Friday, 28 June 2013

ஆண்டவன் கட்டளை !!/ கனவுலக சாம்ராஜ்யம் !!





உடல்மண்ணுக்கு!! உயிர்தமிழுக்கு!! 


தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!                 


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!! 


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!   


தமிழ் பேசும் சகோதர,சகோதரிகள் 


நடுவில் உரையாடிடும் பொழுது !!   


(முதலில் சற்று சிரமமாகத்தான் 

இருக்கும்." வைராக்கியத்துடன் " 

முயன்றால், முடியாதது என்று ஏதும் 

இங்கே இல்லை.சொல்வது சரியா?)                                                    



உலகெங்கிலும் வாழ்ந்து வரும் என் 


உயிரினும் மேலாக நான் போற்றி 


வணங்கி வரும் என் அன்புத்தமிழ் 


நெஞ்சங்களே !! அருமை மிகுந்த 


உடன்பிறப்புகளே !!


உங்கள் அனைவருக்கும் எனது 


இனிய காலை வணக்கம். (௦3.32 A.M)  


நான் சிறு வயது பையனாக அன்று 


இருந்தபோது (அநேகமாக 13 அல்லது 


15வயது என நான் எண்ணுகிறேன்)  


தமிழ் திரை உலகில் வில்லன் 


நடிகர்களில் மிகவும் பிரசித்தி பெற்ற 


வர்களுள், தலையாய வில்லன் 


நடிகர் மறைந்த P.S.வீரப்பா என்பவர். 


அவரது சிரிப்பு அந்தக் காலத்தில் 


மிகவும் ரசிகர்களை கவர்ந்ததாய் 


இருந்திருந்தது.உண்மையில்வீரப்பா, 


வில்லன் வேடத்தில்  நடித்து 


இருந்தார், என்றாலும், உண்மை 


வாழ்க்கையில், மிக மிக நல்லவர். 


அது போலவே, நம்பியார்.   அவரும் 


மிகப் பெரும்பான்மை திரை 


படங்களில் அவர் வில்லன் வேடம் 


மட்டுமே தனது முத்திரை இடப்பட்ட 


கோலமாக இருந்தாலும், உண்மை 


வாழ்கையில் அவரும் மிகச் சிறந்த 


ஆன்மீகவாதி,ஐயப்ப பக்தர், மூத்த 


குருசாமி,நல்ல எண்ணம் உள்ள 


உத்தமர். 


(         (தொடரும் ...இடை வேளை)      )



"  கனவுலக கற்பனை சாம்ராஜ்யம்"     


(இந்தப் பகுதியில் வரும் செய்திகள் 


குறிப்புகள்,சம்பவங்கள் இவை 


அனைத்தும் கட்டுரை ஆசிரியரின் 


தனிப்பட்ட கற்பனையில் அவர் 


கண்ட கனவில் /சொப்பனத்தில் 


புனையப்பட்ட/எழுதப் பட்ட 


கருத்துக்களே அன்றி வேறு எந்த 


தனிப்பட்ட நபரையோ வேறு 


எவரையோ பற்றிக் குறிப்பிடுவன 


அல்ல.இது கட்டுரை ஆசிரியரின் தன் 


நிலை விளக்கம்)


