ஆன்மீகம் அறிந்திடுவோம்
அன்புமிகு நேயர்களே!அனைவருக்கும் காலை வணக்கம்!!
இன்றைய தினம் உங்கள் அனைவருக்கும் நான் அளிக்கும் விருந்து ஆன்மிகம்! ஆம் எனது அன்பு நெஞ்சங்களே!! ஆன்மிகம் இல்லை என்றால் லௌகீகம் (அதாவது இல்வாழ்க்கை )கிடையாது. எனவே நாம் அனைவரும் தினமும் ஒரு ஐந்து நிமிடங்களாவது ஆன்மீக சிந்தனையை வளர்த்கக்கொண்டோம் என்றால் மட்டுமே இந்த பிறவி , பயன் உள்ளவையாக இருக்கும் என்பது அடியேனின் கருத்து.
இறைவன் வழிபாடு! இறைவனுக்கு என்றும்
நாம் செய்திடும் தொண்டு!!
கடவுள் அருள் என்பது என்றுமே நம்மை கைவிடுவது இல்லை.இந்த நம்பிக்கையை நாம் அனைவரும் நமது உள்ளத்தில் வளர்துகொள்ளுதல் மிக மிக அவசியம்.எப்படி ஒரு நோயாளியின் நம்பிக்கை அவனை அவனது நோயில் இருந்து காப்பாற்றுகிறதோ அது போல இறை நம்ம்பிக்கை ஒன்றுதான் நம்மை இந்த புவியுலக வாழ் வில் துன்பத்தில் இருந்தும் வேதனையில் இருந்தும் நம்மை காப்பாற்றும் சக்தி படைத்தது.அதற்கு மாற்று வெரி இல்லை.
குறைகள் ஏதும் இல்லாத மனிதன் இப்புவியில் இல்லவே இல்லை.அதை பற்றி மட்டும் சிந்திப்பதனால் என்ன பயன்?இது அந்த குறையை போக்கிட நிச்சயம் உதவாது.எப்போதும் அடுத்தவருடைய குறைகளை பற்றிமட்டும் நாம் பேசிக்கொண்டிருப்பது என்பது மிகமிக தவறு.நம் மீது உள்ளன ஆயிரம் குறைகள்.அவற்றை எண்ணி அதை போக்கிட நாம் முயலவேண்டும்.
எந்த சூழ்நிலயிலும் எவர் ஒருவர் மௌனம் காக்கும் திறனை அமைதியாக இருக்கும் ஆற்றலை வளர்த்துக்கொண்டார் என்றால் அவரை எந்த துன்பமும் நெருங்குவதில்லை. அந்த மௌனம்,அமைதி நம்மை ஆத்திரத்தை அடியோடு வேர் அறுக்கும். அந்த குணத்தை நமக்கு தருவது தியானம் மட்டுமே.
நீ எப்போதும் இரக்க குணம் கொண்டவனாக இரு. துன்பம் உன்னை ஒரு போதும் நெருங்குவதேயில்லை.உனக்கு இறைவன் கொடுத்த சகல சம்பத்துகளுடன் திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்திட பழகிகொள்.
உன்னை விட மிகவும் கஷ்டப்படுபவர்களும் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள்.எனவே அவர்களை மனதில் நினைத்துகொண்டு இரக்கம் ,அடுத்தவருக்கு உதவும் எண்ணம் இவற்றை வளர்த்துகொள்.
கடவுளின் உதவி எப்போதும் உனக்கு காத்துகொண்டு இருக்கிறது.அது எப்போது உனக்கு கிடைக்கும் என்பதை யாரும் அறிந்திட முடியாது.உனது நடவடிக்கைகளை நீ நேர்மையுடனும் சத்தியத்துடனும் ஒழுக்கத்துடனும் வைத்து வாழ்ந்தாயே என்றால் அடுத்த கணமே கடவுள் .எவர் உருவிலாவது வந்து உனக்கு உதவிடுவார்.இந்த உண்மையை நீங்கள் முழுமனதுடன் நம்பித்தான் ஆகவேண்டும்.
நமது சொந்தங்கள் மேல் அதிக பாசமும் வைத்திடாதே.அது போல வெறுப்பையும் வளர்திடாதே.குற்றம் பார்த்தால் நமக்கு சுற்றம் என்பதே இருக்காது.
இறைவனுக்கு தொண்டு செய்யுங்கள். உலகிலே மிக பெரியதே தொண்டகள் செய்திடும் இறைதொண்டுதான்.அதற்கு மேல் ஏதும் இல்லை. மனதை தூய்மையாக வைத்திடுங்கள்.கெட்ட எண்ணங்களுக்கோ கெட்ட சிந்தனைகளுக்கோ இடம் தராமல் இறைவனின் சிந்தனை ஒன்றினைமட்டுமே உங்கள் மனதில் வளர்த்துகொள்ளுங்கள். அப்படி செய்திட்டால் என்றும் இறைவன் உங்கள் அருகிலேயே இருப்பான். ஆன்மிகம் வளரட்டும்!அன்பு பெருகட்டும்!!நன்றி.வணக்கம்.ன்பு நெஞ்சங்களே!!இப்படிக்கு.அன்பன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment