இரட்டை வேடம்.
இன்று நாட்டில் இரட்டை வேடம் என்பது பொதுவாக அங்குஇங்கு என இன்றி எல்லா இடத்திலும் பரவி கிடக்கிறது.வீட்டில் இரட்டை வேடம், பணி புரியும் இடத்தில இரட்டை வேடம் ,பழகும் நண்பர்கள் மச்தியில் இரட்டை வேடம்,என இது ஒரு மக்கள் மத்தியில் அவர்தம் மனதில் ஊறி புரையோடிகிடக்கிறது என்றும் கூட சொல்லலாம்.மக்கள் மத்தியில் இந்தநிலைப்பாடு இருப்பது என்பது இயற்கை காலத்தின் சூழ்நிலையினால் ஒரு கட்டாயதேவையின் விளைவினால் மக்கள் இரட்டைவேடம் போட்டு வாழலாம்.அகத்தில் தவறு இல்லை.ஆனால் அந்த மக்களுக்கு, மக்களால்,மக்களுக்காக,தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் (TO THE PEOPLE,BY THE PEOPLE,FOR THE PEOPLE) இது போன்ற ஒரு இரட்டை வேடம் என்னும் நிலைப்பாடு எடுக்கலாமா எடுக்க கூடாதா இதுதான் இன்றைய கட்டுரையின் வாயிலாக நான் உங்கள் முன்னர் எடுத்துவைக்கும் ஒரு கேள்வி.
மனித இனம் தோன்றிய நாள் முதல் அழியும் கடைசி நாள் வரை அவனையும் மது என்ற அரக்கனையும் பிரிக்க முடியாது என்பது ஆன்றோர்கள் தரும் வாக்கு.மக்களுக்கு நன்மை தரும் விஷயங்களை தருவதற்கு மட்டுமே (1967க்கு முன்பு வரை )இதுவரை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசாங்கம் இன்றைய தினம் அந்த இனத்தை சீர் அழிக்கும் மது விற்பனையையும் சேர்த்து தன்வசம் வைத்து செயல்படுவது நமது தலை எழுத்து. சரி மதுவிற்பனை செய்யும் அரசு,அதை குடிக்க அனுமதிதரும் அரசு, அதை குடித்துவிட்டு வீட்டுக்கு செல்ல அவனது வாகனத்தில் போகும்போது மட்டும் வழி மறித்து வழக்கு போடுவது என்பது எந்த வகையில் நியாயம்?மதுவை வீட்டுக்கு வாங்கிகொண்டு போய் குடி என்று அரசாங்கம் சொல்கிறதா?அப்படி செய்தால் அது எதிர்கால இளைய சமுதாயத்தை மனதளவில் பாதிக்காதா?இல்லை மது போதையில் வாகனம் ஓட்டினால் அவன் தன நிலை இழந்து விபத்து ஏற்பட்டு உயிர் இழந்துவிடுவான் என்னும் பொது தொலைநோக்கு சிந்தனையினால் அரசாங்கம் மறித்து வழக்கு போடுகிறதா?மது என்ன அவனை நோய் நொடி இல்லாமல் சர்வ சஞ்சீவியாக வாழ்வதற்கு உதவிடும் சர்வ ரோக நிவாரணியா? இந்த மது இவனை கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கும்.விபத்து ஒரேயடியாக சாகடிக்கப்போகிறது.அவ்வளவு தான் வேறுபாடு.இது என்ன நியாயம் . ஒன்று மது விற்பனையை தடை செய்து பூரண மதுவிலக்கு அமல்படுத்து.முடியவில்லையா குடித்து விட்டு வாகனம் ஒட்டுவோரை மறித்து வழக்குபோடுவதை நிறுத்து.இதுபோல அரசாங்கம் செயல்படுவது என்பது "இரட்டை வேஷம்"எனும் நிலைப்பாடா இல்லையா?வாக்களித்த மக்களே தீர்மானிக்கட்டும்.நன்றி வணக்கம்.
No comments:
Post a Comment