Thursday, 28 February 2013

புராணங்கள் எப்படி பட்டவை-விளக்கம்!

புராணங்கள்!! 


அனைவருக்கும் வணக்கம்! பொதுவாக நம்மில் அனேக நபர்களுக்கு மனத்தில்     

நீண்டநெடுநாட்களாக ஒரு சந்தேகம் உள்ளது. எதுவெனில் நமக்குள் உள்ளபல

தரப்பட்ட புராண இதிகாசங்களான ராமாயணம், மகா பாரதம் போன்ற நூல்கள் 

உண்மையிலே புனிதமானதா? புதிரானதா இல்லை அவை அ வ்வளவும் புளுகு 

மூட்டைகளின் மொத்த வடிவமா? இப்படி ஒரு சிந்தனை பெரும்பாலான 

மக்கள் மத்தியில் இன்றும் காணப்படுகிறது. ஏன் இந்த எண்ணம் அவர்களுக்கு 

வந்தது என்பதனை  நாம் சற்று ஆழமாக சிந்திததோமேயானால் நமக்கு 

கிடைத்திடும் விடை அதில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் யதார்த்தத்திற்கு 

சற்றும் ஒவ்வாத வகையில் அமைந்திருப்பதுவே ஆகும். சில உதாரணங்களை 

நாம் பாப்போம்.

இராமாயண காவியத்தை எடுத்துகொண்டால் அவதார புருஷன் இராமனின் 

தந்தையாகிய ஸ்ரீ தசரத சக்கரவர்த்திக்கு 60,000 அறுபதாயிரம் மனைவி மார்கள்.

அதுபோல இராவணனால் இலங்கைக்கு தூக்கி செல்லப்பட்டு சிறைவைக்கப் 

பட்டு அதன் பின் பலவேறு கால நிகழ்வுகளுக்கு பிறகு வரும் சீதாபிராட்டியை 

ஊராரின் சந்தேகத்தை தீர்க்க தீக்குளிக்கவைத்து பின் உயிர் பெற்று எழுவது! 

அது போல மகா பாரதத்தில் பஞ்ச பாண்டவர்கள் ஐவருக்கும் திரௌபதை 

என்ற பெண் ஒரே மனைவியாக வாழ்ந்தாள் என்பது அது போல குந்தி தேவி 

தனக்கு தனது குருவினால் உபதேசிக்கப்பட்ட மந்திரத்தை பரீட்சை செய்து 

பார்க்கும்போது சூரியனைநோக்கி அதனை உச்சரிக்க ஒரே நாளில் குந்தி 

தேவிக்கு கர்ணன் என்னும் மகன் பிறப்பது இதுபோல இன்னும் எத்தனை

எத்தனையோ சம்பவங்கள் சொல்லிக்கொண்டே போகலாம் இந்தபகுதியில் 

இடம் போதாது என்பதால் இத்துடன் நிறைவு செய்கிறேன். மனிதன் சிந்திக்க 

வேண்டும்.பேரறிஞர் சாக்ரட்டீஸ் சொன்ன கருத்தை இங்கே பதிவு செய்திட 

ஆசைப்படுகிறேன். அவர் சொன்னார் இவர் சொன்னார் என்று அறிவிழந்து 

தடுமாற்றம் அடையாமல் உனக்கே இயல்பான பகுத்தறிவால் சிந்தித்துப்  
  
பார் என்றாரே. அந்த வகையில் பார்த்திடும் போது  புராணங்கள் என்பது 

புதிரானது மட்டுமல்ல புழுகு மூட்டைகளின் வடிவமே என்று பகுத்தறிவு 

சிந்தனையாளர்கள் கூறுவதை மறுத்திட இயலவில்லை என்பதே இங்கு 

நான் இறுதியாக தரும் விளக்கமாக அமைகிறது.நன்றி வணக்கம். !!







Funny Proverbs!!

FUNNY JOKES ONLY !! 


DO YOU KNOW FOR MARRIAGE 

THERE ARE THREE RINGS.

               1)  ENGAGEMENT RING !!

               2)  MARRIAGE RING !!

