Tuesday, 14 May 2013

அனைவருக்கும் ஒரு நல்ல செய்தி !!




நல்ல செய்தி !!  

                               


எனது உயிரினும் மேலான அன்புத் 


தமிழ் நெஞ்சங்களே !!                       


உங்கள் அனைவருக்கும் ஒரு நல்ல 


செய்தி !!                                        

 

உங்கள் அன்பன் மதுரை T.R.பாலு 


திரைப்படத்தில் நடிக்கத் தொடங்கிய 


நல்ல செய்திதனை உங்கள் 


அனைவரது கவனத்திற்கும் 


கொண்டுவருவதில் நான் மிகவும் 


பெருமைப் படுகிறேன் மனமகிழ்ச்சி 


அடைகிறேன்.                         


இசை அரசு திரு.கங்கை அமரன்      


அவர்களின் தவப்புதல்வர் 


மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய


அன்புக்கு உரிய திரு பிரேம்ஜி 


அவர்கள் "விஞ்ஞானியாக" நடிக்க 


மாபெரும் வெற்றிப் படைப்பாக 


எதிர்வரும் தீபாவளித்திருநாள் 


அன்று தமிழ்த்திரையில் வெளிவர 


இருக்கும் " மாங்கா " என்னும் 


திரைப்படத்தில் எனக்கு ஒரு சிறு 


வேடம் "எல்லாம் வல்ல இறைவன்" 


திருவருளால் கிட்டிய செய்தியை 


மனமகிழ்வுடன் உங்கள் அனைவர் 


முன்பாக பகிர்ந்துகொள்வதில் நான் 


மிகவும் பெருமைப்படுகிறேன் 


அன்பர்களே !! எனது இந்தப் புதிய 


முயற்சி வெற்றிபெற, மேலும் பல 


திரைப்பட வாய்ப்புகள் எனக்கு வந்து 


சேர்ந்திட, நீங்கள் அனைவரும் 


எனக்காக எல்லாம் வல்ல 


இறைவனிடம் வேண்டிக் 


கொள்வதுடன் என்னை வாழ்த்திட 


வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டு 


உங்களிடம் இருந்து அன்பு வணக்கம் 


கூறி விடை  பெறுவது உங்கள் 


அன்பன் மதுரை T.R. பாலு.  


வணக்கம் அன்பு நேயர்களே !!

Friday, 10 May 2013

நடிகர் திரு.கமலஹாசன் அவர்களது பெயர் காரணம் தெரியுமோ ??





தமிழர்களாக வாழ்ந்திடுங்கள் !!

தனித்தமிழ்மட்டுமேபேசிடுங்கள் !!     

(ஆங்கில மொழி கலப்பு இன்றி )                                                                                                                        

( தமிழர்களிடமாவது )                   



உலகெங்கிலும் வாழ்ந்துவரும் 

எனது உயிரினும் மேலாக நான்   

போற்றி வணங்கி வரும் அன்புத்       

தமிழ் நெஞ்சங்களே !!


உங்கள் அனைவர்க்கும் எனது      

உளப்பூர்வமான நன்றியையும்     

வணக்கத்தையும் உங்களது பொற்    

கமல பாதங்களில் வைத்து வணங்கு 

கிறேன் அன்புத் தமிழ் உள்ளங்களே !!


இன்று உங்கள் அன்புக்கு பாத்திரம் 

ஆன மதுரை T.R. பாலு மீண்டும்      

ஒரு வித்தியாசமான யாரும் எவரும் 

அறிந்திடாத ஒரு விஷயத்தினை    

உங்கள் அனைவரது கவனத்திற்கு 

இந்த "எண்ணச் சிறகுகள் " வலை 

தள பக்கத்தில் விருந்தாகப் படைப்ப  

தில் நான் உள்ளபடியே மிகவும்    

பெருமைப் படுகிறேன்.                  


