழைத்து நாமம் போட்ட காட்சியை 


நானும் கண்டேன். எனக்கு 


சிரிப்புத்தான் வந்தது ரசிகப் 


பெருமக்களே. செத்தாக்கூட 


போகாதாம் இந்த ஜாதி வெறி 


அப்படீன்னு பெரியவா சொல்வா. 


அது என்னவோ வாலி விஷயத்லே 


சரியாத்தான் பொருந்திருக்கு. சரி. 


நேக்கும் நாழி ஆயிடுத்து. நான் 


வரட்டுமா. ஏன்னா 


உங்களைத்தானே !! வரேன்!!               


நன்றி!! வணக்கம்!!அன்புடன்!! 


மதுரை.TR.பாலு.


Thursday, 18 July 2013

காதலனும் காதலியும் --திருமணம்--கணவன் மனைவி--அப்புறம் என்ன ஆச்சு ? கோவிந்தா !!

உடல்மண்ணுக்கு!!உயிர் தமிழுக்கு !!
 

தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!

தனித்தமிழில் மட்டுமேபேசிடுங்கள்!!


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி !!


தமிழ் பேசும் சகோதர சகோதரிகள்


நடுவில்உரையாடிடும்பொழுதில்!!

உலகெங்கிலும் வாழ்ந்துவரும்


என்உயிரினும் மேலாக நான்


போற்றி வணங்கி வரும் என்


அன்புத் தமிழ் உடன்பிறப்புகளே !!   


முதலில் உங்களில்


அனைவருக்கும் எனது இனிய


மாலை வணக்கங்கள்.

ஏறத்தாழ ஒரு வார காலத்திற்கு


முன்பாக கூகுள் இணைய


தளத்தில் பேஸ்புக் வலைதளத்தில்


பேஸ்புக் தமிழ் பேசுவோர்கள்


சங்கம் என்ற ஒரு சமூக நீதி


காக்கும் அமைப்பின் வாயிலாக


பல்வேறு நல்ல பல


கருத்துக்களை


வாரி வாரி வழங்கிவரும் அந்த


அமைப்பின் சார்பாக ஒரு கட்டுரை


அதனைப் படித்து பின் சிரித்து


சிரித்து என் விலா எலும்பே நோவு


கண்டது.   வயிறோ சிரித்து சிரித்து


புண்ணாகிவிட்டது.அப்படிப்பட்ட


கட்டுரையை  என் நினைவில்


எவ்வளவு பதிய வைத்திட


முடியுமோ அந்த அளவு


நினைவினில் ஏற்றி அதனை


இப்போது உங்கள்முன்பாக


பணிவன்புடன் சமர்ப்பிக்கிறேன்.   


பொதுவாக பருவ வயதினை


அடைந்திடும் போது ஆணுக்கும்


பெண்ணுக்கும் காதல் அரும்புவது


என்பது இயற்கையான


நிகழ்வுகளுள் ஒன்றாக


தற்காலத்தில் கருதப்படுகிறது.


அப்படிப்பட்ட காதலர்களுள் ஒரு


ஜோடி அவர்களது பெயர் காதலன்


பெயர் “பாலன்”   காதலி பெயர்


“பாமா” இவர்கள் இருவரும்


காதலித்துக்கொண்டு


இருக்கும்போது எப்படி


இருந்தார்கள். அதன் பிறகு


திருமணம் நடைபெறுகிறது.


அதுக்கு அப்புறம் அவர்கள் வாழ்வு


எப்படி இருந்தது? பின் எப்படி


மாறியது ? இந்த சம்பவம் பற்றிய


கட்டுரைதான் நாம் காண


இருப்பது.படித்து மகிழ்வோமா


அன்பர்களே!! 

பாலன் :- இதற்காகத்தானே நான்


இத்தனை நாள் காத்திருந்தேன்?


பாமா:-நீ என்னை விட்டு


விலகிடுவாயா ?

பாலன்:-  கனவிலும் அவ்வாறு


நான் நினைக்க மாட்டேன் !!


பாமா:- நீ என்னை


விரும்புகிறாயா?

பாலன் :- ஆமாம். இன்று மட்டும்


அல்ல. என்றென்றும்!!.

பாமா:- நீ என்னை மறந்து


விடுவாயா?.

பாலன் :- அதைவிட செத்துப்


போய்விடுவேன்!!

பாமா:- நீ இப்போது எனக்கு ஒரு


முத்தம் நச்சுன்னு தருவாயா?


பாலன் :-கண்டிப்பாக !!அதுதானே


என் வாழ்நாளில் மிகப் பெரிய


சந்தோஷமான தருணம் !!

பாமா :- நீ என்னை அடிப்பாயா ?

பாலன் :- ஒருபோதும் அந்தத்

தவறை நான் செய்ய மாட்டேன்.

பாமா:- நீ என்னோட இறுதி மூச்சு


உள்ளவரை என்னுடன்


கைகோர்த்து கடைசிவரை


வருவாயா?  *********************************************************************************** அன்பர்களே !! இதுவரை


கதாநாயகனும் கதா நாயகியும்


ஒருவரை ஒருவர் உளமார


மனமார காதலித்து அதன் பின்னர்


இருவர் வீட்டிலும் கஷ்டப்பட்டு


கல்யாணத்திற்கு அனுமதி


பெறுகின்றனர். திருமணம் முடிந்த


கையுடன் தம்பதிகள்


ஊட்டி,கொடைக்கானல் என்று 3


நாள் தங்கி உல்லாசமாக


வாழ்கையின் ஒரு புதுக் கணக்கு


ஒன்றினை அவர்கள்


துவக்குகிறார்கள் மூன்றுமாத


காலம் முடிகிறது!! அதன் பின்னே


அவர்களது வாழ்க்கை? என்ன


செய்வார்கள் ? ஹலோ !!ஒன்


மினிட் ப்ளீஸ்.திருமணம் முடிந்து


தேன் நிலவும் முடிந்து


கோலாகலத்துடன் 9௦ நாள்கள்


இல்வாழ்க்கை முடிகிறது. ஆசை


அது 6௦ நாள் மோகம் அது 3௦நாள்.


ஆக மொத்தம் 9௦நாட்கள்.அதற்குப்


பிறகு !!இவர்கள் என்ன


பேசுவார்கள்? அதைத்


தெரிந்தகொள்ள ஆவல் அதிகமாக


உள்ளதா?அப்படி என்றால்


இதுவரை அவர்கள் காதலித்து


கல்யாணம் வரும்வரையில் பேசிய


பேச்சுக்கள் மேலே தரப்பட்டுள்ளது


அல்லவா. அதனை கீழிருந்து


மேலாக படித்துப்பாருங்கள்


உங்களுக்கே விஷயம் புரிய வரும்.


என்ன சரியா !! படித்துப் பார்த்து


நாளை காலையில் உங்களது


ரசனையைப் பற்றி


விலாவாரியாகச் சொல்லுங்கள்


என் அன்புத் தமிழ் உடன்


பிறப்புகளே !! நன்றி !! வணக்கம் !!


அன்புடன். மதுரை TR. பாலு.