               3) THEN LIFETIME SUFFERING !!

 OH!  WHAT A PITY !!   


                                                                ****** ***** *****

     IN THAILAND BANGOK CITY WHEN I WAS THERE I SAW IN FRONT OF A LADIES 

BEAUTY SALOON ONE ADVERTISEMENT BOARD,WHICH EXPLICIT AS FOLLOWS:- 

  "THERE ARE NO UGLY WOMEN IN THE  WORLD !!

    THERE ARE WOMEN WHO DO NOT KNOW HOW TO LOOK PRETTY!!

    WE ARE MAKING THEMSELVES BEAUTY IN THIS LABORATORY!! 

                                                               ***** ***** ******


Wednesday, 27 February 2013

ஸ்ரீ அன்னையின் பொன் மொழிகள்.

ஆன்மீகம் அறிந்திடுவோம் 


 அன்புமிகு நேயர்களே!அனைவருக்கும் காலை வணக்கம்!!
இன்றைய தினம் உங்கள் அனைவருக்கும் நான் அளிக்கும் விருந்து ஆன்மிகம்! ஆம் எனது அன்பு நெஞ்சங்களே!! ஆன்மிகம் இல்லை என்றால் லௌகீகம் (அதாவது இல்வாழ்க்கை )கிடையாது. எனவே நாம் அனைவரும் தினமும் ஒரு ஐந்து நிமிடங்களாவது ஆன்மீக சிந்தனையை வளர்த்கக்கொண்டோம் என்றால் மட்டுமே இந்த பிறவி , பயன் உள்ளவையாக இருக்கும் என்பது அடியேனின் கருத்து.

  இறைவன் வழிபாடு! இறைவனுக்கு என்றும் 

நாம் செய்திடும் தொண்டு!!

கடவுள் அருள் என்பது என்றுமே நம்மை கைவிடுவது இல்லை.இந்த நம்பிக்கையை நாம் அனைவரும் நமது உள்ளத்தில் வளர்துகொள்ளுதல் மிக மிக அவசியம்.எப்படி ஒரு நோயாளியின் நம்பிக்கை அவனை அவனது நோயில் இருந்து காப்பாற்றுகிறதோ அது போல இறை நம்ம்பிக்கை ஒன்றுதான் நம்மை இந்த புவியுலக வாழ் வில் துன்பத்தில் இருந்தும் வேதனையில் இருந்தும் நம்மை காப்பாற்றும் சக்தி படைத்தது.அதற்கு மாற்று வெரி இல்லை.

குறைகள் ஏதும் இல்லாத மனிதன் இப்புவியில் இல்லவே இல்லை.அதை பற்றி மட்டும் சிந்திப்பதனால் என்ன பயன்?இது அந்த குறையை போக்கிட நிச்சயம் உதவாது.எப்போதும் அடுத்தவருடைய குறைகளை பற்றிமட்டும் நாம் பேசிக்கொண்டிருப்பது என்பது மிகமிக தவறு.நம் மீது உள்ளன ஆயிரம் குறைகள்.அவற்றை எண்ணி அதை போக்கிட நாம் முயலவேண்டும்.

எந்த சூழ்நிலயிலும் எவர் ஒருவர் மௌனம் காக்கும் திறனை அமைதியாக இருக்கும் ஆற்றலை வளர்த்துக்கொண்டார் என்றால் அவரை எந்த துன்பமும் நெருங்குவதில்லை. அந்த மௌனம்,அமைதி நம்மை ஆத்திரத்தை அடியோடு வேர் அறுக்கும். அந்த குணத்தை நமக்கு தருவது தியானம் மட்டுமே.

நீ எப்போதும் இரக்க குணம் கொண்டவனாக இரு. துன்பம் உன்னை ஒரு போதும் நெருங்குவதேயில்லை.உனக்கு இறைவன் கொடுத்த  சகல சம்பத்துகளுடன் திருப்தியுடனும் மகிழ்ச்சியுடனும் வாழ்ந்திட பழகிகொள்.
உன்னை விட மிகவும்  கஷ்டப்படுபவர்களும் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள்.எனவே அவர்களை மனதில் நினைத்துகொண்டு இரக்கம் ,அடுத்தவருக்கு உதவும் எண்ணம் இவற்றை வளர்த்துகொள்.