அந்த நாட்டு மக்கள் ஒரு தொன்மை 


மிக்க புகழ் கொண்ட மொழி பேசிடும் 


மக்கள்.எல்லோரையும் நல்லவர்கள் 


என்று நம்பியே தங்களது 


வாழ்க்கையை இன்றுவரை 


தொலைத்த/தொலைத்துக் கொண்டு 


இருக்கும்  பெருமையும் அந்த 


மக்களையே சாரும்.அந்த நாட்டு 


மக்கள் இருக்கிறார்கள் அல்லவா 


அவர்களுக்கு என்று தனி குணம் 


ஒன்று உண்டு. வெளுத்தது 


எல்லாமே பால் எனக்கருதும் 


கள்ளம் இல்லா வெள்ளை மனம் 


அவர்களுக்கு. கதாநாயகன் 


நல்லவன் போல நடிப்பதினால் 


அவன் நல்லவன் என்றே நம்பி 


மோசம் போகும்//போன  குணமும் 


அவர்களிடம் உண்டு. அப்படி (நடித்து 


மக்களை ஏமாற்றி அவன் 


திரைப்படத்தில் நடித்து இருப்பது 


போல) உண்மை வாழ்விலும் ஏழை 


எளிய மக்களுக்கு வாழ வழி 


வகுப்பான், வறுமைக் கோட்டுக்கு 


கீழே உள்ள மக்களின் வாழ்வினில் 


"ஒளி விளக்கு" ஏற்றி வைப்பான், 


அவனது கை,"அன்னமிட்ட கை", 


இந்த நல்லவேடம் போட்டவன் 


கைதனில் அந்த புண்ணிய பூமியை 


கொடுத்தால் அதை "புதிய பூமி " 


ஆக்கி   மக்களது "உரிமைக்குரல்" 


தனை உலகெங்கிலும் ஒலிக்கச் 


செய்திடுவான் என நம்பி அவர் 


கையிலும் அந்த நாட்டை ஏறத்தாழ 


13 ஆண்டுகட்கு மேலாக நிர்வகிக்க 


ஆளத்தந்தனர் அம்மக்கள். அந்த 


நல்ல மகான் கிழவிகளை எங்கே 


கண்டாலும் அப்படியே பாசம் 


இருப்பது போல எல்லோரையும் 


நம்ப வைக்க, அந்த வயது முதிர்ந்த 


மூதாட்டியை கட்டி பிடித்து அவளது 


நல்ல ஆசிகளை வாங்குவது போல 


நடிப்பார் அவர் "எங்க வீட்டுப் 


பிள்ளை "ஏழைகளின் தோழர் என்று 


நம்பி ஆட்சிப் பொறுப்பினை அந்த 


போலியான வேடம் தரித்த 


நல்லவர்கையில் நாட்டையே 


ஆளும் வாய்ப்பைக் கொடுத்து அகம் 


மகிழ்ந்தவர்கள் தான் அந்நாட்டு 


மக்கள். அந்த நல்லவர் (போல 


நடித்து எமாற்றிவர்) அவர் அந்த 


நாட்டைக் கெடுத்துக் குட்டிச் சுவர் 


ஆக்கியது போதாது என கருதி தனது 


காலத்திற்குப் பிறகு தான் கண்ணை 


மூடிய பிறகு அந்த நாட்டை 


தன்னைப்போலவே கெடுத்துக் 


கெட்டழிவு செய்வதற்கு தனது 


அரசியல் வாரிசாக அந்த நாட்டைக் 


கெடுத்துக் குட்டிச் சுவர் போலவே 


ஆக்குவதற்கு  மனத்தில் தீர்க்கமாய்


முடிவெடுத்து இன்னொரு "வசந்த 


சேனையாக" மூலையில் கிடந்த 


அதற்கு முடிசூடிவிட்டு விண்உலகம் 


சென்று விட்டார். அந்த மூலையில் 


கிடந்தது அந்த நாட்டைக் கெடுத்து 


நாசக்காடாக ஆக்குகிறது என்றால் 


என்ன பொருள்? அதுதான் அந்த 


நாட்டு மக்களின் தலை எழுத்து. 


எல்லாம் வல்ல ஆண்டவனமட்டுமே 


இந்தத் தலைவிரி கோலத்தை 


மாற்றி அமைக்கும் வல்லமை 


பெற்றவன். அவனை அந்த 


ஆண்டவனை நாட்டு நல்ல அறிவு 


படைத்த மக்கள் தற்போது 


பிரார்த்தனை செய்யத் தொடங்கி 


விட்டார்கள்.இறைவா சீக்கிரம் இந்த 


போக்கினைத் தடுத்து நிறுத்து. 