மறைந்த "நடிகர்திலகம்" சிவாஜி 

கணேசன், அவருக்கு பிறகு அவரின்  

நடிப்பு ஆற்றலில்  உணர்சிகளை 

வெளியிடும் பாவங்களில் சுமார் 6௦  

விழுக்காடுகளுக்கு மேலாக நல்ல 

மதிப்பெண் வாங்கிய, வாங்குகிற, 

இனியும்வாங்கப்போகும் திறமையும் 

தகுதியும் படைத்திட்ட ஒரே ஒரு 

நடிப்புலக மேதை என்றபட்டத்தினை 

பெருகின்ற ஆற்றலும் வல்லமையும் 

உள்ளவர் ஒருவர் உண்டு என்று 

சொன்னால் அது நான் நிச்சயமாகச் 

சொல்வேன்.  


அவர் வேறு யாரும் அல்ல.அது நமது 

கமல் ஹாசன் அவர்கள் மட்டுமே !!         


இராமநாதபுர மாவட்டம் பரமக்குடி 

  1. நகர் வாழ்ந்த மறைந்த சுதந்திரப் 

போராட்ட தியாகி செம்மல் சீனிவாச 

ஐய்யங்கார் பெற்றெடுத்த தவப் 

புதல்வர்கள் 3  பேரில் கடைசி புத்திர 

பாக்கியமே நமது கமல்ஹாசன் 

எனில் அது மிகையாகாது.                             

"பெயர் காரணம் "

அது வெள்ளையர்கள் நம்மை 

அடக்கி ஆண்ட காலம். கமல் 

அவர்களின் தந்தையும் அவரது சக 

தோழர்களுள் ஒருவரான மர்ஹூம் 

யாகூப் ஹசனும் சுதந்திரப் 

போராட்ட நிகழ்வுகளில் கலந்து        

கொண்டு  சிறைசென்ற காலம் அது. 

எதிர்பாராதவிதமாகசிறைச்சாலை-

-யில் யாகூப் ஹசன் உயிர் பிரிகிறது 

உயிர்த்தோழன் பிரிந்திட்ட துயரம் 

தாங்காத சீனிவாச ஐயங்கார் 

அக்கணமே ஒரு முடிவு எடுத்தார். 

அதுவரை அவருக்கு குழந்தைப்பேறு 

கிட்டவில்லை. சபதம் ஒன்று அவர் 

செய்தார். எத்தனை பிள்ளைகள் 

தமக்கு பிறந்திட்டாலும் அவர்கட்கு 

மறைந்த உயிர்நண்பன் பெயரையும் 

சேர்த்துவைப்பதுஎன்று.குழந்தைகள்

பிறந்தன. ஆருயிர் நண்பன் யாகூப் 

ஹசனின் பெயரில் ஒரு சிறு மாற்றம் 

ஹசன் என்பதனைச் சற்று மாற்றி 

ஹாசன் என வைத்துகொண்டு மூத்த 

பையனுக்கு சாரு ஹாசன் எனவும்  

இரண்டாவது  பையனுக்கு சந்திர 

ஹாசன் எனவும் நமது கமல் அவர்க-

-ளின் பெயருக்கு பின்னால் ஹாசன் 

என்பதனைச் சேர்த்து கமலஹாசன்  

எனவும் பெயர்வைத்து மறைந்த 

நண்பனுக்கு தமது இதய அஞ்சலி 

செய்து மகிழ்வுற்றார் மறைந்த 

பரமக்குடி சீனிவாச ஐயங்கார்.        

அவர் வழி வந்த அவரது புதல்வர்- 

-களும்  தந்தையின் அடிச்சுவட்டைப் 

பின் பற்றி சாருஹாசன் தமது மகள் 

பெயரில் ஹாசன் சேர்த்து சுகாசினி 

எனவும் கமலஹாசன் அவர்கள் 

தமது மகளுக்கு ஸ்ருதிஹாசன் 

எனவும் பெயரிட்டு தந்தைக்கு 

பெரும் பேரையும்  பெருமையையும் 

சேர்த்து மகிழ்ந்தனர். 


அடடா !!