கடவுளின் உதவி எப்போதும் உனக்கு காத்துகொண்டு இருக்கிறது.அது  எப்போது உனக்கு கிடைக்கும் என்பதை யாரும் அறிந்திட முடியாது.உனது நடவடிக்கைகளை நீ நேர்மையுடனும் சத்தியத்துடனும் ஒழுக்கத்துடனும் வைத்து வாழ்ந்தாயே என்றால் அடுத்த கணமே கடவுள் .எவர் உருவிலாவது வந்து உனக்கு உதவிடுவார்.இந்த உண்மையை நீங்கள் முழுமனதுடன் நம்பித்தான் ஆகவேண்டும்.

நமது சொந்தங்கள் மேல் அதிக பாசமும் வைத்திடாதே.அது போல வெறுப்பையும் வளர்திடாதே.குற்றம் பார்த்தால் நமக்கு சுற்றம் என்பதே இருக்காது.   

இறைவனுக்கு தொண்டு செய்யுங்கள். உலகிலே மிக பெரியதே தொண்டகள் செய்திடும் இறைதொண்டுதான்.அதற்கு மேல் ஏதும் இல்லை. மனதை தூய்மையாக வைத்திடுங்கள்.கெட்ட எண்ணங்களுக்கோ கெட்ட சிந்தனைகளுக்கோ இடம் தராமல் இறைவனின் சிந்தனை ஒன்றினைமட்டுமே உங்கள் மனதில் வளர்த்துகொள்ளுங்கள். அப்படி செய்திட்டால் என்றும் இறைவன் உங்கள் அருகிலேயே இருப்பான். ஆன்மிகம் வளரட்டும்!அன்பு பெருகட்டும்!!நன்றி.வணக்கம்.ன்பு நெஞ்சங்களே!!இப்படிக்கு.அன்பன் மதுரை T.R.பாலு.

சிறந்தவர் யார்?

யார் சிறந்தவர்? 

மன்னவரா? அல்லது மாசற கற்றவரா ? 


சங்ககால இலக்கிய பாடல்களுள் ஒன்றினை நான் எனது சிறு வயதில் கற்றதை உங்களில் அனைவரின்  கருத்துக்கும் ஒரு விருந்தாக படைக்கிறேன்!

முதலில் நாம் பாடலை பாப்போம்!

மன்னரும் மாசரக்கற்றோரும் சீர்தூக்கில் 
மன்னரில் மாசரக்கற்றோனே சிறந்தோன்!
மன்னருக்கு தன்தேசமல்லால் வேறெங்கும் சிறப்பில்லை!
கற்றோருக்கும் சான்றோருக்கும்
சென்ற இடமெல்லாம் சிறப்பு!!

அதாவது பாடல் பொருள் என்னவென்றால் ஒரு தேசத்தை ஆளும் மான்னரை தராசின் ஒரு தட்டிலும் நன்கு கற்று தேர்ச்சி  பெற்ற அறிஞர் ஒருவரை மற்றும் ஒரு தட்டிலும் வைத்து எடை பார்த்தால் (சீர் தூக்கில்)மன்னரைவிட மாசற கற்றோனின் எடையே அதிகமாக காணப்படும்.ஏன் என்றால் மன்னருக்கு அவரது நாட்டில் மட்டுமே செல்வாக்கு.ஆனால் கற்றவருக்கும் சான்றோர் பெருமக்களுக்கும் உலகில் எந்த நாட்டுக்கும் சென்றாலும் மதிப்பு மரியாதை கிடைக்கும் அதனால் மன்னரைவிட மாசற கற்றவரே சிறந்தவர்!! மீண்டும் அடுத்த என்ன சிறகுகள் தளத்தில் சந்திப்போமா நேயர்களே!நன்றி வணக்கம்!!அன்புடன் மதுரை T.R.பாலு.