மாற்றத்தினை கொண்டு வா என 


கேட்கத் துவங்கிவிட்டனர் என்று 


சொல்லிகொண்டிருக்கும் போது 


கட்டுரை ஆசிரியரின் வீட்டுஅழைப்பு

மணி ஓசை கேட்டிட ஆழ்ந்த 


தூக்கத்தில் மேலேசொன்ன 


நல்லதோர் சம்பவங்கள் நிறைந்த 


அவரின்  "கனவுல கற்பனை 


சாம்ராஜ்யம்" அப்போது கலைந்து 


விடுகிறது.)                                                                


இப்போது இடைவேளை முடிந்து 


மீண்டும் படம் துவங்குகிறது. 


இந்தக் கட்டுரையின் தலைப்பில் 


நான் குறிப்பிட்டுள்ள இறைவன்  


ஆண்டவன், அவனின் கட்டளை 


என்ன அது எத்தனை என்று P.S.V.     


பிக்சர்ஸ் அந்தக் காலத்தில் எடுத்த 


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 


அழகு ராணி தேவிகா முதலியோர் 


நடித்து மறைந்த சிறந்த இயக்குனர் 


A. பீம்சிங் அவர்களின் இயக்கத்தில் 


வெளி வந்த வில்லன் நடிகர் P.S. 


வீரப்பா தயாரித்துஅளித்த  படம்தான்    


" ஆண்டவன் கட்டளை "                       


அந்தப் படத்தில் சமீபத்தில் இயற்கை 


எய்திய மதுரை மண்ணின் மைந்தன் 


T.M.சவுந்திரராஜன் பாடிட சிவாஜி 


வாய் அசைக்க கண்ணதாசன் 


இயற்றிட மெல்லிசைமன்னர்கள் 


இசை அமைக்க வெளிவந்த பாடல் 


தான்:-



 "  ஆறு மனமே ஆறு !! 


  அந்த ஆண்டவன் கட்டளை ஆறு "                    



என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க 


பாடல். நானும் பாருங்க,கடந்த 45 


ஆண்டுகளுக்கும் மேலாக அந்தப் 


பாடலில் வரும் அந்த ஆறு கட்டளை 


அதனை மனப்பாடம் செய்திட  


வேணும் என எண்ணி முயற்சி பல 


செய்தது உண்டு. அந்த முயற்சி 


எனக்கு நேற்று வரை பலிக்காமல் 


இருந்தது.  ஆனால் நேற்று அந்தப் 


பாடலை நான் அரும்பாடுபட்டு பதிவு 


செய்தேன். இப்போது நான் அந்தப் 


பாடலை உங்கள் அனைவரின் 


பார்வைக்கு இதோ தருகிறேன்:-          



ஆறு மனமே ஆறு  !! அந்த 


ஆண்டவன் கட்டளை ஆறு !!                       


தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு !! 


தெய்வத்தின் கட்டளை ஆறு !!       


தெய்வத்தின் கட்டளை ஆறு !!                      


*                                     (ஆறு மனமே ஆறு)           


ஓன்றே சொல்வார் !!


ஓன்றே செய்வார் !! 


உள்ளத்தில்உள்ளது அமைதி !!                    


இன்பத்தில் துன்பம் !!                                   


துன்பத்தில் இன்பம் !!                             


இறைவன் வகுத்த நியதி !!                       


சொல்லுக்குசெய்கைபொன்னாகும்!!  


வரும்துன்பத்தில் பட்டாகும்!!                 


இந்த இரண்டு கட்டளை அறிந்த 


மனதில் எல்லா நன்மையும் 


உண்டாகும் !!


எல்லா நன்மையையும் 


உண்டாகும்!!                      (ஆறு மனமே) 



உண்மையைச் சொல்லி !!                           


நன்மையைச் செய்தால் !!                         


உலகம் உன்னிடம் மயங்கும் !!               


நிலைஉயரும்போதுபணிவு                  


கொண்டால் !!


உயிர்கள் உன்னை வணங்கும் !!        


உண்மை என்பது அன்பாகும் !!


பெரும் பணிவு என்பது பண்பாகும்!!    