இது அல்லவோ மகன் தந்தைக்கு 

ஆற்றும் உதவி என்பது !! 


வாழ்க !! 

பரமக்குடி சீனிவாச ஐயங்காரது

"நட்பின் பெருமையை" இந்த உலகம் 

அறிந்திடச் செய்த விசுவாசம் !!  


வளர்க !!

அவரது வாரிசுகளின் தந்தை 

தனை மறக்காத நன்றி உணர்வுகள்!!


நன்றி !! வணக்கம் !!                                                 


அன்புடன் மதுரை T.R.பாலு.


Wednesday, 8 May 2013

தமிழக காங்கிரசுக்கு அருகதை உண்டா ? கர்நாடக வெற்றியைக் கொண்டாட !!




தமிழர்களாக வாழ்ந்திடுங்கள் !!

தனித்தமிழில்மட்டுமேபேசிடுங்கள் !!

    (தமிழர்களிடமாவது)                         

உலகெங்கிலும் வாழ்ந்துவரும் 

அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!               

அனைவருக்கும் எனது வணக்கம்.     


இன்றைய தினம் ஒருசிறப்பானஅதே 

நேரம் மிகவும் முக்கியமான அர்த்தம்  

உள்ள ஒரு தலைப்பினைத் தேர்ந்து 

எடுத்து இனிவரும் எதிர்காலத்தில் 

இங்கேதமிழகத்தில்நடைபெறஉள்ள

பாராளுமன்றதேர்தலின்போதுஎன்ன

என்ன நிகழ்வுகள் நடைபெற காத்து 

இருக்கிறது?புதிய "காதல் உறவுகள்" 

அரும்பிட வாய்ப்புகள் உள்ளதா?இது 

போன்ற கேள்விகளுக்கு விடைகள் 

காண உங்கள் அன்பன் மதுரை T.R. 

பாலு மனதில் உதித்திட்ட ஐயங்கள் 

ஒன்று சேர்ந்ததன் விளைவு மேலே 

சொல்லப்பட்டுள்ள வடிவினில்நல்ல 

தொரு கட்டுரை உங்கள் கருத்துக்கு 

நல்விருந்தாக இங்கேவடிவம்பெற்று 

பணிவுடன்  சமர்பிக்கப்பட்டுள்ளது 

என்று சொன்னால் அது மிகைஅல்ல. 


எப்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் 

பேரியக்கம் ஆளும் வாய்ப்பினை 

இழந்து அகதியான கதை இன்றைய 

இளைய தலைமறை அறிந்திருக்க 

வாய்ப்புகள் நிச்சயம் இல்லை. அது 

1967ம்ஆண்டு.மொழிக்கொள்கையில் 

செய்திட்ட தவறான முடிவு, 

இயற்கை பருவ மழை பொய்த்தது, 

உணவுப் பொருட்களை சரிவர

சேர்த்து,   சேமித்து,அவைகளை  

மக்களுக்கு ஒழுங்காக விநியோகம் 

செய்திடும் ஆற்றல் இல்லாமை, 

இத்யாதி, இத்யாதி காரணங்கள் 

இவைகளுக்காக மாநில ஆளும் 

தன்மையை இழந்துநின்ற 

காங்கிரஸ் பேரியக்கம் அதன் பிறகு 

சொந்தமாக தனது  காலில் நின்று 

கடினமாக உழைத்து முன்னேறாத 

காரணத்தினால் இன்றுவரை சுமார் 

46 ஆண்டுகளாக அடுத்தவர்கள் மீது 

(திராவிட முன்னேற்றக் கழகம், 

அ.இ.அ.தி.மு.க.என மாறி மாறி ) 

நன்றாக குதிரை சவாரி செய்தே 

சுகம் கண்டதன் விளைவு,  அது 

மட்டும்இல்லாமல்இந்தலட்சணத் 

தில் உள்கட்சி கோஷ்டிப் பூசல் 

வேறு.கட்சி நன்றாக விளங்கும் 

பாருங்கள். இது போன்ற எண்ணில் 

அடங்காதவறுகள் இழைத்து விட்ட -

தன் காரணமே இங்கு ஒரு தேசிய 

கட்சி தேய்ந்துபோல நிலவாக 

தீய்ந்து போன உணவாக காய்ந்து 

போன கனியாக காட்சி அளிக்கிறது. 