Tuesday, 26 February 2013

இரட்டை வேஷங்கள் எதற்காக?

இரட்டை வேடம்.

இன்று  நாட்டில் இரட்டை வேடம் என்பது பொதுவாக அங்குஇங்கு என இன்றி எல்லா இடத்திலும் பரவி கிடக்கிறது.வீட்டில் இரட்டை வேடம், பணி  புரியும் இடத்தில இரட்டை வேடம் ,பழகும் நண்பர்கள் மச்தியில் இரட்டை வேடம்,என இது ஒரு மக்கள் மத்தியில் அவர்தம் மனதில் ஊறி புரையோடிகிடக்கிறது என்றும் கூட  சொல்லலாம்.மக்கள் மத்தியில் இந்தநிலைப்பாடு இருப்பது என்பது இயற்கை காலத்தின் சூழ்நிலையினால் ஒரு கட்டாயதேவையின் விளைவினால் மக்கள் இரட்டைவேடம் போட்டு வாழலாம்.அகத்தில் தவறு இல்லை.ஆனால் அந்த மக்களுக்கு, மக்களால்,மக்களுக்காக,தேர்ந்து எடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் (TO THE PEOPLE,BY THE PEOPLE,FOR THE PEOPLE) இது போன்ற ஒரு இரட்டை வேடம் என்னும் நிலைப்பாடு எடுக்கலாமா எடுக்க கூடாதா இதுதான் இன்றைய கட்டுரையின் வாயிலாக நான் உங்கள் முன்னர் எடுத்துவைக்கும் ஒரு கேள்வி.
மனித இனம் தோன்றிய நாள் முதல்  அழியும் கடைசி நாள் வரை அவனையும் மது என்ற அரக்கனையும் பிரிக்க முடியாது என்பது ஆன்றோர்கள் தரும் வாக்கு.மக்களுக்கு நன்மை தரும் விஷயங்களை தருவதற்கு மட்டுமே (1967க்கு முன்பு வரை )இதுவரை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட   அரசாங்கம் இன்றைய தினம் அந்த இனத்தை சீர் அழிக்கும் மது விற்பனையையும் சேர்த்து தன்வசம் வைத்து செயல்படுவது நமது தலை எழுத்து. சரி மதுவிற்பனை செய்யும் அரசு,அதை குடிக்க அனுமதிதரும் அரசு, அதை குடித்துவிட்டு வீட்டுக்கு செல்ல அவனது வாகனத்தில் போகும்போது மட்டும் வழி மறித்து வழக்கு போடுவது என்பது எந்த வகையில் நியாயம்?மதுவை வீட்டுக்கு வாங்கிகொண்டு போய் குடி என்று அரசாங்கம் சொல்கிறதா?அப்படி செய்தால் அது எதிர்கால இளைய சமுதாயத்தை மனதளவில் பாதிக்காதா?இல்லை மது போதையில் வாகனம் ஓட்டினால் அவன் தன நிலை இழந்து விபத்து ஏற்பட்டு உயிர் இழந்துவிடுவான் என்னும் பொது தொலைநோக்கு சிந்தனையினால் அரசாங்கம் மறித்து வழக்கு போடுகிறதா?மது என்ன அவனை நோய் நொடி இல்லாமல் சர்வ சஞ்சீவியாக வாழ்வதற்கு உதவிடும் சர்வ ரோக நிவாரணியா? இந்த மது இவனை கொஞ்சம் கொஞ்சமாக சாகடிக்கும்.விபத்து ஒரேயடியாக சாகடிக்கப்போகிறது.அவ்வளவு தான்  வேறுபாடு.இது என்ன  நியாயம் . ஒன்று மது விற்பனையை தடை செய்து பூரண மதுவிலக்கு அமல்படுத்து.முடியவில்லையா குடித்து விட்டு வாகனம் ஒட்டுவோரை மறித்து வழக்குபோடுவதை நிறுத்து.இதுபோல அரசாங்கம் செயல்படுவது என்பது "இரட்டை வேஷம்"எனும் நிலைப்பாடா இல்லையா?வாக்களித்த மக்களே தீர்மானிக்கட்டும்.நன்றி வணக்கம்.