இந்த நான்கு கட்டளை அறிந்த 


மனதில் எல்லா நன்மையையும் 


உண்டாகும் !!எல்லா நன்மையையும்  


உண்டாகும் !!    (ஆறு மனமே ஆறு )   



ஆசை கோபம் களவு கொள்பவன் !!    


பேசத்தெரிந்த மிருகம் !!                        


அன்புநன்றி கருணை கொண்டவன்!! 


மனித வடிவில் தெய்வம் !!                       


இதில் மிருகம் என்பது கள்ள மனம் !!


உயர் தெய்வம் என்பது பிள்ளை 


மனம்!! 


இந்த ஆறு கட்டளை அறிந்த 


மனமே  ஆண்டவன் வாழும் 


வெள்ளை மனம் !! ஆண்டவன்                  


வாழும் வெள்ளை மனம் !!                                        



ஆறு மனமே ஆறு !! அந்த                                 


ஆண்டவன் கட்டளை ஆறு !!                              


தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு  


தெய்வத்தின் கட்டளை ஆறு !!               


தெய்வத்தின் கட்டளை ஆறு !!



இத்துடன் பாடல் முடிகிறது !!           




நன்றி !! வணக்கம் !!                                     


அன்புடன் மதுரை T.R. பாலு.           


மீண்டும் நாளை சந்திப்போமா 


நேயர்களே !!


Sunday, 23 June 2013

ஆண் இனத்திற்கு அழிவு ஆரம்பம் ஆவது எப்போது ?





உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!!


தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!                


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!  


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!   


தமிழ்பேசும்சகோதர,சகோதரிகள் 


நடுவில் உரையாடிடும்பொழுது !!        



உலகெங்கிலும் அன்புடனும் நல்ல 


தமிழ்ப்பண்புடனும் வாழ்ந்துவரும் 


என்உயிரினும்மேலான அன்புத்தமிழ் 


உடன்பிறப்புகளே!!                                            



முதற்கண் உங்கள் அனைவரையும் 


வணங்கி மகிழ்கிறேன்.                



இன்றைய தினம் சற்று வித்தியாசம் 


நிறைந்த ஒரு தலைப்பில் உங்கள் 


அனைவரையும் நான் இன்று 


சந்திக்கிறேன்.                                                


ஐம்பெரும்  காப்பியங்களுள் 


ஒன்றான இளங்கோ அடிகளின் கை 


வண்ணத்தில் உருவான 


"சிலப்பதிகாரம்" அதில் கோவலன் 


எவ்வாறு அழிவைச் சந்திக்கிறான் 


என்பதனை கோவலனே சொல்வது  


போன்றஒரு செய்யுள்அதன் பொருள்                                  


பொதிந்த கருத்துக்களைப்பாருங்கள் 


என்அன்புத்தமிழ்உடன் பிறப்புக்களே   


பாடல் இதோ உங்கள் கண்களுக்கு:-  


நண்டு சிப்பி வேல்கதலி நாசமுறுங்கால் தான்    


கொண்ட கருவேஅழிக்கும்கொள்கையதுபோல் 


பண்டு தனம் கல்வி மனம்பாழடையும்நாள் உளம் 


பாவையர்மேல்நாடுமெனபடித்துணர்ந்தும்நான்  


கொண்டவளைத்தான் துறந்து மாதவி சதமென     


நினைத்தேனே !!                                                                             