உனக்கே உனது காலில் நிற்கும் வலு 

இல்லாத நொண்டியாக நிற்கிறாய் 

இந்த லட்சணத்தில் உனக்கு ஏது 

அருகதை உனது கட்சி அடுத்த 

மாநிலத்தில் அடைந்திட்ட வெற்றி -

தனைக் கொண்டாடிட? அறிவுள்ள 

என் உயிரினும் மேலான அன்புத் 

தமிழ் நெஞ்சங்களே சிந்திப்பீர். நான் 

சொல்வது சரியா ? அல்லது தவறா?

என. உங்களது அன்பான பதிலை மிக    

ஆவலோடு எதிர் பார்த்துக் காத்துக் 

கொண்டிருக்கும் உங்கள் அன்பன் 

மதுரை T.R.பாலு. வணக்கம் எனது 

இனிய அன்புத் தமிழ் நெஞ்சங்களே !!

Friday, 3 May 2013

கலைவாணர் N.S. கிருஷ்ணன் நினைவு அலைகள் !!




தமிழர்களாக வாழ்ந்திடுக !!

தனித் தமிழில் மட்டுமே பேசிடுக !!

( தமிழர்களிடம் )



அன்புமிக்க உலகத் தமிழர்களே!!

உங்கள் அனைவருக்கும் எனது 

நெஞ்சார்ந்த வணக்கங்கள்!! 


 இன்றைய தினம் ஒரு நல்ல மனம் 

கொண்ட, அந்தக்கால நகைச்சுவை 

உணர்வுகளைத் தருவதில் நம்மை 

சிரிக்கவைப்பதுடன், சிந்திக்கவும் 

வைத்திட்ட, ஒரு உண்மை சிரிப்பு 

நடிகரும், இளகிய மனம் கொண்ட, 

தன்னைத் தேடிவந்த யாரையும் 

என்றும் வெறும் கையுடன் அனுப்ப-

மனம்இல்லாத,உண்மைக்கொடை-

யாளி, பண்புஉள்ளமனிதர், இத்தனை 

சிறப்புகளையும்  தன்வசம்  கொண்ட 

கலைவாணர் N.S.கிருஷ்ணன் அவர்க 

ளைப்பற்றி, ஆண்டு முழுவதும் நாம் 

பேசிக்கொண்டே இருக்கலாம். அவர் 

திரைப்படங்களில்தமது பாடல்களை 

தாமே கூடுமானவரை எழுதிடும் நல் 

ஆற்றல் படைத்தவர். தாமே பாடும் 

ஆற்றலும்கொண்டஉண்மைக்கலை 

-வாணர்  இவர் மட்டுமே !! எனவே    

இந்தக் " கலைவாணர் "  என்ற நல்ல 

பட்டம் இவர் ஒருவருக்கு மட்டுமே  

உரித்தானது. இதில் சின்னக்  கலை--  

வாணர் அப்படி இப்படி எல்லாம் 

பட்டம் போட்டுக்கொள்வது எல்லாம் 

சுத்த " பம்மாத்து "வேலை.


இருந்த போதிலும் ஒருசில சம்பவங் 

களை நான் இங்கே குறிப்பிட்டே ஆக 

வேண்டி உள்ளது அன்பர்களே !!   