Monday, 25 February 2013

கணவன் மனைவி உறவுகள்.

குடும்ப உறவுகள்!!

பொதுவாக நமது இந்திய குடும்பங்களில் முக்கியமாக தமிழக பண்பாடு மற்றும் கலாச்சாரங்களில் ஊறிவிட்ட நமது பாரம்பரியம் செறிந்த அந்தக்கால குடும்ப உறவுகள் மிகவும் தொன்மை வாய்ந்தவையாக கருதப்பட்டது அப்படி வாழ்ந்த காலங்களில் இங்கே நான் குறிப்பிடும் நிகழ்வில் தன்னை ஆட்படுத்தி கொண்ட ஒரு குடும்பத்தில் கணவன்,மனைவி,ஒரு குழந்தை இதுதான் இவர்களது உலகம். 
இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இதில் கணவன் சற்று பயந்த மனம் கொண்டவன்.இரவு தூங்கும் போது அடுப்படியில் பூனை சமையல் பாத்திரங்களை உருட்டும்போது மனம்பயந்து தன மனைவியை இறுக கைகட்டி பிடித்து கொள்ளும் அளவிற்கு துணிச்சல் கொண்டவர் என்றால் பார்த்துகொள்ளுங்கள்.ஆனால்  மனைவி எதையும் தாங்கும் இதயம் கொண்டவள். தன குழந்தையை தொட்டிலில் இட்டு தாலாட்டும் போது பாடும் பாடல்.

கண்ணே!ஆராரோ!!
என் கண்மணியே!ஆரீராரோ!!
என் செல்லமே கண் உறங்கு!
சிங்காரமே கண் உறங்கு!!
உன் அப்பா காட்டுக்கு போவாராம்.!
அங்கே வேட்டைக்கு போவாராம்!!
சிங்கத்தை சுட்டாராம்!!.. ..
என்று தாய் தனது தாலாட்டில் பாடி மகிழ்ந்து குழந்தைக்கு வீர உணர்வுகளை சிறு வயது முதல்கொண்டு செம்மையாக் வளர்த்து வந்ததை காணலாம்.கணவன் எவ்வளவு பயஉணர்வு கொண்டவராக இருப்பினும் அதை விட்டுகொடுதிடாமல் தான்பெற்ற குழந்தையிடம்கூட எப்படி கணவனை புகழ்ந்து பாடி மகிழ்கிறாள் என்றால் அந்தகால குடும்ப உறவுகள் அவ்வளவு மேன்மை படைத்தது இருந்தது.அதனால் வீட்டில் எந்த சண்டையோ சச்சரவோ இல்லாமல் அமைதியாக வாழ்ந்து இருந்தகாலம்.கணவன் சொல்லுக்கு மறுசொல் பேசாமல் மனைவி அமைதி காத்து வாழ்ந்தார்கள் அந்த கால குடும்ப உறவுகள் உள்ள பெண்கள்/மனைமார்கள்.
ஆனால் இந்த காலம் எப்படி?நீங்களே யூகிதுகொள்ளுங்கள்!!அன்பர்களே!
நன்றி வணக்கம்!!
அன்புடன்.
மதுரை T.R.பாலு.


Sunday, 24 February 2013

உள்ளதை சொல்கிறேன்.

உள்ளதை சொல்கிறேன்!!


அனைவருக்கும் வணக்கம்.முதன்முதலாக Blogger இணையதளத்தில் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். எனது எண்ணச்  சிறகுகளில் உதிக்கும் பல்வேறு கருதுக்குவியல்களை அப்போதைக்கு அப்போது உங்களுடன் நான் பகிர்ந்து கொள்கிறேன். தங்களது மேலான விமர்சனங்களை எதிர்பார்க்கிறேன்.அந்த விமர்சனங்கள் மட்டுமே எனது வளர்ச்சி என்ற நிலத்துக்கு இடக்கூடிய உரமாகும் என நான் கருதுகிறேன்.நன்றி வணக்கம்.அன்புடன் மதுரை T.R.பாலு ! .