என்பது பாட்டு. இந்தக் காவியத்தின் 


வாயிலாக ஆண் இனம் கற்றுக் 


கொள்ள வேண்டிய பாடம் என்ன 


என்றால் இறைவனால் 


படைக்கப்பட்ட இந்த பூவுலகில்    


நண்டு, சிப்பி,கதலி என சொல்லிடும் 


வாழை இனத்தின் ஓர் வகை ஆக 


இந்த மூன்று இனங்களும் தான் 


தனது வாரிசுகளை இவ்வுலகிற்குத் 


தரும் வேளையே அவைகளின் 


இறுதி வாழ்நாள் தினமாக ஆகிறது 


அதுபோல ஒரு ஆண் மகனின் புகழ், 


செல்வம்,படித்தபடிப்பு செம்மையான 


அவனுள்ளம் ஆக இவையனைத்தும் 


என்றுஒரு பாவையின்மேல் இவன் 


உளம் நாடுகிறதோ அன்றேஅழிந்து 


போம் என நான் படித்து அறிந்தும் 


நான் முறைப்படி தொட்டுத் தாலி 


கட்டிய என் புனித உளங்கொண்ட 


கண்ணகியை துறந்து, இந்த ஆடல் 


அரசி,பூம்பாவை,(இவர்கள் பொருட் 


பெண்டிர் என வள்ளுவர் காலத்தே 


அழைக்கப்பட்டவர்கள்)மாதவியை 


உண்மை,நிஜம்,வாழ்க்கைத்துணை 


என்று நினைத்து மேற்சொன்ன 


அனைத்தும் இழந்து இன்று கள்வன் 


என்னும் பட்டத்தையும் பெற்று இந்த 


நிலைக்கு ஆளாகிப்போனேனே 


என்று கோவலனின் மனம் வருத்தம் 


அடைவதாக புனையப்பட்ட இந்தப் 


பாடல் ஆண் இனத்திற்கு ஒரு 


எச்சரிக்கைமணியாகும்.பொதுவில் 


தமிழிலோர்சொல் வழக்கு ஒன்று 


உண்டு. அது என்னவென்றால்:-   


கிளி போன்றதொரு மனைவி 


வீட்டில் இருந்தாலும் கூட குரங்கு 


போல் ஒரு"வைப்பாட்டி" வைத்துப் 


பார்ப்பது உலக வழக்கம் என்று.   


நான் ஏற்கனவே முந்தைய கட்டுரை 


ஒன்றில் இதுபற்றி குறிப்பிட்டு 


இருந்ததை மீண்டும் அன்பர்களின் 


நினைவுக்கு வழங்குகிறேன். 


மனைவி இருக்க மேலும் ஒரு 


பெண்ணின்மேல் ஆணுக்கு மையல் 


உண்டாவதன் விளைவு ,அதனால் 


வந்த வரவு,இந்தப் புது உறவு,இவள் 


இந்த ஆண் மகன் மனப் பார்வையில் 


மனைவியை விட சகல விதமும் 


சிறந்தவளாக,  உயர்ந்தவளாக, 


இவன் "உள்ளத்தேவையை புரிந்து" 


நடந்துகொள்பவளாகவே அமைவது 


தான்இந்தப்பெண்களுக்கு கிடைக் 


கும் தொழில் ரீதியான அங்கீகாரம் 


என்றே நான் கருதுகிறேன். அடுத்து 


மிகவும் இளமை அழகும் எழிலான 


தோற்றமும் உள்ள இந்த பாவை ஏன் 


"பாட்டி"எனும்அடைமொழிச்சொல் 


(வைப்பாட்டி)கொண்டு அழைக்கப் 


படுகிறார்கள். அதற்கும் ஒரு 


காரணம் உள்ளது அன்பர்களே.  


பொதுவாக இந்த ஆண்கள் இறுக்கி-   


றார்களே இவர்களது கோபம்,வேகம் 


அடக்கிஆளும்குணம்இதுஎல்லாமே 


முதலில் இவனுக்கு வாக்கப்பட்டு 


வரும் மனைவியிடம் மட்டுமே 


செல்லுபடியாகிறது.  ஆனால் இந்த    


("பொருட்பெண்டிர்")பூம்பாவையர் 


மீது மையல் கொண்ட ஆண்களால்  


மனைவிமேல்காட்டியஅடக்கி 


யாளும் குணத்தை இவர்கள்மீது 


காட்டிட இயலாதது மட்டும் அல்ல 


அந்தப்பெண்கள் இந்த மோக வெறி 


கொண்ட ஆணைஆட்டி வைப்பாள். 