67ல் N.S.கிருஷ்ணன் என்று ஒரு படம்

அதில் கோவிலில் ஊழியம் செய்யும் 

நாராயண அய்யங்கார் வேடம் இட்டு 

கலைவாணர் மிகத்திறம்பட நடித்த 

போது அந்த குலத்தவர்கள் எப்படி

எல்லாம்இச்சமூகத்தில்என்னென்ன 

திரைமறைவு அநியாயங்களையும் 

அக்கிரமங்களையும்செய்துகொண்டு

வாழ்ந்து வருகிறார்கள்  என்பதை 

அப்படியே தோலுரித்து நமக்கு காட்டி 

இருப்பார்கள். ஆற்றின் கரையில் 

இருந்து "சந்தியாவந்தனம்" செய்து 

கொண்டு கலைவாணர் அந்த 

நாராயணஅய்யங்கார்வேடம்இட்டு

நடித்துக்கொண்டுஇருக்கும்போது

அங்குஉள்ளதாழ்த்தப்பட்ட பிரிவைச் 

சேர்ந்த துணி வெளுக்கும் பெண் 

ஒருத்திமேல்மையல்கொண்டுஅய்ய

-ங்கார் அவளைப் பார்த்து சிரிப்பதும் 

கண்ணடித்துக் கேலி செய்வதுமாய் 

இருக்கும் நாராயண அய்யங்கார் 

அவளை வீட்டுக்கு வரச் சொல்லி 

பின்வாசல் வழியே வந்த அவளிடம் 

நைசாகப் பேசி நீ இன்று இரவு 

எப்படியாவது என்வீட்டுக்கு வர 

வேண்டும் என்று கையை பிடிக்க 

எத்தனிக்கும்போது உங்க மனைவி 

இருப்பாங்களே(T.A.மதுரம்)என்று  

அவள் கேட்டதற்கு அதை நான் 

பார்த்துக்கறேன்  அவளோடு இன்று 

சண்டையை போட்டு அவ அப்பன் 

வீட்டுக்கு நான் அனுப்பிடுவேன் என 

நாராயண அய்யங்கார் வேடம் 

போட்ட N.S.K. அவர்கள் சொல்வார்.

சொன்னமாதிரியே T.A.மதுரத்திடம் 

அன்று இரவு சண்டையைப் போட்டு 

வீட்டை விட்டு வெளியில் போகச் 

செய்திடுவார் N.S.K.  உடனே மதுரம் 

வீட்டை விட்டு வெளியில் வரும் 

போது சந்து முனையில் அந்த துணி 

வெளுக்கும் பெண்மணி, மதுரம் 

அவர்களிடம், என்னாங்க அம்மா 

நம்ம சாமி ஆற்றங்கரையில் என் 

கையைபிடித்து இழுத்து இரவு வேறு 

என்னை உங்க வீட்டு பின் கதவை 

தட்டி உள்ளே வரச்சொல்லி 

இருக்காரு. அப்புறம் உங்களை 

எப்படியாச்சும் சண்டையைப்போட்டு 

உங்க அப்பாரு  வீட்டுக்கு அனுப்பி 

வைச்சுடுவேன் என்று வேறு  சாமி 

சொல்றாரு அம்மா. சாமிக்கு என்ன 

கிறுக்கு கிறுக்கு பிடிச்சுபோச்சா? என 

வினவுவாள் அந்த துணி வெளுக்கும்  

அந்தபெண்.உடனேமதுரம்ஆமாண்டி

நீ சொல்றதுதான் சரி. இங்கேவா என 

சொல்லிட்டு அவ காதுலே ரகசியம்

 பேசுவாள்.  இரவு நேரம் வரும். N.S.K. 

வீட்டின் பின் பக்க கதவு தட்டப்படும் 

ஓசை கேட்கும். உடனே நாராயண 

அய்யங்கார்ஓடோடிவந்துகதவைத்

திறந்து இருட்டில் நின்றுகொண்டு 

உள்ள அந்த துணிவெளுக்கும் பெண் 

அவளின் கையைப் பிடித்து இழுத்து 

கொண்டு அவசரம்அவசரமாஉள்ளே 

வாஎனஅழைத்துகொண்டுபோவார்.

