யார் சிறந்தவர்?
மன்னவரா? அல்லது மாசற கற்றவரா ?
சங்ககால இலக்கிய பாடல்களுள் ஒன்றினை நான் எனது சிறு வயதில் கற்றதை உங்களில் அனைவரின் கருத்துக்கும் ஒரு விருந்தாக படைக்கிறேன்!
முதலில் நாம் பாடலை பாப்போம்!
மன்னரும் மாசரக்கற்றோரும் சீர்தூக்கில்
மன்னரில் மாசரக்கற்றோனே சிறந்தோன்!
மன்னருக்கு தன்தேசமல்லால் வேறெங்கும் சிறப்பில்லை!
கற்றோருக்கும் சான்றோருக்கும்
சென்ற இடமெல்லாம் சிறப்பு!!
அதாவது பாடல் பொருள் என்னவென்றால் ஒரு தேசத்தை ஆளும் மான்னரை தராசின் ஒரு தட்டிலும் நன்கு கற்று தேர்ச்சி பெற்ற அறிஞர் ஒருவரை மற்றும் ஒரு தட்டிலும் வைத்து எடை பார்த்தால் (சீர் தூக்கில்)மன்னரைவிட மாசற கற்றோனின் எடையே அதிகமாக காணப்படும்.ஏன் என்றால் மன்னருக்கு அவரது நாட்டில் மட்டுமே செல்வாக்கு.ஆனால் கற்றவருக்கும் சான்றோர் பெருமக்களுக்கும் உலகில் எந்த நாட்டுக்கும் சென்றாலும் மதிப்பு மரியாதை கிடைக்கும் அதனால் மன்னரைவிட மாசற கற்றவரே சிறந்தவர்!! மீண்டும் அடுத்த என்ன சிறகுகள் தளத்தில் சந்திப்போமா நேயர்களே!நன்றி வணக்கம்!!அன்புடன் மதுரை T.R.பாலு.
No comments:
Post a Comment