இந்தக்கடைசி வார்த்தையான ஆட்டி 


வைப்பாள் என்றசொல்லை திருப்பி 


திருப்பிசொல்லிப்பாருங்கள் விடை 


உங்களுக்கு தானாக புரிந்திடும்.அது 


"வைப்பாட்டி" என்றே வரும். 


இந்திரன் கெட்டதும் பெண்ணாலே!! 


சந்திரன் கெட்டதும் பெண்ணாலே 


என்னும் முதுமொழிக்கு ஏற்ப ஆண் 


இனம் அழிய முற்படுகிறது என்று 


சொன்னால் மனைவியை விடுத்து 


பிறபெண்ணிடம் இவன் எப்போது 


உடலுறவு கொள்ள முனைகிறானோ  


அதுமுதல் ஆரம்பம் ஆகிறது 


என்பதே இந்தக் கட்டுரையின் இறுதி 


விடையாக நான் எடுத்துக்கூறி 


இதுவரை இந்தக் கட்டுரையை மிக 


பொறுமையோடு படித்த அன்புத் 


தமிழ் நெஞ்சங்கள் அனைத்திற்கும் 


என் உளமார்ந்த மனமார்ந்த நன்றி 


வணக்கமதை  காணிக்கையாக்கி 


விடை பெறுகிறேன்.                                       


அன்புடன் மதுரை T.R.பாலு.

Friday, 21 June 2013

எது முக்கியம் ? ஒரு உண்மை நிலவரம் !!




உடல்மண்ணுக்கு!!  உயிர்தமிழுக்கு!!


தமிழனாக வாழ்ந்திடுங்கள் !!                 


தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள்!!


ஆங்கிலமொழிகலப்புஏதும்இன்றி!!   


தமிழ்பேசும் சகோதர சகோதரிகள் 


நடுவில் உரையாடிடும்போது !!             



*                        "எது முக்கியம்" ?


உலகெங்கிலும் வாழ்ந்துவரும் என் 


உயிரினும் மேலாக நான் போற்றி 


வணங்கிவரும் என் அன்பு உடன் 


பிறப்புக்களே!!


உங்கள்அனைவரையும்  வணங்கி 


மகிழ்கிறேன். நிற்க !!                    


இன்றைய தினம் ஒரு சமுதாய 


சிந்தனைக் கண்ணோட்டத்துடன் 


கூடிய ஒரு விஷயத்தை நான் 


உங்களில் அனைவருடன் 


விவாதித்திட  எண்ணி இந்த 


கட்டுரைக்கு " எது முக்கியம் " என்று 


தலைப்பு கொடுத்து உங்கள் 


அனைவரின் கவனத்தையும் ஒரு 


சேர என்வசம் கொண்டு வருவதில் 


மட்டட்ற  மகிழ்வு பெறுகிறேன்.                   


பொதுவாக மனித உடற்கூறு 


அமைப்பின்படி 35 வயதிற்கு மேல் 


உடல் எடை கூடிடும் வாய்ப்புகள்  


அது ஆணாக இருந்தாலும் சரி, 


இல்லை பெண்ணாக இருந்தாலும் 


சரி தொடர்ச்சியாக உடற்பயிற்சி 


செய்திடும் பழக்கம் இல்லாத 


நபர்களுக்கு  உட்கார்ந்துகொண்டே 


வேலைசெய்திடும் மாந்தர்களுக்கு 


இந்த உடல் எடை கூடுவது என்பது 


தவிர்க்க முடியாத ஒன்று. அப்படி 


எடை கூடுவதால் என்னென்ன 


பாதிப்புகள் வரும் என்று கேட்டால் 


வேகமாக நடக்க முடியாமை, மூச்சு 


வாங்கிடும் வண்ணம் இயல்பு, இந்த 


எடைகூடுவது பல நோய்களுக்கு 


தாய் போன்றது. ஆம்.  அன்பர்களே !!


