குடும்ப உறவுகள்!!
பொதுவாக நமது இந்திய குடும்பங்களில் முக்கியமாக தமிழக பண்பாடு மற்றும் கலாச்சாரங்களில் ஊறிவிட்ட நமது பாரம்பரியம் செறிந்த அந்தக்கால குடும்ப உறவுகள் மிகவும் தொன்மை வாய்ந்தவையாக கருதப்பட்டது அப்படி வாழ்ந்த காலங்களில் இங்கே நான் குறிப்பிடும் நிகழ்வில் தன்னை ஆட்படுத்தி கொண்ட ஒரு குடும்பத்தில் கணவன்,மனைவி,ஒரு குழந்தை இதுதான் இவர்களது உலகம்.
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இதில் கணவன் சற்று பயந்த மனம் கொண்டவன்.இரவு தூங்கும் போது அடுப்படியில் பூனை சமையல் பாத்திரங்களை உருட்டும்போது மனம்பயந்து தன மனைவியை இறுக கைகட்டி பிடித்து கொள்ளும் அளவிற்கு துணிச்சல் கொண்டவர் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.ஆனால் மனைவி எதையும் தாங்கும் இதயம் கொண்டவள். தன குழந்தையை தொட்டிலில் இட்டு தாலாட்டும் போது பாடும் பாடல்.
கண்ணே!ஆராரோ!!
என் கண்மணியே!ஆரீராரோ!!
என் செல்லமே கண் உறங்கு!
சிங்காரமே கண் உறங்கு!!
உன் அப்பா காட்டுக்கு போவாராம்.!
அங்கே வேட்டைக்கு போவாராம்!!
சிங்கத்தை சுட்டாராம்!!.. ..
என்று தாய் தனது தாலாட்டில் பாடி மகிழ்ந்து குழந்தைக்கு வீர உணர்வுகளை சிறு வயது முதல்கொண்டு செம்மையாக் வளர்த்து வந்ததை காணலாம்.கணவன் எவ்வளவு பயஉணர்வு கொண்டவராக இருப்பினும் அதை விட்டுகொடுதிடாமல் தான்பெற்ற குழந்தையிடம்கூட எப்படி கணவனை புகழ்ந்து பாடி மகிழ்கிறாள் என்றால் அந்தகால குடும்ப உறவுகள் அவ்வளவு மேன்மை படைத்தது இருந்தது.அதனால் வீட்டில் எந்த சண்டையோ சச்சரவோ இல்லாமல் அமைதியாக வாழ்ந்து இருந்தகாலம்.கணவன் சொல்லுக்கு மறுசொல் பேசாமல் மனைவி அமைதி காத்து வாழ்ந்தார்கள் அந்த கால குடும்ப உறவுகள் உள்ள பெண்கள்/மனைமார்கள்.
ஆனால் இந்த காலம் எப்படி?நீங்களே யூகிதுகொள்ளுங்கள்!!அன்பர்களே!
நன்றி வணக்கம்!!
அன்புடன்.
மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment