புராணங்கள்!!
அனைவருக்கும் வணக்கம்! பொதுவாக நம்மில் அனேக நபர்களுக்கு மனத்தில்
நீண்டநெடுநாட்களாக ஒரு சந்தேகம் உள்ளது. எதுவெனில் நமக்குள் உள்ளபல
தரப்பட்ட புராண இதிகாசங்களான ராமாயணம், மகா பாரதம் போன்ற நூல்கள்
உண்மையிலே புனிதமானதா? புதிரானதா இல்லை அவை அ வ்வளவும் புளுகு
மூட்டைகளின் மொத்த வடிவமா? இப்படி ஒரு சிந்தனை பெரும்பாலான
மக்கள் மத்தியில் இன்றும் காணப்படுகிறது. ஏன் இந்த எண்ணம் அவர்களுக்கு
வந்தது என்பதனை நாம் சற்று ஆழமாக சிந்திததோமேயானால் நமக்கு
கிடைத்திடும் விடை அதில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் யதார்த்தத்திற்கு
சற்றும் ஒவ்வாத வகையில் அமைந்திருப்பதுவே ஆகும். சில உதாரணங்களை
நாம் பாப்போம்.
இராமாயண காவியத்தை எடுத்துகொண்டால் அவதார புருஷன் இராமனின்
தந்தையாகிய ஸ்ரீ தசரத சக்கரவர்த்திக்கு 60,000 அறுபதாயிரம் மனைவி மார்கள்.
அதுபோல இராவணனால் இலங்கைக்கு தூக்கி செல்லப்பட்டு சிறைவைக்கப்
பட்டு அதன் பின் பலவேறு கால நிகழ்வுகளுக்கு பிறகு வரும் சீதாபிராட்டியை
ஊராரின் சந்தேகத்தை தீர்க்க தீக்குளிக்கவைத்து பின் உயிர் பெற்று எழுவது!
அது போல மகா பாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் ஐவருக்கும் திரௌபதை
என்ற பெண் ஒரே மனைவியாக வாழ்ந்தாள் என்பது அது போல குந்தி தேவி
தனக்கு தனது குருவினால் உபதேசிக்கப்பட்ட மந்திரத்தை பரீட்சை செய்து
பார்க்கும்போது சூரியனைநோக்கி அதனை உச்சரிக்க ஒரே நாளில் குந்தி
தேவிக்கு கர்ணன் என்னும் மகன் பிறப்பது இதுபோல இன்னும் எத்தனை
எத்தனையோ சம்பவங்கள் சொல்லிக்கொண்டே போகலாம் இந்தபகுதியில்
இடம் போதாது என்பதால் இத்துடன் நிறைவு செய்கிறேன். மனிதன் சிந்திக்க
வேண்டும்.பேரறிஞர் சாக்ரட்டீஸ் சொன்ன கருத்தை இங்கே பதிவு செய்திட
ஆசைப்படுகிறேன். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று அறிவிழந்து
தடுமாற்றம் அடையாமல் உனக்கே இயல்பான பகுத்தறிவால் சிந்தித்துப்
பார் என்றாரே. அந்த வகையில் பார்த்திடும் போது புராணங்கள் என்பது
புதிரானது மட்டுமல்ல புழுகு மூட்டைகளின் வடிவமே என்று பகுத்தறிவு
சிந்தனையாளர்கள் கூறுவதை மறுத்திட இயலவில்லை என்பதே இங்கு
நான் இறுதியாக தரும் விளக்கமாக அமைகிறது.நன்றி வணக்கம். !!