உயர்   இரத்த அழுத்தம்,சர்க்கரை 


நோய், இரத்த கொழுப்பு அதிகம் 


ஆகுதல், அதனால் ஏற்படும் இதய 


பாதிப்பு இது போன்ற இத்யாதி, 


இத்யாதி, வியாதிகள் இந்த எடை 


கூடுவது என்பதாலேயே வருகிறது 


என்பதனை மருத்துவ ஆராய்ச்சி, 


மற்றும்அதன்தொடர்அறிக்கைகள் 


நமக்கு அறிவுறுத்துகின்றன.சரி 


அப்படி என்றால் இந்த எடை 


அதிகரிப்பை தடுத்திட நாம் என்ன 


செய்திட எண்டும் என வினவி நாம் 


மருத்துவர் ஆலோசனை கேட்டால் 


அவர் நமக்கு தரும் முதல் அறிவுரை 


என்ன வென்றால்:-                                              


DOCTOR:-  Mr. சுரேஷ். என்ன இது ? 


உடம்பா இது. உம்.. ஏன்? இப்படி.. உம்.. 


ஏன்?இப்படி.. பெருக்க விட்டுட்டீங்க? 


ஆமா. நீங்க என்ன வேலை 


பார்க்குறீங்க ? சும்மா just தெரிஞ்சுக் 


கிறதுக்குத்தான்  கேட்டேன் ?                       


சுரேஷ் :-  டாக்டர் சார். நம்ம வேலை.. 


டாக்:-  உம்..தப்பு..தப்பு.. உங்க வேலை 


சுரேஷ்:- உம். ஆமா இல்லை. என் 


வேலைபெரிய வேலை.                                      


டாக்:- அப்படி என்ன பெரிய வேலை? 


சுரேஷ்:- சாப்பிட வேண்டியது..தூங்க 


வேண்டியது. திருப்பி சாப்பிட   


வேண்டியது.. அப்புறம் ..                                      


டாக்:- நிறுத்து..நிறுத்து.. நானே 


சொல்றேன்..திருப்பி சாப்பிட  


வேண்டியது..தூங்க வேண்டியது .. 


அதைத்தானே சொல்ல  வந்தாய் என் 


சுந்தர சுரேஷ்.                                                        


சுரேஷ்:- இல்லை வெறும் சுரேஷ்.. 


டாக்:-   இதுல ஒன்னும் குறைச்சல் 


இல்லை. Mr. சுரேஷ் இந்த மாதிரி 


இன்னும் ஒரு6மாசம் இருந்தீங்க 


அப்படின்னு வச்சுக்குங்க?                         


சுரேஷ்:-  என்ன ஆகும் டாக்டர். 


எனக்கு மெடல் போடுவாங்களா.   


டாக்:-  இல்லை Mr. சுரேஷ் உங்க 


படத்துக்கு மாலை போடுவாங்க.   


சுரேஷ்:-  டாக்டர்.என்ன சொல்றீங்க? 


டாக்:-உக்கும்..இதுலே ஒன்னும் 


குறைச்சல் இல்லை. துன்றதை 


மட்டும் குறைச்சுறாதே !!                           


சுரேஷ்:- டாக்டர். உங்களுக்கு ஏன் 


இப்படி பொறாமை. முடிஞ்சா 


நீங்களும் சாப்பிட்டு பாக்க 


வேண்டியது தானே!! 


ஏன்னா.உங்களாலே அது முடியாது. 


டாக்:-  முடியாமலேயே போட்டும். 


Mr.சுரேஷ். நாம என்னா சினிமா 


படமா எடுத்துட்டு இருக்கோம்? நான் 


சொல்றதை ரொம்ப கவனமா 


கேளுங்க.தினசரி காலையிலே 5 


மணிக்கு எல்லாம் எந்திரிக்கனும். 


எந்திரிச்சு...                                                            


சுரேஷ்:- டாக்டர். ப்ளீஸ். கொஞ்சம் 


நிறுத்துங்க. 5 மணிக்கு எழுந்திரிச்சு 


நான் என்ன 1௦௦ வயசா உசுரோட 


இருக்கப் போறேன்?                                       


டாக்:- யூ. fool. நான் சொல்லப்போற 


ட்ரீட்மெண்ட் 1௦௦ வயசு இருக்கறது 


அதுக்கு இல்லை.                                        


சுரேஷ்:- பின்ன, எதுக்கு?                                