தலையில் முக்காடு போட்டுள்ள 

அந்த துணி வெளுக்கும் பெண்ணோ 

மிகவும் பயந்த குரலில் சாமி உங்க 

பொஞ்சாதியை நினைச்சா எனக்கு 

ரொம்பவும் பயமா இருக்கு சாமி, என 

சொல்வாள்.அதற்கு N.S.கிருஷ்ணன் 

அவ கிடக்கிறா கழுதை. நீ வாடி என் 

வசந்தமே!!என்று முக்காடு இட்ட 

அந்த பெண்ணை பின்பக்கமாக கட்டி

அணைத்தபடியே என் கண்ணே !!

எனக்கு சொர்க்கமே தெரிகிறது !!

உனக்கு தெரிகிறதா என்று கேட்பார்.  

அந்தபெண்முன்புறம்திரும்பிசாமி 

சொர்க்கம்தெரியலைஎனசொல்வள் 

அப்போது தான் N.S.K. அந்த முக்காடு 

போட்ட அப்பெண்ணின் திருமுகம் 

தனைப் பார்ப்பார். அது வேறு யாரும் 

அல்ல. நம் நாராயண அய்யங்காரின் 

தர்ம பத்தினி T.A. மதுரம் அம்மையார் 

அவர்களே !! எப்படி இருந்திருக்கும் 

கலைவாணரது நிலையும் அவரது 

முகமும்? நீங்களே உங்களது மனக் 

கண்களில் யூகித்துக் கொள்ளுங்கள் 

அன்பர்களே !!


இது போல் இன்னும் எத்தனை 

எத்தனையோ சம்பவங்கள் சிரிப்பு 

நிகழ்வுகள். எழுதிக்கொண்டே நான் 

போகலாம். அதற்கு என் ஆயுள் 

போதாது என்ற காரணத்தினால் 

நான் இத்துடன்நிறுத்திக்

கொள்கிறேன்அன்பர்களே !!


நாளைய தினம்  ஞாயிறு (௦5-05-2013) 

மாலை 4 மணிக்கு முத்தமிழ் அறிஞர் 

தமிழ்  இனத்தின்  தன்னிகரில்லாத் 

தலைவர், தமிழ்த்தாய் பெற்றெடுத்த 

தவப் புதல்வன்,அனைத்து அரசியல் 

களம் கண்ட முதுபெரும் தலைவர், 

முடிவு எடுக்க முடியாத நிலைகள் 

பலவற்றிலும் அதனை முடித்திடும் 

ஆற்றல்கொண்டசாணக்கியன், 

மறைந்த  முத்துவேலர் கண்டெடுத்த 

நல்ல முத்து, முன்னாள் தமிழக 

முதல்வர், எந்நாளும் தமிழக மக்கள் 

மனந்தனை கவர்ந்த இதயவேந்தன் 

கலைஞர் கருணாநிதி அவர்களின் 

கை வண்ணத்தில்உருவான "பணம்" 

என்றபெயரில்அந்தநாளில்உருவான

திரைக்காவியம்காணதவறாதீர்கள்.


அதில் மறைந்த நடிகர் திலகம் 

சிவாஜி, ,நாட்டியபேரொளி பத்மினி,  

N.S.கிருஷ்ணன் ஹிட்லர் மீசை 

வைத்து சிறப்புடன் நடித்த பல்வேறு 

காட்சிகள்மற்றும், எங்கே தேடுவேன் 

பணத்தை எங்கே தேடுவேன் எனும் 

காலத்தால் அழிந்திடாத பாடல்கள் 

நிறைந்த படத்தினை கலைஞர் 

தொலைகாட்சியில் காணத் தவறா--

தீர்கள் என்றுவேண்டிவிரும்பிகேட்டு 

இதுவரை பொறுமையுடன் இந்த   

மெகா கட்டுரைதனை படித்து 

இரசித்த உங்கள் அனைவருக்கும் 

எனது இதய பூர்வ நன்றிபலவற்றை 

காணிக்கையாக்கி விடை பெறுவது 

உங்கள் அன்பன் மதுரை T.R.பாலு. 

வணக்கம் நேயர்களே !!