டாக்:-  யாரையும் படுத்தாம போய் 


சேற்றதுக்கு.                                                       


சுரேஷ்:- டாக்டர். அப்ப என்னை சாக 


சொல்றீங்களா?                                                   


டாக்:- இப்படி தின்னு தின்னு நீ 


உசுரோட இருக்கறதுக்கு பேசாம 


செத்துரு. எல்லோருக்கும் நல்லது. 


அட பேசாம இருப்பா!! சாவ்ரதுக்கா 


அல்லாரும் டாக்டர்ட்ட வருவாங்க?


சுரேஷ்:- பிறவு. வேற எதுக்கு.                 


டாக்.:-  சுரேஷ்.நான் சொல்றதை 


கேளுங்க 5 மணிக்கு எழுந்து ஒரு 5 


கிலோ மீட்டர் கையை காலை வீசி 


நடங்க பாப்போம்.                                               


சுரேஷ்:- நடந்தா என்ன வரும் 


டாக்டர்?.                                                                         


டாக்:- என்ன வராதுன்னு கேளு 


தம்பி. முதல்லே உங்களுக்கு நோய்  


வராது. அதனாலே நீங்க என்ன 


செய்றீங்க தினசரி காலையிலே 5 


மணிக்கு எழுந்து நடங்க. மாத்திரை 


மருந்து எல்லாம் இதுக்கு 


அப்புறமேல்தான்.என்ன நான் 


சொல்றது புரியுதா?           இந்த மாதிரி 


சொன்னதும் பொதுவா 1௦௦க்கு 9௦ 


பேர் புதுமாடு குளிப்பாட்டினஅந்த 


கதை போல 2 நாள் இல்லை ஒரு 3 


நாள் நடப்பாங்க. அதோடு முடிந்தது. 


இப்போது நாம் தலைப்பு 


சம்பந்தப்பட்ட விஷயத்திற்குள் 


போவோம்.                                                         


எது முக்கியம்?



அன்புமிகு நண்பர்களே. கடனேன்னு 


நடை பயிற்சி முடிச்சுட்டு வந்து 


9இட்லி,2கரண்டி பொங்கல்,3 


மெதுவடை, கேசரி,கறிக்கொழம்பு.



இதுபோல சாப்பிடுவதற்கு பேசாமல் 


மவுன விரதம் இருந்திடுவோம் 


அன்பர்களே !! எடையும் குறையும். 


மக்கள் மத்தியில் மதிப்பும் உயரும். 


என்ன சரியா? தோழர்களே !!


தோழியர்களே !!நீங்கள்தான் இந்த 


நாட்டின் எதிர்கால ஒளிவிளக்கு . 


உங்கள் பாதார விந்தங்களை 


வணங்கி நான் உங்களின் 


ஆசிகளோடு எனது எழுத்துப் 


பணியும் இணைந்து உங்களின் 


வருங்காலம்  ஒரு செம்மையான 


பிறருக்கு வழிகாட்டிடும்  ஒரு 


நல்ல பொதுநலத்தோடு கூடிய 


அமைதி நிறைந்த வாழ்க்கையாக 


விளங்கிட வேண்டும்.அதற்கு 


நீங்கள் உடல் நலத்தோடு 


இருந்திடல்  வேண்டும். உங்கள் 


உடல் எடை நன்றாகக் குறைத்திட 


வேண்டும். உணவில் கட்டுப்பாடு 


மிக,மிக அவசியம் என்பதை 


நினைவில் நிறுத்தி நாம் 


அனைவரும் வாழ்ந்திடுவோம். 


அப்படிப்பட்ட எண்ணம் மட்டுமே நம் 


வாழ்வினில் நமக்கு மிக முக்கியம் 


என்று சொல்லி இந்த அளவில் 


விடை பெறுகிறேன். நன்றி !!


வணக்கம் !!. அன்புடன் மதுரை 


TR.பாலு.